என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    எல்லா நாள் பிரதோஷத்தையும் விட சனிப் பிரதோஷம் மிகவும் மகிமையானது. இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்யும் மகரம், கும்பம் ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும், சனி தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக தோஷம் நீங்கும்.
    வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும், திரயோதசி திதி அன்று சூரியன் மறைவதற்கு முன் 4.30 மணி முதல் 6 மணி வரையான நேரத்தையே ‘பிரதோஷ காலம்’ என்பார்கள். இந்த நேரத்தில் நாம் செய்யும் வழிபாடு, பலகோடி மடங்கு புண்ணியத்தைத் தரும். சிவனுக்கு உகந்த விரதங்களில் மிகவும் முக்கியமானது ‘பிரதோஷ விரதம்’ ஆகும். பிரதோஷ நேரத்தில் ஈஸ்வரன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம். சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம், பிரதோஷ நேரம்தான்.

    சனிக்கிழமைகளில் சனியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். எல்லா நாள் பிரதோஷத்தையும் விட சனிப் பிரதோஷம் மிகவும் மகிமையானது. இந்த நாளில் வழிபாடு செய்யும் மகரம், கும்பம் ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும், சனி தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக தோஷம் நீங்கும். ஜாதகத்தில் சனி நீச்சம், அஸ்தமனம், வக்ரம் பெற்றவர்களுக்கு தொழில் முடக்கம் தீரும். பூர்வீகம் தொடர்பான சர்ச்சை, குலதெய்வ குற்றம் அகலும். கடன் வாங்கி வட்டியும், அசலும் கட்ட முடியாமல் தவிப்பவர்களுக்கு நலம் கிடைக்கும்.

    வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை அகலும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, கர்ம வினைதாக்கம் குறையும். தீராத நோய்களுக்கு தீர்வு கிடைக்கும். ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும். முன்னோர்கள் செய்த பாவத்தையும், குலத்திற்கு ஏற்பட்ட சாபத்தையும் போக்கும். முந்தைய ஏழு பிறவிகளில் செய்த பாவம், முன்னோர்கள் ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமா பாதகங்கள் அழிந்துவிடும். இழப்புகள், விரயங்கள் ஏற்படாது. மனக்கவலைகள், வறுமை நிலை, இயற்கையால் வரும் பாதிப்பு அறவே நீங்கும். மேலும் பலனை அதிகரிக்க அருகம்புல் மாலை சாற்றி, வெல்லம் கலந்த பச்சரிசியை நைவேத்தியம் செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
    இன்று விரதம் இருந்து குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானம் செய்யலாம். தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும் சகல தோஷங்களும் நீங்கும்.
    கும்பகோணத்தில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் மாசி மக திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேசுவரர், காசி விசுவநாதர், காளகஸ்தீசுவரர், அபிமுகேஸ்வரர், வியாழசோமேசுவரர், கவுதமேஸ்வரர் ஆகிய சிவன் கோவில்களில் மாசி மக விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதேபோல் சக்கரபாணி, ராஜகோபாலசாமி, ஆதிவராக பெருமாள் ஆகிய பெருமாள் கோவில்களிலும் மாசிமக திருவிழா நடைபெறுகிறது. இன்று(வெள்ளிக்கிழமை) மகாமகம் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    எல்லா மாதத்திலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதம் வரும் மகம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நாளில்தான் உமா தேவியார் தச்சன் என்பவரின் மகளாக அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. தச்சன் தனது மகளாக சிவபெருமானின் சக்தியாகிய உமா தேவியார் வந்து பிறக்க வேண்டும் என்று வேண்டி தவம் இருந்தார். அவனது தவத்தை கண்டு உள்ளம் குளிர்ந்த சிவன் அவன் முன்தோன்றி அவன் கேட்ட வரத்தை வழங்கினார்.

    உமா தேவியாரும் தச்சனுக்கு மகளாகப் பிறந்தார். இறைவியே மகளாக பிறக்க அந்த குழந்தைக்கு தாட்சாயிணி என பெயரிட்டு வளர்த்து சிவபெருமானுக்கு திருமணம் செய்து வைத்தார் தச்சன்.

    தோஷங்கள் நீங்கும்

    மாசி மகம் நாளில் சிவன், விஷ்ணு, முருகன் ஆகிய மூவருக்கும் கோவில்களில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். மக நட்சத்திரத்திற்கு அதிபதியான கேது பகவான் ஞானத்தையும் மோட்சத்தையும் தருபவர்.

    மாசிமக நாளை கடலாடும் நாள் என்றும் தீர்த்தமாடும் நாள் என்றும் சொல்வார்கள். இந்த நாளில் விரதம் இருந்து குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானம் செய்யலாம். தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும் சகல தோஷங்களும் நீங்கும். மாசி மகம் நாளில் கும்பகோணத்தில் தீர்த்தவாரி திருவிழா நடைபெறும்.

    மாசி மகம் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாத மக நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுவது வழக்கம். இதுவே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய 12 சிவன் கோவில்களிலும், 5 பெருமாள் கோவில்களிலும் மாசி மக விழா கொண்டாடப்படும். அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) மாசிமக விழா கொண்டாடப்படுகிறது.

