என் மலர்
முக்கிய விரதங்கள்
நாளை சுக்ல பஞ்சமி என்று சொல்லப்படும் வசந்த பஞ்சமி நாளில், விரதம் இருந்து அம்பாளைத் தொழுது பிரார்த்தித்தால், வாழ்வில் வசந்தம் நிச்சயம்.
வளமான எதிர்காலம் வேண்டும் என்பதுதான் எல்லோரின் ஆசையும் பிரார்த்தனையும். அதற்கு நிகழ்காலத்தில் உழைப்பும் சேமிப்பும் இருக்க வேண்டும் என்பதுதான் நம் எல்லோருடைய எதிர்பார்ப்பும் வேண்டுதலும்! சுக்ல பஞ்சமி என்று சொல்லப்படும் வசந்த பஞ்சமி நாளில், விரதம் இருந்து அம்பாளைத் தொழுது பிரார்த்தித்தால், வாழ்வில் வசந்தம் நிச்சயம்.
சக்தி வழிபாடு என்கிற சாக்த வழிபாட்டுக்கு எப்போதுமே வலிமை அதிகம் உண்டு. அம்பாள் என்கிற மகாசக்தியை எப்போது வணங்கினாலும் எப்போதும் நம்மைக் காத்தருள்வாள் தேவி!
‘பஞ்சமி திதியில் அம்பிகையை வணங்குவது கூடுதல் பலன்களைத் தரும். அதிலும் தை மாதத்தின் சுக்ல பஞ்சமியை வசந்த பஞ்சமி என்றும் போற்றுகின்றன ஞானநூல்கள். எனவே சுக்ல பஞ்சமி எனப்படும் வசந்த பஞ்சமியில், அம்பாளை வணங்குவதும் அர்ச்சித்து பூஜிப்பதும் நைவேத்தியங்கள் படைத்து பிரார்த்தனை செய்து கொள்வதும் வாழ்வில், நல்ல நல்ல விஷயங்களைத் தந்தருள்வாள் அன்னை என்பது சத்தியம்! என்றார்.
நாளை செவ்வாக்கிழமை வசந்த பஞ்சமி. அம்பிகையைக் கொண்டாடுவதற்கு உரிய அற்புதமான நாள்.
இந்த நாளில், காலையில் விரதம் மேற்கொள்ளுங்கள். வீட்டில் விளக்கேற்றி அபிராமி அந்தாதி பாராயணம் செய்யலாம். ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். இவை வாழ்வில் பல உன்னதங்களைப் பெற்றுத் தரும். சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம், கேசரி முதலான நைவேத்தியங்களைப் படைத்து தேவியை உபாஸிக்கலாம்.
அதேபோல், அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று அம்பாளை வணங்கி வழிபடுங்கள். செவ்வரளி மாலை சார்த்துங்கள். செந்நிற மலர்கள் சூட்டுங்கள். நெய் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். எலுமிச்சை மாலை சார்த்தி வழிபடுவது இன்னும் வளமும் பலமும் சேர்க்கும்.
முடிந்தால், அன்றைய நாளில், அம்பாளை வழிபட்டு, இயலாதோருக்கு தயிர்சாதம் வழங்குங்கள். அதில் குளிர்ந்து போய், நம் வாழ்வில் வசந்ததத்தைத் தந்தருள்வாள். நம் வாழ்க்கையையே குளிரச் செய்துவிடுவாள் தேவி!
சக்தி வழிபாடு என்கிற சாக்த வழிபாட்டுக்கு எப்போதுமே வலிமை அதிகம் உண்டு. அம்பாள் என்கிற மகாசக்தியை எப்போது வணங்கினாலும் எப்போதும் நம்மைக் காத்தருள்வாள் தேவி!
‘பஞ்சமி திதியில் அம்பிகையை வணங்குவது கூடுதல் பலன்களைத் தரும். அதிலும் தை மாதத்தின் சுக்ல பஞ்சமியை வசந்த பஞ்சமி என்றும் போற்றுகின்றன ஞானநூல்கள். எனவே சுக்ல பஞ்சமி எனப்படும் வசந்த பஞ்சமியில், அம்பாளை வணங்குவதும் அர்ச்சித்து பூஜிப்பதும் நைவேத்தியங்கள் படைத்து பிரார்த்தனை செய்து கொள்வதும் வாழ்வில், நல்ல நல்ல விஷயங்களைத் தந்தருள்வாள் அன்னை என்பது சத்தியம்! என்றார்.
நாளை செவ்வாக்கிழமை வசந்த பஞ்சமி. அம்பிகையைக் கொண்டாடுவதற்கு உரிய அற்புதமான நாள்.
இந்த நாளில், காலையில் விரதம் மேற்கொள்ளுங்கள். வீட்டில் விளக்கேற்றி அபிராமி அந்தாதி பாராயணம் செய்யலாம். ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். இவை வாழ்வில் பல உன்னதங்களைப் பெற்றுத் தரும். சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம், கேசரி முதலான நைவேத்தியங்களைப் படைத்து தேவியை உபாஸிக்கலாம்.
