என் மலர்
தோஷ பரிகாரங்கள்
- ஒவ்வொரு செவ்வாயிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள்.
- பாலபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும்
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் ஒரு சிறிய குன்றின் மீது, நெடிய ராஜகோபுரத்துடன் விளங்குகிறது. பசுமையான மரங்கள் சூழ்ந்து இருப்பதால், தூரத்திலிருந்து பார்க்கும்போது அந்த குன்று ஒரு மயில் தோகை விரித்திருப்பது போல் அழகாகக் காட்சியளிக்கிறது.
கோபுரமானது மயிலின் கொண்டை போல உச்சியில் இருக்கிறது. கோவிலைப் போலவே இந்த மலையையும் புனித மாகக் கருதி பக்தர்கள் வழி படுகிறார்கள். முருகப்பெருமானால் போரில் சூரபத்மன் தோற் கடிக்கப்பட்டான் அவன் மனம் திருந்தி, இறையருள் வேண்டி... மயிலம் வந்து மயில் வடிவ மலையாக மாறி கடும் தவம் புரிந்தான். தவத்தில் மகிழ்ந்து முருகன் அவனுக்கு காட்சி தந்தார். அப்போது ''என்னை தங்கள் வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!'' என முருகனிடம் சூரபத்மன் வேண்டினான்.
மேலும் ''மயில் வடிவ மலையாக இருந்து நான் தவம் புரிந்த இந்த மலைக்கு 'மயூராசலம்' எனப் பெயர் வழங்க வேண்டும். தாங்கள் எந்த நாளும் இங்கு வீற்றிருந்து அன் பர்களுக்கு அருள் புரிய வேண்டும்!'' என்றும் கோரிக்கை வைத்தான். உடனே முருகன் அவனிடம் ''எதிர் காலத்தில் பாலசித்தர் என்பவர் இங்கு தவம் புரிவார். அப்போது உன் விருப்பம் நிறைவேறும்!'' என்று கூறிவிட்டு மறைந்தார். சூரபத்மன், அதுவரை மலையாக நிலை கொண்டு அங்கு காத்திருந்தான். 'மயூரா சலம்' என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.
இந்த கோவிலில் உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார். செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்குப் பாலபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பதால், ஒவ்வொரு செவ்வாயிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள். எப்போதும் அமைதி நிலவும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும்.
இந்த கோவிலில் பங்குனி உத்திரம் 12 நாட்கள் பிரம்மோற்சவமாக விமரிசையாக நடக்கிறது. இந்த நாட்களில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராமாள பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
- தீர்த்தக்குடங்களை அலங்கரிக்க காவடி கயிறுகள் பயன்படுகின்றன.
- காவடி கயிறுகள் மிக அழகான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும்.
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், கார்த்திகை திருவிழா, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. இதில் பங்குனி உத்திர திருவிழா மிகவும் சிறப்பு பெற்றதாகும். தேவர்களை காக்க பன்னிரு கைகள், அறுமுகங்களோடு முருகப்பெருமான் சூரர்களுடன் போரிட்டு வெற்றி கண்டார். அதைத்தொடர்ந்து முருகனுக்கு இந்திரன் தன் மகள் தெய்வானையை பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில் திருமணம் செய்து கொடுக்கின்றார். இந்த நாளே பங்குனி உத்திர திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
பங்குனி உத்திர திருவிழாவில் கொங்கு பகுதி மட்டுமின்றி, பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து மேள, தாளம் முழங்க பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். பின்னர் முருகப்பெருமானுக்கு தாங்கள் கொண்டு வந்த தீர்த்தத்தை அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
தீர்த்தம் நிறைந்த செம்பை தீர்த்தக்குடம் என்றும், தீர்த்தக்காவடி என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். தீர்த்தக்குடங்களை அலங்கரிக்க காவடி கயிறுகள் பயன்படுகின்றன. காவடி கயிறுகள் மிக அழகான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும். குடத்தை மூடுவதற்கு வண்ண, வண்ண பட்டு துணிகளை பயன்படுத்துகின்றனர். தீர்த்தக்காவடி குடத்தை பக்தர்கள் தங்களது தலையில் வைத்து கைகளால் 2 புறத்தில் உள்ள கயிற்றை பிடித்து சுமக்கின்றனர்.
பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவின்போது கொடுமுடியில் இருந்து தீர்த்தக்காவடி கொண்டு வருவதற்கு கொங்கு பகுதி கிராமங்களில் பழனி முருகன் கோவில் தீர்த்தக்காவடி சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர். தீர்த்தக்குடத்தில் பழம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை, இனிப்பு வகைகளை உள்ளே போட்டு துணியால் மூடி கட்டுகின்றனர். இந்த தீர்த்தக்காவடி எடுப்பதன் மூலம் நம்மை பிடித்துள்ள பாவ, கர்ம வினைகள் நீங்கும். ஆயுள், செல்வம் பெருகும்.
- குலதெய்வம் வழிபாடு அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும்.
- பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.
நாம் நினைக்கும் போது உதவி செய்யும் தெய்வமே குலதெய்வம் ஆகும். நம்முடைய சமுதாயத்தில் ஒவ்வொரு குடும்ப வகைகளுக்கும்,ஒவ்வொரு குல தெய்வம் இருக்கும்.
குலதெய்வம் வழிபாடு அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகும். நம்முடைய வீட்டில் எந்த சுபகாரியங்கள் செய்தாலும், முதலில் குலதெய்வத்தை வணங்கிவிட்டுதான் ஆரம்பிக்கவேண்டும். எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் குலதெய்வ வழிபாடு முதலில் செய்து விட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக முடியும். மேலும் வருடந்தோறும் நம்முடைய குலதெய்வத்தை வழிபடுவதால் நன்மைகளும்,சந்தோசங்களும் குடும்பத்தில் நிலவும் என்பது உண்மை.
நீங்கள் எந்த சுப காரியங்கள் செய்யும் முன், குலதெய்வத்தை நேரில் தரிசிக்க முடியாவிட்டால், ஒரு தேங்காயை எடுத்துக்கொள்ளுங்கள். வீட்டின் வாசலுக்கு வந்து சூரியனை கும்பிட்டுவிட்டு உங்க வீட்டிற்கு எந்த திசையில் உங்கள் குலதெய்வம் இருக்கிறதோ, அந்த திசையை பார்த்து குலதெய்வத்தை மனதுக்குள் துதித்துக்கொண்டே தேங்காயை உடைத்து விட்டு நீங்க செய்யப்போகும் சுப காரியத்தை செய்யுங்கள். கண்டிப்பாக குலதெய்வம் உங்களை எப்போதும் பாதுகாக்கும். இதை, குலதெய்வ ஆலயத்திற்கு தொலை தூரத்தில் இருப்பவர்கள் செய்யலாம். மற்றபடி குல தெய்வ ஆலயங்களின் அருகில் இருப்பவர்கள் கட்டாயம் எந்த சுப காரியங்களை செய்வதற்கு முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு செய்வது தான் நல்லது.