    தீர்த்தவாரி

    இன்று அதிகாலை 4 மணி முதல் மகா மககுளத்தில் பக்தர்கள் புனித நீராடத் தொடங்குவர். மதியம் 12.30 மணிக்கு ஆதிகும்பேசுவரர் உள்ளிட்ட சிவன் கோவில்களிலிருந்து உற்சவ மூர்த்திகள் மகாமக குளக்கரையில் எழுந்தருள, தீர்த்தவாரி நடக்கிறது. இதேபோல பெருமாள் கோவில்களிலிருந்து உற்சவர் புறப்பாடும், காவிரி சக்கர படித்துறையில் தீர்த்தவாரியும் நடக்கிறது. மாசி மகம் விரதம் இருக்க விரும்புபவர்கள் காலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, உலர்ந்த ஆடைகளை அணிந்து சிவசிந்தனையுடன் சிவன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். ஒரு நேரம் மட்டும் சாப்பிடலாம். இரவு நேரத்தில் பால், பழம் சாப்பிடலாம். அன்று நாள் முழுவதும் சிவ சிந்தனையில் இருக்க வேண்டும்.
    பல்வேறு விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் வரும் விரதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    ‘மகத்தில் பிறந்தால் ஜெகத்தை ஆளலாம்’ என்பது நம் முன்னோர் வாக்கு. ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தை ‘மாசி மகம்’ என்று சிறப்பித்துக் கூறுவது வழக்கம்.

    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இந்த விழா கொண்டாடப்படுகின்றது. மற்ற ஆண்டுகளில் வரும் மாசி மாதங்களில் மகம் நட்சத்திரம் வரும்பொழுது நாம் வழிபாடுகளை மேற்கொண்டால் தித்திப்பான வாழ்க்கை அமையும். இது சிவனின் மைந்தனான முருகப்பெருமானுக்கு உகந்த விரதமாகும். அன்றைய தினம், குழந்தையில்லாத தம்பதிகள் விரதமிருந்து அன்னதானம் செய்தால் தக்க விதத்தில் வாரிசுகள் உருவாகும்.

    அந்த அற்புதமான திருநாள் 27.2.2021 அன்று (சனிக்கிழமை) வருகின்றது.

    26.2.2021 (வெள்ளிக்கிழமை) மதியம் 11.58 மணிக்கு மேல் மகம் நட்சத்திரம் வருகிறது.

    மறுநாள் (27.2.2021) மதியம் 11.33 மணி வரை உள்ளது. மலை வலம் வருவதன் மூலம் மகத்தான பலன்களைப் பெற இயலும்.

    மனிதர்கள் இறைவனை வேண்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டவையே விரதங்கள். பல்வேறு விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் வரும் விரதம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மட்டுமே பெருமை பெற்றதாக திகழ்கிறது.

    ஏனெனில் அந்த நாளில்தான் பார்வதிதேவி, தக்கனின் மகளாக அவதரித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆம்! அந்த நாள் அன்னையின் பிறந்த நாள். சக்தியாகிய உமாதேவியே தன்னுடைய மகளாக பிறக்க வேண்டும் என்று தக்கன் நினைத்தான். இதற்காக சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். அந்த தவத்தின் பயனாக உமாதேவி, தக்கனின் மகளாக அவதரித்தாள்.

    அந்த தெய்வக் குழந்தைக்கு ‘தாட்சாயிணி’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தான் தக்கன். இறுதியில் தன் மகளை, சிவபெருமானுக்கே திருமணமும் செய்து வைத்தான். அன்னை உமாதேவி அவதரித்த நாள் மாசி மகம் என்பதால் அந்த நாள் புனிதமான நாளாக கொண்டாடப்படுகிறது.

    மக நட்சத்திரத்திற்கு அதிபதியானவர் கேது பகவான். இவர் ஞானத்தையும், முக்தியையும் அருள்பவர். செல்வ வளம் சேரும் யோகத்தை வழங்கக் கூடியவர். மாசி மக நாளை, ‘கடலாடும் நாள்’ என்றும், ‘தீர்த்தமாடும் நாள்’ என்றும் அழைப்பார்கள். இந்நாளில் விரதம் இருந்து குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பல விதமான தானங்கள் செய்வது சிறப்பான பலனைத் தரும்.

    இவ்வாறு செய்வதால் சகல தோஷங்களும் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். மாசி மகத்தில் விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், காலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராட வேண்டும். பின்னர் உலர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு சிவ சிந்தனையுடன், சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். மதியம் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு விட்டு, இரவு பால், பழம் சாப்பிடலாம். அன்றைய தினம் முழுவதும் வேறு எந்த பணிகளிலும் ஈடுபடாமல், இறைவனை நினைக்கும் ஒரே சிந்தனையோடு இருக்க வேண்டும். தேவார, திருவாசக பாடல்களை பாராயணம் செய்யலாம்.

    இந்த விரதத்தை கடைப்பிடித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

    தீர்த்தமாடும் நிகழ்வின் சிறப்பினை எடுத்துரைக்க, ஒரு புராண வரலாற்றுக் கதையும் கூறப்படுகிறது.