அதேபோல், அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று அம்பாளை வணங்கி வழிபடுங்கள். செவ்வரளி மாலை சார்த்துங்கள். செந்நிற மலர்கள் சூட்டுங்கள். நெய் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். எலுமிச்சை மாலை சார்த்தி வழிபடுவது இன்னும் வளமும் பலமும் சேர்க்கும்.
முடிந்தால், அன்றைய நாளில், அம்பாளை வழிபட்டு, இயலாதோருக்கு தயிர்சாதம் வழங்குங்கள். அதில் குளிர்ந்து போய், நம் வாழ்வில் வசந்ததத்தைத் தந்தருள்வாள். நம் வாழ்க்கையையே குளிரச் செய்துவிடுவாள் தேவி!
ஒவ்வொரு வாரத்திலும் சனிக்கிழமை வருகின்றது. அந்த நாட்களில் எந்த இறைவனை விரதம் இருந்து வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு வாரத்திலும் சனிக்கிழமை வருகின்றது. அந்த நாளில் நாம் சிவாலயத்திற்குச் சென்று எள் தீபத்தை சனீஸ்வரர் சன்னிதியில் ஏற்றி வழிபட்டு சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்வோம். அத்துடன் ‘சனி பிடிக்காத தெய்வம்’ என்று வர்ணிக்கப்படும் விநாயகப் பெருமானையும், அனுமானையும் விடாது வழிபட்டு வருவோம்.
எல்லா மாதங்களையும் விட, புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அன்றைய தினங்களில் விரதமிருந்து விஷ்ணுவை வழிபட்டால் வெற்றி மீது வெற்றி வந்து குவிகின்றது. ‘புருஷர்களில் உத்தமமானவன்’ என்பதால் விஷ்ணுவை ‘புருஷோத் தமன்’ என்றழைக்கிறார்கள். அவனது அவதாரத்தில் ராமாவதாரம் முக்கியமாகக் கருதப்படுகின்றது.
அந்த ராமாயணத்தை வீடுகளிலும், ஆலயங்களிலும் புரட்டாசி மாதத்தில் படிப்பது வழக்கம். இங்ஙனம், ராமாயணம் படிப்பவர்கள், படித்ததைக் கேட் டவர்கள் ஆகியோருக்கு ராமபிரானின் அருளும் கிடைக்கின்றது. வாழ்க்கைக்குத் தேவையான பொருளும் கிடைக்கின்றது.
பூமகளின் அருகிருக்கும் விஷ்ணுவை நோக்கி புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து ஆலயம் சென்று வழிபட்டு வந்தால் நாளும் பொழுதும் நல்லதே நடக்கும்.
எல்லா மாதங்களையும் விட, புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அன்றைய தினங்களில் விரதமிருந்து விஷ்ணுவை வழிபட்டால் வெற்றி மீது வெற்றி வந்து குவிகின்றது. ‘புருஷர்களில் உத்தமமானவன்’ என்பதால் விஷ்ணுவை ‘புருஷோத் தமன்’ என்றழைக்கிறார்கள். அவனது அவதாரத்தில் ராமாவதாரம் முக்கியமாகக் கருதப்படுகின்றது.
அந்த ராமாயணத்தை வீடுகளிலும், ஆலயங்களிலும் புரட்டாசி மாதத்தில் படிப்பது வழக்கம். இங்ஙனம், ராமாயணம் படிப்பவர்கள், படித்ததைக் கேட் டவர்கள் ஆகியோருக்கு ராமபிரானின் அருளும் கிடைக்கின்றது. வாழ்க்கைக்குத் தேவையான பொருளும் கிடைக்கின்றது.
பூமகளின் அருகிருக்கும் விஷ்ணுவை நோக்கி புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து ஆலயம் சென்று வழிபட்டு வந்தால் நாளும் பொழுதும் நல்லதே நடக்கும்.
காலசர்ப்பம் முதலான சர்ப்ப தோஷங்கள் அனைத்தையும் நீங்க நாகராஜரை விரதம் இருந்து வழிபடுங்கள். திருமணத் தடைகள் நீங்கும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
காலசர்ப்பம் முதலான சர்ப்ப தோஷங்கள் அனைத்தையும் நீக்கவல்லது நாகராஜ விரத வழிபாடு. நாகராஜரை விரதம் இருந்து வழிபடுங்கள். நாகராஜ காயத்ரி சொல்லுங்கள். திருமணத் தடைகள் நீங்கும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
நவக்கிரகங்களில், ராகுவும் கேதுவும் சர்ப்ப கிரகங்கள். சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் முதலானவை இருந்தால், திருமணம் முதலான சந்ததி தடைகள் வரும். காரியத்தில் தடைகள் இருந்துகொண்டே இருக்கும்.
