என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    • சிலருக்கு கோவிலுக்கு சென்று வழிபடக் கூடிய சந்தர்ப்பம் எளிதில் கூடுவதில்லை.
    • ஒருவருடைய ஜாதகத்தில் நவகிரகங்கள் அவரவர் பூர்வ புண்ணியத்தின்படி அமைந்திருக்கும்.

    நவகிரகங்கள் ஆகாயக் கோட்டையில் நின்றாடும் நர்த்தனமே மனித வாழ்வில் ஏற்படும் அனைத்து ஏற்ற இறக்கத்திற்கும் காரணமாக அமைகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் நவகிரகங்கள் அவரவர் பூர்வ புண்ணியத்தின்படி அமைந்திருக்கும். ஜாதகத்தில் உள்ள நவகிரகங்கள் எல்லாமே பூர்வ புண்ணியத்தின் படி சாதகமாக அமைந்திருக்க வாய்ப்பில்லை. அவரவர் சுய ஜாதகத்தில் நவகிரகங்கள் நின்ற நிலைக்கு ஏற்ப அதன் தசா புக்திக்கு காலங்களில் சுப, அசுப பலன்கள் ஏற்படுகின்றன.

    நவகிரக தோஷங்களில் இருந்து விடுபட கோவிலை நோக்கி புறப்படுகிறார்கள். அங்கு சென்று வழிபட்டு திரும்பும்போது, மன நிம்மதி கிடைக்கிறது. சிலருக்கு கோவிலுக்கு சென்று வழிபடக் கூடிய சந்தர்ப்பம் எளிதில் கூடுவதில்லை. அதனால் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். மனிதன் உட்பட சகல ஜீவராசிகளையும் தனது கதிர்வீச்சால் வழி நடத்தும் நவகிரகங்களின் தாக்கத்தில் இருந்து விடுபட எளிய சில பரிகாரங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

    சூரியன் தோஷம்

    சூரியன் தோஷத்தில் இருந்து விடுபட சூரிய காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும்.ஞாயிறு காலை 6 மணிமுதல் 7 மணிக்குள் கோதுமை தானம் செய்ய வேண்டும் . கோதுமை உணவு சாப்பிட வேண்டும். தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்திய இருதயம் பாராயணம் செய்ய வேண்டும். சிவ வழிபாடு சூரியனை சுப வலுப்பெறச் செய்யும். கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார் கோவிலில் சென்று வழிபாடு செய்ய வேண்டும். மாணிக்க மோதிரம் அணிய வேண்டும்.

    சந்திர தோஷம்

    சந்திர தோஷம் விலக சந்திர காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். திங்கட்கிழமைகளில் (சோமவார) விரதம் இருந்து பார்வதி, பரமேஸ்வரரை வணங்க வேண்டும். திங்கட்கிழமை தோறும் பச்சரிசி சாதம் சாப்பிட வேண்டும் பச்சரிசிமாவில் மாவிளக்கு செய்து பிரதோஷ வேளையில் நந்திக்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும்.

    நீர், பசும்பால், அரிசி போன்றவற்றை திங்கட்கிழமைகளில் தானம் செய்ய வேண்டும்.

    வெள்ளி பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும்.

    வளர்பிறையில் சந்திர தரிசனம் செய்ய வேண்டும்.

    திருப்பதி சென்று வெங்கடா சலபதியை தரிசிக்கலாம்.

    பவுர்ணமியில் சத்ய நாராயணர் விரதம் இருக்க வேண்டும்.

    முத்து மோதிரம் அணிய வேண்டும்.

    செவ்வாய் தோஷம் செவ்வாய் காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும்.

    துர்கா கவசம் படிக்க வேண்டும்.

    வெள்ளி, தாமிரம் கலந்த வளையல் அல்லது மோதிரம் அணிய வேண்டும்.

    செவ்வாய் தோஷம்

    செவ்வாய் தோஷம் நீங்க சிவப்பு நிற ஆடை அணிந்து விரதமிருந்து முருகனை வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும். சென்னை அருகில் உள்ள சிறுவாபுரி முருகனை வழிபட வேண்டும். செவ்வாய் கிழமை சிவப்பு துவரை தானம் செய்ய வேண்டும் தினமும் கந்தர் சஷ்டி கவசம் கேட்க வேண்டும் அல்லது பாராயணம் செய்தல் வேண்டும். ரத்த தானம் செய்ய வேண்டும். சிவப்பு நிற பசு தானம் செய்ய வேண்டும். கும்பகோணம் வைத்தீஸ்வரன் கோவில் சென்று வழிபாடு செய்ய வேண்டும். பவள மோதிரம் அணிய வேண்டும்.

    புதன் தோஷம்

    புதன்தோஷம் நீங்க புதன் காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். புதன் கிழமை தோறும் சக்கரத்தாழ்வார் வழிபாடு செய்து பச்சைப் பயிறு தானம் தர வேண்டும். பச்சைப் பயிறு சாப்பிட வேண்டும். விஷ்ணு சகஸ்கர நாமம் பாராயணம் செய்ய வேண்டும். வளர்பிறை ஏகாதசியன்று கிருஷ்ணன் கோவிலுக்கு சென்று அவல், பொரி பாயாசம் வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் மதுரைமீனாட்சியம்மன் கோவில் சென்று வழிபாடு செய்ய வேண்டும் மரகதப் பச்சை மோதிரம் அணிய வேண்டும்.

    குரு தோஷம்

    இத்தோஷம் விலக குரு காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். குருவின் தலமான ஆலங்குடி சென்று குரு வழிபாடு செய்ய வேண்டும். திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட வேண்டும். வசதியற்றவர்களின் திருமணத்திற்கு தாலிக்கு பொன் தானம் தர வேண்டும் யானைக்கு கரும்பை உணவாக தர வேண்டும்.

    வியாழக்கிழமைகளில் சித்தர்களின் ஜீவ சமாதி வழிபாடு செய்ய வேண்டும். வியாழக்கி ழமைகளில் கொண்டைக்கடலை சாப்பிட வேண்டும். கனக புஷ்பராக கல்லில் மோதிரம் அணியலாம் சுக்கிரன் தோஷம் வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி லலிதா சகஸ்கர நாமம் பாராயணம் செய்ய வேண்டும். ஸ்ரீரங்கம் சென்று தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும் வெள்ளை மொச்சையை வெள்ளிக்கிழமைகளில் தானம் செய்ய வேண்டும். இளம் பெண்களுக்கு ஆடை தானம் தர வேண்டும். வைர மோதிரம் அணிய வேண்டும்.

    சனி தோஷம்

    சனி தோஷம் விலக சனி காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். சனி தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு அன்னதானம் செய்யலாம். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம். சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வணங்கலாம் பார்வையற்றோர், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள்,தொழிலாளிகள், துப்புரவுதொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவி நல்ல பலன் தரும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு வன்னி மர சமீத்தில் ஹோமம் செய்து வழிபடலாம். சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம், நல்லெண்ணெய் தானம், இரும்புச் சட்டி தானம் செய்வது சிறப்பு. நீலக்கல் மோதிரம் அணிய வேண்டும்.

