search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "angalamman temple"

    • அதனை தொடர்ந்து ஸம்பத்ரா அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
    • மாலை பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

    மயிலாடுதுறை

    சீர்காழியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ராஜராஜேஸ்வரி என்கிற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில். இக்கோவிலில் குடமுழுக்கு நடந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமமும் அதனை தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.

    தொடர்ந்து குடமுழுக்கு நடைபெற்ற நாளான நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், அதனை தொடர்ந்து ஸம்பத்ரா அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. மாலை பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

    இதில் கொடி மரத்தில் இருந்து அம்மன் சன்னதி வரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அதில் கலசம், சூலம், விநாயகர் உள்ளிட்ட உருவங்களை வடிவமைத்து பூச்சொரிதல் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சீர்காழி பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • புதுவை சின்னசுப்பு ராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.
    • இதற்காக திருப்பணிக் குழுவை அமைத்து இந்து சமய அறநிலையத்துறை ஆணை வெளியிட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சின்னசுப்பு ராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.பிரசித்தி பெற்ற கோவிலுக்கு 2010-ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 13 ஆண்டுக்கு பின் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தவும், திருப் பணிகளை மேற்கொள்ளவும் அரசு முடிவு செய்தது.

    இதற்காக திருப்பணிக் குழுவை அமைத்து இந்து சமய அறநிலையத்துறை ஆணை வெளியிட்டுள்ளது.

    திருப்பணிக்குழு கவுரவ தலைவராக அமைச்சர் லட்சமிநாராயணன், தலைவராக ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், பொரு ளாளராக நாக சீனுவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். உறுப்பினர்களாக ராஜேந்தி ரன், சிவசுப்பிரமணியன், முத்துலி ங்கம், ஹேமா மாலினி, ஜெயக்குமார், நாகமுத்து, வேல்முருகன், ஜோதி லிங்கம், கலாவ திகுப்தா, ராமதாஸ், கோவிந்தராஜூலு ஆகியோர் நியமிக்க ப்பட்டுள்ளனர்.

    • மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை விழாவையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
    • சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவக்குழு மற்றும் 108 வாகனங்கள் கோவில் வளாகத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டகலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடைபெறும் அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு, திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து, முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் வருகிற 28-ந் தேதி அமாவாசை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள ஏதுவாக வசதிகள் செய்திடவும், குடிநீர் வசதிகள் தற்காலிக கழிவறைகள் ஏற்படுத்தி தர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதேபோல் இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவிலின் பாதுகாப்பு நலன் கருதி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, அமாவாசை தினங்களில் கோவில் அலுவலகம் மற்றும் புறக்காவல் நிலைங்களில் சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கப்பட வேண்டும்.

    மேலும் காவல்துறையின் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவக்குழு மற்றும் 108 வாகனங்கள் கோவில் வளாகத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.உணவு கட்டுப்பாட்டுத்துறையின் மூலம் கோவில் வளாகத்தில் செயல்பட்டு வரும் கடைகளில் உள்ள பொருட்களின் காலாவதிப் பொருட்களை கண்டறிந்து அகற்ற வேண்டும். தீயணைப்புத்துறையின் மூலம், கோவில் வளாகத்தில் தீ தடுப்பு உபகரணங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், திண்டிவனம் சார் ஆட்சியர் அமித், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பவுர்ணமியையொட்டி மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    மேல்மலையனூரில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில் பவுர்ணமியையொட்டி நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், மஞ்சள், குங்குமம், தயிர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் மேல்மலையனூர், அவலூர்பேட்டை, செஞ்சி, திண்டிவனம் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர்கள் செல்வம், ஏழுமலை, ரமேஷ், கணேசன், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    சங்கராபுரம் அருகே உள்ள அ.பாண்டலம் மகாநாட்டு மாரியம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகில் அங்காளம்மன் கோவில் தெருவில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவில் கடந்த 6-ந்தேதி மயானக்கொள்ளை திருவிழாவும், 9-ந்தேதி தீ மிதி திருவிழாவும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு சாமிக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    இதையடுத்து 6 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் எழுந்தருளினார். பின்னர் சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிராமத்தின் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை(புதன்கிழமை) தெப்ப உற்சவமும், நாளை மறுநாள்(வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா, நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.
    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிப்பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து மறுநாள் மயானக்கொள்ளை விழாவும், 5-ம் நாள் தீமிதி விழாவும் நடைபெற்றது. விழாவில் தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, பூதம், சிம்மம், அன்னம், யானை போன்ற வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்து இரவு யானை வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது.