எதைத் தொட்டாலும் நஷ்டம், தோல்வி, அவமானம் என சந்திக்கும்படியான சூழல்கள் இருக்கும். திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும். எந்த வேலையிலும் நீடிக்காமல், வேலை விட்டு வேலை என்று மாறிக்கொண்டே இருக்கும் சூழல் உருவாகும்.
கணவன் மனைவிக்குள் கருத்துவேறுபாடுகள், குடும்பத்தில் குழப்பங்கள் என நிம்மதியக் குலைக்கவல்லது சர்ப்ப தோஷம்.
சனிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விரதம் இருந்து ராகுகால வேளையில் நாகராஜ வழிபாடு செய்வது மிகவும் விசேஷம். குறிப்பாக, எல்லா நாட்களிலும் உள்ள ராகுகாலவேளையில், விரதம் இருந்து நாகராஜரை வழிபடுவது மிகுந்த பலன்களைத் தந்தருளும்.
நவக்கிரகங்களில், ராகுவும் கேதுவும் சர்ப்ப கிரகங்கள். சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் முதலானவை இருந்தால், திருமணம் முதலான சந்ததி தடைகள் வரும். காரியத்தில் தடைகள் இருந்துகொண்டே இருக்கும்.
எதைத் தொட்டாலும் நஷ்டம், தோல்வி, அவமானம் என சந்திக்கும்படியான சூழல்கள் இருக்கும். திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும். எந்த வேலையிலும் நீடிக்காமல், வேலை விட்டு வேலை என்று மாறிக்கொண்டே இருக்கும் சூழல் உருவாகும்.
கணவன் மனைவிக்குள் கருத்துவேறுபாடுகள், குடும்பத்தில் குழப்பங்கள் என நிம்மதியக் குலைக்கவல்லது சர்ப்ப தோஷம்.
சனிக்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விரதம் இருந்து ராகுகால வேளையில் நாகராஜ வழிபாடு செய்வது மிகவும் விசேஷம். குறிப்பாக, எல்லா நாட்களிலும் உள்ள ராகுகாலவேளையில், விரதம் இருந்து நாகராஜரை வழிபடுவது மிகுந்த பலன்களைத் தந்தருளும்.
மாதந்தோறும் அமாவாசைகளில் விரதம் இருக்க முடியாதவர்கள் தை அமாவாசை அன்று மட்டுமாவது இந்த விரதத்தை கடைப்பிடித்தால், ஆண்டு முழுவதும் அமாவாசை திதியை கடைப்பிடித்த பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
11-2-2021 தை அமாவாசை
தை முதல் ஆனி வரையிலான 6 மாதங்களும் ‘உத்தராயன புண்ணிய காலம்’ எனப்படும். அதே போல், ஆடி முதல் மாா்கழி வரையான 6 மாதங்களும் ‘தட்சணாயன புண்ணிய காலம்’ ஆகும். இரண்டு அயனங்களும் தொடங்கும் காலம் என்பதால்தான், ஆடி மாதத்தில் வரும் அமாவாசையும், தை மாதத்தில் வரும் அமாவாசையும் முன்னோர் வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுகின்றன.
மாதந்தோறும் வரும் அமாவாசை திதிகளில் பித்ருக்கள் எனப்படும் மூதாதையர்களுக்கு நாம் தர்ப்பணம் அளித்து, விரதம் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் சிலருக்கு தன் முன்னோர்களின் இறந்த திதி தெரியாமல் இருக்கலாம். அல்லது மாதந்தோறும் அமாவாசைகளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய முடியாமல் போகலாம். அல்லது பலரும் தர்ப்பணம் பற்றி அறியாமல், இதுவரை திதி கொடுக்காமலும் இருந்து வந்திருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் அனைவரும், தை அமாவாசை அன்று மட்டுமாவது இந்த விரதத்தை கடைப்பிடித்தால், ஆண்டு முழுவதும் அமாவாசை திதியை கடைப்பிடித்த பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
தை மாதம் முருகனையும், அம்பாளையும் பூஜித்துக் கொண்டாடும் மாதம் என்றாலும், தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாகிவிட்டால் தெய்வத்தால்கூட கருணை காட்ட முடியாது. உதவி செய்ய முடியாது என்கிறது கருட புராணம்.
எனவே தை அமாவாசை திதியன்று ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படையல் வைத்து, தர்ப்பணம் செய்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.
மறைந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தையுடன் செய்யும் காரியம் என்பதால் இது ‘சிரார்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், தண்ணீா், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும். தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகியோருக்கு நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய, மிக முக்கிய கடமையாக இது இருக்கிறது. இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, அது உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு அந்த ஆகாரம் செல்வதாக ஐதீகம்.