    ஒரு முறை வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதில் அவர் உடல் கட்டப்பட்ட நிலையில் கடலில் வீசப்பட்டார். அதில் இருந்து விடுபட வருணன், சிவபெருமானை நினைத்து பிரார்த்தித்தான். இந்த நிலையில் வருணன் கட்டுண்டு கிடந்ததால், உலகில் மழையில்லாமல் வறட்சியும், பஞ்சமும் நிலவியது.

    அனைத்து உயிர்களும் துன்பம் அடைந்தன. இதனால் தேவர்கள் அனைவரும் சிவபெருமானை சந்தித்து முறையிட்டனர். வருண பகவானை விடுவிக்கும்படி ஈசனிடம் வேண்டினர். தேவர்களின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான், வருண பகவானை விடுவித்தார். அவர் விடுதலை பெற்ற நாள் மாசி மக திருநாளாகும்.

    விடுதலை பெற்ற வருண பகவான் மனம் மகிழ்ந்து சிவபெருமானை வணங்கினார். பின்னர் ஈசனிடம், ‘இறைவா! நான் பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு கடலில் கிடந்தபோது, நீருக்குள் இருந்தபடியே உங்களை வணங்கினேன். அதன் பயனாக எனக்கு விடுதலைக் கிடைத்தது. அதே போல் மாசி மகத்தன்று புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கி நீராடி, இறைவனை வழிபடும் அனைவருக்கும் அவர்களின் பாவங்களையும், பிறவி துன்பங்களையும் நீக்கி அரு செய்ய வேண்டும்’ என்று கேட்டார்.

    சிவபெருமானும் வருணன் கேட்ட வரத்தை வழங்கினார். அன்று முதல் தீர்த்த மாடல் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்று வருகிறது. மாசிமகத்தன்று பிரசித்திப் பெற்ற புண்ணிய தலங் களில் ஆறு, கடல், குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். ராமேசுவரம், தஞ்சை மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், நாகை மாவட்டம் வேதாரண்யம் போன்ற இடங்களில் நீராடி தர்ப்பணம் பிதுர்க்கடன் செய்வது நலன் தரும்.
    சுக்ரனின் ஆதிக்கம் நிறைந்தது, வெள்ளிக்கிழமை. இந்த நாளில் வரும் பிரதோஷத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும், திரயோதசி திதி அன்று சூரியன் மறைவதற்கு முன் 4.30 மணி முதல் 6 மணி வரையான நேரத்தையே ‘பிரதோஷ காலம்’ என்பார்கள். ஒவ்வொரு கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கும், சில குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி உண்டு.

    சுக்ரனின் ஆதிக்கம் நிறைந்தது, வெள்ளிக்கிழமை. இந்த நாளில் வரும் பிரதோஷத்தில் வழிபாடு செய்யும் ரிஷபம், துலாம் ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும், சுக்ர தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக தோஷம் நீங்கும். ஆண்களின் ஜாதகத்தில் சுக்ரன் நீச்சம், அஸ்தமனம், குறைந்த பாகை பெற்றதால் ஏற்பட்ட திருமணத் தடை அகலும்.

    கணவன் - மனைவி ஒற்றுமை மேலோங்கும். வீட்டில் சுபீட்சம் நிலவும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். அழகு, ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். மேலும் சுப பலன்கள் அதிகமாக, வில்வ இலைகளாலும் , வாசனை மலர்களாலும் அர்ச்சனை செய்ய வேண்டும்.
    ஒவ்வொரு கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கும், சில குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி உண்டு. புதன் கிழமையில் வரும் பிரதோஷம் அன்று விரதம் கடைபிடித்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
    வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும், திரயோதசி திதி அன்று சூரியன் மறைவதற்கு முன் 4.30 மணி முதல் 6 மணி வரையான நேரத்தையே ‘பிரதோஷ காலம்’ என்பார்கள். இந்த நேரத்தில் நாம் செய்யும் வழிபாடு, பலகோடி மடங்கு புண்ணியத்தைத் தரும். சிவனுக்கு உகந்த விரதங்களில் மிகவும் முக்கியமானது ‘பிரதோஷ விரதம்’ ஆகும். பிரதோஷ நேரத்தில் ஈஸ்வரன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம். சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம், பிரதோஷ நேரம்தான்.

    புத பகவானின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாள், புதன்கிழமை. இந்தநாளில் பிரதோஷ வழிபாடு செய்யும் மிதுனம், கன்னி ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களுக்கும், புதன் தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக தோஷம் நீங்கும். புதன் நீச்சம் பெற்றதால் வரும் கெடுபலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிப்பில் ஆா்வம் இல்லாதவர்கள் கூட நன்றாக படிப்பார்கள்.

