என் மலர்
முக்கிய விரதங்கள்
செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து அனுமனை தரிசிப்பதும் அனுமன் சாலீசா பாராயணம் செய்வதும் மகத்தான பலன்களைத் தந்தருளும்.
மாசி மாத சனிக்கிழமையில், விரதம் இருந்து அனுமனை வழிபடுவோம். வெற்றிலை மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், இனியெல்லாம் ஜெயம்தான் என்பது ஐதீகம். விரதம் இருந்து ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சார்த்தி மனதார வேண்டிக்கொள்ளுங்கள். மங்கல காரியங்களை இனிதே நடத்தித் தருவார் அனுமன். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தந்தருளுவார் வீர அனுமன். எதிர்ப்புகளையும் எதிரிகளையும் தவிடுபொடியாக்குவர் அஞ்சனை மைந்தன்.
தெய்வங்களில் அனுமன் வித்தியாசமான தெய்வம் என்கிறார்கள் பக்தர்கள். நாம் வணங்கும் தெய்வங்கள், நின்ற திருக்கோலத்திலோ அமர்ந்த திருக்கோலத்திலோ இருப்பார்கள். சயனக் கோலத்தில் கூட காட்சி தருவார்கள். அந்தத் தெய்வங்களையெல்லாம் நாம் கைகூப்பி வணங்குவோம். ஆராதிப்போம். வழிபடுவோம். நம்முடைய பிரார்த்தனைகளை முறையிடுவோம்.
அனுமன் பராக்கிரமசாலி. பலம் வாய்ந்தவர். அதர்மத்தை அழிப்பதை முன்னின்று செய்பவர். அருளுவதில் ஆனந்தம் கொள்பவர் என்றெல்லாம் விவரிக்கிறது புராணம். செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து அனுமனை தரிசிப்பதும் அனுமன் சாலீசா பாராயணம் செய்வதும் மகத்தான பலன்களைத் தந்தருளும்.
தொடர்ந்து ஒன்பது வாரங்கள் விரதம் இருந்து... செவ்வாய்க்கிழமை அல்லது வியாழக்கிழமை அல்லது சனிக்கிழமைகளில் அனுமனை தரிசித்து வந்தால், நினைத்த காரியங்கள் அனைத்தையும் இனிதே முடித்துக் கொடுப்பார் ஆஞ்சநேயர் என்கின்றனர் பக்தர்கள்.
அதேபோல், அனுமனுக்கு துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொள்வதும் இன்னல்களையெல்லாம் போக்கி அருளும். எடுத்த காரியங்கள் அனைத்தையும் ஜெயமாக்கித் தரும்.
முக்கியமாக, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சார்த்தி மனதார வேண்டிக்கொள்ளுங்கள். மங்கல காரியங்களை இனிதே நடத்தித் தருவார் அனுமன். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தந்தருளுவார் வீர அனுமன். எதிர்ப்புகளையும் எதிரிகளையும் தவிடுபொடியாக்குவர் அஞ்சனை மைந்தன்.
தெய்வங்களில் அனுமன் வித்தியாசமான தெய்வம் என்கிறார்கள் பக்தர்கள். நாம் வணங்கும் தெய்வங்கள், நின்ற திருக்கோலத்திலோ அமர்ந்த திருக்கோலத்திலோ இருப்பார்கள். சயனக் கோலத்தில் கூட காட்சி தருவார்கள். அந்தத் தெய்வங்களையெல்லாம் நாம் கைகூப்பி வணங்குவோம். ஆராதிப்போம். வழிபடுவோம். நம்முடைய பிரார்த்தனைகளை முறையிடுவோம்.
அனுமன் பராக்கிரமசாலி. பலம் வாய்ந்தவர். அதர்மத்தை அழிப்பதை முன்னின்று செய்பவர். அருளுவதில் ஆனந்தம் கொள்பவர் என்றெல்லாம் விவரிக்கிறது புராணம். செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து அனுமனை தரிசிப்பதும் அனுமன் சாலீசா பாராயணம் செய்வதும் மகத்தான பலன்களைத் தந்தருளும்.
தொடர்ந்து ஒன்பது வாரங்கள் விரதம் இருந்து... செவ்வாய்க்கிழமை அல்லது வியாழக்கிழமை அல்லது சனிக்கிழமைகளில் அனுமனை தரிசித்து வந்தால், நினைத்த காரியங்கள் அனைத்தையும் இனிதே முடித்துக் கொடுப்பார் ஆஞ்சநேயர் என்கின்றனர் பக்தர்கள்.
அதேபோல், அனுமனுக்கு துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொள்வதும் இன்னல்களையெல்லாம் போக்கி அருளும். எடுத்த காரியங்கள் அனைத்தையும் ஜெயமாக்கித் தரும்.
முக்கியமாக, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சார்த்தி மனதார வேண்டிக்கொள்ளுங்கள். மங்கல காரியங்களை இனிதே நடத்தித் தருவார் அனுமன். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தந்தருளுவார் வீர அனுமன். எதிர்ப்புகளையும் எதிரிகளையும் தவிடுபொடியாக்குவர் அஞ்சனை மைந்தன்.
பொருளாதார பற்றாக்குறை என்பது மனிதர்களின் பெரும் குறையாக பாவிக்கப்படும் சூழலில் அந்த பொருளாதாரத்தை வசப்படுத்த ஆன்மீகத்தில் செய்யப்படும் விரத பூஜை என்ன என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.
உணவு, உடை, இருப்பிடம், என ஒரு மனிதனின் செளகரியம், அடிப்படை, வசதி, அந்தஸ்து, மகிழ்ச்சி என அனைத்தின் மூலமாகவும் பணம் இருக்கிறது. ஆனால் பல சமயங்களில் பொருளாதார பற்றாக்குறை என்பது மனிதர்களின் பெரும் குறையாக பாவிக்கப்படும் சூழலில். அந்த பொருளாதாரத்தை வசப்படுத்த ஆன்மீகத்தில் செய்யப்படும் விரத பூஜை என்ன என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.
குபேரர் இவர் பணத்தின் அதிபதியான இந்து கடவுளாக விளங்குகிறார். பிரபஞ்சத்தின் அனைத்து வளத்திற்கும் இவரே அதிபதி. இவரை விரதம் இருந்து வணங்கி பூஜைகளை மேற்கொள்கிறவர்கள் பண பற்றாக்குறையை சந்திப்பதில்லை என்பது ஐதீகம்.
இதிகாசங்களில் ராவணன் குபேரனிடம் கடன் பெற்றதாக பதிவுகள் உண்டு. மேலும் இவர் விஷ்ணு பரமார்த்தாவின் ஆடம்பர திருமணத்திற்கு கடளித்ததாகவும் குறிப்புகள் உண்டு. பெரும் வணிக நிறுவனங்கள் ஏன் பல முக்கிய வங்கிகளின் முன்புறம் கூட குபேர சிலை நிறுவப்பட்டிருப்பதை நம்மால் காண முடியும். இவை அனைத்தும் வளத்தை பெருக்க குபேரரின் எத்தனை தேவை என்ற முக்கியத்துவத்தை உணர்த்தும் உண்மைகளாக அமைகின்றன.
முறையான ஆன்மீக முறைகளின் படி குபேர யந்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. அவை தங்கம், வெள்ளி அல்லது ஐம்பொன் ஆகிய உலோகங்களில் செய்யப்படலாம். இந்த யந்திரத்தை முறையாக பராமரித்து பூஜைகள் செய்கிற போது ஒருவருக்கு நேரவிருக்கும் பொருளாதார நெருக்கடி நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த யந்திரத்தை பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம். பூஜையின் போது பூஜை அறையிலும் பின்னர் மீண்டும் அதை பணம் வைக்கும் இடத்திலும் மாற்றி வைக்கலாம்.
குபேர பூஜையை எல்லா நேரத்திலும் செய்யலாம் என்றாலும் கூட இதை செய்வதற்கு உகந்த நேரம் திரயோதசி. பூஜை நேரத்தில் இந்த யந்திரத்தை மஞ்சளாலும், மலர்களாலும் அக்ஷதையாலும் அலங்கரிப்பது உகந்தது.