தை அமாவாசையன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல எமதர்மராஜா, அனுமதி தருவார். பித்ருக்கள் அனைவரும், அவரவர் சந்ததியினர் இல்லத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும், உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும், பசியோடும் வருவார்களாம். அதனால், தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் இட வேண்டியது அவசியம். இந்தத் தர்ப்பணமானது பித்ருக்களைக் குளிரச் செய்து குடும்பத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் காக்கும்.
பித்ரு கடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான், ஸ்ரீராமரிடம் கூறி இருக்கிறார். அதனால் தான் வனத்தில் இருந்தபோது தன் தந்தைக்கு செய்ய முடியாத தர்ப்பணத்தை, சீதையை மீட்டு வந்த பிறகு, ராமேஸ்வரத்தில் ஸ்ரீராமர் செய்தார். அதே போல் தனக்காக உயர் நீத்த கழுகு பறவையான ஜடாயுவுக்கும், மகன் ஸ்தானத்தில் இருந்து இறுதிச் சடங்குகளை செய்து முடித்து, தர்ப்பணம் கொடுத்தார். இப்படி முன்னோர்களுக்காக செய்யும் தர்ப்பணத்தால், நம்முடைய அனைத்து பாவங்களும் நீங்கி, நன்மைகள் தேடி வரும்.
தை முதல் ஆனி வரையிலான 6 மாதங்களும் ‘உத்தராயன புண்ணிய காலம்’ எனப்படும். அதே போல், ஆடி முதல் மாா்கழி வரையான 6 மாதங்களும் ‘தட்சணாயன புண்ணிய காலம்’ ஆகும். இரண்டு அயனங்களும் தொடங்கும் காலம் என்பதால்தான், ஆடி மாதத்தில் வரும் அமாவாசையும், தை மாதத்தில் வரும் அமாவாசையும் முன்னோர் வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுகின்றன.
மாதந்தோறும் வரும் அமாவாசை திதிகளில் பித்ருக்கள் எனப்படும் மூதாதையர்களுக்கு நாம் தர்ப்பணம் அளித்து, விரதம் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால் சிலருக்கு தன் முன்னோர்களின் இறந்த திதி தெரியாமல் இருக்கலாம். அல்லது மாதந்தோறும் அமாவாசைகளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய முடியாமல் போகலாம். அல்லது பலரும் தர்ப்பணம் பற்றி அறியாமல், இதுவரை திதி கொடுக்காமலும் இருந்து வந்திருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் அனைவரும், தை அமாவாசை அன்று மட்டுமாவது இந்த விரதத்தை கடைப்பிடித்தால், ஆண்டு முழுவதும் அமாவாசை திதியை கடைப்பிடித்த பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
தை மாதம் முருகனையும், அம்பாளையும் பூஜித்துக் கொண்டாடும் மாதம் என்றாலும், தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாகிவிட்டால் தெய்வத்தால்கூட கருணை காட்ட முடியாது. உதவி செய்ய முடியாது என்கிறது கருட புராணம்.
எனவே தை அமாவாசை திதியன்று ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை படையல் வைத்து, தர்ப்பணம் செய்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.
மறைந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தையுடன் செய்யும் காரியம் என்பதால் இது ‘சிரார்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், தண்ணீா், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும். தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி ஆகியோருக்கு நாம் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய, மிக முக்கிய கடமையாக இது இருக்கிறது. இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, அது உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு அந்த ஆகாரம் செல்வதாக ஐதீகம்.
தை அமாவாசையன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல எமதர்மராஜா, அனுமதி தருவார். பித்ருக்கள் அனைவரும், அவரவர் சந்ததியினர் இல்லத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும், உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும், பசியோடும் வருவார்களாம். அதனால், தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் இட வேண்டியது அவசியம். இந்தத் தர்ப்பணமானது பித்ருக்களைக் குளிரச் செய்து குடும்பத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் காக்கும்.
பித்ரு கடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான், ஸ்ரீராமரிடம் கூறி இருக்கிறார். அதனால் தான் வனத்தில் இருந்தபோது தன் தந்தைக்கு செய்ய முடியாத தர்ப்பணத்தை, சீதையை மீட்டு வந்த பிறகு, ராமேஸ்வரத்தில் ஸ்ரீராமர் செய்தார். அதே போல் தனக்காக உயர் நீத்த கழுகு பறவையான ஜடாயுவுக்கும், மகன் ஸ்தானத்தில் இருந்து இறுதிச் சடங்குகளை செய்து முடித்து, தர்ப்பணம் கொடுத்தார். இப்படி முன்னோர்களுக்காக செய்யும் தர்ப்பணத்தால், நம்முடைய அனைத்து பாவங்களும் நீங்கி, நன்மைகள் தேடி வரும்.
தை மாதம் வரக்கூடிய அமாவாசை திதியில் விரதம் இருந்து நமது முன்னோர்களை நினைத்து வழிபட்டால் எந்நாளும் இன்பமாக வாழலாம்.