    குழந்தைகள் கல்வி-கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். இளம் வயதினரின் தவறான நட்பால் ஏற்படும் பாதிப்பு தீரும். நண்பர்களிடையே நல்ல நட்பு நீடிக்கும். வங்கி கடன் தீரும். காலி நிலம் தொடர்பான சர்ச்சைகள் அகலும். தோல் வியாதி, நரம்பு மண்டல பாதிப்புகள் நீங்கும். ஜோதிடர்களுக்கு வாக்கு வன்மை அதிகரிக்கும். ஆசிரியர்களுக்கு வேலையில் இருந்து வரும் இடர்கள் குறையும். பத்திரம், அடமானம், ஜாமீன் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். பூமி லாபம் உண்டாகும். புதனை வலிமைப்படுத்த பச்சை பயிறு, சுண்டல் தானம் செய்யுங்கள்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
    பிரம்மஹஸ்தி தோஷம், மூதாதையர்கள் மோட்சம், மன உளைச்சல் ஏற்படும் விரக்தி போன்றவை மாசி மாத ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் நம்மை விட்டு நீங்கும்.
    காயத்ரி மந்திரத்துக்கு மிஞ்சிய மந்திரமும், கங்கைக்கு மிஞ்சிய தீர்த்தமும், தாய்க்கு சமமான தெய்வமும், ஏகாதசிக்கு சமமான  விரதமும்  இல்லை என்று அக்னிபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஏகாதசி விரதத்தின் பலன் அஸ்வமேத யாகம் செய்த புண்ணியத்தைத் தரும். இந்த ஏகாதசி விரதத்தைப் பற்றி, சிவ பெருமானே பார்வதி தேவியிடம் எடுத்துக்கூறியதாக புராணங்கள் கூறுகின்றன.
     
    ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு பிறகு வரும், 11 ஆம் நாள் வளர்பிறை ஏகாதசி என்றும், பெளர்ணமிக்குப் பிறகு வரும் 11 ஆம் நாள் தேய்பிறை ஏகாதசி எனவும் அழைக்கப்படுகிறது.  ஆண்டுக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகின்றன.

    ஒவ்வொரு மாதம் வரும்  வளர்பிறை, தேய்பிறை ஏகாதசிகளுக்கு  ஒவ்வொரு  தனிப்பட்ட பலனும் உண்டு. மார்கழி மாத வளர்பிறை,  வைகுண்ட ஏகாதசி என்ற சிறப்பை பெறுகிறது. அன்றைய நாளிலிருந்து  ஏகாதசி விரதம் கடைப்பிடித்து வந்தால் கிடைக்கும் பலன்கள், கணக்கில் அடங்காது

    மாசி மாத வளர்பிறை ஏகாதசி "ஜயா'' எனப்படும். அகால மரணம் அடைந்த மூதாதையர்கள் மோட்சம் பெறுவர். மன உளைச்சல் அகலும். வாழ்க்கையில் ஏற்படும் விரக்தி நம்மை விட்டு நீங்கும்.

    மாசி மாத தேய்பிறை ஏகாதசி "ஷட்திலா'' எனப்படும். இன்று கொய்யாப்பழம் அல்லது கொட்டைப்பாக்கை வைத்து பூஜை செய்தால் பிரம்மஹஸ்தி தோஷம் நீங்கும். ஏழை பிராமணருக்கு இரும்பு வடைச் சட்டியில் எள்ளுடன் தானம் தர வேண்டும்.

    மேலும் பாதுகை, கூடை, கரும்பு, நீருடன் தாமிரக்குடம், பசு முதலியவையும் சேர்த்து ஆறு பொருள் தானம் தந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். ஆறுவகை தானம் செய்வதால் "ஷட்திலா'' என இந்த ஏகாதசி அழைக்கப்படுகிறது.
    ஸ்ரீசொர்ண பைரவரை ஒவ்வொரு வீட்டின் பூஜை அறையிலும் ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்களிலும் ஒவ்வொரு வியாபரத் தலங்களின் கல்லாப்பெட்டி அருகிலும், ஆபரணக் கடைகளிலும் இந்த சொர்ண பைரவரின் திருவுருவப் படத்தை வைத்து வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்று கூறப்படுகிறது.
    செல்வத்திற்கே அதிபதியான குபேரர் மற்றும் மகாலட்சுமி போன்றவர்களுக்கே பொன் கொடுக்கும் தலைமைக் கடவுளாக ஸ்ரீ சொர்ண பைரவர் கூறப்படுகின்றார். இந்த திருக்கோலத்தில் இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது.

    ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் விரதம் இருந்து வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு. ஸ்ரீசொர்ண பைரவரை ஒவ்வொரு வீட்டின் பூஜை அறையிலும் ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்களிலும் ஒவ்வொரு வியாபரத் தலங்களின் கல்லாப்பெட்டி அருகிலும், ஆபரணக் கடைகளிலும் இந்த சொர்ண பைரவரின் திருவுருவப் படத்தை வைத்து வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்று கூறப்படுகிறது.

    ஸ்ரீ சொர்ண பைரவரின் படம் அல்லது பொற்காசு அல்லது டாலர் போன்றவற்றை வடக்குத் திசை நோக்கி வைத்து வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும். இப்படத்திற்கு நல்ல மணமுள்ள வண்ண மலர்களை மாலையாக அணிவித்து தாம்பூலம், பழம், தேங்காயுடன் மூன்று வேளையும் பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஸ்ரீ சொர்ண பைரவருக்கு அவல் பாயாசம் விருப்பமான நைவேத்தியமாகக் கூறப்படுகிறது.