மேலும் குபேரரை வணங்க மற்றொரு வழி, முதல் கடவுள் விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி குபேரரின் தியான மந்திரத்தை 108 முறை சொல்லலாம். கடவுளுக்கு தேன், வெல்லம் மற்றும் உலர் பழங்கள் படைக்கலாம். கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டிய பின் இறுதியாக அந்த யந்திரத்தின் முன் சிறிது நேரம் தியானத்தில் இடுபடலாம்.
குபேரரின் அருளை பெற்றவருக்கு குறையேதுமில்லை!!
குபேரர் இவர் பணத்தின் அதிபதியான இந்து கடவுளாக விளங்குகிறார். பிரபஞ்சத்தின் அனைத்து வளத்திற்கும் இவரே அதிபதி. இவரை விரதம் இருந்து வணங்கி பூஜைகளை மேற்கொள்கிறவர்கள் பண பற்றாக்குறையை சந்திப்பதில்லை என்பது ஐதீகம்.
இதிகாசங்களில் ராவணன் குபேரனிடம் கடன் பெற்றதாக பதிவுகள் உண்டு. மேலும் இவர் விஷ்ணு பரமார்த்தாவின் ஆடம்பர திருமணத்திற்கு கடளித்ததாகவும் குறிப்புகள் உண்டு. பெரும் வணிக நிறுவனங்கள் ஏன் பல முக்கிய வங்கிகளின் முன்புறம் கூட குபேர சிலை நிறுவப்பட்டிருப்பதை நம்மால் காண முடியும். இவை அனைத்தும் வளத்தை பெருக்க குபேரரின் எத்தனை தேவை என்ற முக்கியத்துவத்தை உணர்த்தும் உண்மைகளாக அமைகின்றன.
முறையான ஆன்மீக முறைகளின் படி குபேர யந்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. அவை தங்கம், வெள்ளி அல்லது ஐம்பொன் ஆகிய உலோகங்களில் செய்யப்படலாம். இந்த யந்திரத்தை முறையாக பராமரித்து பூஜைகள் செய்கிற போது ஒருவருக்கு நேரவிருக்கும் பொருளாதார நெருக்கடி நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த யந்திரத்தை பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம். பூஜையின் போது பூஜை அறையிலும் பின்னர் மீண்டும் அதை பணம் வைக்கும் இடத்திலும் மாற்றி வைக்கலாம்.
குபேர பூஜையை எல்லா நேரத்திலும் செய்யலாம் என்றாலும் கூட இதை செய்வதற்கு உகந்த நேரம் திரயோதசி. பூஜை நேரத்தில் இந்த யந்திரத்தை மஞ்சளாலும், மலர்களாலும் அக்ஷதையாலும் அலங்கரிப்பது உகந்தது.
மேலும் குபேரரை வணங்க மற்றொரு வழி, முதல் கடவுள் விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி குபேரரின் தியான மந்திரத்தை 108 முறை சொல்லலாம். கடவுளுக்கு தேன், வெல்லம் மற்றும் உலர் பழங்கள் படைக்கலாம். கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டிய பின் இறுதியாக அந்த யந்திரத்தின் முன் சிறிது நேரம் தியானத்தில் இடுபடலாம்.
குபேரரின் அருளை பெற்றவருக்கு குறையேதுமில்லை!!
சிவராத்திரி தினத்தன்று, ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்களை தவிர்த்து, மனதார சிவனை நினைத்து வழிபடவேண்டும். சிவனை நினைத்தாலே நம் வாழ்க்கை மாறும்.
11-3-2021 மகா சிவராத்திரி
சிவபெருமானுக்கு, திங்கட்கிழமையில் கடைப்பிடிக்கப்படும் ‘சோமவார விரதம்’, தீபாவளி அமாவாசையை ஒட்டி வரும் ‘கேதார கவுரி விரதம்’, மார்கழி மாதத்தில் வரும் ‘திருவாதிரை விரதம்’, தை மாத பூசத்தன்று வரும் ‘பாசுபத விரதம்’, பங்குனி மாதத்தில் வரும் ‘உமாமகேஸ்வர விரதம்’ என்று பல விரதங்கள் இருந்தாலும், மாசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் வரும் ‘மகா சிவராத்திரி’ முதன்மையானதாகத் திகழ்கின்றது.
ஒரு பிரளய காலத்தின் போது, பிரம்மதேவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்டன. அந்த ஊழிக்கால இரவு வேளையில் பார்வதி தேவியானவள், சிவபெருமானை நினைத்து நான்கு ஜாமங்களிலும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்து வழிபட்டாள். அந்த இரவே `மகா சிவராத்திரி' என்று சொல்லப்படுகிறது. வழிபாட்டின் முடிவில் பார்வதிக்கு காட்சி கொடுத்தார், சிவபெருமான். அவரிடம் பார்வதிதேவி, “நான் உங்களை பூஜித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் உங்கள் பெயரிலேயே ‘சிவராத்திரி’ என்று கடைப்பிடிக்க வேண்டும். அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை உதிக்கும் வரையான கால நேரத்தில், உங்களை பூஜிப்பவர்களுக்கு அனைத்து பாக்கியங்களையும் தந்து, முடிவில் மோட்சத்தையும் அருள வேண்டும்” என்று வேண்டினாள். அதன்படியே இந்த சிவராத்திரி வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிவராத்திரி தினத்தன்று, ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்களை தவிர்த்து, மனதார சிவனை நினைத்து வழிபடவேண்டும். சிவனை நினைத்தாலே நம் வாழ்க்கை மாறும். சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரிய உதயத்தின் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடிக்க வேண்டும். அதன் பின்னர் சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்யலாம். ஆலய தரிசனம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும்.
பகலில் நீராடி, உச்சி கால பூஜைகளை முடித்துவிடவேண்டும். அதன் பின், ஆலயத்திற்குச் சென்று அங்கு நடைபெற வேண்டிய சிவராத்திரி பூஜைக்காக, மலர்கள், பழங்கள், இளநீர் முதலானவற்றில் இயன்றவற்றை கொடுத்துவிட்டு வீடு திரும்பவேண்டும். வீடு திரும்பியதும் மறுபடியும் நீராடி, மாலை நேர பூஜைகளை முடித்துவிட்டு, ஏற்கனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில் சிவலிங்கத்தை வைத்து நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்யலாம். அல்லது கோவில்களில் நடைபெறும் நான்கு ஜாம சிவ பூஜையில் கலந்துகொள்ளலாம்.
வேடன் ஒருவன் வேட்டையாட காட்டுக்குச் சென்றான். காட்டின் பல பகுதிகளில் அலைந்து திரிந்தும், அவனுக்கு ஒரு விலங்கு கூட கிடைக்கவில்லை. பொழுதும் இருட்டிவிட்டது. புலி நடமாட்டம் உள்ள காடு என்பதால், ஒரு மரத்தில் ஏறி அமர்ந்தான். அது வில்வ மரம். அப்போது அங்கு வந்த புலி ஒன்று, அந்த மரத்தையே சுற்றி சுற்றி வந்தது. மரத்தில் கண் அயர்ந்தால், கீழே விழுந்து புலிக்கு இரையாகிவிடக்கூடும் என்பதால், தூங்காமல் இருந்தான். தூக்கம் வராமல் இருப்பதற்காக மரத்தில் இருந்து இலைகளைப் பறித்து கீழே போட்டபடியே இருந்தான்.
அவன் போட்ட இலைகள் எல்லாம், மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்து கொண்டிருந்தது. அன்றைய தினம் மகா சிவராத்திரி ஆகும். அவன் தனக்கே தெரியாமல் இரவு முழுவதும் கண் விழித்து இருந்து சிவலிங்கத்தின் மீது வில்வ இலையை போட்டு அர்ச்சித்து, வழிபாடு செய்திருந்தான். அதன் காரணமாகவே அவனுக்கு முக்தி கிடைத்ததாக புராணக் கதை ஒன்று சொல்கிறது. எனவே மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பதால், தெரியாமல் செய்த பாவங்களும், தெரிந்தே செய்த பாவங்களும் நம்மை விட்டு விலகி விடும்.