    ராகு தோஷம்

    இத்தோஷம் நீங்க ராகு காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். கும்பகோணம் திருநாகேஸ்வரம் சென்று வழிபாடு செய்ய வேண்டும். கும்பகோணம் அய்யாவாடி பிரத்தியங்கரா தேவி வழிபாடு துர்க்கை, காளி, வழிபாடு சிறப்பு. வளரும் புற்றிற்கு சென்று வழிபாடு செய்யலாம். கால பைரவரை வழிபாடு செய்ய வேண்டும். பஞ்சமி திதியில் கருட வழிபாடு செய்யலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடலாம்.

    கேது தோஷம்

    தோஷம் விலக கேது காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும். விநாயகர் ,ஆஞ்சநேயர் வழிபாடு நல்ல பலன் தரும் அத்துடன் விழுதுள்ள ஆலமரம் கேதுவின் அம்சம் .எனவே ஆலமரத்தை வழிபட வேண்டும். மேலும் சடைமுடியும், தாடியும் வைத்து இருக்கும் சாது, சன்னியாசிகள் வழிபாடு சிறப்பைத் தரும். ஆந்திர மாநிலம் காளஹஸ்தி சென்று வழிபட்டால் இன்னல் தீரும்.

    • சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.
    • பங்குனி அமாவாசை அன்று மூலை அனுமாரை மீன ராசியில் பிறந்தவர்கள் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது.

    தஞ்சை மேலவீதியில் மூலை அனுமார் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்த கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு லட்சம் ராம நாமம் ஜெபமும், அதைத்தொடர்ந்து காலை10 மணிக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாக்கும் தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.

    மாலை 6 மணிக்கு வடை மாலைகளாலான சிறப்பு அலங்காரமும், 6.30 மணிக்கு முகூர்த்த அர்ச்சனையும் நடைபெறுகிறது. அந்த சமயம் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மூலை அனுமாருக்கு குங்குமம், மஞ்சள், செந்தூரம் கொண்டு வந்து தந்து முகூர்த்த அர்ச்சனை செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

    இதைத்தொடர்ந்து கோவிலை 18 முறை வலம் வரும் நிகழ்ச்சியும், 1008 எலுமிச்சை பழங்களால் ஆன மாலையை சாற்றி தீபாராதனையும் நடைபெறுகிறது. பங்குனி அமாவாசை அன்று மூலை அனுமாரை மீன ராசியில் பிறந்தவர்கள் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது ஆகும். அமாவாசை சிறப்பு வழிபாட்டிற்காக ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா மற்றும் அமாவாசை வழிபாட்டு குழுவினர் செய்து வருகின்றனர்.

    • துர்க்கை அம்மன் வழிபாட்டில் பக்தர்கள் அதிக ஈடுபாடு காட்டுகிறாா்கள்.
    • சிவகாமசுந்தரியை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும்.

    நந்திவர்ம பல்லவன் என்னும் மூன்றாம் நந்திவர்மனின் மகனான நிருபதுங்க பல்லவன் தன் பெயரால் நிருபகேஸ்வரி ஈஸ்வரம் என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட சிவாலயம் தற்போது பசுபதீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. கோவிலின் அம்மன் சிவகாமசுந்தரி. இக்கோவிலில் விநாயக பெருமான், துர்க்கை, முருகன் ஆகிய சாமிகளும் உள்ளனர்.

    இக்கோவிலில் உள்ள பசுபதீஸ்வரரை வணங்கி அர்ச்சனை செய்து வழிபட வளம் பெருகி திருமணத்தடை நீங்கும் என்று கூறப்படுகிறது. கோவிலில் உள்ள அம்மன் சிவகாம சுந்தரியை வணங்கினால் குடும்பத்தில் நன்மை கிடைக்கும் என்று வழி, வழியாக வந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

    பிரதோஷ நாட்களில் நந்தியெம்பெருமானையும் சிவகாமசுந்தரியையும் வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்று கூறுகின்றனர்.

    துர்க்கை அம்மனை முறைப்படி வழிபட்டால் நமது வாழ்வில் உள்ள தீமையான கால கட்டம் விரைவில் அகன்று புதிய நல்வாழ்வு கிடைக்கும் என பக்தர்கள் நம்புவதால் துர்க்கை அம்மன் வழிபாட்டில் பக்தர்கள் இன்றும் அதிக ஈடுபாடு காட்டுகிறாா்கள்.

    துன்பங்களை போக்கும் துா்க்கை அம்மனுக்கு மாலை அணிவித்து வழிபட்டால் நீங்காத துயரால் அவதிப்படுபவர்களுக்கு விரைவில் நல்வாழ்வு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

    மேலும் மாறனேரி பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள நவக்கிரக சன்னதியை முறையாக வழிபடுவோருக்கு விரைவில் நவக்கிரக தோஷம் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.

    பிரதோஷ நாளில் இந்த கோவிலில் நடைபெறும் வழிபாட்டில் கலந்து கொண்டால் குடும்பத்தில் உள்ள தீமைகள் அகன்று கண்டிப்பாக நம் வாழ்வில் நன்மை பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

    சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் சென்னையில் இருந்து பஸ் அல்லது ெரயில் மூலம் தஞ்சைக்கு வந்து தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பூதலூர் வழியாக திருக்காட்டுப்பள்ளிக்கு சென்று அங்கிருந்து ஆட்டோ அல்லது வாடகை கார் மூலம் கோவிலுக்கு செல்லலாம். தென் மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    • ஒருவருடைய ஜாதகத்தில் பாதகாதிபதி வலுப்பெறவே கூடாது.
    • பாதகாதிபதி சுபருடன் சேர்ந்தால் சுபத்தை கட்டுப்படுத்துவார்.
    • பாதகாதிபதிகள் அசுப வலிமை பெற்று எந்த பாவத்தில் நின்றாலும் சுப பலன் கிட்டாது.

    ஒருவரின் ஜாதகத்தில் பாதகாதிபதி அமர்ந்த நிலையே பல பிரச்சினைகளுக்கும் காரணமாகவும் அமைகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் பாதகாதிபதி வலுப்பெறவே கூடாது. பாதகாதிபதி சுபருடன் சேர்ந்தால் சுபத்தை கட்டுப்படுத்துவார். அசுபர்களுடன் சேர்ந்தால் அசுபத்தை மிகுதிப்படுத்துபவார். பாதகாதிபதிகள் அசுப வலிமை பெற்று எந்த பாவத்தில் நின்றாலும் சுப பலன் கிட்டாது. பாதகாதிபதி சுப வலிமை பெற்றால் தசையின் ஆரம்பத்தில் அனைத்து சுப பலன்களையும் நடத்தி, தசையின் முடிவில் பெரும் பாதகத்தை செய்வார். பாதகாதிபதியின் தசை அல்லது பாதகத்தில் நின்ற கிரகத்தின் தசை நடந்து மரணம் அல்லது மரணத்துக்கு நிகரான துன்பம் இரண்டில் ஒன்றை வலுப் பெற்ற பாதகாதிபதி தசை நிச்சயம் செய்யும். கிரகங்களின் நகர்வின் அடிப்படையில் பன்னிரு லக்னங்களையும் சரம், ஸ்திரம், உபயம் என மூன்று பிரிவுகளாக நமது ஜோதிட முன்னோடிகள் பிரித்து இருக்கிறார்கள்.

