என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வாராஹி அம்மன்
    X
    வாராஹி அம்மன்

    இன்று வசந்த பஞ்சமி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்

    வசந்த பஞ்சமி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி பக்தயோடு விரதம் இருந்து அம்மனை வணங்களினால் அற்புதங்கள் பல நடக்கும்.
    பிப்ரவரி 16-ம் நாள் வசந்த பஞ்சமி. பஞ்சமி என்பதும் மாதந்தோறும், வளர்பிறையில் ஐந்தாம் நாளாகவும், தேய்பிறையில் ஐந்தாம் நாளாகவும் வரும் திதி ஆகும்.

    பஞ்சமியில் மிக விசேஷமானது கருட பஞ்சமி, ரிஷி பஞ்சமி, உத்ததராயண காலத்தின் தொடக்க மாதமான தை மாதத்தில் வரும் வளர்பிளை பஞ்சமி திதி வசந்த பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது. சுக்ல பஞ்சமி என்று சொல்லப்படும் வசந்த பஞ்சமி நாளில் சக்தி வடிவான அம்மனை வணங்கினால் நம்முடைய வாழ்வில் வசந்தம் வீசும். வசந்த பஞ்சமி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி பக்தயோடு விரதம் இருந்து அம்மனை வணங்களினால் அற்புதங்கள் பல நடக்கும்.

    பூஜை அறையில் விளக்கு ஏற்றி அமமன் பாடல்களை பாராணம் செய்து சர்க்கரை பொங்கல் போன்ற நைவேத்தியங்களை படைத்து வணங்குதல் வேண்டும். நமது வீட்டுக்கு அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று செம்மை நிற மலர்கள் கொண்டு அர்ச்சித்து வழிபடுதல் நல்லது. நெய் விளக்கு ஏற்றுதல், அன்னதானம் செய்தல் போன்ற செயல்பாடுகள் கூடுதல் பலன் தரும்..

    மேலும் வசந்த பஞ்சமி நாளில் வாராஹி அம்மன் வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும். நிலம் தொடர்பான பிரச்சனைகள் தீர வாராஹி வழிபாடு மிகவும் முக்கியம். வசந்த பஞ்சமி அன்று விரதமிருந்து மாலையில் வாராஹி வழிபாடு மிகவும் முக்கியம். வசந்த பஞ்சமி அன்று விரதமிருந்து மாலையில் வாராசி அம்மனை வழிபட வாழ்வில் பகைவர்களால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும்.

    பகவான் கிருஷ்ணர், சாந்தீபனி முனியவரிடம் கல்வி கற்று கொள்ள குருகுல வாசம் தொடங்கியது வசந்த பஞ்சமி அன்றுதான் . வசந்த பஞ்சமி நாளில் கல்வி கடவுளான சரஸ்வதி தேவியை வழிபட்டால் அனைத்து வகை கலைகளும் நம் வசப்படும். ஆன்மிகத்தில் உயர்நிலையை அடையலாம்.

    ஞானம் கிடைக்கும் வடமாநிலங்களில் சரஸ்வதிதேவி அவதரித்த நாளாக வசந்த பஞ்சமியை கொண்டாடுகிறார்கள். வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் ஆடை, மஞ்சள் மலர்களால் மாலை அணிவித்து பூஜை செய்கிறார்கள்.
    Next Story
    ×