பங்குனி உத்திரம் நாளில் குலதெய்வத்தை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.. மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.
குலதெய்வ கோவில்களான காவல் தெய்வங்கள் என அழைக்கப்படும் கோவில்களுக்கு பங்குனி உத்திரத்தன்று சென்று வழிபடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த குலதெய்வ வழிபாட்டை கார்த்திகை மாதம் திருகார்த்திகையின்போதும், பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்றும் மேற்கொள்வார்கள். இதில் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும்.
இந்த ஆண்டு 2023,ஏப்ரல் / 5 ஆம் நாள் ( 5-4-2023) பங்குனி உத்திர நட்சத்திர நாள் ஆகும். அன்றைய தினம் பௌர்ணமி என்பதால் வழிபட, மிகமிக உகந்த நாளாகவும் அமைகிறது. மற்ற நாட்களில் குலதெய்வத்தை வழிபடுவதுடன், பங்குனி உத்திரம் நாளில் சென்று வழிபடுவது மேலும் நல்ல நற்பயனைப் பெற்றுத் தரும் என்று நம்பப்படுகிறது !
பங்குனி மாத பௌர்ணமியில் குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை தரிசித்து வாருங்கள். வழக்கமாக உங்கள் முன்னோர்களால் செய்யப்படும் பூஜைகள், அபிஷேகங்கள் செய்து பொங்கல் இட்டு குடும்பத்தோடு ஒற்றுமையாக வழிபட்டால் புண்ணிய பலன்களோடு முன்னோர்களது ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வழிபாடு முடிந்ததும் அங்கேயே சமைத்து பந்தி போட்டு பரிமாறி வீடு திரும்புவதும், குலதெய்வத்தை திருப்திப்படுத்தும்.
பங்குனி உத்திரத்தன்று வெளியூரிலும், வெளிநாடுகளிலும் வசிப்பவர்கள் தவிர்க்க இயலாத காரணத்தினால் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியவில்லையென்றால் வீட்டின் பூஜையறையில் இருக்கும் குலதெய்வத்துக்கு படையல் இட்டு மனம் உருகி வழிபாடு செய்யலாம். குலம் சிறக்கவும், குடும்பம் மேன்மை பெறவும் குலதெய்வத்தை மகிழ்விக்க பங்குனி உத்திர நாளே நல்ல நாள்... ஒருவரது குலத்தை வழி வழியாக பாதுகாக்கும் வலிமையும், சக்தியும் குலதெய்வத்துக்கே உண்டு.
மேலும் இந்த பங்குனி உத்திர தினம் ஒரு அற்புதமான தினம். இந்த தினத்தில் அனைத்து தெய்வங்களுக்கும் திருமணம் நடந்தது. குறிப்பாக சபரி சாஸ்தா என சொல்லக்கூடிய ஐயப்பன் அவதரித்தது பங்குனி உத்திர தினம் அன்றுதான். முருகப்பெருமான் திருமணமும் அன்றுதான். இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திரத்தன்று குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை பூஜை செய்து இறைவனின் ஆசியைப் பெறுவோம்...!
தொடர்புக்கு:- 9442729693
- அஷ்டமி திதி கண்ணன் அவதாரம் எடுத்த நாளாகும்.
- நவமி திதி ராமர் அவதாரம் செய்த நாளாகும்.
ராமர் பிறந்தது நவமி திதி என்பதால் ராமநவமி என்று அழைக்கப்படுகின்றது. நாம் நமது பிறந்தநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுவது போல இறைவன் பிறந்த நாளையும் மகிழ்ச்சியோடு கொண்டாடினால் இனிய வாழ்க்கை நமக்கு அமையும்.
பொதுவாக ஒரு காரியத்தை தொடங்கும் பொழுது இன்று அஷ்டமி, நவமியாக இருக்கின்றது. வேறொரு நல்ல நாள் பார்த்து புது முயற்சி செய்யலாம் என்று மக்கள் அனைவரும் சொல்வதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இதையறிந்த அஷ்டமி, நவமி ஆகிய இரண்டு திதிகளும் மிகவும் கவலைப்பட்டு இறைவனிடம் முறையிட்டதாம். உடனே இறைவன் உங்கள் இருவரையும் கொண்டாடும் விதத்தில் ஒரு செயல் செய்கின்றேன் என்று சொல்லி அஷ்டமி திதியன்று கண்ணன் அவதாரம் எடுத்த நாளாக அமைத்தார். நவமி திதியன்று ராமர் அவதாரம் செய்த நாளாக அமைத்தார்.
இந்த இரண்டு திதிகளும் சந்தோஷப்பட்டன. நம்மை மக்கள் கொண்டாட இறைவன் அவதரித்த நாளாக மாற்றிவிட்டதை அறிந்து மகிழ்ச்சிக் கடலில் மிதந்தன. எனவே நாம் 2 திதிகளையும் ஒதுக்க வேண்டியதில்லை.
அஷ்டமி திதியில் முக்கியமான காரியத்தை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால் அன்றைய தினம் கண்ணபிரானை வணங்கிய பிறகு காரியத்தை தொடங்கலாம். அதே போல நவமி திதியில் ஒரு காரியத்தை செய்தே தீரவேண்டும் என்ற நிர்ப்பந்தம் வந்தால் ராமபிரான், சீதாதேவி, அனுமன் ஆகியோரை வழிபட்டுவிட்டு காரியத்தைச் செய்யலாம்.
திருமணம் மற்றும் கிரகப்பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு அஷ்டமி, நவமி நாட்களைத் தேர்ந்தெடுக்காவிட்டாலும் நடைமுறையில் செய்யும் மற்ற காரியங்களுக்கு அந்த திதிக்குரிய தெய்வங்களை வழிபட்ட பிறகு காரியத்தை தொடங்கினால் விதி மாறி வெற்றி கிடைக்கும் என்பதை அனுபவத்தில் நீங்கள் உணரலாம்.
சிவல்புரி சிங்காரம்
- இருவரது அறிவிப்பினையும் தொடர்ந்து இரு கட்சிகளிடமும் இருந்த நெருக்கடிகள் தளர்ந்தது என்றே சொல்ல வேண்டும்.
- தேர்தல் ஆணையத்திலும் நமது வெற்றி உறுதியான பிறகு கூட்டணி பற்றி முடிவெடுக்கலாம்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமித்ஷா தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி தொடருகிறது என்று அறிவித்தார்.