    மிகவும் எளிமையான இந்த நைவேத்தியத்திற்கு மனமிரங்கி தன்னை வழிபடும் அன்பர்களின் இல்லங்களில் செல்வ மழையைப் பொழியச் செய்வார். இந்த சொர்ண பைரவரின் படத்தை டாலரையோ சட்டைப்பை மற்றும் கைப்பை பர்சுகளில் வைத்தால் பணத்தட்டுப்பாடு வராது என்று கூறப்படுகிறது.

    இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் சொர்ண பைரவர் படத்தினை எத்தகைய அலங்காரங்களுக்கும் பயன்படுத்தக் கூடாது. கார், மோட்டார் சைக்கிள், வீட்டு வாசற்படி, வரவேற்பறை போன்ற பலரின் நடமாட்டம் உள்ள இடங்களில் வைக்கக்கூடாது. புனிதமான பூஜை அறையில் அல்லது பூஜை செய்யப்படும் இடத்தில் மட்டுமே வைத்து வணங்க வேண்டும்.

    எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தப் படத்தில் அணிவிக்கப்படும் பூமாலை அல்லது பூக்களை வாடி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாடிய பூக்களையோ பிளாஸ்டிக் காகிதப் பூக்களையோ எந்தக் காரணத்தைக் கொண்டும் அணிவிக்கக் கூடாது.

    ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரமான 4.30 மணி முதல் 7.00மணி வரை , 1 1நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்ராபிஷேகம் செய்து, வடைமாலை சாற்றி சகஸ்ரநாமம் செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கூடும். வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும் வியாபார முன்னேற்றம், பணி செய்யும் இடத்தில் உள்ள பிரச்னைகள் நீங்கி மனதில் மகிழ்ச்சியை பெறலாம்.

    சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண லாபம்கிட்டும் என்பது ஐதீகம்.

    பீஷ்மாஷ்டமி அன்று, விரதம் இருந்து நீர்நிலைகளுக்குச் சென்று, தன்னுடைய முன்னோர்களுக்காக செய்யப்படும் தர்ப்பணங்கள் அனைத்தும், பீஷ்மருக்கானதாகவும் மாறுகிறது. இதன் மூலம் முன்னோர்களின் ஆசியோடு சுகமான வாழ்வை அனைவரும் பெறலாம்.
    20-2-2021 பீஷ்மாஷ்டமி

    மகாபாரதக் கதையில் வரும் முக்கியமான கதாபாத்திரம் பீஷ்மர். இவர் செய்த தியாகத்தின் பயனாக, தன்னுடைய தந்தையிடம் இருந்து ‘விரும்பிய நேரத்தில் மரணிக்கலாம்’ என்ற அற்புதமான வரத்தைப் பெற்றிருந்தார்.

    18 நாட்கள் நடைபெற்ற குருசேத்திரப் போரில் 10-ம் நாளில், அம்புகள் துளைக்க போர்க்களத்தில், அம்பு படுக்கையில் கிடந்தார், பீஷ்மர். உத்திராயன புண்ணியாலம் தொடங்கும்போது மரணிக்க வேண்டும் என்று காத்திருந்தார். தை மாதம் தொடங்கியும் கூட அவருக்கு மரணம் நேரவில்லை. உடலில் வலியும், வேதனையும் அதிகரித்தது.

    அப்போது அங்கு வந்த வியாசரிடம், “நான் செய்த பாவம் என்ன?. நான் விரும்பியும் கூட இன்னும் என்னை மரணம் தழுவாமல் இருக்க என்ன காரணம்?” என்று கேட்டார்.

    அதற்கு வியாசர், “தன்னுடைய உடலாலும், மனதாலும் செய்வது மட்டுமே பாவம் அல்ல.. தன் எதிரில் நடைபெறும் குற்றத்தை, தனக்கு அதிகாரம் இருந் தும், ஆற்றல் இருந்தும் தடுக்காமல் இருப்பதும் பாவம்தான். அதற்கான தண்டனையைத்தான் உன்னுடைய உள்ளம் அடையும் வேதனையால் பெற்றுக்கொண்டிருக் கிறாய்” என்றார்.

    இப்போது பீஷ்மருக்கு புரிந்தது. துரியோதன சபையில், திரவுபதி அவமதிக்கப்பட்டபோது, எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்ததன் விளைவுதான் இதற்கு காரணம் என்று உணர்ந்து வருந்தினார். பின்னர் இதில் இருந்து விடுபடுவதற்கான வழியையும் வியாசரிடமே கேட்டார்.

