என் மலர்
ஆன்மிகம்
- திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை.
- திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆடி-9 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பிரதமை நள்ளிரவு 12.58 மணி வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம் : பூசம் மாலை 5.57 மணி வரை. பிறகு ஆயில்யம்.
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீமுருகனுக்கு கிளி வாகன சேவை
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் தண்டியலிலும், ஸ்ரீரங்கமன்னார் யானை வாகனத்திலும் வீதி உலா. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. நயினார்கோவில் ஸ்ரீசவுந்திர நாயகி வீணாகான சரஸ்வதி அலங்காரம், வெள்ளிக்கிளி வாகன பவனி. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு.
கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை, மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருவிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன், சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-இரக்கம்
ரிஷபம்-வரவு
மிதுனம்-லாபம்
கடகம்-மகிழ்ச்சி
சிம்மம்-உற்சாகம்
கன்னி-உழைப்பு
துலாம்- சிரத்தை
விருச்சிகம்-ஆதரவு
தனுசு- வெற்றி
மகரம்-போட்டி
கும்பம்-பொறுமை
மீனம்-மேன்மை
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம்
வெளியுலக தொடர்பு கள் விரிவடையும் நாள். விடியும் பொழுதே நல்ல தகவல் வந்து சேரும். அன்னிய தேச வாய்ப்புகள் கைகூடும். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்வீர்கள்.
ரிஷபம்
தொழில் போட்டிகள் அகலும் நாள். ஆற்றல்மிக்கவர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெற வாய்ப்பு உண்டு.
மிதுனம்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நடைபெறும்.
கடகம்
விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரும். அத்தியாவசியப் பொருட்களை வாங்க முன்வருவீர்கள். ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும்.
சிம்மம்
ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வரும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஆதரவு உண்டு. பேச்சில் கனிவு பிறக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு உண்டு.
கன்னி
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் ஏற்படும். கல்யாண முயற்சி கைகூடும்.
துலாம்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். மனக்கசப்புகள் அகலும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
விருச்சிகம்
பரபரப்பாகச் செயல்பட்டுப் பாராட்டு மழையில் நனையும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும்.
தனுசு
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். தனவரவு எவ்வளவு வந்தாலும் உடனுக்குடன் விரயம் ஆகலாம். எந்த முடிவாக இருந்தாலும் குடும்பத்தினர்களை ஆலோசித்துச் செய்வது நல்லது.
மகரம்
யோகமான நாள். உறவினர் பகை அகலும். தேக நலனில் தெளிவு பிறக்கும். தொல்லை தந்தவர்கள் விலகுவர். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். பயணங்களால் பலன் கிடைக்கும்.
கும்பம்
மனக்குழப்பம் அகலும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரும். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதால் விரயம் உண்டு.
மீனம்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். கடனாகக் கொடுத்த தொகை வசூலாகும். பொதுநலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். அலைபேசி மூலம் எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும்.
- ஒகேனக்கல்லில் இன்று தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் திரண்டதால் முதலைப்பண்ணை பகுதியில் கூட்டம் அலைமோதியது.
- காவிரி ஆற்றில் புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மனை வழிபட்டனர்.
அமாவாசையில் விரதம் இருந்து முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் நம்முடைய பாவங்கள், தோஷங்கள் மட்டுமல்ல, நம்முடைய முன்னோர்கள் செய்த பாவங்களும் நீங்கி விடும்.
அந்த வகையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரிக்கரை ஓரத்தில் அதிகாலையில் ஏராளமானோர் குவிந்தனர்.
ஒகேனக்கல் முதலைப்பண்ணை பகுதியில் காவிரி ஆற்றின் கரையில், ஏராளமான பொதுமக்கள் வாழை இலை, பச்சரிசி, தேங்காய், பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜைகள் செய்து முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். பின்னர் அந்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர்.
இதில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மனை வழிபட்டனர்.