அவர் அறிவித்த மறுநாளே எடப்பாடி பழனிசாமியும் பா.ஜனதாவுடன் வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று அறிவித்தார். இருவரது அறிவிப்பினையும் தொடர்ந்து இரு கட்சிகளிடமும் இருந்த நெருக்கடிகள் தளர்ந்தது என்றே சொல்ல வேண்டும். பா.ஜனதாவை பொறுத்தவரை தமிழகத்தில் தனக்கு ஒரு துணை தேவை என்பதில் கவனமாக உள்ளது. அதே நேரம் அ.தி.மு.க.விலோ நமக்கு ஏற்ற துணை பா.ஜ.க. இல்லை என்ற எண்ணம் ஒரு சில நிர்வாகிகளிடம் இருக்கத்தான் செய்கிறது. அதற்குக் காரணம் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது என்ற நம்பிக்கைதான். முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி பொன்னையன், சி.வி.சண்முகம் ஆகியோர் அந்த எண்ணத்தில் உறுதியாகவே இருக்கிறார்கள்.
என்னண்ணே... கூட்டணி பற்றி கேட்டால் தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம் என்று சொல்லி இருக்க வேண்டியது தானே. இப்பவே பா.ஜனதாவோடு ஏன் கமிட் ஆக வேண்டும் என்று கேட்டார்களாம்! அதற்கு எடப்பாடி பழனிசாமி நான் பொதுச்செயலாளர் ஆகி விட்டேன். கட்சி இப்போதுதான் இயல்பு நிலைக்கு வந்திருக்கு. கட்சியை வளர்க்க இன்னும் நிறைய வேலைகள் உள்ளன. அவர் (ஓ.பி.எஸ்.) 2024 தேர்தல் வரைவிடாமல் தொல்லை கொடுக்கத்தான் செய்வார். கோர்ட்டில் நாம் வெற்றி பெற்றாலும் கடைசியில் தேர்தல் ஆணைய அங்கீகாரம் தேவை. அதற்கு பா.ஜனதா ஒத்துழைப்பு அவசியம்.
எனவே இப்போதே கூட்டணி இல்லை என்று சொல்லி ஏன் அவர்களை பகைக்க வேண்டும்?
தேர்தல் ஆணையத்திலும் நமது வெற்றி உறுதியான பிறகு கூட்டணி பற்றி முடிவெடுக்கலாம். இப்போதைக்கு இப்படித்தான் அறிவிக்க வேண்டும் என்றார்.
உண்மையிலேயே அல்வா அமித்ஷாவுக்கா? எடப்பாடி பழனிசாமிக்கா?.
- இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம்.
- தேவிக்கு மாங்கல்யம் வாங்கி அணிவித்தால், மாங்கல்ய பாக்கியம் ஏற்படுவதாக கூறுகிறார்கள்.
திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் 3 கி.மீ தொலைவில் அம்பலந்தரா என்னும் இடத்தில் அமைந்துள்ளது பழஞ்சிறை தேவி கோவில். 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் பக்தர்களின் துன்பங்கள் நீக்கும் கோவிலாக விளங்கி வருகிறது. பழஞ்சிறை தேவியை வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறவி என்பது இல்லை என்றும், இப்பிறவியிலேயே துன்பங்கள், துயரங்கள், தொல்லைகள் அகலும் என்பது நம்பிக்கை. ஆதி கடவுளான சிவபெருமான், ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல் என அனைத்திற்கும் பரம்பொருளாக திகழ்பவர். அவரது அன்புக்குரிய சக்தி சொரூபினியான பார்வதிதேவி. உயிர்களை பேணிக்காத்து, அன்பர்களுக்கு துன்பம் ஏற்படுகின்ற வேளையில் துயர் துடைப்பவள்.
கர்ப்ப கிரகத்தை 17 யானைகளும், 6 சிங்கங்களும் தாங்கியிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேல் பகுதியில் மும்மூர்த்திகள் தங்கள் தேவியர்களுடனும், கங்கையுடன் காட்சி தரும் சிவபெருமான் உருவமும் காணப்படுகிறது. பிரகாரத்தில் தசாவதார காட்சிகள் வடிக்கப்பட்டுள்ளன. இங்கு நவக்கிரகங்கள், ரத்த சாமுண்டி, பிரம்ம ராட்சசன், மாடன் திருமேனிகளும் இருக்கின்றன.
மாசி மாதம் விழாவின் போது 'கன்னியர் பூஜை' என்ற பூஜை நடைபெறும். அம்மன் சிறு வயது தோற்றத்தில் இருப்பது போல பெண் குழந்தைகள் வேடமிட்டு புத்தாடை அணிந்து இந்த பூஜையில் பங்கேற்கிறார்கள். இந்த நாளில் பெண்களும் தங்களின் தாலி பாக்கியத்திற்காக சிறப்பு மாங்கல்ய பூஜையை நடத்துகிறார்கள்.
இந்த தலத்தில் உள்ள நாகர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் ராகு-கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது ஐதீகம். இந்த வழிபாட்டின் போது தேவிக்கு மாங்கல்யம் வாங்கி அணிவித்தால், மாங்கல்ய பாக்கியம் ஏற்படுவதாக கூறுகிறார்கள்.
பழஞ்சிறை தேவிக்கு வஸ்திரம் அணிவித்து, அரளிப்பூ மாலை சாத்தி வழிபாடு செய்வதும் சிறப்பான பலனைத் தரும்.இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.
இத்தலத்தில் அன்னையின் சன்னிதானத்திற்கு வந்து சுயம்வர அர்ச்சனை நடத்தினால் திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை.
அமைவிடம் :
திருவனந்தபுரத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் அம்பலத்தரா என்ற இடத்தில் இருக்கிறது பழஞ்சிறை தேவி கோவில்.
- இந்தப் பொருளை தானம் கொடுப்பதன் மூலம் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை
- உங்களுடைய கர்மாவும், பாவமும் இரட்டிப்பாக உயரத்தான் செய்யும்.
இந்த காலத்தில் தானம் கொடுப்பது என்பது மிகவும் சர்வ சாதாரணமாகி விட்டது. யார் வேண்டுமென்றாலும், யாருக்கு வேண்டுமென்றாலும் எந்த பொருளை வேண்டுமென்றாலும், எப்படி வேண்டுமென்றாலும் தானம் செய்கிறார்கள். தானத்திற்கு எந்த ஒரு வரையறையும் இல்லாமல் போய்விட்டது. அந்த காலத்திலெல்லாம் தானம் என்றால் சுபகாரியங்கள் செய்யும் போது கொடுக்கக்கூடிய தானங்கள். அசுபகாரியங்கள் செய்யும் போது கொடுக்கக்கூடிய தானங்கள் என்று வரையறையோடு தானம் செய்யப்பட்டது. தானத்தினை முறையாக எப்படி செய்யவேண்டும். எப்படி செய்யக்கூடாது. தவறான தானத்தின் மூலம் நமக்கு பாவம் வந்து சேருமா? எப்படிப்பட்ட தானங்கள் தவறான தானங்களாக சொல்லப்பட்டுள்ளது என்பதை பற்றிய பார்க்கலாம்.