    பாதகாதிபதி என்ற பெயரே பாதகாதிபதி, பாதகஸ்தானத்தில் நிற்கும் கிரகங்கள் நடத்தும் பாதகம் எப்படிப்பட்டது என்பதை உணர்த்தும்.அதே போல் பாதகாதிபதிகள் வாழ்நாள் முழுவதும் பாதகத்தை தந்து கொண்டே இருக்க மாட்டார்கள். பாதகம் வேலை செய்யும் காலகட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

    பாதகாதிபதியால் நன்மை நடைபெற வேண்டுமெனில் பாதகாதிபதி நீசம்,அஸ்தங்கம் பெற்று பலம் குறைய வேண்டும். ஜாதகத்தில் லக்னம், பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் வலிமை பெற்றவர்களை பாதக தோஷம் பெரியதாக பாதிக்காது. பாதகாதிபதிக்கு, பாதக ஸதானத்திற்கு அல்லது பாதகத்தில் நின்று தசை நடத்தும் கிரகத்திற்கு குரு பார்வை அல்லது லக்ன சுபரின் பார்வை இருந்தால் ஜாதகரை பாதக தோஷம் பாதிப்பதில்லை.

    பெரும்பான்மையாக பாதகாதிபதி, பாதகாதிபதியின் நட்சத்திர சாரம் மற்றும் பாதக ஸ்தானத்தில் நின்ற கிரகத்தின் தசை,புத்தி காலங்களில் மட்டுமே பாதிப்பு இருக்கும். மற்ற காலங்களில் பாதிப்பு இருக்காது. பாதகாதிபதிகள் தனது தசாபுத்தி காலங்களில் நன்மை செய்யும் வாய்ப்பு குறைவு. முதலில் சாதகமாக இருந்தால் முடிவில் பாதகத்தையே தரும் அல்லது பாதகமும் சாதகமும் கலந்தே இருக்கும்.

    ஜனன ஜாதகத்தில் பாதகாதிபதி மற்றும் பாதக ஸ்தானத்தில் நின்ற கிரகங்களுக்கு ஜனன மற்றும் கோட்சார சனி, ராகு/கேதுக்களின் சம்பந்தம் ஏற்படும் போது அசுப விளைவுகள் ஜாதகரை நிதானமிலக்கச் செய்யும். பாதகாதிபதி உச்சம் பெறக் கூடாது. பாதகாதிபதி அல்லது பாதக ஸ்தானத்தில் நிற்கும் கிரகம் சுய சாரம் பெறக்கூடாது.. ஜனன,கோட்சார ரீதியாக அஷ்டமாதிபதி ,பாதகாதிபதி இணைவு ஏற்படும் காலங்களில் பாதிப்பு இருக்கும். குரு பார்வைக்கு பாதகத்தை மட்டுப்படுத்தும் சக்தி உண்டு. இது போன்ற பாதிப்பை சந்திப்பவர்கள் பரிந்துரைத்துள்ள பரிகாரத்தை கடைபிடித்து வர பாதகம் நீங்கி சாதகம் கிடைக்கும்.

    பரிகாரம்

    பொதுவாக பாதகாதிபதியின் தசை, புத்தி அந்தர காலங்களில் அனுபவ அறிவு, தன்னைத்தானே உணரும் சக்தியையும் அதிகரிக்க யோகாசனம் மிக அவசியம். கல் உப்பு இட்ட நீரில் குளித்து வர எதிர்மறை ஆற்றல் மட்டுப்படும். பாதக தோஷத்தால் மிகுதியான அசுப பலனை அனுபவிப்பவர்கள் தினமும் ஆஞ்சநேயர் கோவில் செந்தூரத்தை நெற்றியில் இட்டு வந்தால் சுப பலன் கிடைக்கும். வெள்ளியிலான ஆபரணத்தை உடலில் அணிய எதிர்மறை சிந்தனை குறைந்து சிந்தித்து செயல்படும் தன்மை அதிகரிக்கும். ஜென்ம நட்சத்திர நாளில் துர்க்கை, காளி மற்றும் பிரத்யங்கரா தேவி போன்ற உக்ர தெய்வங்களுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து வழிபடவும். சரம்: மேஷம்,கடகம்,துலாம், மகரம் லக்னங்களுக்கான பரிகாரம். தினமும் வில்வாஷ்டகம் படித்து வர தொழிலில் லாபம் பெருகும். வீண் விரயத்தை தவிர்க்க ஆதரவற்றவர்களுக்கு இயன்ற தானம் தர வேண்டும். நேரம் கிடைக்கும் போது கோவில்களில் உலவாரப் பணிகளை செய்ய வேண்டும். உடல் ஊனமுற்றவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும். சனிக்கிழமைகளில் கருவேப்பிலை சட்னி சாப்பிட வேண்டும்.

    ஸ்திரம்: ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் லக்னங்களுக்கான பரிகாரம்.

    வயது முதிர்ந்த அந்தணர்களுக்கு உணவு,உடை தானம் தந்து காலில் விழுந்து நல்லாசி பெற வேண்டும்.

    ஜென்ம நட்சத்திர நாளில் ஆன்மீகப் பெரியோர்கள்,மத குருமார்களின் நல்லாசி பெற வேண்டும்.

    கோ தானம் செய்ய பல தலைமுறையாக தீராத பித்ரு சாபம் தீரும்.

    சனிக்கிழமை காக்கைக்கு எள்ளு சாதம் வைக்க வேண்டும்.

    உபயம்: மிதுனம், கன்னி, தனுசு, மீனம் லக்னங்களுக்கான பரிகாரம்.

    பாதகாதிபத்திய தோஷத்தால் திருமணத்தடை, திருமண வாழ்வில் உள்ள பிரச்சினைகளை நீங்க செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தன்று விரதமிருந்து சிவபெருமானையும், நந்தியையும் வழிபடுவதுடன் உளுந்து சுண்டல் தானம் தர வேண்டும்.

    தொடர்ந்து பன்னிரன்டு பவுர்ணமிக்கு கிரிவலம் வர வேண்டும்.