ஒகேனக்கல்லில் இன்று தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் திரண்டதால் முதலைப்பண்ணை பகுதியில் கூட்டம் அலைமோதியது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் அரூர் அடுத்த தீர்த்தமலை மீதுள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவில் தீர்த்தத்தில் இன்று ராமர், கவுரி உள்ளிட்ட 5 தீர்த்தங்களில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.
தொடர்ந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, தீர்த்தகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.
அதேபோல், டி.அம்மாபேட்டை, இருமத்தூர் உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில், தை அமாவாசை வழிபாடு நடந்தது.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் குவிந்தனர். ஆற்றின் கரையில், ஏராளமான பொதுமக்கள் பூஜை செய்து, முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். பின்னர் அந்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர்.
- ஆடி அமாவாசையான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நள்ளிரவே கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
- அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி தமிழ் மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி அமாவாசை தினத்தில் இறந்த நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கமாக உள்ளது.
இந்த மாதத்தில் ஏராளமான பெண்கள் குடும்பத்துடன் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவர். அதில் ஆடி அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது.
ஆடி அமாவாசை நாளில் பெண்கள் தங்கள் குடும்பத்துடன் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுவார்கள். சாதாரண அமாவாசை நாட்களில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட வருவார்கள்.
இந்த நிலையில் ஆடி அமாவாசையான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நள்ளிரவே கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், தனித்தனி வாகனங்களிலும், பேருந்துகளிலும் வருகை தந்தனர். தீச்சட்டி ஏந்தி, மொட்டை அடித்து, துலாம் பாரம் நேர்த்திக்கடன் செலுத்தி, அழகு குத்தி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கூல், பானகம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள், தன்னாலவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு கருதி 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக் கூடாது பகலில் சாப்பிடலாம்.
- இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம்.
ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்து, பின் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ, அத்தனை இலைகள் போட்டு, சமைத்த எல்லா உணவுகளையும், பதார்த்தங்களையும் படைத்து, துணிகள் வைத்து படைப்பவர்கள் துணிகளையும் வைத்து, அகல் விளக்கேற்றி வைத்து, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பிறகு, படைத்த எல்லா உணவு, பதார்த்தங்களையும் தனித்தனியாக இலையோடு எடுத்து, வீட்டிற்கு வெளியில், உயரமான இடத்தில் வைக்க வேண்டும்.
முன்னோர்களுக்குப் படைத்து வைப்பவைகளை, காக்கைகள் (பித்ருக்கள் என்று கூறுவதால்) மட்டுமே உண்ண வேண்டும் என்பதால்தான் உயரமான இடங்களில் வைக்க வேண்டும். காக்கைகள் உண்ட பிறகு, வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவு முறைகளுக்கேற்ப உள்ளவர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும்.
அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக் கூடாது பகலில் சாப்பிடலாம். இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம். முறைப்படி அமாவாசை விரதமிருந்து முன்னோர்களை வழிபடுபவர்களுக்கு அவர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
- நமது முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் ஆடி அமாவசை அன்று முறையான பித்ரு பூஜை மூலம் விலகும்.
- பித்ருபூஜை செய்வது ரொம்ப கஷ்டமான காரியம் அல்ல.
அமாவாசை தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அவர்களது சந்ததிகள் முன்னேற, தடைகள் அகல, பலவித தோஷங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு அவர்கள் அந்த தினத்தில் எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம். அதனால் தான் அன்று காகம் போன்றவற்றிக்கு உணவிட்டு பின்பு நாம் உணவு அருந்த வேண்டும் என்ற சம்பிரதாயம் கடைபிடிக்கப்படுகிறது.
அமாவாசை அன்று மட்டும் அல்ல, தினமும் காகத்திற்கு உணவிட்டு தான் நாம் உண்ணுதல் வேண்டும். அமாவாசை அன்று மட்டும் அல்லாமல் தினமும் நமது மூதாதையர்களை நினைத்து நமது வேலைகளை தொடங்குதல் வேண்டும்.