தை அமாவாசையானது நாளை 11.2.2021 (வியாழக்கிழமை) அன்று வருகின்றது. தை மாதம் வரக்கூடிய அமாவாசை திதியில் நமது முன்னோர்களை நினைத்து வழிபட்டால் எந்நாளும் இன்பமாக வாழலாம்.
‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ என்று சொல்வது வழக்கம். வீட்டில் தடைப்பட்ட மங்கல காரியங்கள் தடையின்றி நடைபெறக்கூடிய வாய்ப்பு உருவாகும். மேலும் தைமாதம் வரும் வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருந்து சிவாலய வழிபாட்டை மேற்கொண்டால் துயரங்கள் துள்ளி ஓடும்.
அம்பிகை ஆலயங்களில் சந்தனக் காப்பு சாற்றி வழிபட்டால் சிந்தனைகள் அனைத்தும் வெற்றிபெறும். இறைவனை அலங்கரித்துப் பார்த்தால் இனிய வாழ்க்கை மலரும். உடலை குளிர்ச்சியாக்கும் சந்தனத்தை அம்பிகைக்கு சாற்றுவதன் மூலம், அவள் உள்ளம் குளிச்சியாகி நமக்கு வேண்டும் வரம் தருவாள்.
‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ என்று சொல்வது வழக்கம். வீட்டில் தடைப்பட்ட மங்கல காரியங்கள் தடையின்றி நடைபெறக்கூடிய வாய்ப்பு உருவாகும். மேலும் தைமாதம் வரும் வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருந்து சிவாலய வழிபாட்டை மேற்கொண்டால் துயரங்கள் துள்ளி ஓடும்.
அம்பிகை ஆலயங்களில் சந்தனக் காப்பு சாற்றி வழிபட்டால் சிந்தனைகள் அனைத்தும் வெற்றிபெறும். இறைவனை அலங்கரித்துப் பார்த்தால் இனிய வாழ்க்கை மலரும். உடலை குளிர்ச்சியாக்கும் சந்தனத்தை அம்பிகைக்கு சாற்றுவதன் மூலம், அவள் உள்ளம் குளிச்சியாகி நமக்கு வேண்டும் வரம் தருவாள்.
விரதம் இருந்து உங்களின் உண்மையான கோரிக்கைகள் நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது ஒரே மாதத்தில் நிறைவேறும் என்கின்றனர் ஆன்மீகப் பெரியவர்கள்.
விரதம் இருந்து உங்களின் உண்மையான கோரிக்கைகள் நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது ஒரே மாதத்தில் நிறைவேறும் என்கின்றனர் ஆன்மீகப் பெரியவர்கள்.
வெல்லம் கலந்த பாயசம், உளுந்துவடை, பால், தேன், பழம் வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும். ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தன செழிப்பை தரும். வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.
பௌர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக்கொண்டு பதினெட்டு முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பௌர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம்.
நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். ஒன்பதாவது பௌர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம். கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த தினத்தில் அடிப்படியாக கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது.
ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது. சித்திரை -பரணி, ஐப்பசி -பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விஷேச நாட்கள் ஆகும்.
ஏனெனில் பரணி நட்சத்திரம் தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும். தை மாதம் செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களை கொடுக்கும்.
வெல்லம் கலந்த பாயசம், உளுந்துவடை, பால், தேன், பழம் வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும். ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தன செழிப்பை தரும். வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.
பௌர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக்கொண்டு பதினெட்டு முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பௌர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம்.
நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். ஒன்பதாவது பௌர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம். கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த தினத்தில் அடிப்படியாக கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது.
ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது. சித்திரை -பரணி, ஐப்பசி -பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விஷேச நாட்கள் ஆகும்.
ஏனெனில் பரணி நட்சத்திரம் தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும். தை மாதம் செவ்வாய்க்கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களை கொடுக்கும்.
விருத்தாசலம் நாச்சியார் பேட்டை ஜங்சன் பகுதியில் இருந்து சமயபுரம் பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து 21 நாட்கள் விரதம் இருந்து சமயபுரத்திற்கு பாத யாத்திரையாக சென்று மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
விருத்தாசலம் நாச்சியார் பேட்டை ஜங்சன் பகுதியில் இருந்து ஆண்டு தோறும் சமயபுரம் பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து 21 நாட்கள் விரதம் இருந்து சமயபுரத்திற்கு பாத யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டிற்கான பாதயாத்திரையை முன்னிட்டு கடந்த 27-ந்தேதி பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இந்தநிலையில் நேற்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி விருத்தாசலம் மணிமுத்தாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், அக்னி கரகம், மயில் காவடி எடுத்து விருத்தாசலம் கடைவீதி, பாலக்கரை, ஜங்ஷன் சாலை வழியாக ஜங்ஷன் குடியிருப்பு சித்தி விநாயகர் கோவிலை அடைந்தனர்.