    7-ம் நாள் விழாவான நேற்று, தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, கருவறையில் உள்ள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் உற்சவ அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தார். விழாவையொட்டி பனை, காட்டுவாகை, புளி உள்ளிட்ட மரங்களை கொண்டு மேற்கு வாயிலின் எதிரே புதிதாக உருவாக்கப்பட்டிருந்த தேர் பூமாலைகள், வாழை குலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து மதியம் 2.30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேர் கோவிலின் வடக்கு வாயில் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து, கோவில் உட்பிரகாரத்தில் இருந்து உற்சவ அம்மனை பம்பை- உடுக்கை, மேளதாளங்களுடன் அங்குள்ள ஊஞ்சல் மண்டபத்துக்கு பூசாரிகள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் உற்சவ அம்மனுக்கு மாலை அணிவித்தவுடன், தேரில் எழுந்தருளினார். பின்னர் முக்கியஸ்தர்களுக்கு கோவில் அறங்காவலர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதைத்தொடந்து அம்மனுக்கும், தேருக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதையடுத்து அங்கு திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்றும் ஓம் சக்தி அங்காளம்மனே என்றும் பக்தி கோஷங்களை எழுப்பியபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடி வந்த போது, பக்தர்கள் சிலர் தங்களது வயலில் விளைந்த மணிலா, நெல், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை தேரின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த திருநங்கைகள் அம்மன் வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேர் மாலை 6.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. அதன்பிறகு நடைபெற்ற தீபாராதனை நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தேரில் எழுந்தருள்வதற்காக அங்காளம்மன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டபோது எடுத்த படம்.

    தேரோட்டத்தின் போது பக்தர்கள் பலர் கரகம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்தனர். அம்மன் வேடமணிந்து வந்தவர்கள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்கள். மேலும் மேல்மலையனூர் வள்ளலார் திருச்சபை சார்பில் நீர்மோர், கஞ்சி, கூழ் ஆகியன பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம், திண்டிவனம் என்று பல்வேறு பகுதிகளில் இருந்தும், புதுச்சேரி, பெங்களூருவில் இருந்தும் மேல்மலையனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலவன், மாவட்ட தலைமை நீதிபதி சரோஜினிதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முபாரக் அலிபேக், வெங்கடேசன், தாசில்தார் செந்தில்குமார், இந்தியன் வங்கி கிளை மேலாளர் பிரகாஷ் உள்பட லட்சக்கணக் கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். சுகா தாரத்துறையினர் கோவில் வளாகம் மற்றும் தெருக்களில் கிடந்த குப்பை களை உடனுக் குடன் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    விழாவில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக் கும் வகையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக் குமார் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து போலீ சார் தீவிரமாக கண்காணித் தனர். தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர்கள் மேல் மலையனூர் பிரகாஷ், விழுப் புரம் ஜோதி, திருவண்ணாமலை மோகன சுந்தரம், கண் காணிப்பாளர் வேலு, ஆய் வாளர் அன்பழகன் மற்றும் அறங்காவலர்கள் குழுவினர், கோவில் பணியாளர்கள் செய்திருந் தனர். முன்னதாக தேரோட்டத் தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். விழாவின் 8-ம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை யில் யானை வாகனத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசிப்பெருவிழா 13 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான மாசிப்பெருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    6-ந் தேதி மயானக்கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதையடுத்து 7-ந் தேதி தங்க பல்லக்கிலும், அன்று இரவு பெண் பூத வாகனத்திலும் அம்மன் வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் 5-ம் நாளான நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மேள, தாளம் முழங்க உற்சவ அம்மனை அக்னி குளத்திற்கு ஊர்வலமாக பல்லக்கில் தூக்கி சென்றனர். அங்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மனை சிம்ம வாகனத்தில் அமர்த்தினர்.