திருமணத்தடை, குழந்தை பிறப்பு தாமதம், வறுமை, நீடித்த நோய் தொல்லை போன்றவை விலக நமது முன்னோர்களுக்கு சரியான முறைப்படி பித்ருபூஜை செய்தால் நல்ல முன்னேற்றத்தை காணலாம். நமது முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் ஆடி அமாவசை அன்று முறையான பித்ரு பூஜை மூலம் விலகும்.
இன்று நமக்கு இருக்கும் நோயில்லாத வாழ்வு, நேரத்திற்கு உண்பது போன்றவை நமது முன்னோர்களின் ஆசியினால் என்பதால் அவர்களை ஆடி அமாவாசை போன்ற காலங்களில் வணங்குவது சிறந்தது.
பித்ருபூஜை செய்வது ரொம்ப கஷ்டமான காரியம் அல்ல. காய்கறிகள் தானமாக தரவேண்டும், குறிப்பாக பூசணிக்காய். ஏனெனில் அதில் தான் அசுரன் குடியிருப்பதாக பண்டைய நூல்கள் கூறுகின்றன. பூஜைக்கு பிறகு இல்லத்தில் இருக்கும் நமது முன்னோர் படங்களுக்கு துளசி சமர்பிக்க வேண்டும். அதன் மூலம் பெருமாளின் ஆசிர்வாதத்தை பெற்று நமது முன்னோர்கள் மனதார வாழ்த்துவார்கள். முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்கி அதை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும்.
- பிரயோகம் - ஆசமனம் செய்யும் போது கையில் பவித்திரமிருக்கக் கூடாது.
- சங்கல்பம் முடிந்ததும் தர்ப்பைகளைத் தெற்கு திக்கில் போட்டு விட வேண்டும்.
தந்தை இறந்த ஆண்டில் தர்ப்பணம் செய்ய வேண்டாம். ஆனால், அந்த ஆண்டு பூர்த்தியாவதற்குள் கிரகணம் வந்தால் கிரகண புண்ணியகாலத்தில் தர்ப்பணம் செய்து விட்டுப் பின்பு அமாவாசைகளில் செய்ய வேண்டும்.
நடுப்பகலுக்கு மேல் தர்ப்பணத்திற்காக ஒரு நீராடல் செய்து விட்டு மாத்யான்ஹிகத்திற்குப் பின் தர்ப்பணம் செய்ய வேண்டும். அதுவரை பட்டினியாயிருக்க வேண்டும். துணிகளை கட்டிக் கொண்டு தர்ப்பணம் செய்யக் கூடாது.
1. பிரயோகம் - ஆசமனம் செய்யும் போது கையில் பவித்திரமிருக்கக் கூடாது. ஆசமனம் முடிந்த பின் பவித்திரத்தை மோதிர விரலில் அணிந்து கொண்டு அத்துடன் மூன்று தனி தர்ப்பைகளையும் சேர்த்துப் பிடித்துக்கொண்டு 'சுக்லாம் பரதம்', 'பிராணாயமம்', 'சங்கல்பம்' முதலியவற்றை செய்ய வேண்டும். சங்கல்பம் முடிந்ததும் தர்ப்பைகளைத் தெற்கு திக்கில் போட்டு விட வேண்டும்.
2. ஆவாஹனம் - சுத்தமான தரையிலோ (வெள்ளி, பித்தளை, அல்லது தாமிரத் தாம்பாளத்திலோ) கிழக்கு மேற்காகப் பரப்பிய தர்ப்பைகளின் மேல் தெற்கு நுனியாகக் கூர்ச்சத்தை வைத்து 'ஆயாதபிதர' என்ற மந்திரத்தால் எள்ளைப் போட்டு ஆவாஹனம் செய்யய்ய வேண்டும்.
3. ஆஸனம் - 'ஸக்ருதாச்சின்னம்' என்ற மந்திரத்தால் தனித் தர்ப்பைகளைத் கூர்ச்சத்திற்கு கீழ் வைக்க வேண்டும். 'ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்' என்று மறுபடி எள்ளைப் போட வேண்டும்.