சிவபெருமானுக்கு, திங்கட்கிழமையில் கடைப்பிடிக்கப்படும் ‘சோமவார விரதம்’, தீபாவளி அமாவாசையை ஒட்டி வரும் ‘கேதார கவுரி விரதம்’, மார்கழி மாதத்தில் வரும் ‘திருவாதிரை விரதம்’, தை மாத பூசத்தன்று வரும் ‘பாசுபத விரதம்’, பங்குனி மாதத்தில் வரும் ‘உமாமகேஸ்வர விரதம்’ என்று பல விரதங்கள் இருந்தாலும், மாசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் வரும் ‘மகா சிவராத்திரி’ முதன்மையானதாகத் திகழ்கின்றது.
ஒரு பிரளய காலத்தின் போது, பிரம்மதேவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்டன. அந்த ஊழிக்கால இரவு வேளையில் பார்வதி தேவியானவள், சிவபெருமானை நினைத்து நான்கு ஜாமங்களிலும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்து வழிபட்டாள். அந்த இரவே `மகா சிவராத்திரி' என்று சொல்லப்படுகிறது. வழிபாட்டின் முடிவில் பார்வதிக்கு காட்சி கொடுத்தார், சிவபெருமான். அவரிடம் பார்வதிதேவி, “நான் உங்களை பூஜித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் உங்கள் பெயரிலேயே ‘சிவராத்திரி’ என்று கடைப்பிடிக்க வேண்டும். அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை உதிக்கும் வரையான கால நேரத்தில், உங்களை பூஜிப்பவர்களுக்கு அனைத்து பாக்கியங்களையும் தந்து, முடிவில் மோட்சத்தையும் அருள வேண்டும்” என்று வேண்டினாள். அதன்படியே இந்த சிவராத்திரி வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிவராத்திரி தினத்தன்று, ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்களை தவிர்த்து, மனதார சிவனை நினைத்து வழிபடவேண்டும். சிவனை நினைத்தாலே நம் வாழ்க்கை மாறும். சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரிய உதயத்தின் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடிக்க வேண்டும். அதன் பின்னர் சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்யலாம். ஆலய தரிசனம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும்.
பகலில் நீராடி, உச்சி கால பூஜைகளை முடித்துவிடவேண்டும். அதன் பின், ஆலயத்திற்குச் சென்று அங்கு நடைபெற வேண்டிய சிவராத்திரி பூஜைக்காக, மலர்கள், பழங்கள், இளநீர் முதலானவற்றில் இயன்றவற்றை கொடுத்துவிட்டு வீடு திரும்பவேண்டும். வீடு திரும்பியதும் மறுபடியும் நீராடி, மாலை நேர பூஜைகளை முடித்துவிட்டு, ஏற்கனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில் சிவலிங்கத்தை வைத்து நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்யலாம். அல்லது கோவில்களில் நடைபெறும் நான்கு ஜாம சிவ பூஜையில் கலந்துகொள்ளலாம்.
வேடன் ஒருவன் வேட்டையாட காட்டுக்குச் சென்றான். காட்டின் பல பகுதிகளில் அலைந்து திரிந்தும், அவனுக்கு ஒரு விலங்கு கூட கிடைக்கவில்லை. பொழுதும் இருட்டிவிட்டது. புலி நடமாட்டம் உள்ள காடு என்பதால், ஒரு மரத்தில் ஏறி அமர்ந்தான். அது வில்வ மரம். அப்போது அங்கு வந்த புலி ஒன்று, அந்த மரத்தையே சுற்றி சுற்றி வந்தது. மரத்தில் கண் அயர்ந்தால், கீழே விழுந்து புலிக்கு இரையாகிவிடக்கூடும் என்பதால், தூங்காமல் இருந்தான். தூக்கம் வராமல் இருப்பதற்காக மரத்தில் இருந்து இலைகளைப் பறித்து கீழே போட்டபடியே இருந்தான்.
அவன் போட்ட இலைகள் எல்லாம், மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்து கொண்டிருந்தது. அன்றைய தினம் மகா சிவராத்திரி ஆகும். அவன் தனக்கே தெரியாமல் இரவு முழுவதும் கண் விழித்து இருந்து சிவலிங்கத்தின் மீது வில்வ இலையை போட்டு அர்ச்சித்து, வழிபாடு செய்திருந்தான். அதன் காரணமாகவே அவனுக்கு முக்தி கிடைத்ததாக புராணக் கதை ஒன்று சொல்கிறது. எனவே மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பதால், தெரியாமல் செய்த பாவங்களும், தெரிந்தே செய்த பாவங்களும் நம்மை விட்டு விலகி விடும்.
எல்லா உயிர்களுக்கும் அம்மையாகவும், அப்பனாகவும் விளங்கும் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து வழிபட உகந்த நாட்களில் சிவராத்திரியும் ஒன்றாகும்.
திருவண்ணாமலையில் அடிமுடி தேடி அலுத்துத் திரும்பிய பிறகு அடிபணிந்த திருமாலுக்கும், பிரம்மனுக்கும் ஜோதி வடிவாய் காட்சிதந்தார் சிவபெருமான். அந்த நிகழ்ச்சி நடைபெற்றது சிவராத்திரி நாளில் தான். அப்படிப்பட்ட சிவராத்திரி நாளில் சிவனை மனதில் நினைத்து போற்றி வழிபட்டால் பொன்னான வாழ்வு நமக்குக் கிடைக்கும்.
எல்லா உயிர்களுக்கும் அம்மையாகவும், அப்பனாகவும் விளங்கும் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து வழிபட உகந்த நாட்களில் சிவராத்திரியும் ஒன்றாகும்.
‘மகா சிவராத்திரி’ என்பது மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில் வருவதாகும். அன்று இரவு நான்கு சாமங்கள் சிவபூஜை செய்து விரதமிருந்தால் நாள்தோறும் நற்பலன்கள் நடைபெறும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் நான்காவது சாமத்தில் பூஜையை முடித்தபிறகு விடியற்காலையில் நீராடி அதன்பிறகு உணவு உண்பது உத்தமமாகும்.
அன்றைய தினம் சிவபெருமானை வில்வ இலையால் அர்ச்சித்து வழிபடுவதன் மூலம் சிறப்புகள் அனைத்தும் வந்து சேரும். பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிவுடைய அன்னை பார்வதி தேவியையும் அன்று வணங்கினால் ஊரும், உறவும் போற்றிக் கொண்டாடும் விதத்தில் உங்கள் வாழ்க்கை அமையும். சிவாலயத்தில் நாம் சிவராத்திரியன்று செய்யும் ஒவ்வொரு காரியமும், ஒவ்வொரு கைங்கரியமும் நம்மை உயர்த்தும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
சிவராத்திரியன்று நள்ளிரவு 11.30 மணி முதல் 1 மணி வரை லிங்கோத்பவர் காலமாகும். அந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்குக் கிடைக்கும். வலம்புரிச் சங்கால் அபிஷேகம் செய்து, வில்வ இலையால் அர்ச்சனை செய்து, சுத்தமான அன்னத்தை நைவேத்தியம் வைத்து, சிவனுக்குரிய பாடல்களைப் பாடி, பஞ்சாட்சர மந்திரத்தை பலமுறை சொன்னால் பாவங்கள் விலகும். யோகங்கள் வந்து சேரும்.
சிவராத்திரியன்று முழுநாளும் “சிவாயநம” என சிந்தித்திருந்தால் கவலைகள் பறந்தோடும். கனவுகள் நனவாகும். அபாயம் ஒருநாளுமில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
மகேசன் அருள்புரியும் இந்த இனிய நாள் இவ்வாண்டு மாசிமாதம் 27-ம் நாள் (11.3.2021) வியாழக்கிழமை அன்று வருகின்றது.
சிவராத்திரியன்று மாலை 6 மணிமுதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை ஒவ்வொரு காலங்களிலும் சகல சிவாலயங்களிலும் பூஜைகள் நடைபெறும். அதில் கலந்து கொண்டு சிவன்-உமையவள், நந்தி ஆகியோரின் நல்லருளைப் பெற்றால் நலமுடன் வாழலாம்.