முதலில் முறை தவறிய தவறான தானம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். எடுத்துக்காட்டிற்கு ஒரு பசு மாட்டை வாங்கி தானமாக கொடுக்கின்றோம். அந்த பசு மாட்டை நாம் யார் கையில் தானமாக கொடுக்கின்றோம் என்பதை முதலில் பார்க்க வேண்டும். பசு மாடு வளர்க்க தெரியாதவனுக்கு இந்த பசு மாட்டை வாங்கி தானமாக கொடுத்தால், அவன் என்ன செய்வான்? இந்த கையில் வாங்கிய பசு மாட்டை, அந்த கையில் வேறு ஒருவனுக்கு விற்று விட்டு சென்று விடுவான். போக கூடாதவர் கையில் பசுமாடு சென்று, அந்த பசு மாட்டிற்கு ஏதாவது ஒரு விபரீதம் ஏற்பட்டு விட்டால், அந்தப் பாவம் நம்மை தான் வந்து சேரும். நீங்கள் தவறான ஒருவரிடம் பசு மாட்டைப் தானம் பிடித்துக் கொடுத்ததால் தானே, பசுமாட்டிற்கு இந்த நிலைமை. பாத்திரம் அறிந்து பிச்சை போட வேண்டும் என்பதை நம்முடைய முன்னோர்கள் இதற்காகத்தான் சொல்லி வைத்துள்ளார்கள்.
நீங்கள் ஒரு தானத்தை மற்றவர்களுக்கு கொடுக்கிறீர்கள் என்றால், அந்த தானத்தின் மூலம் தானம் பெற்றவர் முழுமையாக பயனை அடையவேண்டும். அதன் மூலமே நம்முடைய பாவங்கள் குறைக்கப்படும். நம்முடைய கர்ம வினைகள் குறைக்கப்படும். தானத்தை செய்த உடன் நம்முடைய கடமை முடிந்து விடவில்லை. நான் கொடுத்த தானம் சரியான இடத்தில் தான் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது நம்முடைய கடமை.
ஒரு பெண்ணை கன்னிகாதானம் செய்து கொடுக்கின்றனர். பெண்ணை கன்னிகா தானம் செய்து விட்டோம் என்பதற்காக அந்தப் பெண்ணின் நல்லது கெட்டதை நாம் பார்க்காமலேயே இருக்கின்றோம். கடைசிவரை அந்த பெண் புகுந்த வீட்டில் எப்படி இருக்கிறாள் என்பதை கன்னிகாதானம் செய்து கொடுத்த பெற்றவர்கள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள். முறையான தானமும் இப்படித்தான் இருக்க வேண்டும்.
சரி, அடுத்த விஷயத்திற்கு வருவோம். நமக்கு உபயோகமில்லாத நாம் பயன்படுத்தாத சில பொருட்களை இல்லாதவர்களுக்கு கொடுக்கின்றோம். எடுத்துக்காட்டிற்கு நீங்கள் உடுத்திய துணி, நல்ல துணியாக இருக்கிறது என்றால் அதை அடுத்தவர்களுக்கு தானமாக கொடுக்கலாம். எப்படி? அந்த துணிகளை நன்றாக துவைத்து, வெயிலில் உலர வைத்து, மடித்து கொஞ்சமாக மஞ்சள் வைத்து அந்தத் துணியை அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
பழைய துணிகளை கஷ்டப்படுபவர்களுக்கு கொடுக்கும்போது அது தானத்தின் வரிசையில் வராது. இதை தானம் என்று சொல்ல வேண்டாம். உங்கள் கையால் அந்த பழைய துணிகளை அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டாம். சுத்தப்படுத்திய பழைய துணியை பையில் போட்டு, அந்த பையை கீழே வைத்து விட வேண்டும். அதை கஷ்டப்படும் அந்த குறிப்பிட்ட நபர் எடுத்துக் கொள்ளட்டும். இது நீங்கள் கஷ்டப்படுபவர்களுக்கு செய்யக் கூடிய சிறிய உதவி.
ஒருவேளை நீங்கள் உடுத்திய துணியை துவைக்காமலோ, அல்லது கிழிந்து இருக்கக்கூடிய துணிகளையோ தானம் செய்தால், அதன் மூலம் உங்களுக்கு பாவம் தான் வந்துசேரும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். புதியதாக வாங்கிய குடை, செருப்பு, கம்பளி, புதிய ஆடைகள், அரிசி, பருப்பு, எண்ணெய், பூசணிக்காய், பாய், நல்ல சாப்பாடு இவைகளை புதியதாக வாங்கி தானமாக கொடுங்கள். முக்கியமாக நாம் கொடுக்கப்படும் தானம் அடுத்தவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். நமக்கு பயன்பட வில்லை என்பதற்காக, நாம் பயன்படாத பொருட்களை அடுத்தவர்களுக்கு தூக்கி தானமாக கொடுப்பதில் எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது. இப்படிப்பட்ட பொருட்களை தானம் செய்வதன்மூலம் நமக்கு பலனும் கிடைக்காது.
ஏதோ ஒரு பிரதிபலனை எதிர்பார்த்து தான் இன்றைய சூழ்நிலையில் எல்லோரும் தானம் கொடுக்கும் வழக்கத்தை வைத்திருக்கின்றோம். ஆனால் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உண்மையான மனதோடு அடுத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அடுத்தவர்களுக்கு பயன்படக்கூடிய பொருட்களை கொடுக்கும் தானமே சிறந்த தானம் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.
- சந்திராஷ்டம நாளில் பரிகாரம் செய்யக் கூடாது.
- பரிகாரம் வேறு, வழிபாடு வேறு, இரண்டும் ஒன்றல்ல.
சுப வினையை எதிர்கொள்ளும் காலங்களில் உற்சாகமாக வாழும் மனிதர்கள் அசுப பலன்கள் நடக்கும் காலங்களில் ஜோதிடத்தின் உதவியை நாடுகிறார்கள். ஜாதகரின் சுய ஜாதகத்திற்கு ஏற்ப சில பரிகாரங்கள் , வழிபாடுகள் பரிந்துரைக்கப்படுகிறது. பலருக்கு பெரிய திருப்புமுனையைத் தரும் பரிகாரங்கள் சிலருக்கு கிணற்றில் போட்ட கல்லாக ஜாதகருக்கு தொடர்ந்து அசுபத்தை மட்டுமே உமிழ்கிறது. இது போன்ற காலகட்டங்களில் பரிகாரங்கள் என்பது உண்டா இல்லையா என்ற தர்க்கமும் அவநம்பிக்கையும் ஏற்படுவது சகஜம். பரிகாரம் நிறைவேறாமல் வருத்தப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஏன் சிலருக்கு, பரிகாரம் பலன் தருவதில்லை? என்பதைப் பார்க்களாம்.