தர்ப்பணம் - பித்ரு தர்ப்பணத்தில் கட்டை விரலுக்கும் மற்ற நான்கு விரலுக்கும் இடையில் வலது புறமாகச் சாய்த்து கை நிறையத் தீர்த்தம் விட வேண்டும். தர்ப்பணம் செய்யும் போது இடது காலை முட்டி இட்டு, வலது காலை மடித்துக் கொண்டு இரண்டு கைகளையும் முழந்தாள்களுக்குள் அடக்கி வைத்துக் கொண்டு கிழக்கு முகமாகவோ அல்லது, தெற்கு முகமாகவோ இருக்க வேண்டும். தெற்கு முகமாகத் தர்ப்பணம் செய்பவரும் ஆசமனம், சங்கல்பம், ஆவா ஹனம், ஆஸனம் முதலியவற்றைச் செய்யும் போது கிழக்கு முகமாகத் தான் செய்ய வேண்டும்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம்
முயற்சித்த காரியங்களில் வெற்றி கிட்டும் நாள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும்.
ரிஷபம்
நினைத்தது நிறைவேறும் நாள். செல்வநிலை உயரும். திடீர் பயணம் தித்திக்க வைக்கும். தொழிலில் புதிய திருப்பங்கள் ஏற்படும். உங்கள் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உதவுவர்.
மிதுனம்
திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். உறவினர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் மாறும். உத்தியோகத்தில் உடன் பணியாற்றுபவர்களால் பிரச்சனைகள் ஏற்படலாம்.
கடகம்
அலைச்சல் கூடினாலும் ஆதாயம் கிடைக்கும் நாள். பணவரவு போதுமானதாக இருக்கும். தொழிலில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். சகோதர ஒத்துழைப்பு உண்டு.
சிம்மம்
பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொல்லை கொடுத்து வந்தவர்கள் எல்லை விட்டு விலகிச் செல்வர்.
கன்னி
கொடுத்த தொகை குறித்தபடி வந்து சேரும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும்.
துலாம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வரும். செலவுகளை குறைத்து சேமிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். சொத்து வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.
விருச்சிகம்
வாக்குவாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். குடும்பச்சுமை கூடும். அமைதி கிடைக்க அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் போட்டிகள் அதிகரிக்கும்.
தனுசு
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். விரயங்கள் எதிர்பாராத விதம் வந்து சேரும். உறவினர்களின் பகை உண்டு. நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றுமாக இருக்கும்.
மகரம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். எதிரிகளின் தொல்லை குறையும். தொழில் சம்பந்தமான பயணமொன்றை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.
கும்பம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். வளர்ச்சிக்கு மாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்பு உண்டு. பயணங்கள் பலன் தருவதாக அமையும்.
மீனம்
வெற்றி தேவதை வீடு தேடி வரும் நாள். பணம் உங்களின் பையை நிரப்பும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மேலதிகாரிகளின் மனதை ஈர்க்கும். தொழில் வளர்ச்சி கூடும்.
- ராமேசுவரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று.
- பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பு சாமிக்கு பூக்களால் அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஆடி-8 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : அமாவாசை நள்ளிரவு 1.48 மணி வரைபிறகு பிரதமை
நட்சத்திரம் : புனர்பூசம் இரவு 6.11 மணி வரை பிறகு பூசம்
யோகம் : அமிர்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
ஆடி அமாவாசை, ராமேசுவரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் கோவில்களில் பித்ரு தர்ப்பணம்
இன்று ஆடி அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் ஸ்ரீ விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். வத்திராயிருப்பு சமீபம் சதுரகிரி ஸ்ரீசுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் பெருந்திருவிழா. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் தங்க கருட வாகனத்தில் பவனி.
பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பு சாமிக்கு பூக்களால் அலங்காரம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சந்திர வல்லப்பப்பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் வழிபாடு. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பக்தி
ரிஷபம்-நலம்
மிதுனம்-ஆர்வம்
கடகம்-நற்செய்தி
சிம்மம்-உதவி
கன்னி-பயணம்
துலாம்- முன்னேற்றம்
விருச்சிகம்-பரிசு
தனுசு- பாராட்டு
மகரம்-வெற்றி
கும்பம்-உழைப்பு
மீனம்-மேன்மை
- மனிதனுக்கு எல்லாவற்றிற்கும் சுதந்திரம் அளிக்கின்ற கடவுள், நிச்சயமாக எல்லாவற்றையும் ஒருநாள் நியாய விசாரணைக்குக் கொண்டு வருவார்.
- நன்மை செய்கிறவன் கடவுளால் உண்டாயிருக்கிறான்.
நன்னீர், தூய காற்று, பருவகால மழை, நல்ல மனிதர்கள் அனைத்தும் இன்று அரிதாகிவிட்டது. மண்வளம், மழைவளம், நீர்வளம், மலைவளம், மனித வளம் அனைத்தும் குறைந்துவிட்டது. காரணம் புத்திக்கூர்மை நிறைந்த மனிதன் அறிவில் தேறி, ஆடம்பரத்தில் ஊறி, தன்னலத்தில் மூழ்கி, தான் வாழ பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என அனைத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறான்.
கடவுள் மனிதனை தன் சொந்த கைகளினாலே அழகாகவும், அற்புதமாகவும் படைத்தார். அனைத்தையும் ஆளுகின்ற அதிகாரத்தையும், சுயமாகவே தெரிந்தெடுக்கிற சுதந்திரத்தையும் அவனுக்குக் கொடுத்தார்.
சுதந்திரம் அளிக்கின்ற கடவுள்
படைப்பின் வேளையிலே மனிதனுக்குக் கடவுள் சுதந்திரத்தைக் கொடுத்தார். ஆதிமனிதன் ஆதாம் உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. கீழ்படிதல் நிறைந்த அல்லது கீழ்படிதலற்ற வாழ்வை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைக் கொடுக்கிறார்.
'நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்' (ஆதி.2:16,17).
'இதோ ஜீவனையும், நன்மையையும், மரணத்தையும், தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்' (உபா.30:15) என்கிறார்.
'கர்த்தரை சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்' (யோசு.24:15) என்று அவர்கள் விரும்பியதை வழிபடுவதற்கான சுதந்திரத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.
கடவுளின் கட்டளைகளை கைக்கொண்டால் ஆசீர்வாதம், கைக்கொள்ளா விட்டால் சாபம் என்று கடவுளின் கற்பனைகளைக் கைக்கொள்வதில் அவர்களுக்கு முழுமையான சுதந்திரத்தைக் கொடுக்கிறார். அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும் என்று செய்கின்ற செயலில் மனிதனுக்கு சுதந்திரம் கொடுக்கிறார்.
நியாயம் தீர்க்கின்ற கடவுள்
மனிதனுக்கு எல்லாவற்றிற்கும் சுதந்திரம் அளிக்கின்ற கடவுள், நிச்சயமாக எல்லாவற்றையும் ஒருநாள் நியாய விசாரணைக்குக் கொண்டு வருவார். ஒவ்வொரு கிரியையும், ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும், தீமையானாலும் நியாயத்திற்குக் கொண்டுவருவார். பட்சபாதமின்றி நியாயந்தீர்ப்பார். இதிலிருந்து யாரும் தப்பவோ, ஓடி ஒளியவும் முடியாது. இது எல்லாருக்கும் பொதுவானது. இதை எல்லோரும் எதிர்கொண்டேயாக வேண்டும்.
நியாயத்தீர்ப்பின் வேளையில் கடவுள் பின்வாங்குவதும், தப்பவிடுவதும், மனஸ்தாபப்படுவதும் இல்லை. அவர் நீதியோடும், நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார். பட்சபாதமில்லாமல், அவனவன் வழிகளுக்கும், செய்கைகளுக்கும் தக்கதாக நியாயந்தீர்ப்பார். மனிதன் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் (மத்.12:36).
நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார். நாம் நினைப்பது போல் அவர் தாமதிப்பதுமில்லை, மாறாக, அவர் நாம் கெட்டு அழிந்து போவதை அவர் விரும்பாதபடியினால் நாம் மனந்திரும்ப வேண்டுமென்று அவர் நம்மிடத்தில் நீடிய பொறுமையுள்ளவராய் இருக்கிறார். மனந்திரும்பி நல்வாழ்வு வாழ்வதற்கான வாய்ப்பை மீண்டும் மீண்டும் தந்து கொண்டேயிருக்கிறார்.
கோதுமையை களஞ்சியத்திலும், பதரையோ அவியாத அக்கினியில் சேர்ப்பார். நித்திய வாழ்வுக்கென்று சிலரையும், நித்திய அக்கினிக்கென்று சிலரையும் பிரித்தெடுப்பார். ஐசுரியவான் லாசரு உவமையில் மண்ணில் ஆடம்பரமாய் வாழ்கிறவன் மரித்தபின் எரிநரகில் வேதனைப்படுகிறான். ஆனால், மண்ணில் வறுமையில் வாடியவன் மரித்தபின் ஆபிரகாமின் மடியில் இளைப்பாறுகிறான். இரக்கமும், கருணையும் நிறைந்த நல்வாழ்வு வாழ்வதற்கான வாய்ப்பிருந்தும் வாழாதவன், இப்போது ஒரு துளி நீருக்காய் ஓலமிடுகிறான். வறுமை, வியாதி, பசி என்று வேதனையில் வாடியவன், இப்போது சமாதானத்தோடே இளைப்பாறுகிறான். மரணத்தைப் போல நியாயத்தீர்ப்பும் நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது.
நம் செய்கைக்குத் தக்க பலனளிக்கிற கடவுள்
'தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்பது முதுமொழி. 'மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்' என்பது மறைமொழி.
மனிதன் தான் விரும்பிய செயல்களை செய்வதற்குரிய சுதந்திரம் அவனுக்கு முழுமையாகக் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவனவன் செய்வதற்கேற்ற பிரதிபலனையும் அடைந்தே தீர வேண்டுமென்ற தெளிவும் அவனுக்கு வேண்டும். நன்மையை விரும்பி செய்வதும், தீமையை வெறுப்பதும், தீமைகளை அடுக்கடுக்காய் செய்து நன்மை செய்ய மறுப்பதும் அவரவர் விருப்பம் தான்.
ஆனாலும், அவனவன் செய்கைக்குத் தக்க பலன் அவனவன் கூட வருகிறது. நன்மை செய்தவர் மேன்மையையும், தீமை செய்தவர் அதற்குரிய பிரதிபலனையும் அடைவர். நற்கிரியைகளை செய்வதற்கென்றே நாம் கடவுளால் உருவாக்கப்பட்டிருக்கிறோம்.
நம் நற்கிரியைகளால் பிதாவின் நாமம் மகிமைப்பட வேண்டும். நன்மை செய்கிறவன் கடவுளால் உண்டாயிருக்கிறான். 'நற்செய்தியின் நறுமணத்தை உள்ளடக்கிய நற்செயல்களை ஆற்ற இயலும் வகையில் இயேசுவுடனான அன்புறவில் நம்மை ஈடுபடுத்துவோம்' என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
மகிமையான வாழ்வுக்கென்று மகத்தான செயல்களைச் செய்வோம்!
- ஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால், அவருடைய குடும்பத்தில் அடுக்கடுக்கான சோதனைகள் ஏற்பட்டு துன்பம் விளைவிக்கும்.
- அமாவாசையன்று பித்ருக்கள் வழிபாட்டின்போது, வீட்டில் முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும்.
சூரியன் பிதுர்க்காரகன், சந்திரன் மாதூர்க்காரகன். இந்த இரண்டு கிரகங்கள் கடக ராசியில் இணையும் காலமான ஆடி அமாவாசையன்று, முன்னோரையும் மறைந்த தாய், தந்தையரையும் நினைத்து தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.