“ஜோதிடக்கலைமணி” சிவல்புரி சிங்காரம்
எல்லா உயிர்களுக்கும் அம்மையாகவும், அப்பனாகவும் விளங்கும் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து வழிபட உகந்த நாட்களில் சிவராத்திரியும் ஒன்றாகும்.
‘மகா சிவராத்திரி’ என்பது மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில் வருவதாகும். அன்று இரவு நான்கு சாமங்கள் சிவபூஜை செய்து விரதமிருந்தால் நாள்தோறும் நற்பலன்கள் நடைபெறும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் நான்காவது சாமத்தில் பூஜையை முடித்தபிறகு விடியற்காலையில் நீராடி அதன்பிறகு உணவு உண்பது உத்தமமாகும்.
அன்றைய தினம் சிவபெருமானை வில்வ இலையால் அர்ச்சித்து வழிபடுவதன் மூலம் சிறப்புகள் அனைத்தும் வந்து சேரும். பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிவுடைய அன்னை பார்வதி தேவியையும் அன்று வணங்கினால் ஊரும், உறவும் போற்றிக் கொண்டாடும் விதத்தில் உங்கள் வாழ்க்கை அமையும். சிவாலயத்தில் நாம் சிவராத்திரியன்று செய்யும் ஒவ்வொரு காரியமும், ஒவ்வொரு கைங்கரியமும் நம்மை உயர்த்தும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
சிவராத்திரியன்று நள்ளிரவு 11.30 மணி முதல் 1 மணி வரை லிங்கோத்பவர் காலமாகும். அந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்குக் கிடைக்கும். வலம்புரிச் சங்கால் அபிஷேகம் செய்து, வில்வ இலையால் அர்ச்சனை செய்து, சுத்தமான அன்னத்தை நைவேத்தியம் வைத்து, சிவனுக்குரிய பாடல்களைப் பாடி, பஞ்சாட்சர மந்திரத்தை பலமுறை சொன்னால் பாவங்கள் விலகும். யோகங்கள் வந்து சேரும்.
சிவராத்திரியன்று முழுநாளும் “சிவாயநம” என சிந்தித்திருந்தால் கவலைகள் பறந்தோடும். கனவுகள் நனவாகும். அபாயம் ஒருநாளுமில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
மகேசன் அருள்புரியும் இந்த இனிய நாள் இவ்வாண்டு மாசிமாதம் 27-ம் நாள் (11.3.2021) வியாழக்கிழமை அன்று வருகின்றது.
சிவராத்திரியன்று மாலை 6 மணிமுதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை ஒவ்வொரு காலங்களிலும் சகல சிவாலயங்களிலும் பூஜைகள் நடைபெறும். அதில் கலந்து கொண்டு சிவன்-உமையவள், நந்தி ஆகியோரின் நல்லருளைப் பெற்றால் நலமுடன் வாழலாம்.
“ஜோதிடக்கலைமணி” சிவல்புரி சிங்காரம்
ஒவ்வொரு கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கும், சில குறிப்பிட்ட பிரச்சனைகளை தீர்க்கும் சக்தி உண்டு. அநத வகையில் திங்கள் கிழமை வரும் பிரதோஷம் அன்று விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
மனிதனும், மனித வாழ்க்கையும் மிகவும் விலைமதிப்பற்ற செல்வம் ஆகும். இத்தகைய செல்வம் அனைத்தும், ஒரு மனிதனுக்கு முன்வினை பயன் மற்றும் விடாமுயற்சி, கடின உழைப்பு போன்றவற்றால் கிடைக்கிறது. எனினும் பலருக்கு வாழ்வில் ஏதாவது ஒரு விதத்தில் தொடர் பிரச்சினைகள், இழப்புகள், விரயங்கள் , மன உளைச்சல் ஏற்படுகிறது. இதனால் உடல் மற்றும் மனம் பாதிக்கப்பட்டு, துன்பங்கள் மேலும் அதிகரிக்கின்றன. இதை பிரதோஷ வழிபாட்டால் சரி செய்ய முடியும்.
வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும், திரயோதசி திதி அன்று சூரியன் மறைவதற்கு முன் 4.30 மணி முதல் 6 மணி வரையான நேரத்தையே ‘பிரதோஷ காலம்’ என்பார்கள். இந்த நேரத்தில் நாம் செய்யும் வழிபாடு, பலகோடி மடங்கு புண்ணியத்தைத் தரும். சிவனுக்கு உகந்த விரதங்களில் மிகவும் முக்கியமானது ‘பிரதோஷ விரதம்’ ஆகும். பிரதோஷ நேரத்தில் ஈஸ்வரன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம். சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம், பிரதோஷ நேரம்தான்.
சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த நாள், திங்கட்கிழமை. இது சிவ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். இந்த நாளில் பிரதோஷ வழிபாடு செய்தால், கடக ராசி மற்றும் கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கும், சந்திர தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக ரீதியான சந்திர தோஷம் அகலும். சந்திரன் - கேது சேர்க்கைக்கு மிகச் சிறந்த தீர்வு கிடைக்கும். கெட்ட பெயர், அவமானத்தில் இருந்து மீள முடியும். சந்திர தோஷம், ஜல கண்டம் அகலும். இடது கண், மாதவிடாய், கருப்பை தொடர்பான நோய் நிவர்த்தியாகும். மன சஞ்சலம், மன அழுத்தம், மனோவியாதி, ஞாபக மறதி நீங்கும். மேலும் பலன்பெற பச்சரிசி உணவை தானம் செய்ய வேண்டும்.
வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும், திரயோதசி திதி அன்று சூரியன் மறைவதற்கு முன் 4.30 மணி முதல் 6 மணி வரையான நேரத்தையே ‘பிரதோஷ காலம்’ என்பார்கள். இந்த நேரத்தில் நாம் செய்யும் வழிபாடு, பலகோடி மடங்கு புண்ணியத்தைத் தரும். சிவனுக்கு உகந்த விரதங்களில் மிகவும் முக்கியமானது ‘பிரதோஷ விரதம்’ ஆகும். பிரதோஷ நேரத்தில் ஈஸ்வரன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம். சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம், பிரதோஷ நேரம்தான்.
சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த நாள், திங்கட்கிழமை. இது சிவ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். இந்த நாளில் பிரதோஷ வழிபாடு செய்தால், கடக ராசி மற்றும் கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கும், சந்திர தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக ரீதியான சந்திர தோஷம் அகலும். சந்திரன் - கேது சேர்க்கைக்கு மிகச் சிறந்த தீர்வு கிடைக்கும். கெட்ட பெயர், அவமானத்தில் இருந்து மீள முடியும். சந்திர தோஷம், ஜல கண்டம் அகலும். இடது கண், மாதவிடாய், கருப்பை தொடர்பான நோய் நிவர்த்தியாகும். மன சஞ்சலம், மன அழுத்தம், மனோவியாதி, ஞாபக மறதி நீங்கும். மேலும் பலன்பெற பச்சரிசி உணவை தானம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கும், சில குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி உண்டு. இன்று செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் அன்று விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
செவ்வாய் கிழமையில் செவ்வாயின் ஆதிக்கம் மிகுதியாக இருக்கும். எனவே இந்நாளில் பிரதோஷ வழிபாடு செய்தால், மேஷம், விருச்சிக லக்னம் மற்றும் ராசியினருக்கும், செவ்வாய் தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக ரீதியான தோஷம் அகலும்.
செவ்வாய் தோஷம் நீங்கும். பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும். திருமணம் தொடர்பான சர்ச்சைகள் விலகும். கடன் நிவர்த்தி ஆகும். உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை ஏற்படும்.
சொத்து தொடர்பான வம்பு, வழக்கு வில்லங்கங்களில் இருந்து மீள முடியும். இனம் புரியாத நோய், அடிக்கடி விபத்தை சந்திப்பவர்களுக்கு, கண்டம் அகலும். விளையாட்டு வீரர்கள், ராணுவம், காவல் துறையினர் ஏற்றம் பெறுவர். ரியல் எஸ்டேட், கட்டிட கலைஞர்களுக்கு தொழில் அபிவிருத்தி ஏற்படும். பலனை அதிகரிக்க மாதுளைச் சாறு கொண்டு நந்திக்கும், சிவனுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும்.