அங்குள்ள மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 11-ந்தேதி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்ல உள்ளனர்.
அதன்படி இந்த ஆண்டிற்கான பாதயாத்திரையை முன்னிட்டு கடந்த 27-ந்தேதி பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இந்தநிலையில் நேற்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி விருத்தாசலம் மணிமுத்தாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், அக்னி கரகம், மயில் காவடி எடுத்து விருத்தாசலம் கடைவீதி, பாலக்கரை, ஜங்ஷன் சாலை வழியாக ஜங்ஷன் குடியிருப்பு சித்தி விநாயகர் கோவிலை அடைந்தனர்.
அங்குள்ள மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகிற 11-ந்தேதி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்ல உள்ளனர்.
முடக்குவாத நோய்க்கு ஆளானவர்கள் இந்த கோவிலில் உள்ள முருகனை ஒவ்வொரு பெளர்ணமியன்றும் விரதம் இருந்து வந்து வழிபடவேண்டும்.
திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியில் உள்ளது பாலசுப்பிரமணியசாமி கோவில். மதுரையில் இருந்து குற்றாலம் செல்லும் வழியில் ராஜபாளையம் அருகில் இந்த ஊர் உள்ளது.
முடக்குவாத நோய்க்கு ஆளானவர்கள் இங்குள்ள பாலசுப்பிரமணியசாமி கோவிலின் முருகனை ஒவ்வொரு பெளர்ணமியன்றும் விரதம் இருந்து வந்து வழிபடவேண்டும்.
அல்லது தமது ஜென்ம நட்சத்திர நாளில் வழிபட முருகன் முடக்குவாதம் நீக்குவார் என்பது நம்பிக்கை.
இக்கோயிலில் முருகன், தனது ஜடாமுடியையே கிரீடம் போல சுருட்டி வைத்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது பாதத்தில் நவக்கிரகங்களின் உருவம் பொறித்த தகடு வைக்கப்பட்டுள்ளது. கிரக தோஷம் நீக்குபவராக இவர் அருளுவதால், இவ்வாறு வைத்துள்ளனர். இத்தகைய அமைப்பில் முருகனைக் காண்பது மிகவும் அரிது.
முடக்குவாத நோய்க்கு ஆளானவர்கள் இங்குள்ள பாலசுப்பிரமணியசாமி கோவிலின் முருகனை ஒவ்வொரு பெளர்ணமியன்றும் விரதம் இருந்து வந்து வழிபடவேண்டும்.
அல்லது தமது ஜென்ம நட்சத்திர நாளில் வழிபட முருகன் முடக்குவாதம் நீக்குவார் என்பது நம்பிக்கை.
இக்கோயிலில் முருகன், தனது ஜடாமுடியையே கிரீடம் போல சுருட்டி வைத்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது பாதத்தில் நவக்கிரகங்களின் உருவம் பொறித்த தகடு வைக்கப்பட்டுள்ளது. கிரக தோஷம் நீக்குபவராக இவர் அருளுவதால், இவ்வாறு வைத்துள்ளனர். இத்தகைய அமைப்பில் முருகனைக் காண்பது மிகவும் அரிது.
கடும் விரதம் இருந்து அலகுக்காவடி எடுத்து வருவதால் மனதில் புதுநம்பிக்கையும், உற்சாகமும் பிறக்கின்றது. திருமணம் ஆகாத பெண்கள் தங்கள் நாக்கில் சிறிய அலகு குத்தி வரும் போது செவ்வாய்தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
அலகுக் காவடி எடுப்பதன் மூலம் உடலில் உள்ள பிணிகள் குணமடைந்து நீண்ட நாள் மகிழ்ச்சியுடன் வாழ முடியும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். அலகுக்காவடியை சுமந்து வந்து வழிபட்டால் பழனி முருகனின் அருளால் செல்வங்கள் பெருகும், தொழில் வளம் சிறக்கும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் பரவலாக உள்ளது. மேலும் அலகுக்காவடி எடுத்து வந்து வழிபட்டால் செய்வினை, பில்லி, சூனியம் போன்ற தீயசக்திகளில் இருந்து பழனி முருகன் காத்தருள்வதாகவும் பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
கடும் விரதம் இருந்து அலகுக்காவடி எடுத்து வருவதால் மனதில் புதுநம்பிக்கையும், உற்சாகமும் பிறக்கின்றது. அதேபோல் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, எதையும் எதிர்நோக்கும் மனப்பக்குவத்தை பெற முடிகிறது என பக்தர்கள் கூறுகின்றனர். திருமணம் ஆகாத பெண்கள் தங்கள் நாக்கில் சிறிய அலகு குத்தி வரும் போது செவ்வாய்தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
கடும் விரதம் இருந்து அலகுக்காவடி எடுத்து வருவதால் மனதில் புதுநம்பிக்கையும், உற்சாகமும் பிறக்கின்றது. அதேபோல் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, எதையும் எதிர்நோக்கும் மனப்பக்குவத்தை பெற முடிகிறது என பக்தர்கள் கூறுகின்றனர். திருமணம் ஆகாத பெண்கள் தங்கள் நாக்கில் சிறிய அலகு குத்தி வரும் போது செவ்வாய்தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்.