    வாழும் ஊரின் சிறப்பு வாய்ந்த அம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து ஆறு நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

    • இந்தப் பரிகாரத்தை செய்த ஒரு சில நாட்களில் பலன் தெரிவதை காணலாம்.
    • வாரத்தில் ஒரு நாள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

    பணம் என்றால் பிரச்சனை தான். இந்த பண பிரச்சனையில் இருந்து தப்பிக்க கடன் சுமையிலிருந்து வெளிவர ஒரு எளிமையான பரிகாரத்தை பார்க்கலாம்.

    நீங்கள் இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்யும் போது நீங்கள் ஒரு தனி அறையில் அல்லது வரவேற்பறையில் கூட தனியாக படுத்துக் கொள்ளலாம். ஒரு கைப்பிடி அளவு வெண்கடுகை எடுத்து உங்களுடைய தலையை மூன்று முறை சுற்றிக் கொள்ளுங்கள். கிழக்கு பார்த்தவாறு நின்று உங்கள் தலையை சுற்றிய வெண்கடுகை நீங்கள் படுகின்ற இடத்தில் நான்கு மூலைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக போட்டு விடுங்கள்.

    நடுவே பாய் தலையணை மெத்தை போட்டுக் கூட படுத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம். மறுநாள் காலை எழுந்தவுடன் முதல் வேலையாக பல் தேய்த்து முகம் கழுவி விட்டு உடனடியாக ஒரு துடைப்பத்தை வைத்து இந்த வெண்கடுகை எல்லாம் கூட்டி அள்ளி ஒரு பேப்பரில் வைத்து மடித்து ஒரு அகல் விளக்கில் கொட்டி அதில் ஒரு கற்பூரம் வைத்து நெருப்பு மூட்டி விடுங்கள். நெருப்பில் இந்த வெண்கடுகு எல்லாம் படபடவென எரிந்து முடிந்துவிடும்.

    இந்தப் பரிகாரத்தை செய்த ஒரு சில நாட்களில் உங்களுடைய கடன் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துவிடும். வாரத்தில் ஒரு நாள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். எந்த கிழமையில் செய்தாலும் சரி. ஏழு நாட்களுக்கு ஒரு முறை, மூன்று முறை இந்த பரிகாரத்தை செய்யுங்கள். உதாரணத்திற்கு இந்த ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால் அடுத்த ஞாயிற்றுக்கிழமை அதற்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை மூன்று கிழமைகள், அதே ஞாயிற்றுக்கிழமையில் பரிகாரம் செய்யப்பட வேண்டும். நிச்சயமாக வாங்கிய கடனை திருப்பித் தரக்கூடிய நேரம் காலம் உங்களுக்கு கைகூடி வரும்.

    இந்த பரிகாரத்தை மட்டும் செய்துவிட்டு எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்தால் கடன் பிரச்சனை நீங்காது. கடனை திருப்பித் தர என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அதை நீங்கள் செய்ய வேண்டும். கூடவே சேர்த்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள். முயற்சிகளில் வரும் தடைகள் நீங்கி உங்கள் கைக்கு பணம் வருவதில் இருக்கும் சிக்கல்கள் தீரும். சிக்கல்களை சரி செய்ய தான் பரிகாரமே தவிர, மந்திரம் போட்டால் மாங்காய் என்றைக்குமே வராது.

    • மனிதர்களின் வாழ்வில் நடைபெறும் அனைத்து சம்பவங்களையும் தசா புத்தியே நிர்ணயம் செய்கின்றன.
    • திருமணத்தை எதிர்நோக்கி இருக்கும் கன்னியருக்கும், காளையருக்கும் திருமணம் நடைபெறும் காலம் எப்பொழுது என்பதை பார்க்கலாம்.

    சுய ஜாதகத்தில் லக்னத்திற்கு 2,7-ம் மிடம் சுப வலுப் பெற்று தசா புத்திகள் ஒரளவேனும் சாதகமாக இருந்தால் கோட்ச்சார குரு 2, 7, 11-ம் பாவகம் அல்லது அதன் அதிபதிகளுடன் தொடர்பு பெறும் காலத்திலும், ஆணின் ஜனன ஜாதக சுக்கிரனுக்கு கோச்சார குரு சம்பந்தம் பெறும் காலங்களிலும், பெண்னின் ஜனன செவ்வாய்க்கு கோட்சார குரு சம்பந்தம் பெறும் காலத்திலும் திருமணம் நடைபெறும். இதை சிலர் "குரு பலம்" என்றும் "வியாழ நோக்கு" என்றும் " கங்கண பொருத்தம் " என்றும் கூறுவார்கள். 2,7,11-ம் பாவக அதிபதிகளின் தசா புத்தி காலங்களிலும் அதன் அதிபதிகளின் நட்சத்திர தசா, புத்தி, அந்தர காலங்களில் கோட்சார குரு பலம் இல்லாவிட்டாலும் திருமணம் நடைபெறும். பொதுவாக சுக்கிர தசா,புத்தி அந்தரகாலங்களிலும் 2,7,8,12-ம் பாவகங்கள் சுப வலிமையுடன் இயங்கும் காலங்களிலும் திருமணம் நடைபெறும்.

    பரிகாரம்

    மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைவது மிகப் பெரிய வரப்பிரசாதம். பூர்வ புண்ணிய பலம் பெற்றால் ஒருவனுக்கு ஒருத்தியாய், ஒருத்திக்கு ஒருவனாய் நல் இன்பத்துடன் சுற்றமும் நட்பும் நிரம்ப பெற்று மகிழ்வான திருமண வாழ்வு அமையப் பெறுவார்கள்.ஒரு சில காரணங்களால் திருமணம் கால தாமதமாகும் போதோ , நடக்காமல் இருக்கும் போதோ நமது பிராரப்த கர்மா என்பதை ஏற்று பிரபஞ்சத்திடம் கோரிக்கை வைத்து விட்டு காலம் கனியும் வரை பொறுமை காக்க வேண்டும். அதை விடுத்து ஜாதகத்தை தனக்கு சாதகமாக மாற்றி எழுதி வினைப் பதிவை அதிகரிக்க கூடாது. மனிதர்களின் வாழ்வில் நடைபெறும் அனைத்து சம்பவங்களையும் தசா புத்தியே நிர்ணயம் செய்கின்றன.

    தசை நடத்தும் கிரகம் சுப வலுப்பெறும் காலங்களில் இயல்பாகவே சிறப்பான பலன்கள் நடந்துவிடும். கெடு பலன்கள் ஏற்படும் தசாபுத்தி காலங்களில் செய்யப்படும் வழிபாடுகள் தசா புத்தி அமைப்பையும் மீறி சுப பலன்களை வழங்கும். எனவே தசா புத்தி சாதகமாக இல்லாத காலங்களில் குல, இஷ்ட தெய்வங்களை ஆத்மார்த்தமாக சரணாகதியடைந்து வழிபட வேண்டும். தசை நடத்தும் கிரகத்திற்குரிய அதிதேவதைகளை உரிய முறையில் வணங்க வேண்டும். சரபேஸ்வரர், பைரவர், நரசிம்மர், ஆஞ்சநேயர் வழிபாட்டிற்கு அனைத்து விதமான கிரக தோஷங்களின் பாதிப்பையும் குறைக்கும் வல்லமை உண்டு.

