
எல்லா மாதங்களையும் விட, புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அன்றைய தினங்களில் விரதமிருந்து விஷ்ணுவை வழிபட்டால் வெற்றி மீது வெற்றி வந்து குவிகின்றது. ‘புருஷர்களில் உத்தமமானவன்’ என்பதால் விஷ்ணுவை ‘புருஷோத் தமன்’ என்றழைக்கிறார்கள். அவனது அவதாரத்தில் ராமாவதாரம் முக்கியமாகக் கருதப்படுகின்றது.
அந்த ராமாயணத்தை வீடுகளிலும், ஆலயங்களிலும் புரட்டாசி மாதத்தில் படிப்பது வழக்கம். இங்ஙனம், ராமாயணம் படிப்பவர்கள், படித்ததைக் கேட் டவர்கள் ஆகியோருக்கு ராமபிரானின் அருளும் கிடைக்கின்றது. வாழ்க்கைக்குத் தேவையான பொருளும் கிடைக்கின்றது.
பூமகளின் அருகிருக்கும் விஷ்ணுவை நோக்கி புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து ஆலயம் சென்று வழிபட்டு வந்தால் நாளும் பொழுதும் நல்லதே நடக்கும்.