தோஷம் என்றால் குற்றம் அல்லது குறை என்று பொருள். ஒருவரின் ஜாதகத்தில் உள்ள குறைகளை சரி செய்வதே பரிகாரம். ஒரு மனிதனின் வாழ்க்கையில் நிகழ்கின்ற சுக, துக்கங்கள் அனைத்தும் அவன் செய்கின்ற கர்ம வினையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன.
இந்த கர்ம வினையை தெரிந்து செய்த பாவம், தெரியாது செய்த பாவம், என இரண்டாக பிரிக்கலாம்.
தெரியாமல் செய்த பாவத்தின் மூலம் உருவாகும் அசுப பலனை பரிகாரம் மூலம் சரி செய்ய முடியும். தெரிந்து செய்த பாவங்களுக்கான பலனை அனுபவித்தே தீர்க்க வேண்டும். சிறிய தோஷம் மற்றும் தடை, தாமதங்கள் ஆகியவை தெரியாமல் செய்த வினைகளினால் உருவாகுவது.பெரிய கடுமையான தோஷங்கள் அனைத்தும் தெரிந்தே செய்த வினைகளின் அடிப்படையில் உருவாகுவது.
ஒருவரின் ஜனன ஜாதகம் மற்றும் பிரசன்னத்தின் மூலம் தெரிந்த மற்றும் தெரியாமல் செய்த பாவங்களை கண்டறிய முடியும்.
வேதாகம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு இருக்கும் பரிகாரம், வழிபாட்டு முறைகள் சக்தி வாய்ந்தவை. அவைகளை முறையாகச் கடைபிடிக்கும் போது நிறைவேறும். அதேபோல் பரிகாரம் வேறு, வழிபாடு வேறு, இரண்டும் ஒன்றல்ல.
பரிகாரம் என்பது குறிப்பிட்ட ஒரு காரிய சித்திக்காக நேரம் பொருள் செலவு செய்து பூஜை முறையில் ஈடுபடுவது. மனிதர்களின் பிரச்சினைகள், கஷ்ட நஷ்டங்கள், தடைகள், இடையூறுகளை அகற்ற செய்யப்படும் பூஜையே பரிகாரமாகும். அதாவது வாழை மரத்திற்கு தாலி கட்டுவது வெட்டுவது, தோஷ நிவர்த்தி ஹோமம் போன்றவை அடங்கும். அதாவது ஹோமம், யாகத்தின் மூலம் பிரபஞ்ச சக்தியிடம் நேரடியாக மன்னிப்பு கேட்பது.
வழிபாடு என்பது தாங்கள் அனுபவிப்பது தங்களின் கர்மவினையின்படிதான் என்பதை உணர்ந்து அதை அப்படியே ஏற்றுக்கொண்டு இறை நம்பிக்கையுடன் தர்ம காரியங்களைச் செய்து இறைவனின் கருணை தங்கள் மேல் விழுந்து பிறவா நிலையை அடைய முயற்சி செய்வது. அதாவது காரியசித்திக்காக குல , குடும்ப , உபாசன , இஷ்ட , காவல் தெய்வத்திற்கு தன் எண்ண அலைகளை அனுப்பி தன் விருப்பத்தை சித்தியாக்குவது.
பரிகாரத்தின் பலன் குறிப்பிட்ட கால அளவிற்கே இருக்கும். வழிபாட்டின் பலன் ஒருவரின் ஆயுள் முழுவதும் அவருடன் காவலாக இருக்கும்.சுட்டெரிக்கும் கோடையை சமாளிக்க ஏசி அறை, பேன் பயன்படுத்துவது பரிகாரம். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் அறையை விட்டு வெளியே வந்தாலும் ஏசி, பேன் நம்மை காக்காது. சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஏற்ற உணவு , நீராகாரம் உண்டு இயற்கைக்கு ஏற்றாற்போல் தன் உடம்பை தயார் செய்வது வழிபாடு.
பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் மூர்த்தி, தீர்த்தம், தலம் நன்கு அறிந்து பரிகாரம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யப்படும் பரிகாரத்திற்கு பலன்கள் அதிகம். மற்ற வகையில் செய்யப்படும் பரிகாரம் பயன்படாமல் போகும்.
மேலும் பரிகாரம் செய்யப்பட வேண்டிய கிரகம் குறிகாட்டும் பஞ்ச பூத தத்துவங்களின் அடிப்படையில் பரிகாரம் செய்ய வேண்டும்.
பரிகாரம் செய்யும் போது கவனிக்க வேண்டியவைகள்
தாய், தந்தை, குல, குடும்ப, இஷ்ட, உபாசன, காலடி, காவல் தெய்வ ஆசியை மானசீகமாகவோ நேரடியாகவோ பெற்ற பின்பே பரிகாரம் செய்ய வேண்டும் சந்திராஷ்டம நாளில் பரிகாரம் செய்யக் கூடாது.
நல்ல விஷயத்துக்கான பரிகாரம் வளர்பிறையிலும் மற்ற பரிகாரத்தை தேய்பிறையிலும் செய்ய வேண்டும்
ஜனன ஜாதகத்தில் சுப கிரகமாக இருந்தால் கூட நீச, அஸ்தமனம் பெற்ற கிரகத்திற்கான் தசா, புத்தி, அந்தர காலங்களை தவிர்த்தல் நலம்.
திரிகோணாதிகளுடன் தொடர்பு பெறும் தசா, புத்தி, அந்தர காலமாக இருப்பது சிறப்பு 6, 8, 12 மாதிகளின் தசா, புத்தி, அந்தர காலமாக இருக்க கூடாது. மிகப் பெரிய யாகங்கள் பரிகார பூஜை செய்யும் போது ஜாதகரின் பட்சி அரசு செய்யும் காலமாக இருப்பது மிகச் சிறப்பு ஜாதகருக்கு தாராபலம் உள்ள நாளாக இருப்பது மேலும் பலனை அதிகரிக்க செய்யும்.
பரிகாரம் உடனே யாருக்கு நிறைவேறும் லக்னாதிபதி வலிமையுள்ள ஜாதகருக்கு பரிகாரம் உடனே நிறைவேறும்.
பரிகாரம் செய்யும் கிரகம் கோட்ச்சாரத்தில் ஆட்சி, உச்சம், நட்பு பெற்று இருக்க வேண்டும்.
மிகப் பெரிய பரிகார பூஜை செய்யும் போது குறைந்தது 1 வாரத்திற்கு முன்பு பிரமச்சரியத்தை கடைபிடித்து புலால் உண்பதை தவிர்த்து காரிய சித்தி வழிபாடு செய்பவரின் பரிகாரம் குறிப்பிட்ட கால அவகாசத்துள் நிச்சயமாக நிறைவேறும்.