    அதனை தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்ட அம்மன் மாலை 4.30 மணி அளவில் கோவிலுக்கு எதிரே அக்னி குண்டத்தின் முன்பாக எழுந்தருளினார். பின்னர் சாமிக்கும் பூக்குழிக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு பூ உருண்டையை உருட்டி விட்டதும் தலைமை பூசாரி முதலில் அக்னி குண்டத்தில் இறங்கினார். அவர் இறங்கியதும் கோவில் மேலாளர் முனியப்பனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழியில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மேலும் பல பக்தர்கள் தங்களது உடலில் அலகு குத்தி லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களை இழுத்தும், பறவை காவடி எடுத்தும் தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்ன வாகனத்தில் சாமி வீதிஉலா நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் பிரகாஷ், விழுப்புரம் ஜோதி, திருவண்ணாமலை மோகனசுந்தரம், அறங்காவலர்கள் கணேசன், ஏழுமலை, ரமேஷ், செல்வம், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கோவில் பணியாளர்கள், ஏழு வம்சாவழி பூசாரிகள், கொடுக்கன்குப்பம் கிராம மக்கள் ஆகியோர் செய்திருந்தனர். விழாவையொட்டி மேல்மலையனூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சாமளவண்ணன் தலைமையிலான வீரர்கள் தீயணைப்பு வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை (திங்கட்கிழமை) தேரோட்டம் நடைபெற உள்ளது.
    கோவை பேரூரில் பிரசித்தி பெற்ற பட்டீசுவரர் கோவிலுடன் இணைந்த அங்காளம்மன் கோவிலில் குண்டம் திருவிழா வருகிற 6-ந்தேதி நடக்கிறது.
    கோவை பேரூரில் பிரசித்தி பெற்ற பட்டீசுவரர் கோவிலுடன் இணைந்த அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகாசிவராத்திரி திருவிழா வருகிற 2-ந் தேதி இரவு 7 மணிக்கு துவஜா ரோகணம் கொடிகட்டு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

    தொடர்ந்து 3-ந் தேதி மாலை 3 மணிக்கு முகப்பள்ளயம் மகேஸ்வர பூஜை, சிறப்பு அபிஷேகம், 4-ந் தேதி மதியம் 1 மணிக்கு அன்னதானம், இரவு 10 மணிக்கு மகாசிவராத்திரி, திருக்கல்யாணம், அம்மன் அழைத்தல், 5-ந் தேதி காலை 8 மணிக்கு சக்தி விந்தை அலகு தரிசனம், 10.30 மணிக்கு குண்டம் தோண்டுதல் பூஜை, மதியம் அன்னதானம், இரவு 8 மணிக்கு அன்ன வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, நள்ளிரவு 1.30 மணிக்கு அக்னி குண்டம் வளர்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான குண்டம் திருவிழா வருகிற 6-ந் தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் பக்தர்கள் பலர் குண்டம் இறங்குகின்றனர். பின்னர் 11.55 மணியளவில் கொடி இறக்குதல், அக்னி அபிஷேகம், மாலை 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு, பேச்சியம்மன், வீரபத்திரருக்கு அபிஷேகம், பாவை சுற்றுதல் ஆகியவை நடக்கின்றன. 10-ந் தேதி இரவு மறுபூஜை, குண்டம் அபிஷேகம், அங்காளம்மனுக்கு அபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
    விழுப்புரம் மாவடடம் மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    விழுப்புரம் மாவடடம் மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கார்த்திகை மாத அமாவாசை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

    உற்சவ அம்மனுக்கு அன்னபூரணி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இரவு 11.30 மணியளவில் அங்கிருந்த அம்மனை பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக கொண்டு சென்று ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்த்தினர். பின்பு பூசாரிகள் அம்மன் பக்திப் பாடல்கள் பாடியவுடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்த அம்மன் முன்னும் பின்னும் அசைந்தாடி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 12.30 மணிக்கு அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.



