search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேரோட்டம்

    ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகில் அங்காளம்மன் கோவில் தெருவில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவில் கடந்த 6-ந்தேதி மயானக்கொள்ளை திருவிழாவும், 9-ந்தேதி தீ மிதி திருவிழாவும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு சாமிக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    இதையடுத்து 6 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் எழுந்தருளினார். பின்னர் சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிராமத்தின் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை(புதன்கிழமை) தெப்ப உற்சவமும், நாளை மறுநாள்(வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா, நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×