    “ஒருவர் தான் செய்தது மகா பாவம் என்று உணர்ந்து வருந்தினாலே அவர்களது பாவம் அகன்றுவிடுவதாக வேதம் சொல்கிறது. நீயும் வருந்தியவுடன் உன்னுடைய பாவமும் நீங்கிவிட்டது. இருப்பினும் திரவுபதி, துரியோதன சபையில் தன்னை காப்பாற்றும்படி கதறியபோது, கேட்கும் திறன் இருந்தும் கேட்காததுபோல் இருந்த உன்னுடைய காதுகள், கூர்மையான பார்வை இருந்தும் பாராமுகம் காட்டிய உன் கண்கள், உன் சொல்லை அனைவரும் கேட்பார்கள் என்ற போதிலும் தட்டிக்கேட்காத உன்னுடைய வாய், சரியான நேரத்தில் பயன்படுத்தப்படாத உன் வலிமையான தோள், வாளெடுத்து எச்சரிக்காத உன் கரங்கள், ஆரோக்கியத்துடன் இருந்தும் எழுந்து தடுக்க முயலாமல், தளர்ந்து அமர்ந்திருந்த உன் கால்கள், நல்லது கெட்டதை அந்த நேரத்தில் யோசிக்காத உன் புத்தி இருக்கும் தலை ஆகியவற்றுக்கு தண்டனை கிடைத்தே ஆகவேண்டும். அதனால்தான் இப்போது நீ வேதனையை அடைந்து கொண்டிருக்கிறாய்” என்று கூறிய வியாசர், அதில் இருந்து விடுபடுவதற்காக வழியைக் கூறினார்.

    “பீஷ்மா.. உன்னுடைய பாவங்களை பொசுக்கும் ஆற்றல் சூரியனுக்கே உண்டு. சூரியனுக்கு உகந்தது எருக்கம் இலை. அதற்கு ‘அர்க்கபத்ரம்’ என்று பெயர். ‘அர்க்கம்’ என்பதற்கு ‘சூரியன்’ என்றும் பொருள் உண்டு. அந்த இலைகளைக் கொண்டு உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கப்போகிறேன். அவை உன்னைப் புனிதப்படுத்தும்” என்று கூறிய வியாசர், அதன்படியே செய்தார்.

    இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக மன நிம்மதி அடைந்த பீஷ்மர், உடலில் இருந்து வேதனைகள் அகன்று, தியானத்தில் ஆழ்ந்து ரதசப்தமிக்கு அடுத்த நாளில் முக்தியை அடைந்தார். அந்த தினம் ‘பீஷ்மாஷ்டமி’ என்று அழைக்கப்படுகிறது.

    பீஷ்மர் இறுதி வரை பிரம்மச்சரியத்தை கடைப்பிடித்தவர். இதனால் அவருக்கு பித்ரு கடன் செய்வது யார் என்று வருந்தினான், யுதிஷ்டிரன். அதுபற்றி வியாசரிடம் கேட்கவும் செய்தான். அதற்கு வியாசர், “தா்மா.. ஒழுக்கம் தவறாத பிரம்மச்சாரிக்கும், தூய்மை விலகாத துறவிக்கும் பித்ரு கடன் அவசியமே இல்லை. அந்த வகையில் பீஷ்மர், சொல் தவறாத நேர்மையாளர், தூய்மையானவர். வரும் காலத்தில் பீஷ்மருக்காக இந்த பாரத தேசமே பித்ரு கடன் செய்யும், அதற்கான புண்ணியத்தை அனைவரும் அடைவர்” என்றார்.

    அதன்படி பீஷ்மாஷ்டமி அன்று, நீர்நிலைகளுக்குச் சென்று, தன்னுடைய முன்னோர்களுக்காக செய்யப்படும் தர்ப்பணங்கள் அனைத்தும், பீஷ்மருக்கானதாகவும் மாறுகிறது. இதன் மூலம் முன்னோர்களின் ஆசியோடு, பீஷ்மரின் வாழ்த்தும் கிடைத்து, சுகமான வாழ்வை அனைவரும் பெறலாம்.
    கணவனை இழந்தவர்கள் ரத சப்தமி விரதத்தை கடைப்பிடித்தால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் சொல்கின்றன.
    19-2-2021 ரத சப்தமி

    அமாவாசைக்கு பிறகு வரும் 7-வது நாள் ‘சப்தமி’ திதியாகும். ஆடி மாதம் முதல் மார்கழி வரையான 6 மாத காலத்தை ‘தட்சிணாயன புண்ணிய காலம்’ என்றும், தை மாதம் முதல் ஆனி வரையான 6 மாதத்தை ‘உத்திராயன புண்ணிய காலம்’ என்றும் அழைப்பார்கள். தட்சிணாயன காலத்தில் தெற்கு நோக்கி பயணிக்கும் சூரிய பகவான், உத்திராயனம் தொடங்கும் தை மாதம் முதல் நாளில் வடக்கு நோக்கி திரும்புவார். அதனால்தான் தை முதல் நாளில் அவருக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்கிறோம். தை முதல் நாளில் வடக்கு நோக்கி பயணிக்கத் தொடங்கினாலும், ஏழாவது நாளான சப்தமி தினத்தன்றுதான், அவரது 7 குதிரை பூட்டிய தேர், முழுமையாக வடக்கு நோக்கி திரும்புகிறதாம். எனவேதான் தை மாதம் வரும் சப்தமி திதியானது, ‘ரத சப்தமி’ என்று அழைக்கப்படுகிறது.