    • இந்தக் கோவிலை அங்குள்ள மக்கள் ‘பவுர்ணமி கோவில்’ என்றும் அழைப்பது உண்டு.
    • ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு 90 நாளில் திருமணம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    தஞ்சாவூர் மாவட்டம் பள்ளியூரில் அமைந்துள்ளது, ஆதிவீரமாகாளியம்மன் கோவில். இந்தக் கோவிலை அங்குள்ள மக்கள் 'பவுர்ணமி கோவில்' என்றும் அழைப்பது உண்டு.

    இந்தக் கோவில் பஞ்சபூதங்களையும் தன்னகத்தே கொண்டது. கோவில் முன்பு குளம் உள்ளது. குளத்தின் கரையில் விநாயகர் சன்னிதியும் உள்ளது. இந்தக் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தால் எண்ணங்கள் ஈடேறும் என்கிறார்கள். குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்தால் குழந்தைப் பேறு கிட்டும், திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். குழந்தை இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு 3பவுர்ணமி வந்து தரிசனம் செய்ய வேண்டும். தேங்காய், வெற்றிலை, பாக்கு போன்றவை எடுத்து வர வேண்டும்.

    3-வது பவுர்ணமி அன்று அவர்கள் கோவிலுக்கு வரும் போது ஆண், பெண் உருவம் கொண்ட 2 மரப்பாச்சி (மரத்தினால் செய்யப்பட்டது) பொம்மைகளை எடுத்து வர வேண்டும். அதில் ஒரு பொம்மையை கோவிலில் வைத்து விட்டு ஒரு பொம்மை, கொண்டு வந்தவர்களிடம் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு விரைவில் குழந்தை பேறு கிட்டுகிறது. அதன்படி இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு குழந்தை பேறு கிடைத்துள்ளது. இதே போல் திருமணம் ஆகாதவர்கள், தங்கள் ஜாதகத்தின் நகல்களின் 2 பிரதிகளை இந்த கோவிலுக்கு கொண்டு வர வேண்டும். அதனை அம்மன் பாதத்தில் வைத்து விட்டு ஒன்றை அங்கு வைக்கப்பட்டுள்ள ஜாதக உண்டியலில் போட வேண்டும். மற்றொன்று கொண்டு வந்தவர்களிடமே கொடுக்கப்படும்.

    அதன்படி இதுவரை இந்த கோவிலுக்கு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு 90 நாளில் திருமணம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. நோய் நீங்க வேண்டும், இன்னும் பல்வேறு காரியங்களை நினைத்துக்கொண்டு வருபவர்களுக்கும், அவர்களின் எண்ணங்கள் ஈடேறி வருவதாக இங்கு வரும் பக்தர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்தக் கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பூஜைகள் நடைபெற்றாலும் ஆடி மாத பவுர்ணமியில் நடைபெறும் பூஜை தான் திருவிழா போல கொண்டாடப்படுகிறது.

    தஞ்சையில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, பள்ளியூர். இந்த ஊருக்கு தஞ்சையில் இருந்து திருவாரூர் செல்லும் வழித்தடத்தில், சாலியமங்கலத்தில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் செல்ல வேண்டும். இந்த தடத்தில் களஞ்சேரியில் இருந்து பள்ளியூருக்கு சாலை பிரிகிறது. இந்த சாலையில் இருந்து 1½ கி.மீ. தூரம் கிழக்கு நோக்கிச் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

    • சிவவழிபாடு நம் துன்பங்களை போக்கும்.
    • எந்த மலர்களில் சிவனுக்கு பூஜை செய்தால் என்ன பிரச்சனைகள் தீரும் என்று பார்க்கலாம்.

    செந்தாமரை - தனலாபம், வியாபார விருத்தி, ஆயுள் விருத்தி

    மனோரஞ்சிதம், பாரிஜாதம் - பக்தி, தம்பதி ஒற்றுமை, ஆயுள்விருத்தி

    வெண்தாமரை, நந்தியாவட்டை, மல்லிகை, இருவாட்சி - மனச்சஞ்சலம் நீங்கி, புத்திக்கூர்மை ஏற்படும். சகலகலாவிருத்தி.

    மாசிப்பச்சை, மரிக்கொழுந்து - நல்ல விவேகம், சுகபோகங்கள், உறவினர் ஒற்றுமை உண்டாகும்.

    மஞ்சள் அரளி, தங்க அரளி, செவ்வந்தி - கடன்நீங்கும், கன்னியருக்கு விவாகப்ராபதி ஏற்படும்.

    செம்பருத்தி, அடுக்கு அரளி, தெத்திப்பூ - ஞானம் நல்கும், புகழ், தொழில் விருத்தி

    நீலச்சங்கு - அவச்சொல், அபாண்டம், தரித்திரம் நீங்கும் அருளும் ஆயுளும் கிட்டும்.

    வில்வம், கருந்துளசி, மகிழம்பூ - சங்கடங்கள் நீங்கி, சகலகாரியமும் கைகூடும்.

    தாமரை, செண்பகம் ஆகியவற்றை மொட்டுகளாகவும் பூஜை செய்யலாம். ஏனையவை மலர்ந்திருக்க வேண்டும்.

    குங்குமப்பூ தவிர மற்ற முள் உள்ள பூக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல. கிளுவை, விளா, வெண்நொச்சி, மாவிலங்கை, வில்வம் ஆகியவை பஞ்ச வில்வங்களாகும்.

    மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி நாள்களில் வில்வத்தை மரத்தில் இருந்து பறிக்கலாகாது.

    • குபேர மூளை என சொல்லப்படும் தென்மேற்கு பகுதி உயரமாக இருக்க வேண்டும்.
    • வடக்கு பார்த்த வாசல் அல்லது கிழக்கு பார்த்த வாசல் இருப்பது நலம்.

    வாஸ்து சாஸ்திரப்படி வீடு மற்றும் பணி புரியும் இடம் இருப்பது நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்தது. பலரும் இப்போது கேட்கின்ற கேள்வி, வாஸ்து பற்றின பொதுவான விதிகளை சொல்லுங்கள் என்பதே!

    வாஸ்து பொதுவான விதிகள்:-

    குபேர மூளை என சொல்லப்படும் தென்மேற்கு பகுதி உயரமாக இருக்க வேண்டும். அந்த மூலையில் கனமான பொருட்களை வைக்கலாம். அந்த மூலையில் சாளரம் இல்லாமல் இருக்க வேண்டும். வீட்டின் தலைவர் புழங்கும் இடமாக, விலை உயர்ந்த பொருட்களை வைக்க கூடிய இடமாக இந்த தென்மேற்கு மூலை இருக்கும்.

