search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவன் வழிபாடு
    X
    சிவன் வழிபாடு

    திங்கள் கிழமை வரும் பிரதோஷம் அன்று விரதம் அனுஷ்டிப்பதால் தீரும் பிரச்சனைகள்

    ஒவ்வொரு கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கும், சில குறிப்பிட்ட பிரச்சனைகளை தீர்க்கும் சக்தி உண்டு. அநத வகையில் திங்கள் கிழமை வரும் பிரதோஷம் அன்று விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
    மனிதனும், மனித வாழ்க்கையும் மிகவும் விலைமதிப்பற்ற செல்வம் ஆகும். இத்தகைய செல்வம் அனைத்தும், ஒரு மனிதனுக்கு முன்வினை பயன் மற்றும் விடாமுயற்சி, கடின உழைப்பு போன்றவற்றால் கிடைக்கிறது. எனினும் பலருக்கு வாழ்வில் ஏதாவது ஒரு விதத்தில் தொடர் பிரச்சினைகள், இழப்புகள், விரயங்கள் , மன உளைச்சல் ஏற்படுகிறது. இதனால் உடல் மற்றும் மனம் பாதிக்கப்பட்டு, துன்பங்கள் மேலும் அதிகரிக்கின்றன. இதை பிரதோஷ வழிபாட்டால் சரி செய்ய முடியும்.

    வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும், திரயோதசி திதி அன்று சூரியன் மறைவதற்கு முன் 4.30 மணி முதல் 6 மணி வரையான நேரத்தையே ‘பிரதோஷ காலம்’ என்பார்கள். இந்த நேரத்தில் நாம் செய்யும் வழிபாடு, பலகோடி மடங்கு புண்ணியத்தைத் தரும். சிவனுக்கு உகந்த விரதங்களில் மிகவும் முக்கியமானது ‘பிரதோஷ விரதம்’ ஆகும். பிரதோஷ நேரத்தில் ஈஸ்வரன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாக ஐதீகம். சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம், பிரதோஷ நேரம்தான்.

    சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த நாள், திங்கட்கிழமை. இது சிவ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். இந்த நாளில் பிரதோஷ வழிபாடு செய்தால், கடக ராசி மற்றும் கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கும், சந்திர தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக ரீதியான சந்திர தோஷம் அகலும். சந்திரன் - கேது சேர்க்கைக்கு மிகச் சிறந்த தீர்வு கிடைக்கும். கெட்ட பெயர், அவமானத்தில் இருந்து மீள முடியும். சந்திர தோஷம், ஜல கண்டம் அகலும். இடது கண், மாதவிடாய், கருப்பை தொடர்பான நோய் நிவர்த்தியாகும். மன சஞ்சலம், மன அழுத்தம், மனோவியாதி, ஞாபக மறதி நீங்கும். மேலும் பலன்பெற பச்சரிசி உணவை தானம் செய்ய வேண்டும்.
    Next Story
    ×