    சப்த ரிஷிகளில் முக்கியமானவர், காசியபர். இவருக்கு பல மனைவியர் உண்டு. அவர்களில் ஒருத்தியான அதிதி, கர்ப்பவதியாக இருந்தாள். அப்போது ஒரு நாள் வாசலில் சத்தம் கேட்டு, வெளியே வந்து பார்த்தாள். அவளது இல்லத்தின் முன்பாக முதியவர் ஒருவர், யாசகம் கேட்டு நின்று கொண்டிருந்தார். உணவு எடுத்துவருவதாகக் கூறிச் சென்ற அதிதி, கர்ப்ப அவதி காரணமாக மெதுவாக நடந்து சென்று உணவை எடுத்து வந்தாள். இதனால் தாமதம் உண்டானது. அப்போது அந்த யாசகர், “ஏன் இவ்வளவு தாமதம். நீ என்னை அவமதித்து விட்டாய். உன் வயிற்றில் வளரும் பிள்ளை, இறந்து போகும்” என்று சபித்தார்.

    இதனால் பதறிப்போன அதிதி, இதுபற்றி தனது கணவர் காசியபரிடம் கூறினாள். அவரோ “நீ வீணாக பதற்றம் கொள்ள வேண்டாம். அமிர்த உலகத்தில் இருந்து அழிவே இல்லாத ஒரு மகன் நமக்கு கிடைப்பான்” என்றார்.

    அந்த வாழ்த்தின்படி பிரகாசமான ஒளியோடு பிறந்தவர்தான், சூரிய பகவான். ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில், உலகை வலம் வந்து உலக உயிர்களை காப்பதால், திதிகளில் ஏதாவது திதியான சப்தமி நாளில் இவரை நினைத்து விரதம் இருப்பது சிறப்புக்குரியது. அதிலும் ரத சப்தமி அன்று விரதம் கடைப்பிடிப்பது, நமக்கு பல்வேறு பலன்களைப் பெற்றுத்தரும்.

    இந்த நாளில் சூரிய உதயத்தில் எழுந்து, புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளி படும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும். பெண்கள் 7 எருக்கம் இலைகள், மஞ்சள், அட்சதையும், ஆண்கள் மற்றும் குழந்தைகள் 7 எருக்கம் இலைகள் மற்றும் அட்சதையும் வைத்துக் கொண்டு நீராட வேண்டும். 7 எருக்கம் இலைகளையும் கால்களில் இரண்டு, கைகளில் இரண்டு, தோள்பட்டையில் இரண்டு, தலையில் ஒன்று என்று பிரித்து வைத்து நீராட வேண்டும். இவ்வாறு வைத்துக் ெகாண்டு நீராடுவது செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும். தந்தை இல்லாத ஆண்கள், கணவரை இழந்த பெண்கள் 7 எருக்கம் இலை களுடன் பச்சரிசி, கருப்பு எள் ஆகியவற்றை தலையில் வைத்து நீராடுவது சிறப்பு. கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால், அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை வராது என்று புராணங்கள் சொல்கின்றன.

    ரத சப்தமி அன்று சுத்தமான இடத்தில் செம்மண்ணால் பூசி, அந்த இடத்தில் சூரிய ரதம் வரைய வேண்டும். அதில் சூரிய- சந்திரரை வரைந்து, அவர்கள் பவனி வருவதாக நினைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, சிவப்பு நிறம் உட்பட பல்வேறு வாசனை மலர்களால் அர்ச்சித்து சூரிய நாராயணரின் துதிகளைச் சொல்லி வழிபட வேண்டும். கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் போன்றவற்றை பசு மாட்டிற்கு கொடுப்பது மிகவும் நல்ல பலனைத் தரும். வாசலில் சூரிய ஒளிபடும் இடத்தில் ரதம் வரைந்து, அரிசி, பருப்பு, வெல்லம் போன்றவற்றை படைக்கலாம்.
    விரதம் இருந்து தேங்காயில் நெய் தீபம் ஏற்றுவதனால் பல நன்மைகள் உண்டு. அந்தவகையில் தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
    பெரும்பாலும் ஆன்மீக வழிபாடுகளில் பெரிதாக தேங்காய் தீபம் இடம் பெறுவது இல்லை. ஏனெனில் தேங்காய் தீபத்தை எல்லா தெய்வங்களுக்கும் ஏற்ற மாட்டார்கள். ஒரு சில பிரச்சினைகளை போக்கவே தேங்காய் தீபம் ஏற்றப்படுகின்றது.

    இருப்பினும் விரதம் இருந்து இத்தீபம் ஏற்றுவதனால் பல நன்மைகள் உண்டு. அந்தவகையில் தேங்காய் தீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பண ரீதியான வில்லங்கமான விஷயங்களில் மாட்டிக் கொண்டு தவிப்பவர்கள் விரதம் இருந்து வீட்டின் பூஜை அறையில் சுக்கிர ஹோரையில் திங்கள் கிழமையில் தேங்காய் தீபத்தை ஏற்றி வழிபடுவார்கள்.

    வேலை இல்லாதவர்கள் வேலை கிடைக்கவும், குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறவும், அம்மன் போன்ற பெண் தெய்வங்களுக்கு விரதம் இருந்து இரண்டு தேங்காய்களை உடைத்து தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.