    ஈசான மூலை என சொல்லப்படும் வடகிழக்கு பகுதி சற்றே தாழ்வாக இருந்தாலும் பரவாயில்லை. வளர்ந்திருப்பது நன்மை. கனமான பொருட்களை இங்கே வைக்கக் கூடாது. இறைவன் உறையும் இடம் என்பதால் சுத்தமாக இருக்க வேண்டும். நறுமணம் தரும் பொருட்களை இங்கே வைக்கலாம்.

    வீட்டின் தலை வாசல் உச்சத்தில் இருக்க வேண்டும்

    வடக்கு பார்த்த வாசல் அல்லது கிழக்கு பார்த்த வாசல் இருப்பது நலம். வீட்டுமனையும் அதில் கட்டப்பட்டிருக்கும் கட்டிடமும் சதுர வடிவம் அல்லது செவ்வக வடிவமாக இருப்பது சிறப்பு. அவ்வாறு கட்டும் போது வடக்கு பகுதியிலும் கிழக்கு பகுதியிலும் காலியிடம் விட்டு கட்டலாம். குழந்தைகள் விளையாடுவதற்கும் வயதானவர்கள் மாலை நேரங்களில் நடப்பதற்கோ வாகனங்களை நிறுத்தவும் பயன்படுத்திக் கொள்ளலாம். தென்கிழக்கு பகுதியான அக்னி மூலையில் சமையலறை இருக்க வேண்டும். கிழக்கை நோக்கி பார்த்த வண்ணம் சமையல் செய்பவர்கள் நின்று சமையல் செய்யும்படி சமையல் மேடை இருப்பது நலம். வாயு மூளை என சொல்லப்படும் வடமேற்கு மூளையில் குளியலறை மற்றும் கழிவறைகள் வைக்கலாம்.

    • சிலர் தன் திறமையை கசக்கி பிழிந்தால் கூட முதலாளி அல்லது மேல் அதிகாரிகளிடம் நல்ல பெயர் பெற முடிவதில்லை.
    • பலருக்கு உத்தியோக ரீதியாக பல விதமான சங்கடங்கள், ஏமாற்றங்கள் ஏற்படுகின்றன.

    உத்தியோகம் புருஷ லட்சணம் என்பது பழமொழி. சுய தொழில் தான் கவுரவம் என்ற நிலை மாறி உத்தியோகமே சமுதாய அங்கீகாரம் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை அதிகரித்து வருகிறது. சிலர் சம்பாதிக்க துவங்கிய நாள் முதல் ஒய்வு பெறும் நாள் வரை ஒரே உத்தியோகத்தில் சாதனை படைக்கிறார்கள். சிலர் ஓய்வு காலத்திற்குள் பல வேலைகள் மாறி விடுவார்கள்.

    சிலர் ஓய்வு காலத்திற்குப் பிறகும் ஓயாமல் உழைக்க வேண்டிய குடும்பச் சூழல், சிலர் வாழ்நாள் முழுவதும் எந்த வேலையும் செய்யாமல் குருட்டு அதிர்ஷ்டத்தில் வாழ்வார்கள். சிலர் நல்ல தகுதியும் திறமையும் இருந்து படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்காமல் குடும்ப சூழ்நிலைக்காக கிடைத்த வேலையை செய்து வாழ்நாளை கழிக்கிறார்கள். சிலர் சொற்ப சம்பளத்தில் கைக்கும் வாய்க்கும் எட்டாத நிலையில் காலம் தள்ளுகிறார்கள். சிலர் தன் திறமையை கசக்கி பிழிந்தால் கூட முதலாளி அல்லது மேல் அதிகாரிகளிடம் நல்ல பெயர் பெற முடிவதில்லை. இதுபோல் பலருக்கு உத்தியோக ரீதியாக பல விதமான சங்கடங்கள், ஏமாற்றங்கள் ஏற்படுகின்றன. இது போன்ற பிரச்சினையில் இருந்து விடுபடும் பரிகாரங்களை இந்த கட்டுரையில் காணலாம்.

    சனி

    கால புருஷ 10-ம் இடமான மகர ராசியின் அதிபதி சனியே ஒருவரின் உத்தியோகம், வேலை, பதவியை நிர்ணயம் செய்கிறார். சனிக்கு கர்ம காரகன் என்ற பெயரும் உண்டு. ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. ஒருவருக்கு யோக பலன்கள் அனுபவிக்க வேண்டிய அமைப்பு ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு. ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து விடும்.

    ஜனன கால ஜாதகத்தில் சனி நின்ற நிலைக்கு ஏற்பவே ஒருவருக்கு உத்தியோக அனுகூலம் உண்டு. ஒரு ஜாதகத்தில் சனி பலமாக இருந்தால் மட்டுமே பதவி, உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். சனி நல்ல நிலையில் இருந்தால் அடித் தட்டில் இருந்து உழைத்து உயர்ந்தவர்களாக இருப்பார்கள். உழைப்பின் அவசியத்தை உணர்ந்தவர்கள். தேவைப்படும் இடத்தில் உழைப்பையும், புத்தி சாதுர்யத்தையும் ஒருங்கே பயன்படுத்துவார்கள்.

    முதலாளியாக இருந்தால் கூட தொழிலாளி போல் உழைப்பவர்கள். சனி குறைந்த பாகையில் இருந்தால் சிறிய உழைப்பில் பெருத்த லாபம் வரும்படியும் அதிக பாகையில் இருந்தால் கடின உழைப்பில் சிறிய வருவாயும் இருக்கும். சனி பலம் குறைந்தால் அடிமைத் தொழில், கவுரவம் இல்லாத, நீசத் தொழில் அல்லது வேலை வாய்ப்புகளில் நிரந்தரமற்ற தன்மைகளையும், நோய் நொடிகளும் கஷ்ட ஜீவனமும் நிரம்பி இருக்கும்.

    கேது

    தான் நின்ற பாவகங்கள் மூலம் தடை, தாமதங்களை வழங்குவதில் முன்னணியில் நிற்பவர் கேது. அதாவது தான் நின்ற பாவக பலனை சுருக்கி விடுவார். ஒருவர் ஜாதகத்தில் கேது சுப வலிமையுடன் சுப கிரக சம்மந்தம் பெற்றால் எப்போதும் உஷாராக மூளை பலத்தால் எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக மாற்றுவார்கள்.

    பலம் இழந்தால் எதிலும் நிலையற்ற தன்மை, எதிர்மறை எண்ணங்கள், கெட்ட சகவாசம், கீழ்த்தரமான சேர்க்கை, கடுமையான தடங்கல், மாந்திரீக நாட்டம், பைத்தியம் பிடித்தல், கொலை, ஆணவம், அகங்காரம், சிறைப்படல் ஆகிய பலன்கள் மிகும்.