பரிகாரம் பொய்ப்பதற்கான காரணங்கள்
சுய பரிகாரம் செய்தல், விருப்பமில்லாமல் பெற்றோரின் விருப்பத்திற்காக பரிகாரம் செய்வது, வேத விற்பனர் ஏதோ மந்திரம்சொல்கிறார் தனக்கும் அந்த பரிகாரத்திற்கும் தொடர்பு இல்லாதது போல் எண்ண அலைகளை பரவவிட்டு பரிகாரத்தில் காட்சியாளராக ஈடுபடுவது. ஜோதிடர் பரிகாரம் சொல்லும் போதே எனக்கு அந்த கிழமை , தேதி சரிவராது என்று கூறும் போது பரிகாரம் பலிக்காது.
ஒரு ஜாதகத்தின் குரு , சனி , செவ்வாய் தொடர்பே ஜாதகருக்கு பரிகாரம் தேவையா? வழிபாடு தேவையா என்பதை முடிவு செய்யும் முக்கிய காரணியாகும்.
ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி, ( 1 ) பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி (5) மற்றும் பாக்கிய அதிபதி (9) தசை, புத்தி, அந்தர காலங்களில் செய்யும் பரிகாரங்கள் உடனே நிறைவேறும். 6,8,12ம் அதிபதிகளின் தசா புக்திகள், நீச்ச கிரக தசா புக்திகளில் செய்யும் பரிகாரங்கள் பலிக்காது. சில சமயங்களில் காலம் தாழ்த்தி பலன் தரும். ஆக சாதகமான கிரக தசா, புத்தி காலத்தில் செய்யும், பரிகார பூஜைகள் உரிய பலனைத் தரும் என்பது தெளிவாகிறது.
- இறைவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது
- இறைவன் கொடுப்பதை எவராலும் தடுக்க முடியாது
பூஜையறையில் விநாயகர் படம், சிவ குடும்ப படம், பெருமாள்-லட்சுமி படங்கள் வைத்து, அருகில் குத்துவிளக்கில் ஐந்து முகத்திலும் தீபம் ஏற்ற வேண்டும். நடுநாயகமாக விநாயகர், சரஸ்வதி, லட்சுமி படம் வைக்க வேண்டும். காலையிலும், மாலையிலும் விளக்கேற்றி மங்கலப் பாடல்கள் பாடி வழிபட வேண்டும்.
வீட்டு முற்றத்தில் துளசி மாடம் வைத்து துளசி மாதாவைக் கும்பிட வேண்டும்.
எதிர்மறை சொற்களைத் தவிர்த்து இனிமையான சொற்களையே பேச வேண்டும்.
வேண்டாம், போ, இல்லை என்ற எதிர்மறைச் சொற்களையும், விலங்குகளின் பெயர்களைச் சொல்லி அதட்டும் முறையையும் கைவிட வேண்டும்.
முன்னோர்களின் நினைவு நாட்களில் அவர்களை நினைத்து அவர்களுக்குப் பிடித்த உணவுகளை படைத்து வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
பிரார்த்தனைகள் மூலம் இறைவன் நம் இல்லம் தேடி வந்து அருள் கொடுக்கவும், மகிழ்ச்சியோடு நாம் வாழவும் இங்ஙனம் செய்வது நல்லது.
இறைவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது, இறைவன் கொடுப்பதை எவராலும் தடுக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- தீராத நோய் நீங்கவும் மக்கள் இந்த தேவியை வழிபட்டு வருகின்றனர்.
- சிக்கலான வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டு வருகின்றன.
'கரிக்ககம்' என்ற இடத்தில் உருவானது தான், 'தேவி கரிக்ககத்தம்மா' என்று அழைக்கப்படும் கரிக்ககம் சாமுண்டி கோவில். இந்த ஆலயத்தில் உக்கிர சொரூபிணியாக.. ரத்த சாமுண்டி தேவியானவள், சத்தியத்தை நிலைநாட்டும் சக்தியோடு அருள்பாலித்து வருகிறாள்.
அமைதி வாழ்வுக்கும், தீராத நோய் நீங்கவும் மக்கள் இந்த தேவியை வழிபட்டு வருகின்றனர்.
நினைத்த காரியம் நிறைவேறவும், தடைகள் விலகவும் தொடர்ந்து 13 வெள்ளிக்கிழமை தேவிக்கு ரத்த புஷ்பார்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். உடல்நலனுக்காகவும், பயம் நீங்கவும் 'கறுப்புக் கயிறு' மந்தரித்து கட்டப்படுகிறது. இந்த தாயத்து, தேவியின் பாதங்களில் 21 தினங்கள் வைத்து பூஜை செய்து கொடுக்கப்படுவதாகும்.
இந்த ஆலயத்தில் ரத்த சாமுண்டி தேவி, உக்கிர வடிவத்தில் சுவர் சித்திரமாக அருள்பாலித்து வருகிறாள். முன் காலத்தில் இருந்தே, இந்த அன்னையின் சன்னிதி யில் சத்தியம் செய்வது ஓர் சடங்காக இருந்து வந்துள்ளது. அந்த காலத்தில் நீதிமன்றம், போலீஸ் நிலையங்களுக்கு பயப்படாதவர்கள் கூட இந்த அம்மனுக்கு பயந்து உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இந்த சன்னிதியில் நடைபெறும் முக்கிய பூஜை 'சத்ரு சம்கார' (பகைமை அழிக்கும்) பூஜையாகும். தோஷங்கள், தடைகள் அகலவும், புதியதாக தொடங்கப்பட உள்ள சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறவும், கண் திருஷ்டி நீங்கவும், செய்வினை தோஷம், பகைவர்கள் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் விலகவும் இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
அடுத்தது பால சாமுண்டி தேவி சன்னிதி. இந்த அன்னையும் சித்திரமாகவே காட்சி தருகிறாள். ஆனால் இவளது தோற்றம் சாந்தசொரூபிணியானது. இந்த அன்னை அமைதியும் அழகும் நிறைந்த தோற்றத்தில் காணப்படுவதால், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த சன்னிதியில் வழிபாடு செய்யலாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இந்த அம்மனின் சன்னிதியில் தட்சணை செலுத்தி வழிபாடு செய்தால், அன்னையின் அருள் நிச்சயம் கிடைக்குமாம்.
வழக்கைத் தீர்க்கும் அம்மன்
ஒரு முறை சேர மன்னன் ஒருவனின் அரசாட்சியில், அரசியின் விலை மதிப்பான காதணி காணாமல் போனது. சந்தேகத்தின் பேரில் ஒரு காவலரைப் பிடித்து சிறையில் அடைத்தனர். அந்த காவலரின் காதலி, அரசியின் தோழி ஆவாள். அவள் செய்தி கேட்டு ஓடோடி வந்து தன்னை தண்டிக்கும்படியும், காவலரை விடுவிக்கும் படியும் மன்றாடினாள். அதைக் கேட்ட காவலனோ, 'இல்லை.. நான் தான் குற்றவாளி. எனக்கே தண்டனை கொடுங்கள்' என்றான்.