எல்லா சிவ ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார்.
காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்யபூஜா விதி கூறுகிறது.
ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும், இலுப்பை எண்ணெய், விளக்கு எண்ணெய்,தேங்காய் எண்ணெய், நல்லஎண்ணெய், பசு நெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம். ஒன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித்தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம். அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம், நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும்.
தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகள் அழிந்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்டநாள் வாழலாம்.
வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும், தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடுவது சிறந்தது.
தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பூசணியில் நெய் தீபம் ஏற்றிவர நல்ல பலன் கிடைக்கும்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்த, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
இவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம்.
நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள்.
தினமும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும். வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.
சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகம் தனச்செழிப்பைத் தரும் வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.
பவுர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு 18 முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். 9-வது பவுர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம்.
காலையில் ஆலயம் திறந்தவுடனும், இரவு அர்த்தஜாமத்தில் பூஜை முடிவுறும் போதும் பைரவருக்கு என்று விசேஷ பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்று பார்த்த நித்யபூஜா விதி கூறுகிறது.
ஸ்ரீ பைரவருக்குப் பவுர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும், இலுப்பை எண்ணெய், விளக்கு எண்ணெய்,தேங்காய் எண்ணெய், நல்லஎண்ணெய், பசு நெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம். ஒன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித்தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம். அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம், நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் கிட்டும். சனி பிரதோஷத்தன்று பைரவருக்கு தயிர் அன்னம் படைத்து வழிபட்டால் வழக்குகளில் வெற்றி கிட்டும்.
தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகள் அழிந்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்டநாள் வாழலாம்.
வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும், தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடுவது சிறந்தது.
தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பூசணியில் நெய் தீபம் ஏற்றிவர நல்ல பலன் கிடைக்கும்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்த, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
இவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியை பெறலாம்.
நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள்.
தினமும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும். வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.
சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகம் தனச்செழிப்பைத் தரும் வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.
பவுர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக் கொண்டு 18 முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். 9-வது பவுர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம்.
பசுவை நாம் ‘கோமாதா’ என்று அழைக்கின்றோம். விரதம் இருந்து கோமாதா வழிபாட்டை மேற்கொண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும்.
கோவில்கள் தோறும் காலையில் ‘கோ பூஜை’ செய்வது வழக்கம். பசுவை நாம் ‘கோமாதா’ என்று அழைக்கின்றோம். அதுமட்டுமல்ல அதுதரக்கூடிய மூன்றுவிதப் பொருட்களான பால், சாணம், கோமியம் ஆகியவை நமக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய பொருளாக அமைகின்றன என்று மருத்துவம் கூறுகிறது. எனவே, வீடுகளில் முடிந்தவரை பசு வளர்ப்பது நல்லது.
பால், நெய், தயிர், கோமியம், சாணம் ஆகிய ஐந்தில் இருந்தும் தயாரிக்கப்படும் ‘பஞ்சகவ்யம்’ சாப்பிட்டால், தொடக்கூடாத பொருட்களை தொட்டதால் விளைந்த பாவங்கள் விலகுகின்றன.
எனவே, பசுவிற்கு சேவை செய்தால் பலவிதமான நன்மைகளைப் பெறலாம். பசுவின் உடலில் பலவிதமான தெய்வங்கள் வசிப்பதாக ஐதீகம். காமதேனு வழிபாடு, பொங்கலின் மறுநாள் மாட்டுப் பொங்கல் வைத்து காளைக்கு நன்றி செலுத்துதல் போன்றவை எல்லாம் தமிழர்களின் தலைசிறந்த பண்பாடுகளாக இருக்கிறது. எனவே, விரதம் இருந்து கோமாதா வழிபாட்டை மேற்கொண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும்.
பால், நெய், தயிர், கோமியம், சாணம் ஆகிய ஐந்தில் இருந்தும் தயாரிக்கப்படும் ‘பஞ்சகவ்யம்’ சாப்பிட்டால், தொடக்கூடாத பொருட்களை தொட்டதால் விளைந்த பாவங்கள் விலகுகின்றன.
எனவே, பசுவிற்கு சேவை செய்தால் பலவிதமான நன்மைகளைப் பெறலாம். பசுவின் உடலில் பலவிதமான தெய்வங்கள் வசிப்பதாக ஐதீகம். காமதேனு வழிபாடு, பொங்கலின் மறுநாள் மாட்டுப் பொங்கல் வைத்து காளைக்கு நன்றி செலுத்துதல் போன்றவை எல்லாம் தமிழர்களின் தலைசிறந்த பண்பாடுகளாக இருக்கிறது. எனவே, விரதம் இருந்து கோமாதா வழிபாட்டை மேற்கொண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும்.