    தேங்காய் தீபம் ஏற்றும் பொழுது தேங்காய் உள்ளே நெய் ஊற்ற வேண்டும். தேங்காய் தீபத்தில் நெய் தவிர வேறு எந்த எண்ணெய்களையும் பயன்படுத்துவது கிடையாது. விரதம் இருந்து தேங்காயில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் திருமண தடை நீங்கவும், தொழில் வளம் சிறக்கவும், நல்ல வரன் அமையவும், வேண்டுதல்கள் விரைவாகவும் பலிக்கும்.
    மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி திதியன்று வருவது பிரதோஷம். இந்த பிரதோஷத்திலும் 20 வகைகள் இருக்கின்றன. இதில் ஒரு 5 வகையான பிரதோஷத்தை இங்கே பார்ப்போம்.
    மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி திதியன்று வருவது பிரதோஷம். இந்த பிரதோஷத்திலும் 20 வகைகள் இருக்கின்றன. இதில் ஒரு 5 வகையான பிரதோஷத்தை இங்கே பார்ப்போம்.

    திவ்யப் பிரதோஷம்

    பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது ‘திவ்யப் பிரதோஷம்’ ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

    தீபப் பிரதோஷம்

    பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும். இது தீபப் பிரதோஷம் ஆகும்.

    அபயப் பிரதோஷம் அல்லது சப்தரிஷி பிரதோஷம்

    வானத்தில் ‘வ’ வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே, ‘சப்தரிஷி மண்டலம்’ ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபடுவதும், சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதுமே அபயப் பிரதோஷம் அல்லது சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

    மகா பிரதோஷம்

    ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் ‘மகா பிரதோஷம்’ ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.

    குறிப்பாக திருக்கடையூர், சென்னை வேளச்சேரியில் உள்ள, ‘தண்டீசுவர ஆலயம்.’ திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ‘திருப்பைஞ்ஞீலி’ சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள ‘ஸ்ரீவாஞ்சியம்’ சிவ ஆலயம், கும்ப கோணம் - கதிராமங்கலம் சாலையில் உள்ள ‘திருக்கோடி காவல்’ சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்பாக வரும் பிரதோஷமும், ‘மகா பிரதோஷம்’ எனப்படும்.

    உத்தம மகா பிரதோஷம்

    சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.
    வசந்த பஞ்சமி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி பக்தயோடு விரதம் இருந்து அம்மனை வணங்களினால் அற்புதங்கள் பல நடக்கும்.
    பிப்ரவரி 16-ம் நாள் வசந்த பஞ்சமி. பஞ்சமி என்பதும் மாதந்தோறும், வளர்பிறையில் ஐந்தாம் நாளாகவும், தேய்பிறையில் ஐந்தாம் நாளாகவும் வரும் திதி ஆகும்.

    பஞ்சமியில் மிக விசேஷமானது கருட பஞ்சமி, ரிஷி பஞ்சமி, உத்ததராயண காலத்தின் தொடக்க மாதமான தை மாதத்தில் வரும் வளர்பிளை பஞ்சமி திதி வசந்த பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது. சுக்ல பஞ்சமி என்று சொல்லப்படும் வசந்த பஞ்சமி நாளில் சக்தி வடிவான அம்மனை வணங்கினால் நம்முடைய வாழ்வில் வசந்தம் வீசும். வசந்த பஞ்சமி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி பக்தயோடு விரதம் இருந்து அம்மனை வணங்களினால் அற்புதங்கள் பல நடக்கும்.

    பூஜை அறையில் விளக்கு ஏற்றி அமமன் பாடல்களை பாராணம் செய்து சர்க்கரை பொங்கல் போன்ற நைவேத்தியங்களை படைத்து வணங்குதல் வேண்டும். நமது வீட்டுக்கு அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று செம்மை நிற மலர்கள் கொண்டு அர்ச்சித்து வழிபடுதல் நல்லது. நெய் விளக்கு ஏற்றுதல், அன்னதானம் செய்தல் போன்ற செயல்பாடுகள் கூடுதல் பலன் தரும்..

    மேலும் வசந்த பஞ்சமி நாளில் வாராஹி அம்மன் வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும். நிலம் தொடர்பான பிரச்சனைகள் தீர வாராஹி வழிபாடு மிகவும் முக்கியம். வசந்த பஞ்சமி அன்று விரதமிருந்து மாலையில் வாராஹி வழிபாடு மிகவும் முக்கியம். வசந்த பஞ்சமி அன்று விரதமிருந்து மாலையில் வாராசி அம்மனை வழிபட வாழ்வில் பகைவர்களால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும்.

    பகவான் கிருஷ்ணர், சாந்தீபனி முனியவரிடம் கல்வி கற்று கொள்ள குருகுல வாசம் தொடங்கியது வசந்த பஞ்சமி அன்றுதான் . வசந்த பஞ்சமி நாளில் கல்வி கடவுளான சரஸ்வதி தேவியை வழிபட்டால் அனைத்து வகை கலைகளும் நம் வசப்படும். ஆன்மிகத்தில் உயர்நிலையை அடையலாம்.

    ஞானம் கிடைக்கும் வடமாநிலங்களில் சரஸ்வதிதேவி அவதரித்த நாளாக வசந்த பஞ்சமியை கொண்டாடுகிறார்கள். வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் ஆடை, மஞ்சள் மலர்களால் மாலை அணிவித்து பூஜை செய்கிறார்கள்.
    ×