'யார் குற்றவாளி' என்று கண்டுபிடிக்க, கரிக்ககம் கோவிலில் ரத்த சாமுண்டி சன்னிதானத்தில் சத்தியம் செய்வது என்று முடிவானது. பொய் சத்தியம் செய்பவருக்கு அம்மனே தண்டனை வழங்குவார் என்பது உறுதி. குற்றம் சுமத்தப்பட்ட காவலரும், அந்த காவலரின் காதலியும் ஆலய குளத்தில் நீராடி, ஈர உடையுடன் ரத்த சாமுண்டி சன்னிதிக்கு வந்தனர். அப்போது அரசியின் துணிகளை சலவை செய்யும் பெண் ஒருத்தி அங்கு ஓடோடி வந்தாள்.
'அரசியார் சலவைக்குப் போட்டத் துணியில், அரசியின் காதணி இருப்பதைக் கண்டேன். சாமுண்டி தேவியின் அசரீரி வாக்குப்படி, அதனை ஒப்படைக்க இங்கே வந்தேன். காவலரும், அந்தப் பெண்ணும் நிரபராதிகள் மன்னா!' என்று கூறி தன்னிடம் இருந்த காதணியைக் கொடுத்தாள். மன்னன் மகிழ்ந்தான். காவலரும், அந்தப் பெண்ணும் விடுவிக்கப்பட்டனர். தன்னுடைய காதணிகள் இரண்டையும், சாமுண்டி தேவிக்கே சமர்ப்பித்தாள், அரசி.
அப்போதிருந்து இன்றுவரை பல சிக்கலான வழக்குகள், சாமுண்டி தேவியின் சன்னிதி முன்பு சத்தியம் செய்வதன் மூலம் தீர்த்து வைக்கப்பட்டு வருகின்றன.
ஆலயம், தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்
திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி ஆலயத்தின் வடமேற்கு திசையில், பார்வதி புத்தனாற்றின் கரையில் அமைந்துள்ளது, கரிக்ககம் சாமுண்டி தேவி ஆலயம்.
-பிரபா முத்துக்குமார், திருவனந்தபுரம்.
- இந்த கோவிலில் வழிபட்டால் குலதெய்வத்தை வழிபடாததால் வந்த தோஷம் விலகும்.
- இன்று (வெள்ளிக்கிழமை) திருமாலின் மச்ச அவதார தினமாகும்.
இன்று (வெள்ளிக் கிழமை) திருமாலின் மச்ச அவதார தினமாகும். திருமால் எடுத்த முதல் அவதாரம் மச்சஅவதாரம். 'மச்சம்' என்றால் 'மீன்' என்று பொருள். வேதங்களை அபகரித்துக் கொண்டு போய் கடலில் ஒளித்து வைத்திருந்த ஹயக்ரீ வன் என்ற அசுரனை அழிப்பதற்காக திருமால் எடுத்த அவதாரம் இது.
இந்த மச்ச அவதாரத்துடன் சம்பந்தப்பட்ட கோவில், கும்பகோணம் அருகே உள்ள தேவராயன் பேட்டையில் அமைந்திருக்கும் மச்சபுரீஸ்வரர் கோவில். இந்த ஆலயத்தில் உள்ள மூலவர் பெயர் மச்சபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் சுகந்த குந்தலாம்பிகை. மீன் உருவில் இருந்த மகாவிஷ்ணு, தன் சுய உருவத்தை அடைய இத்தலத்து சிவனை வழிபட்டதாக தல வரலாறு தெரிவிக்கிறது.
இந்த ஆலயம் மீன ராசிக்காரர்களின் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இறைவன் மீன் வடிவம் தாங்கி, உலகையும் காத்து, வேதங்களையும் மீட்ட பெருமை உடையது இத்தலம். மச்ச அவதாரத்தில் இருந்து சுய உருவம் அடைய பரந்தாமன் முயற்சித்தபோது, அசுரனை கொன்ற தோஷம் காரணமாக அவரால் சுய உருவத்தை அடைய முடியவில்லை. இதனால் அவர் இத்தலத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கினார். சிவனருளால் மகாவிஷ்ணு சுயஉருவம் அடைந்ததாக தலபுராணம் கூறுகிறது. மகாவிஷ்ணுவுடன் தேவர்கள், பிரம்மா ஆகியோரும் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.
1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோவில் கட்டிடக்கலை, சிற்பக்கலைக்கு உறைவிடமாக விளங்குகிறது. தஞ்சை பெரிய கோவிலுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தது.
மகாவிஷ்ணு மச்ச அவதாரம் கொண்டு சிவனை வழிபட்ட சின்னம் கோவில் முகப்பில் கருங்கல்லால் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து மச்சபுரீஸ்வரரையும், சுகந்த குந்தலாம்பிகையையும் வணங்கி தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொண்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம். குலதெய்வ வழிபாடு செய்யாமல் விட்டவர்கள், இங்கு வந்து வழிபட்டு மீண்டும் தங்கள் குலதெய்வ வழிபாட்டை தொடர்ந்தால் குலதெய்வத்தை வழிபடாததால் வந்த தோஷம் விலகும்.
அமைவிடம்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 20 கிலோமீட்டர் தூரத்தில் பண்டாரவாடை என்ற கிராமம் உள்ளது. அங்கிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் மச்ச புரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பாபநாசத்தில் இருந்தும், பண்டாரவாடையில் இருந்தும் பஸ், ஆட்டோ வசதி உண்டு.
- பெரிய பணம் கொடுக்கும் போது சுய ஜாதக பரிசோதனை மிக அவசியமானதாகும்.
- குல கவுரவத்திற்காக தந்தை ஏற்படுத்திய கடனை அடைத்து அவதிப்படுகிறார்கள்.
படித்து நல்ல அரசு உத்தியோகத்தில் இருப்பவர்கள், மிகப் பெரிய தொழில் அதிபர்கள் தான் அதிக அளவில் பணம் கொடுத்து ஏமாறுகிறார்கள். பணத்தை கொடுத்தவர்கள் அசல் வந்தால் கூட போதும் என்று புலம்புகிறார்கள். எந்த ஆதாரமும் இன்றி கொடுத்த பணம் எப்படி வரும்? பணத்தை பெருக்கி தருகிறேன் என்று கூறுபவர்கள் பெரும்பான்மையாக அறிமுகமான மிகவும் நம்பிக்கைக்குரிய உறவுகளாகவே இருக்கிறார்கள். உறவுகளை வெறுக்கவும், ஒதுக்கவும் முடியாமல் பணத்தை இழந்தவர்கள் படும் வேதனை அளப்பரியது.