அங்காளம்மன் திருக்கோயிலில் அமாவாசையில் ஊஞ்சலில் வைக்கப்பட்டிருக்கும் அங்காளம்மனை மக்கள் விரதம் இருந்து தங்களின் குறைகளை சொல்லி வேண்டிக் கொண்டால் வேண்டியது நிறைவேறும்.
அண்ட சக்திகள் ஒன்று இணையும் நேரம் தான் அமாவாசை. மேலும் பிண்ட சக்திகளாக மனிதனை தோற்றுவித்த ஆவி ஆன்மாவான மூதாதையர்களுக்கு வணக்கத்திற்குரியதாக ஏற்றுக் கொள்ளும் நாள் அமாவாசை.
மூன்று அமாவாசை விரதத்தின் பயன்கள்
அங்காளம்மன் திருக்கோயிலில் அமாவாசையில் ஊஞ்சலில் வைக்கப்பட்டிருக்கும் அங்காளம்மனை மக்கள் விரதம் இருந்து தங்களின் குறைகளை சொல்லி வேண்டிக் கொண்டால் வேண்டியது நிறைவேறும்.
கல்வி, செல்வம், வீரம் என்று சொல்லும் மூன்று ஆற்றல்களும் மூன்று அமாவாசை தோறும் தொடர்ந்து வந்தால் அவர்களுக்கு நிறைவாக நிறையும்.
ஆன்ம பிணிகளாக பில்லி வைப்பு, சூன்யம், காட்டேரி சேட்டைகள், வறுமை, துன்பம் போன்றவை விலக தொடர்ந்து மூன்று அமாவாசை தோறும் வருகை தந்தால் பிரமஹத்தி என்பது விலகும் என்பது உண்மை.
ஒரு எலுமிச்சை பழத்தை நான்கு பிளப்பாக செய்து அதில் கற்பூரம் ஏற்றி தலையில் இருந்து பாதம் வரை ஏற்றி இறக்கி, ஆண்கள் வலது பக்கமும், பெண்கள் இடது பக்கமும் உடைத்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள திருட்டியை கழித்து செல்வது வாடிக்கை வழக்கம்.
பழமை திருவிழாவாக அங்காளம்மன் ஊஞ்சல் திருவிழா ஒவ்வொரு மாதமும் அமாவாசை தோறும் கொண்டாடுகின்றனர்.
அமாவாசை தோறும் இந்த திருக்கோயிலுக்கு வந்தால், அவர்களை பிடித்துள்ள பிணிகள், பீடைகள், சகடைகள், தோசங்கள், பில்லி வைப்பு, சூன்யம் போன்ற ஆன்ம நோய்கள் குணமாகும்.
மூன்று அமாவாசை விரதத்தின் பயன்கள்
அங்காளம்மன் திருக்கோயிலில் அமாவாசையில் ஊஞ்சலில் வைக்கப்பட்டிருக்கும் அங்காளம்மனை மக்கள் விரதம் இருந்து தங்களின் குறைகளை சொல்லி வேண்டிக் கொண்டால் வேண்டியது நிறைவேறும்.
கல்வி, செல்வம், வீரம் என்று சொல்லும் மூன்று ஆற்றல்களும் மூன்று அமாவாசை தோறும் தொடர்ந்து வந்தால் அவர்களுக்கு நிறைவாக நிறையும்.
ஆன்ம பிணிகளாக பில்லி வைப்பு, சூன்யம், காட்டேரி சேட்டைகள், வறுமை, துன்பம் போன்றவை விலக தொடர்ந்து மூன்று அமாவாசை தோறும் வருகை தந்தால் பிரமஹத்தி என்பது விலகும் என்பது உண்மை.
ஒரு எலுமிச்சை பழத்தை நான்கு பிளப்பாக செய்து அதில் கற்பூரம் ஏற்றி தலையில் இருந்து பாதம் வரை ஏற்றி இறக்கி, ஆண்கள் வலது பக்கமும், பெண்கள் இடது பக்கமும் உடைத்து அவர்களுக்கு ஏற்பட்டுள்ள திருட்டியை கழித்து செல்வது வாடிக்கை வழக்கம்.
பழமை திருவிழாவாக அங்காளம்மன் ஊஞ்சல் திருவிழா ஒவ்வொரு மாதமும் அமாவாசை தோறும் கொண்டாடுகின்றனர்.
அமாவாசை தோறும் இந்த திருக்கோயிலுக்கு வந்தால், அவர்களை பிடித்துள்ள பிணிகள், பீடைகள், சகடைகள், தோசங்கள், பில்லி வைப்பு, சூன்யம் போன்ற ஆன்ம நோய்கள் குணமாகும்.