    உத்தியோகத்தில் சுப பலன் வழங்கும் சச மகாயோகம்:-

    சச மகா யோகம் என்பது பஞ்சமகா புருஷ யோகத்தில் முக்கியமானது. சனிபகவான் சஞ்சாரத்தினால் இந்த சச யோகம் அமைகிறது. சசயோகம் அமைந்தால் அரசனுக்கு சமமான வாழ்வு சமுதாய அந்தஸ்து உண்டாகும். சனிபகவான் லக்னம் அல்லது ராசிக்கு கேந்திரத்தில் ஆட்சி உச்சம் பெற்றால் இந்த யோகம் உண்டாகும் இந்த யோகம் உள்ளவர்கள் நல்ல செல்வாக்கு மிக்கவராகவும் பூரண ஆயுள் கொண்டவராகவும் சமுதாயத்தில் நல்ல பெயரும் புகழும் பெறக்கூடிய உத்தியோகத்தில் சாதனை படைப்பார்கள். இவரால் மற்றவர்களுக்கு நற்பலனும் கிடைக்கும். அதேபோல் இந்த யோகம் உள்ளவர்கள் அரசு அதிகாரம், தலைமைப் பண்பு, புகழ், நல்ல உத்தியோகம், செல்வம் ஆகியவற்றை உடையவர்கள்.

    அரசாங்கத்தில் உயர் பதவி மற்றும் அரசாங்கத்தால் அனுகூல பலன் உண்டு இந்த யோகம் வளர்பிறை சந்திரனுக்கு கேந்திரத்தில் அமைந்தால் சனிதிசையில் இந்த யோகம் சிறப்பான பலனை ஏற்படுத்தி தரும். இந்த யோகம் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்னத்திற்கு முழுபலனையும் தனுசு, மீனம் ஆகிய லக்னத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு பலனும் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம் ஆகிய லக்னத்திற்கு சனி மற்றும் சந்திரனின் யோகத்தின் பலம் மற்றும் தன்மைகேற்ப பலனை செய்யும். இந்த யோகம் சுய ஆதாய நோக்கத்தோடு இல்லாமல் இருப்பவரை மட்டும் புகழின் உச்சிக்கு அழைத்துச் செல்லும்.

    உத்தியோகத்தில் இடர் தரும் சனி + கேது சேர்க்கை ஒருவரின் சுய ஜாதகத்தில் உத்தியோகத்தை வழங்கக்கூடிய சனி பகவானுக்கு, தடை, தாமதம், காரிய பிரதிகூலம் வழங்கும் கேது சம்பந்தம் எந்த விதத்தில் இருந்தாலும் எதை செய்தாலும் தவறாகவே முடியும். கடுமையான உத்தியோக தடையை ஏற்படுத்தும்.

    வாழ்வில் எவ்வளவு உயரமாக சென்றாலும் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். சிலருக்கு ஆயுள் தோஷத்தை கூட ஏற்படுத்தும். உத்தியோகத்திற்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறுவார்கள். சொந்த ஊரில் பூர்வீகத்தில் பூர்வீக சொத்தில் குடியிருக்க விடாது. சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் நிலை அல்லது மிகவும் அடிமைத்தனமான வேலை செய்யும் நிலை, குறைந்த ஊதியத்தை பெறுதல் என்ற நிலை ஏற்படும் ஏற்படுத்தும்.நன்கு படித்திருந்தாலும் தன் தகுதிக்கு சம்பந்தமில்லாத தகுதிக் குறைவான இடத்தில் குறைவான சம்பளத்தில் வேலை செய்யும் சூழ்நிலை ஏற்படும்.சட்டத்திற்குப் புறம்பான அல்லது சட்டத்திற்கு உட்படாத வேலை செய்பவர்களுக்கு கிரக சேர்க்கை இருக்கும். வாழ்நாள் முழுவதும் சொல்லிக் கொள்ளும்படியான வேலையில்லாமலும் சூதாட்டம், திருட்டு என வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலை ஏற்படுத்தும்.நல்ல திறமை இருந்தும் சரியாக சம்பாதிக்காமல் வருமானம் இல்லாமல் இருப்பார்கள்.

    ஒருவரின் சுய ஜாதகத்தில் தன ஸ்தானம் எனும் இரண்டாமிடமும், உத்தியோக ஸ்தானம் எனும் ஆறாமிடமும் கர்ம ஸ்தானம் எனும் பத்தாம் இடமும் கர்ம காரகன் சனி பகவானும் சுப வலிமை பெற்றால் உழைப்பிற்கும், திறமைக்கு தகுந்த வேலை சம்பள உயர்வும் பதவி உயர்வு தொடர்ந்து கொண்டே இருக்கும்.

    ஒருவரின் சுய ஜாதகத்தில் தன ஸ்தானம் எனும் இரண்டாமிடமும், உத்தியோக ஸ்தானம் எனும் ஆறாமிடமும் கர்ம ஸ்தானம் எனும் பத்தாம் இடமும் கர்ம காரகன் சனி பகவானும் அசுப வலிமை பெற்றால் எந்த முன்னேற்றமும் இல்லாமல் குறைந்த சம்பளத்தில் இருப்பார்கள். ஆனால் பத்து பேர் செய்ய வேண்டிய வேலையை இவர்கள் ஒருவரே செய்வார்கள். ஆனால் அதற்கான அங்கீகாரம் இருக்காது. முன்னேற்றம் இருக்காது. இவர்கள் கண்ணெதிரே நேற்று வேலைக்கு சேர்ந்தவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் எல்லோரும் சம்பள உயர்வும் பதவி உயர்வும் பெற்றுக்கொண்டு மேலே முன்னேறி சென்று விடுவார்கள். ஆனால் எல்லா வேலையும் திறம்பட செய்யத் தெரிந்த இவர்கள் எந்த முன்னேற்றம் இல்லாமல் இருப்பார்கள்.

    பரிகாரம்

    உளவியல் ரீதியாக உத்தியோக இடர் என்ற பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றால் உத்தியோகத்தை முதன்முதலில் தேர்ந்தெடுக்கும் போதே தங்களின் ஜாதகத்துக்கு தகுந்தவாறு சரியான உத்தியோகத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். குடும்ப கஷ்டத்திற்காக கிடைக்கும் வேலையை அனுசரித்து பணிபுரிய துவங்கும் போது முன்னேற்றம் குறைவுபடும். படிப்பிற்க்கு தகுந்தவாறு உத்தியோகம் கிடைக்காமல் இருப்பவர்கள் சனிக்கிழமை காலை 6-7 மணிவரையான சனி ஓரையில் பசு மாட்டிற்கு 6 மஞ்சள் வாழைப்பழம் தர வேண்டும். உத்தியோகத்தில் வேலைச்சுமை மிக அதிகமாக இருப்பவர்கள் சனிக்கிழமை காலை 9- 10.30 மணி வரையான ராகு வேளையில் துர்க்கை அல்லது காளியை வழிபட வேண்டும்.