செவ்வாய் தோஷம் நீங்கும். பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும். திருமணம் தொடர்பான சர்ச்சைகள் விலகும். கடன் நிவர்த்தி ஆகும். உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை ஏற்படும்.
சொத்து தொடர்பான வம்பு, வழக்கு வில்லங்கங்களில் இருந்து மீள முடியும். இனம் புரியாத நோய், அடிக்கடி விபத்தை சந்திப்பவர்களுக்கு, கண்டம் அகலும். விளையாட்டு வீரர்கள், ராணுவம், காவல் துறையினர் ஏற்றம் பெறுவர். ரியல் எஸ்டேட், கட்டிட கலைஞர்களுக்கு தொழில் அபிவிருத்தி ஏற்படும். பலனை அதிகரிக்க மாதுளைச் சாறு கொண்டு நந்திக்கும், சிவனுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும்.
தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு அம்சமாகும்.
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில் ஸ்ரீரங்கம் கோவிலின் மூலவரை போன்றே சுதையினால் ஆன சுயம்பு வடிவமாக 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் மகா மாரியம்மன் அருள்பாலிப்பது தனிப்பெரும் சிறப்பு அம்சமாகும். அம்மனின் சுயம்பு திருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவக்கிரகங்களை நவசர்ப்பங்களாக தரித்து அருள்பாலிப்பதால் அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
இக்கோவிலில் இருக்கும் அம்மனை அமாவாசை, பவுர்ணமி மற்றும் கிரகண காலங்களில் வழிபட்டால் உச்ச பலன் கிடைக்கும். மேலும் இத்தலத்தில் வழிபட்டால் ராகு, கேது தோஷம் நிவர்த்தியாகும் என்பதற்கு இக்கோவிலின் மேற்கூரையில் சிற்ப சான்றும் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் அதிபதியாக அம்மன் ஆட்சி புரிகிறார் என்பதற்கும் சிற்பச்சான்றுகள் உள்ளன.
சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோவிலில் அம்மன் அஷ்ட புஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய காட்சியாகும். மேலும் மாரியம்மன் வடிவங்களில் ஆதி பீடம் சமயபுரம் ஆகும். எனவே தான் இக்கோவிலில் எழுந்தருளியுள்ள மகாமாரி பதம் மாறி சிவ பதத்தில் மிகப்பெரிய சுதை சுயம்பு திருவுருவமாக காட்சி அளிக்கிறார்.
மும்மூர்த்திகளை நோக்கி, அசுரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் இக்கோவிலில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு அம்சமாகும். அந்த நாட்களில் அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர் பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும்.
இக்கோவிலில் இருக்கும் அம்மனை அமாவாசை, பவுர்ணமி மற்றும் கிரகண காலங்களில் வழிபட்டால் உச்ச பலன் கிடைக்கும். மேலும் இத்தலத்தில் வழிபட்டால் ராகு, கேது தோஷம் நிவர்த்தியாகும் என்பதற்கு இக்கோவிலின் மேற்கூரையில் சிற்ப சான்றும் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் அதிபதியாக அம்மன் ஆட்சி புரிகிறார் என்பதற்கும் சிற்பச்சான்றுகள் உள்ளன.
சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோவிலில் அம்மன் அஷ்ட புஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய காட்சியாகும். மேலும் மாரியம்மன் வடிவங்களில் ஆதி பீடம் சமயபுரம் ஆகும். எனவே தான் இக்கோவிலில் எழுந்தருளியுள்ள மகாமாரி பதம் மாறி சிவ பதத்தில் மிகப்பெரிய சுதை சுயம்பு திருவுருவமாக காட்சி அளிக்கிறார்.
மும்மூர்த்திகளை நோக்கி, அசுரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும் இக்கோவிலில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்கள், தீவினைகள் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு அம்சமாகும். அந்த நாட்களில் அம்மனுக்கு தளிகை நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர்மோர் பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும்.
சிவன் ஓடிய ஓட்டத்தை நினைவு கூறும் வகையில்தான் சிவாலய ஓட்டம் நடப்பதாக வரலாறு கூறுகிறது. சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் விரதத்தை தொடங்கினர்.
சிவாலய ஓட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என்பதற்கு சரியான காரணம் தெரியவில்லை. இருப்பினும் இரு விதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன. அவற்றில் மூன்று தத்துவங்களை நிலைப்படுத்தும் பீமன் கதை தான் ஏராளமான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. பாண்டவர்களின் முதல்வரான தர்மனுக்கு ராஜகுரு யாகம் ஒன்றை நிறைவேற்ற புருஷ மிருகத்தின் (வியாக்கிரபாத மகரிஷி) பால் தேவைப்பட்டது. அந்த ராட்சத மிருகத்துக்கு சிவன் மீது மிகுந்த பக்தியும், விஷ்ணு மீது மிகுந்த வெறுப்பும் உண்டு.
பீமனின் அகந்தையை அடக்க வியாக்கிரபாத மகரிஷிக்கு சிவனும், விஷ்ணுவும் ஒன்று என பாடம் புகட்ட நினைத்தார். மகாவிஷ்ணு. பீமனிடம் பால் கொண்டுவர கட்டளையிட்டார். அத்துடன் 12 உத்திராட்சங்களையும் பீமனின் கையில் கொடுத்து, உனக்கு ஏதாவது ஆபத்து வந்தால் இதில் ஒன்றைக் கீழே போட்டு விடு என்று சொல்லி அனுப்பி வைத்தார். பீமன் தயக்கத்துடன் ருத்ராட்சங்களை வாங்கிக் கொண்டு புறப்பட்டான். பீமன் அடர்ந்த காட்டை அடையும் போது அங்கு புருஷ மிருகம் கடும் தவத்தில் இருந்தது. அப்போது பீமன் "கோவிந்தா, கோபாலா" என குரல் எழுப்பியபடி பால் பெற முயற்சி செய்தான். கோவிந்தா என்ற வார்த்தையை கேட்டவுடன் புருஷ மிருகத்துக்கு சிவலிங்கம் விஷ்ணுவாக தெரிய தவம் கலைந்து விடுகிறது. சிவபூஜையில் புகுந்த பீமனை புருஷ மிருகம் கோபத்துடன் துரத்தி சென்று பிடித்து கொண்டது. உடனே பீமன் உத்திராட்சத்தை அந்த இடத்தில் போட்டான். உடனே அந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் உருவாகியது. புருஷ மிருகம் ஆழ்ந்த சிவநெறி செல்வர் என்பதால் லிங்க பூஜையை தொடங்கி விடுகிறது.
சிறிது நேரம் கழித்து மீண்டும் "கோவிந்தா, கோபாலா" என குரலெழுப்பி பால் பெற முயன்றபோது புருஷமிருகம் மீண்டும் துரத்தி சென்று பற்றிக்கொள்ள, அடுத்த உத்திராட்சத்தை அங்கு போட்டு ஓடி விட்டான். இவ்வாறு 12 உத்திராட்சங்களும் 12 சைவ தலங்களாக உருவாகி விடுகின்றது.
பன்னிரண்டாவது உத்திராட்சம் போடும்போது பீமனின் ஒருகால் வியாக்கிரபாத மகரிஷிக்கு சொந்தமான இடத்திலும், மறுகால் வெளியிலும் இருந்தது. உடனே பீமன் அதனுடன் வாதம் செய்தான். இந்த வழக்கில் நீதி தேவனான தரும புத்திரன் தனது தம்பி என்றும் பாராமல் புருஷ மிருகத்துக்கு சாதகமாக நீதி வழங்கினார். பீமனுடைய உடலில் பாதி புருஷ மிருகத்துக்கு சொந்தம் என அறிவிக்கிறார். இறுதியாக யாகம் நிறை வேற புருஷமிருகம் பால் வழங்குகிறது. பீமனுடைய கர்வம் ஒடுக்கப்பட்டது. புருஷ மிருகத்தின் மீது இருந்த அவதூறுகளும் களையப்படுகிறது. இதை நினைவு கூறும் வகையில் இன்று பக்தர்கள் கோவில் களுக்கு ஓடிச்சென்று வழிபடுகிறார்கள்.