புதிய தொழில் முயற்சிக்காக தொழிலில் பங்குதாரர் ஆக பணம் கொடுத்து ஏமாறுவது, வீடு, மனை வாங்க இடைத் தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறுவது, அரசு உத்தியோகம் வாங்கித் தருகிறேன் என்று கூறுபவர்களிடம் பணம் கொடுத்து ஏமாறுவது- மேலே கூறிய இந்த முறையில் சில லட்சம் முதல் பல லட்சம் கொடுத்து வேதனையில் இருப்பவர்களே அதிகம். எந்த ஆதாரமும் இன்றி பல லட்சம் பணத்தை பறிகொடுத்தவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் நடைப்பிணமாக காலம் தள்ளுகிறார்கள்.
பெரிய பணம் கொடுக்கும் போது சுய ஜாதக பரிசோதனை மிக அவசியமானதாகும். ஆறாம் அதிபதி ஒன்பதில் இருந்தால் தந்தையால் வராக்கடன் உருவாகும். குல கவுரவத்திற்காக தந்தை ஏற்படுத்திய கடனை அடைத்து அவதிப்படுகிறார்கள். ஆறாம் அதிபதி பத்தில் இருந்தால் தொழில் சார்ந்த நஷ்ட கடன், கூடிக் கொண்டே இருக்கும். கஷ்டமான தொழில் செய்யும் சூழல், திடீர் விரையம் உண்டாகும். இவர்கள் கடனுக்கு பொருள் விற்பதால் வராக்கடன் கூடும். அதனால் டென்ஷன் மிகுதியாகும். இந்த அமைப்பு உடையவர்கள் கடனுக்கு பயந்து நோயை வரவழைத்துக் கொள்வார்கள். மிகுதியான தொழில் எதிரிகள் உண்டு.
ஜோதிட ரீதியாக வராக்கடன், பண இழப்பு ஏற்படும் காலம் எது?
6, 8-ம் அதிபதி அல்லது 6, 8-ல் நின்ற கிரகத்தின் தசை புத்தி, அந்தரம் நடப்பவர்களுக்கு புதன் தசை நடக்கும் காலங்களில் ஜனன கால ஜாதகத்தில் 7-ம் அதிபதி வக்ரம் பெற்று தசை நடத்தும் போது மேஷம், மகர லக்னத்தை சேர்ந்தவர்களுக்கு இயல்பாகவே வராக்கடன் இருக்கும்.
6, 8-ம் அதிபதி லக்னத்தில் இருப்பவர்களுக்கு 7-ம் அதிபதி 6,8-ம் இடத்தோடு சம்பந்தம் இருப்பவர்களுக்கு மேலும் ஜனன கால ஜாதகத்தில் 2,8-ம் இடத்தில் சனி, ராகு/கேது இருப்பவர்கள் அல்லது 2, 8-ம் இடத்திற்கு வக்ர கிரகம் சம்பந்தம் இருப்பவர்கள் யாருக்கும் பணம், பொருள் கொடுத்தாலும் திரும்ப வராது.வயதோட்டத்தின் அடிப்படையில் 19, 28, 37,46, 55, 64,73 ஆகிய வயதில் ஏதாவது ஒரு காரணத்தினால் வராக்கடன் உருவாகுகிறது.
ஒரு ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் இருந்து 6, 8, 12 ஆகிய மூன்று பாவகங்களும் 'துர் ஸ்தானங்கள்' அல்லது 'மறைவு ஸ்தாதானங்களாகும். ஒருவர் கர்ம வினைப்படி அனுபவிக்க வேண்டிய துன்பங்களை பரிபூரணமாக தருவது இந்த மறைவு ஸ்தானங்களே. மனித வாழ்வையே தடம் புரட்டி போடும் வலிமை கோட்சார கிரகங்களுக்கும் உண்டு.
தசா புத்தியோடு தொடர்பு பெறாத கோட்சார கிரகத்தால் ஏற்படுத்தப்படும் தாக்கம் குறைவாகவும் மாரக தசை, புத்தி யோடும் அதன் அதிபதிகளோடும் தொடர்பு பெறும் கோட்சார கிரகங்களுக்கு சாமானியர்களை கூட உறுத் தெரியாமல் செய்து விடும் வலிமை உண்டு. மறைவு ஸ்தானங்கள் வலிமை பெற்ற ஜாதகருக்கு நித்திய கண்டம் பூர்ண ஆயுள். இவர்கள் வராக்கடனால் மன உளைச்சலை அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள். லக்ன அதிபதி 6, 8,12-ம் பாவகத்தோடு சம்பந்தம் பெறும் போது ஜாமின் போடுவது, அல்லது ஏலச் சீட்டில் பணம் கட்டி ஏமாறுவது, குறுக்குவழி அதிர்ஷ்டத்தை நம்புதல் போன்ற காரணத்தால் வராக்கடனையும் சத்ருவையும் உருவாக்கி சொல்ல முடியாத துயரத்தை அடைகிறார்கள்.
பொதுவாக மறைவு ஸ்தானத்திற்கு அதிக கிரகங்கள் சம்பந்தம் இல்லாமல் இருப்பது நல்லது. அவை எவ்வளவு கொடுத்தாலும் அவற்றால் ஜாதகர் நன்மை பெற முடியாமல் தவிக்கநேரும். ஒருவரின் ஜாதகத்தில் ஆறாம் அதிபதி எந்த பாவகத்தில் இருக்கிறாறோ அந்த கிரகத்தின் காரகத்துவங்களை சார்ந்து கடன், வம்பு, வழக்கு, கோர்ட், கேஸ், அடிதடி, சண்டை, போட்டி, பொறாமை, எதிரி, உத்தியோக பிரச்சிினைகள் இருக்கும். அடுத்தவருடைய கஷ்டத்திற்கு பாவம் என்று உதவி செய்தால் அந்த பாவம் உதவி செய்தவரை விடாமல் துரத்துகிறது. மிகப் பெரிய வங்கிகள், கார்ப்ரேட் கம்பெனிகள், நிதி நிறுவனங்கள் வராக்கடனை வசூலிக்க தனியான ஒரு அமைப்பு வைத்து இருக்கிறார்கள்.
சாமானியர்கள் என்ன செய்வது?
செவ்வாய் கிழமையும் பிரதோசமும் இணைந்த நாளில் சிவனுக்கு கரும்புச் சாறு அபிசேகம் செய்யவும். செவ்வாய் கிழமையும் பிரதோசமும் இணைந்த நாளில் சிவனுக்கு நல்லெண்ணையில் சிவப்பு திரி இட்டு 6 விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட மாற்றம் உண்டாகும். விழுப்புரம் மாவட்டம், திருவக்கரை ஊரில் உள்ள சந்திரமவுலீஸ்வரர் மற்றும் அமிர்தேஸ்வரி அம்மனை வழிபட வராக்கடன்கள் வசூலாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