    எந்த உத்தியோகமும் கிடைக்காமல் இருப்பவர்கள் சனிக்கிழமை இரவு 8-9 மணிவரையான சனி ஓரையில் 27 வாரம் தொடர்ந்து சிவ வழிபாடு செய்து வர கைமேல் பலன் கிடைக்கும். ஒரு நிறுவனத்தில் உருப்படியாக ஒரு வருடத்திற்கு மேல் வேலையில் நிலைக்க முடியாமல் இருப்பவர்கள் சனிக்கிழமை காலை 7 - 8 மணி வரையான குரு ஓரையில் அந்தணர்களுக்கு குறைந்தது ஒரு கிலோ பச்சரிசி 11 வாரம் தானம் தர வேண்டும்.

    எந்த நிறுவனத்திற்கு சென்றாலும் உத்தியோகத்தில் பிரச்சினைகள் இருந்து கொண்டே இருப்பவர்கள் அல்லது உத்தியோகத்தில் தேவையில்லாமல் சக பணியாளர்களால் சுய மரியாதைக்கு பங்கம் ஏற்படுபவர்கள் சனிக்கிழமை பகல் 1.30 - 3 மணி வரையான எம கண்டத்தில் விநாயகரை வீட்டில் இருந்தே வழிபடவும்.

    உயர் அதிகாரிகளிடம் மிகுதியான கருத்து வேறுபாடு இருப்பவர்கள் சனிக்கிழமை பகல் 1- 2 மணி வரையான சனி ஓரையில் 9 பேருக்கு தயிர் சாதம் வழங்கவும். மாதம் 1 முறை வழங்கவும். பதவி உயர்வு கிடைக்காமல் ஒரே பதவியில் பல வருடம் இருப்பவர்கள் அல்லது பல வருடங்களாக பதவி உயர்வு தடைபடுபவர்கள் சனிக்கிழமை காலை 9-10 வரையான சூரிய ஓரையில் சிவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபடவும். 9 வாரம் செய்ய வேண்டும்.

    ஊதிய உயர்வு கிடைக்காதவர்கள் அல்லது உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காதவர்கள் சனிக்கிழமை காலை 8-9 குரு ஓரையில் ஆன்மீக குருமார்களிடம் அல்லது வயது முதிர்ந்த பெரியோர்களிடம் நல்லாசி பெற வேண்டும். முதலாளி தொழிலாளி இடையே கருத்து வேறுபாடு மிகுதியாக இருப்பவர்கள் அல்லது நிலையான நல்ல வேலையாட்கள் அமையாதவர்கள் சனிக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் சிவ தரிசனம் செய்ய வேண்டும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    • இங்கு வழிபாடு செய்தால் வீடு கட்டும் பணி எந்தவித தடையும் இன்றி விரைவில் வீட்டை கட்டி முடிக்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    • இந்த தலத்துக்கு வந்தாலே சனி தோஷம் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

    நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திருப்புகலூரில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது.

    நாற்புறமும் அகழி சூழ அமைந்திருக்கும் இந்த கோவிலில் அருளும் இறைவன் அக்னீஸ்வரர், இறைவி கருந்தார்க்குழலி. சூளிகாம்பாள் என்ற பெயரும் இறைவிக்கு உண்டு.

    இத்தல இறைவியின் பெயர் கருந்தாள் குழலி. இங்கு சாயரட்சை காலத்தில் அம்பாளுக்கு வெள்ளை புடவை சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள், அம்பாளுக்கு வெள்ளை புடவை சாத்தி வழிபட்டால் எளிதில் திருமண பாக்கியம் கிட்டுவதாக இங்கு வரும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    இத்தலத்தில் நிகழ்கால நாதர் என்னும் வர்த்தமானீஸ்வர், கடந்தகால நாதர் பூதேஸ்வரர், எதிர்கால நாதர் பவிட்ச்சேயேஸ்வர் ஆகியோரும் உள்ளனர். இவர்களை வழிபட்டால் முற்பிறவியில் ஏற்பட்ட பாவங்கள் தோஷங்கள் நீங்கி நிகழ்காலத்தில் கிடைக்க வேண்டிய நன்மைகள், வருங்காலத்தில் கிடைக்க வேண்டிய அனைத்து செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழலாம். அப்பர் பெருமான் உழவாரப்பணி செய்து கொண்டிருந்தபோது இறைவனடி சேர்ந்த திருத்தலம் இதுவாகும்.

    புதிதாக வீடு கட்டுபவர்கள் திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவிலுக்கு வந்து அக்னீஸ்வரர் சன்னிதிக்கு நேர் எதிரில் 3 செங்கற்களை வைத்து பூஜை செய்து இறைவனை வழிபட்டு எடுத்து செல்கின்றனர். இவ்வாறு பூஜை செய்த 3 செங்கற்களை வடகிழக்கு, தென்கிழக்கு பகுதிகளிலும், பூஜை அறையிலும் வைக்க வேண்டும்.

    இவ்வாறு செய்தால் வீடு கட்டும் பணி எந்தவித தடையும் இன்றி நாம் விரும்பியபடி விரைவில் வீட்டை கட்டி முடிக்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த வாஸ்து பூஜை இத்தலத்தின் அனைத்து நாட்களிலும் செய்யப்படுகிறது.

    இந்த தலத்துக்கு வந்தாலே சனி தோஷம் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

    திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் சென்னையில் இருந்து நாகப்பட்டினம் வந்து அங்கிருந்து நாகூர், திட்டச்சோி, திருமருகல் வழியாக கோவிலை அடையலாம். நாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து 24 கி.மீட்டர் தொலைவில் உள்ள கோவிலை அடையலாம். தென்மாவட்டங்களில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் வேளாங்கண்ணி செல்லும் பஸ்சில் ஏறி நாகப்பட்டினத்தில் இறங்கி கோவிலை அடையலாம்.

    • திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
    • நத்தம் மாரியம்மனுக்கு எந்த பொருளால் அபிஷேகம் செய்தால் என்ன பிரச்சனை தீரும் என்று பார்க்கலாம்.

    நத்தம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக அடையாள காணிக்கையாக கீழ்க்கண்ட பொருட்களை அபிஷேகம் செய்து வருகின்றனர்.

    மஞ்சள் பொடி-ராஜ ஆட்சியம்

    நெய்-மோட்சம்

    புஷ்பகவ்யம்-புனிதத்துவம்

    தீர்த்தம்-மன அமைதி தரும்

    அரிசிமாவு-கடன் நீங்கும்

    மாதுளைச்சாறு-அரசு லாபம்

    சந்தனம்-பக்தி ஞானம்

    வாசனை திரவியங்களும், எண்ணெய் காப்பும்-சவுக்கியம்

    பால்-ஆயுள் விருத்தி

    தேன்-விஷ்ணு பரிதி

    கரும்புச்சாறு-உடல்நலம், ஆயுள்பலம்

    எலுமிச்சைசாறு-ஞானம்

    புஷ்பங்கள்-செல்வம் குவியும்

    பன்னீர்-தெய்வ திருப்தி

    ×