மற்றொரு கதை
சுண்டோதரன் என்ற அரக்கன் சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டவனாக இருந்தான். அவன் சிவனை வேண்டி திருமலையில் (முதல் சிவாலயம்) கடும் தவம் புரிந்தான். அவனது தவத்தை மெச்சிய சிவன் அரக்கன் முன் தோன்றி வேண்டிய வரம் தருவதாக கூறினார். உடனே அந்த அரக்கன் நான் யாருடைய தலையை தொட்டாலும் அவன் சாம்பலாகி விடவேண்டும் என்ற வரத்தை கேட்டான். சிவனும் அந்த வரத்தை கொடுத்தார்.
உடனே அரக்கன் வரம் உண்மையிலேயே தனக்கு தரப்பட்டதா என்பதை அறிய சிவனின் தலையை தொட முயன்றான். உடனே சிவன் அங்கிருந்து "கோபாலா, கோவிந்தா" என்று அழைத்துவாறு ஒவ்வொரு இடமாக ஓடி ஒளிகிறார். இறுதியில் நட்டாலத்தில் விஷ்ணு மோகினி அவதாரம் எடுக்கிறார். மோகினியின் அழகில் மயங்கிய அவன் கையால் அவனது தலையை தொட செய்து அழிக்கிறார் விஷ்ணு.
இவ்வாறு சிவன் ஓடி ஒளிந்த 12 இடங்களில் சிவன் கோவில் எழுப்பப்பட்டதாகவும், நட்டாலத்தில் சிவனை விஷ்ணு காத்ததால் அங்கு இருவருக்கும் கோவில் எழுப்பப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு சிவன் ஓடிய ஓட்டத்தை நினைவு கூறும் வகையில்தான் சிவாலய ஓட்டம் நடப்பதாக வரலாறு கூறுகிறது.
பீமனின் அகந்தையை அடக்க வியாக்கிரபாத மகரிஷிக்கு சிவனும், விஷ்ணுவும் ஒன்று என பாடம் புகட்ட நினைத்தார். மகாவிஷ்ணு. பீமனிடம் பால் கொண்டுவர கட்டளையிட்டார். அத்துடன் 12 உத்திராட்சங்களையும் பீமனின் கையில் கொடுத்து, உனக்கு ஏதாவது ஆபத்து வந்தால் இதில் ஒன்றைக் கீழே போட்டு விடு என்று சொல்லி அனுப்பி வைத்தார். பீமன் தயக்கத்துடன் ருத்ராட்சங்களை வாங்கிக் கொண்டு புறப்பட்டான். பீமன் அடர்ந்த காட்டை அடையும் போது அங்கு புருஷ மிருகம் கடும் தவத்தில் இருந்தது. அப்போது பீமன் "கோவிந்தா, கோபாலா" என குரல் எழுப்பியபடி பால் பெற முயற்சி செய்தான். கோவிந்தா என்ற வார்த்தையை கேட்டவுடன் புருஷ மிருகத்துக்கு சிவலிங்கம் விஷ்ணுவாக தெரிய தவம் கலைந்து விடுகிறது. சிவபூஜையில் புகுந்த பீமனை புருஷ மிருகம் கோபத்துடன் துரத்தி சென்று பிடித்து கொண்டது. உடனே பீமன் உத்திராட்சத்தை அந்த இடத்தில் போட்டான். உடனே அந்த இடத்தில் ஒரு சிவலிங்கம் உருவாகியது. புருஷ மிருகம் ஆழ்ந்த சிவநெறி செல்வர் என்பதால் லிங்க பூஜையை தொடங்கி விடுகிறது.
சிறிது நேரம் கழித்து மீண்டும் "கோவிந்தா, கோபாலா" என குரலெழுப்பி பால் பெற முயன்றபோது புருஷமிருகம் மீண்டும் துரத்தி சென்று பற்றிக்கொள்ள, அடுத்த உத்திராட்சத்தை அங்கு போட்டு ஓடி விட்டான். இவ்வாறு 12 உத்திராட்சங்களும் 12 சைவ தலங்களாக உருவாகி விடுகின்றது.
பன்னிரண்டாவது உத்திராட்சம் போடும்போது பீமனின் ஒருகால் வியாக்கிரபாத மகரிஷிக்கு சொந்தமான இடத்திலும், மறுகால் வெளியிலும் இருந்தது. உடனே பீமன் அதனுடன் வாதம் செய்தான். இந்த வழக்கில் நீதி தேவனான தரும புத்திரன் தனது தம்பி என்றும் பாராமல் புருஷ மிருகத்துக்கு சாதகமாக நீதி வழங்கினார். பீமனுடைய உடலில் பாதி புருஷ மிருகத்துக்கு சொந்தம் என அறிவிக்கிறார். இறுதியாக யாகம் நிறை வேற புருஷமிருகம் பால் வழங்குகிறது. பீமனுடைய கர்வம் ஒடுக்கப்பட்டது. புருஷ மிருகத்தின் மீது இருந்த அவதூறுகளும் களையப்படுகிறது. இதை நினைவு கூறும் வகையில் இன்று பக்தர்கள் கோவில் களுக்கு ஓடிச்சென்று வழிபடுகிறார்கள்.
மற்றொரு கதை
சுண்டோதரன் என்ற அரக்கன் சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டவனாக இருந்தான். அவன் சிவனை வேண்டி திருமலையில் (முதல் சிவாலயம்) கடும் தவம் புரிந்தான். அவனது தவத்தை மெச்சிய சிவன் அரக்கன் முன் தோன்றி வேண்டிய வரம் தருவதாக கூறினார். உடனே அந்த அரக்கன் நான் யாருடைய தலையை தொட்டாலும் அவன் சாம்பலாகி விடவேண்டும் என்ற வரத்தை கேட்டான். சிவனும் அந்த வரத்தை கொடுத்தார்.
உடனே அரக்கன் வரம் உண்மையிலேயே தனக்கு தரப்பட்டதா என்பதை அறிய சிவனின் தலையை தொட முயன்றான். உடனே சிவன் அங்கிருந்து "கோபாலா, கோவிந்தா" என்று அழைத்துவாறு ஒவ்வொரு இடமாக ஓடி ஒளிகிறார். இறுதியில் நட்டாலத்தில் விஷ்ணு மோகினி அவதாரம் எடுக்கிறார். மோகினியின் அழகில் மயங்கிய அவன் கையால் அவனது தலையை தொட செய்து அழிக்கிறார் விஷ்ணு.
இவ்வாறு சிவன் ஓடி ஒளிந்த 12 இடங்களில் சிவன் கோவில் எழுப்பப்பட்டதாகவும், நட்டாலத்தில் சிவனை விஷ்ணு காத்ததால் அங்கு இருவருக்கும் கோவில் எழுப்பப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு சிவன் ஓடிய ஓட்டத்தை நினைவு கூறும் வகையில்தான் சிவாலய ஓட்டம் நடப்பதாக வரலாறு கூறுகிறது.
சப்தகன்னியரை விரதம் இருந்து வழிபாடு செய்து, சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கினால், நம் சந்ததி சிறக்கும் என்றும் தாலி பாக்கியம் நிலைக்கும் என்றும் வம்சம் தழைக்கும் என்றும் பக்தர்கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்.
பெண் தெய்வ வழிபாட்டிலும் சக்தி வழிபாட்டிலும் கிராம தெய்வ வழிபாடுகளிலும் சப்த கன்னியருக்கு முக்கியமான இடம் உண்டு. பிராம்மி, மகேஸ்வரி, கெளமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி என ஏழு தெய்வங்களும் சப்த கன்னியர் என்று போற்றுகிறது புராணம். இந்த ஏழு தேவியரும் தீமையை அழிக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் வந்தவர்கள் என்று போற்றுகின்றன ஞானநூல்கள்.
இவர்களை சப்த கன்னியர் என்று போற்றுகிறோம். நமக்கெல்லாம் அன்னையாகத் திகழ்பவர்கள் என்பதால், சப்த மாதர்கள் என்றும் வணங்குகிறோம்.