    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    விழாவை முன்னிட்டு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் கணேசன் பூசாரி, அறங்காவலர்கள் ஏழுமலை, ரமேஷ், செல்வம், சரவணன், மணி, சேகர், ஆய்வாளர் அன்பழகன், கண்காணிப்பாளர் வேலு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    மேல்மலையனூரில் அமாவாசை விழாவையொட்டி அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி ஐப்பசி மாதத்திற்கான அமாவாசை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் தங்க கவச அலங்காரத்தில் அம்மன், பக்தர்களுக்கு காட்சி அளித்தார். உற்சவ அம்மனுக்கு லிங்க பூஜை செய்வது போன்று அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது.

    இரவு 11.30 மணிக்கு அங்கிருந்த அம்மன் பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்த்தினர். பின்னர் பூசாரிகள் பக்தி பாடல்கள் பாடினர். முக்கிய பிரமுகர்கள் மட்டும், அம்மனை தாலாட்டினர். முன்னும், பின்னும் அசைந்தாடியபடி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபம் ஏற்றியும், கற்பூரம் ஏற்றியும் அம்மனை வழிபட்டனர். இரவு 12.15 மணிக்கு அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அத்துடன் ஊஞ்சல் உற்சவம் முடிவடைந்தது.

    விழாவையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், சேலம், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் மேல்மலையனூர் பிரகாஷ், விழுப்புரம் ஜோதி, திருவண்ணாமலை மோகனசுந்தரம், அறங்காவலர் குழு தலைவர் கணேசன் பூசாரி, அறங்காவலர்கள் ஏழுமலை, ரமேஷ், செல்வம், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    அமாவாசையை யொட்டி மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆவணி மாத அமாவாசையான நேற்று முன்தினம் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

    இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கு பால், தேன், பன்னீர், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்து, தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு ஆதிபராசக்தி அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது.

    இரவு 11.30 மணிக்கு உற்சவ அம்மன் பம்பை மேள தாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக ஊஞ்சல் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்த ஊஞ்சலில் அம்மன் எழுந்தருளினார்.

    பின்னர் பூசாரிகள் தாலாட்டு பாடல்கள் பாட அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அம்மன் ஊஞ்சலில் முன்னும், பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்க மகா தீபாராதனை நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பியவாறு சாமி தரிசனம் செய்தனர். ஒரு சில பக்தர்கள் அருள் வந்து ஆடினர். நள்ளிரவு 12.35 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நிறைவு பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர், சேலம், கடலூர், விழுப்புரம், திண்டிவனம் மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மேல்மலையனூருக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 
    மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் இந்த மாத ஆடி அமாவாசை விழா நேற்று இரவு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த மாத ஆடி அமாவாசை விழா நேற்று இரவு நடந்தது.

    அமாவாசைகளில் ஆடி அமாவாசை மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு பக்தர்களின் வருகை வழக்கத்தை விட அதிகளவில் இருந்தது.

    விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தங்க கவச அலங்காரத்தில் அம் மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதனை தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 11.40 மணிக்கு அங்கிருந்து உற்சவ அம்மனை பம்பை, மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் வைத்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அப்போது பூசாரிகள் பக்திப்பாடல்களை பாடினார்கள்.



    நள்ளிரவு 12.45 மணியளவில் அம்மனுக்கு அர்ச்சனையும், அதனை தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரி சனம் செய்தனர்.

    விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழகம் சார்பில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், சேலம், விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    விழாவுக்கான ஏற் பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் கணேசன், அறங்காவலர்கள் ஏழுமலை, ரமேஷ், செல்வம், சரவணன், மணி, சேகர், கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    ×