சப்தமாதர்களுக்கு என தனிக்கோயில் இல்லை. அதேசமயம் சோழப் பேரரசு காலத்தில் ஆலயங்களில் சப்த மாதர்களுக்கு சந்நிதி எழுப்பப்பட்டு வழிபடுவது தொடங்கியது. கிராமக் கோயில்களிலும் எல்லை தெய்வம் குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் சப்தமாதர்களுக்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காவல்தெய்வங்களாக வழிபட்டு வருகிறார்கள் பக்தர்கள்.
ஏழு தெய்வங்களும் ஒவ்வொரு கட்டத்தில், அவதரித்து அசுரர்களை அழித்தவர்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சப்த கன்னியர் என்றும் சப்த மாதர்கள் என்றும் போற்றப்படுகிற ஏழு தெய்வங்களையும் சக்தியின் இருப்பிடமாகவே வணங்குகிறார்கள் பக்தர்கள். ஆதிகாலத்தில், சப்த கன்னியர் வழிபாடு, எல்லையைக் காக்கின்ற தெய்வமாகவே போற்றி வணங்கப்பட்டது என்றும் குலத்தைத் தழைக்கச் செய்யவும் விவசாயத்தை செழிக்கச் செய்யவுமான படையல் போடுகிற பூஜையாகவும் சப்த கன்னியர் வழிபாட்டு மேற்கொள்ளப்பட்டதாகவும் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்.
சப்த கன்னியருக்கு, ஆலயங்களில் சந்நிதிகள் அமைந்திருப்பதும் வெகு குறைவு. சப்தகன்னியரில் மிக முக்கியமான தெய்வமாக வராஹி போற்றப்படுகிறாள். அதேபோல், கெளமாரியும் வணங்கப்படுகிறாள். கெளமாரியம்மனுக்கு கிராமங்களில் தனிச்சந்நிதியும் தனிக்கோயிலுமே அமைக்கப்பட்டுள்ளது. மகேஸ்வரி என்பவள், சிவாலயங்களில் உள்ள அம்பாள் அம்சம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
விதை நெல் வைத்து சப்த கன்னியரை வழிபடும் முறை இன்றைக்கும் கிராமங்களில் மிக முக்கியமான பூஜையாக அமைந்திருக்கிறது. சப்தகன்னியர் அமைந்திருக்கும் ஆலயங்களுக்குச் செல்லும்போது, சப்தமாதர்களையும் மனதார வேண்டிக்கொண்டால், தனம் தானியம் பெருக்கித் தந்தருள்வார்கள் தேவியர் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அதேபோல், சப்தகன்னியரை விரதம் இருந்து வழிபாடு செய்து, சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கினால், நம் சந்ததி சிறக்கும் என்றும் தாலி பாக்கியம் நிலைக்கும் என்றும் வம்சம் தழைக்கும் என்றும் பக்தர்கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்.
இவர்களை சப்த கன்னியர் என்று போற்றுகிறோம். நமக்கெல்லாம் அன்னையாகத் திகழ்பவர்கள் என்பதால், சப்த மாதர்கள் என்றும் வணங்குகிறோம்.
சப்தமாதர்களுக்கு என தனிக்கோயில் இல்லை. அதேசமயம் சோழப் பேரரசு காலத்தில் ஆலயங்களில் சப்த மாதர்களுக்கு சந்நிதி எழுப்பப்பட்டு வழிபடுவது தொடங்கியது. கிராமக் கோயில்களிலும் எல்லை தெய்வம் குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் சப்தமாதர்களுக்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, காவல்தெய்வங்களாக வழிபட்டு வருகிறார்கள் பக்தர்கள்.
ஏழு தெய்வங்களும் ஒவ்வொரு கட்டத்தில், அவதரித்து அசுரர்களை அழித்தவர்கள் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
சப்த கன்னியர் என்றும் சப்த மாதர்கள் என்றும் போற்றப்படுகிற ஏழு தெய்வங்களையும் சக்தியின் இருப்பிடமாகவே வணங்குகிறார்கள் பக்தர்கள். ஆதிகாலத்தில், சப்த கன்னியர் வழிபாடு, எல்லையைக் காக்கின்ற தெய்வமாகவே போற்றி வணங்கப்பட்டது என்றும் குலத்தைத் தழைக்கச் செய்யவும் விவசாயத்தை செழிக்கச் செய்யவுமான படையல் போடுகிற பூஜையாகவும் சப்த கன்னியர் வழிபாட்டு மேற்கொள்ளப்பட்டதாகவும் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்.
சப்த கன்னியருக்கு, ஆலயங்களில் சந்நிதிகள் அமைந்திருப்பதும் வெகு குறைவு. சப்தகன்னியரில் மிக முக்கியமான தெய்வமாக வராஹி போற்றப்படுகிறாள். அதேபோல், கெளமாரியும் வணங்கப்படுகிறாள். கெளமாரியம்மனுக்கு கிராமங்களில் தனிச்சந்நிதியும் தனிக்கோயிலுமே அமைக்கப்பட்டுள்ளது. மகேஸ்வரி என்பவள், சிவாலயங்களில் உள்ள அம்பாள் அம்சம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
விதை நெல் வைத்து சப்த கன்னியரை வழிபடும் முறை இன்றைக்கும் கிராமங்களில் மிக முக்கியமான பூஜையாக அமைந்திருக்கிறது. சப்தகன்னியர் அமைந்திருக்கும் ஆலயங்களுக்குச் செல்லும்போது, சப்தமாதர்களையும் மனதார வேண்டிக்கொண்டால், தனம் தானியம் பெருக்கித் தந்தருள்வார்கள் தேவியர் என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அதேபோல், சப்தகன்னியரை விரதம் இருந்து வழிபாடு செய்து, சுமங்கலிகளுக்கு மங்கலப் பொருட்கள் வழங்கினால், நம் சந்ததி சிறக்கும் என்றும் தாலி பாக்கியம் நிலைக்கும் என்றும் வம்சம் தழைக்கும் என்றும் பக்தர்கள் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர்.
கிருத்திகை நட்சத்திரத்தன்று இந்த கடவுளை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால் கடவுளின் முழுஅருளும் கிடைக்கும், நினைத்த காரியங்கள் உடனே நிறைவேறும் என்பது ஐதீகம்.
அழகு முருகனின் நட்சத்திரம் விசாகம் என்றாலும், அவரை பாராட்டி, சீராட்டி வளர்த்த கார்த்திகை பெண்களை போற்றும் விதமாக கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்தால், முருகனின் முழுஅருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
வேலனை வணங்குவதே நமது முதல் வேலை என்று சொல்வது போல், வேல் முருகனை வணங்கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும்.
வேண்டியவை யாவும் அருளும் குணம் கொண்டவர் குமரன். கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள்.
இன்று முருகக் கடவுளுக்கு, செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுங்கள். சர்க்கரைப் பொங்கல், கேசரி அல்லது எலுமிச்சை சாதம் அல்லது பால் பாயாசம் நைவேத்தியம் செய்து, விநியோகியுங்கள். நினைத்த காரியங்கள் நடக்கும். காரியம் யாவிலும் துணையிருந்து வெற்றியைத் தருவார் வேலவன்.
வேலனை வணங்குவதே நமது முதல் வேலை என்று சொல்வது போல், வேல் முருகனை வணங்கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும்.
வேண்டியவை யாவும் அருளும் குணம் கொண்டவர் குமரன். கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள்.
இன்று முருகக் கடவுளுக்கு, செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுங்கள். சர்க்கரைப் பொங்கல், கேசரி அல்லது எலுமிச்சை சாதம் அல்லது பால் பாயாசம் நைவேத்தியம் செய்து, விநியோகியுங்கள். நினைத்த காரியங்கள் நடக்கும். காரியம் யாவிலும் துணையிருந்து வெற்றியைத் தருவார் வேலவன்.
ஒவ்வொரு கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கும், சில குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி உண்டு. வியாழக்கிழமை வரும் பிரதோஷ அன்று விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
குரு கடாட்சம் மிளிரும் நாள், வியாழக்கிழமை. அன்றைய தினம் வரும் பிரதோஷத்தில் வழிபாடு செய்யும் தனுசு, மீனம் ராசி மற்றும் லக்னத்தை சேர்ந்தவர்களும், குரு தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக ரீதியான தோஷம் நீங்கும்.
பிரம்மஹத்தி தோஷம், குரு சாபம் அகலும். குரு நீச்சம், குரு அஸ்தமனம் பெற்றவர்களுக்கு கெடுபலன் குறையும். தர்ம கர்மாதிபதி யோக பலன் முழுமையாக கிடைக்கும். கோவில் தர்மகர்த்தா, நீதிபதிகள் பதவியில் இருந்த பிரச்சினை தீரும்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். மூளை, கல்லீரல், மஞ்சள் காமாலை நோய் நீங்கும். அடமானத்தில் இருக்கும் நகையை மீட்பீர்கள். ஆபரண சேர்க்கை ஏற்படும். வராக்கடன் வசூலாகும். மேலும் பலனை அதிகரிக்க, லட்டு தானம் செய்ய வேண்டும்.
பிரம்மஹத்தி தோஷம், குரு சாபம் அகலும். குரு நீச்சம், குரு அஸ்தமனம் பெற்றவர்களுக்கு கெடுபலன் குறையும். தர்ம கர்மாதிபதி யோக பலன் முழுமையாக கிடைக்கும். கோவில் தர்மகர்த்தா, நீதிபதிகள் பதவியில் இருந்த பிரச்சினை தீரும்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். மூளை, கல்லீரல், மஞ்சள் காமாலை நோய் நீங்கும். அடமானத்தில் இருக்கும் நகையை மீட்பீர்கள். ஆபரண சேர்க்கை ஏற்படும். வராக்கடன் வசூலாகும். மேலும் பலனை அதிகரிக்க, லட்டு தானம் செய்ய வேண்டும்.
இவரை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் முறையாக விரதம் இருந்து வழிபடும்போது எப்படிப்பட்ட கடனாக இருந்தாலும் அதை அடைப்பதற்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும்.
எதற்கும் அஞ்சா நெஞ்சம் படைத்தவர்தான் அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயர். இவரை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் முறையாக வழிபடும்போது எப்படிப்பட்ட கடனாக இருந்தாலும் அதை அடைப்பதற்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும். இதோடு சேர்த்து ஒருவருக்கு செவ்வாய் கிரகம் வலுவாக இருக்க வேண்டும். எவர் ஒருவருக்கு செவ்வாயின் அருள் பரிபூரணமாக கிடைக்கின்றதோ, அவருக்கு கடன் தொல்லை இருக்காது என்று கூறுகிறது ஜோதிடம். செவ்வாயின் ஆசீர்வாதத்தை பெறவும், ஹனுமனின் அனுக்கிரகத்தை பெறவும், வடமாநிலத்தில் உள்ளவர்கள் இந்த முறையினை பின்பற்றி பயன் அடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணி, அல்லது இரவு 8 மணியிலிருந்து 9 மணி, இந்த நேரத்தில் பரிகாரத்தை செய்வது நல்ல பலனை தரும். தொடர்ந்து 9 வாரம் இந்தப் பரிகாரத்தை செய்து வர வேண்டும். குறிப்பாக சிவன் கோவில்களில், தூண்களில் இருக்கும் ஆஞ்சநேயருக்கு இந்த பரிகாரத்தை செய்வது மிகவும் சிறப்பான ஒன்று.
பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள். தாம்பூலத் தட்டு, சிகப்பு துணி ஒன்று, 1 1/4 கிலோ வெல்லம், 1/5 கிலோ கருப்பு உளுந்து, நல்லெண்ணெய், நெய் தீபம். உங்கள் வீட்டில் இருக்கும் தாம்பூலத்தட்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தாம்பூலத்தட்டின் மேல் அனுமனுக்கு சாத்துவதற்கு சிகப்பு துணியை வைத்து, அதனுடன் வெல்லம், கருப்பு உளுந்து, நல்லெண்ணெய், இவை மூன்றும் கோவிலுக்கு தானமாக கொடுக்க வேண்டும். ஆஞ்சநேயருக்கு சிகப்பு வஸ்திரத்தை அணிவித்து, நீங்கள் வாங்கித் தந்த நல்லெண்ணையை காப்பாக ஆஞ்சநேயருக்கு அணிவிக்க வேண்டும்.
இந்த பரிகாரத்தை எல்லாம் ஆஞ்சநேயரின் சிலையை நீங்கள் கையால் தொட்டு செய்யக்கூடாது. அந்த கோவிலில் இருக்கும் ப்ரோகிதரிடம் கொடுத்து விட்டால் போதும். அவர், ஆஞ்சநேயருக்கு சிகப்பு துணியை சாத்திய பின்பு, நெய் தீபம் ஒன்று ஏற்றி வைத்து, உங்கள் மனதார கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். ஆஞ்சநேயரின் முன்பு 5 நிமிடம் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் வாங்கிச் சென்ற நல்லெண்ணெயை முழுமையாக கோவிலிலேயே கொடுத்துவிட வேண்டும்.
தாம்பூலத் தட்டை தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் கோவிலுக்கு தானமாக கொடுத்து விட்டு, திரும்பி வீட்டுக்கு வந்து விடுங்கள். ஒன்பது வாரம் தவறாமல் இந்த பரிகாரத்தை செய்து வந்தால் கட்டாயம் நல்ல பலன் உண்டு. நம்பிக்கையோடு செய்து பாருங்கள் விரைவில் கைமேல் பலன் கிடைக்கும். ஆஞ்சநேயரை நம்பி செய்யப்படும் எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அதற்கு கூடுதல் சக்தி உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.
வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணி, அல்லது இரவு 8 மணியிலிருந்து 9 மணி, இந்த நேரத்தில் பரிகாரத்தை செய்வது நல்ல பலனை தரும். தொடர்ந்து 9 வாரம் இந்தப் பரிகாரத்தை செய்து வர வேண்டும். குறிப்பாக சிவன் கோவில்களில், தூண்களில் இருக்கும் ஆஞ்சநேயருக்கு இந்த பரிகாரத்தை செய்வது மிகவும் சிறப்பான ஒன்று.
பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள். தாம்பூலத் தட்டு, சிகப்பு துணி ஒன்று, 1 1/4 கிலோ வெல்லம், 1/5 கிலோ கருப்பு உளுந்து, நல்லெண்ணெய், நெய் தீபம். உங்கள் வீட்டில் இருக்கும் தாம்பூலத்தட்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தாம்பூலத்தட்டின் மேல் அனுமனுக்கு சாத்துவதற்கு சிகப்பு துணியை வைத்து, அதனுடன் வெல்லம், கருப்பு உளுந்து, நல்லெண்ணெய், இவை மூன்றும் கோவிலுக்கு தானமாக கொடுக்க வேண்டும். ஆஞ்சநேயருக்கு சிகப்பு வஸ்திரத்தை அணிவித்து, நீங்கள் வாங்கித் தந்த நல்லெண்ணையை காப்பாக ஆஞ்சநேயருக்கு அணிவிக்க வேண்டும்.
இந்த பரிகாரத்தை எல்லாம் ஆஞ்சநேயரின் சிலையை நீங்கள் கையால் தொட்டு செய்யக்கூடாது. அந்த கோவிலில் இருக்கும் ப்ரோகிதரிடம் கொடுத்து விட்டால் போதும். அவர், ஆஞ்சநேயருக்கு சிகப்பு துணியை சாத்திய பின்பு, நெய் தீபம் ஒன்று ஏற்றி வைத்து, உங்கள் மனதார கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். ஆஞ்சநேயரின் முன்பு 5 நிமிடம் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் வாங்கிச் சென்ற நல்லெண்ணெயை முழுமையாக கோவிலிலேயே கொடுத்துவிட வேண்டும்.
தாம்பூலத் தட்டை தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் கோவிலுக்கு தானமாக கொடுத்து விட்டு, திரும்பி வீட்டுக்கு வந்து விடுங்கள். ஒன்பது வாரம் தவறாமல் இந்த பரிகாரத்தை செய்து வந்தால் கட்டாயம் நல்ல பலன் உண்டு. நம்பிக்கையோடு செய்து பாருங்கள் விரைவில் கைமேல் பலன் கிடைக்கும். ஆஞ்சநேயரை நம்பி செய்யப்படும் எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அதற்கு கூடுதல் சக்தி உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.