ஆடி மாதம் முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சிணாயனம். அதாவது சூரியன் தெற்கு நோக்கி நகரத் தொடங்கும் காலம். இது ஆடி மாதத்தில் தொடங்குகிறது. தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவுப் பொழுது. எனவே, இந்த காலத்தில் நம்மை பாதுகாக்கவும், நமக்கு அனைத்து நன்மைகளையும் தந்து ஆசீர்வதிக்கவும் நம்முடைய முன்னோர்கள் ஆடி மாதம் முதல் தேதியன்று பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வரத் தொடங்குகின்றனர்.
கருட புராணத்தில் இந்த பித்ருலோகம் சூரிய மண்டலத்தில் இருந்து பல லட்சம் மைல்கள் தொலைவில் இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. த்ருலோகத்தில் இருந்து புறப்படும் அவர்களை வரவேற்கும் விதமாக, ஆடி மாத அமாவாசை தினத்தில் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும்.
எனவே ஆடி அமாவாசை நாளில் நீர் நிலைகளில் புனித நீராடி இஷ்டதெய்வ ஆலயங்களில் வழிபாடு, சிறப்பு பூஜைகள் செய்வது, ஏழைகள், இல்லாதோர், இயலாதோருக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வதன் மூலம் நாம் செய்த பாவங்கள், கர்மவினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும் என்பது நம்பிக்கை.
பித்ரு தோஷம்
ஒருவரின் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால், அவருடைய குடும்பத்தில் அடுக்கடுக்கான சோதனைகள் ஏற்பட்டு துன்பம் விளைவிக்கும். இதற்கு உரிய பரிகாரம் செய்வது மிக அவசியம். அமாவாசை நாட்களில் விரதம் இருந்து பித்ருக்கள் பூஜையை முறையாகச் செய்யாத குடும்பத்தில் குழப்பம், சண்டை, வியாதி, வம்ச விருத்தி இன்மை போன்றவை ஏற்படும்.
பித்ரு தர்ப்பணம் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படும் துன்பங்கள் நீங்கும். தர்ப்பணம் செய்வது பற்றி மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. பித்ரு தர்ப்பணம் என்பதற்கு பித்ருக்களை திருப்தி செய்வித்தல் என்று பொருள். அமாவாசை நாளில் எள்ளும் தண்ணீரும் கொடுப்பதன் மூலம் மறைந்த நம் முன்னோர்களை திருப்திபடுத்தலாம்.
பித்ரு தர்ப்பணம் மூன்று தலைமுறையினருக்காக செய்யப்படுகிறது. ஒருவர் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 1, 5, 7, 9 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருந்தால் அந்த ஜாதகம் பித்ருதோஷம் உடைய ஜாதகம். ஜாதகத்தில் சூரியனோ அல்லது சந்திரனோ, ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருப்பதும் பித்ரு தோஷத்தைக் குறிக்கும்.
லக்னத்துக்கு 9-ம் இடத்து அதிபதியும் 5-ம் இடத்து அதிபதியும் சேர்ந்து லக்னம், 5ஆம் இடம், 9-ம் இடம் ஆகிய இடங்கள் ஒன்றில் இருந்தாலும் பித்ரு தோஷம் ஏற்படும்.
அமாவாசை தர்ப்பணம்
வான சாஸ்திர, ஜோதிட சாஸ்திர அடிப்படையில் சூரியன், சந்திரன் ஒரே ராசியில் இணைவதே அமாவாசை. ஒவ்வொரு தமிழ் மாதமும் சூரியன் ஒவ்வொரு ராசியில் இருப்பார். ஆடி மாதம் கடக ராசியில் இருப்பார். அந்த நேரத்தில் தினக்கோளான சந்திரன் கடக ராசியில் சூரியனுடன் சேரும் நாளே ஆடி அமாவாசை.
அமாவாசை திதி நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கான பிரத்யேகமான திதி. மாதம்தோறும் அமாவாசையன்று திதி கொடுப்பதால், பித்ரு தோஷம் நீங்குவதோடு முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைப்பதுடன், குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

மூன்று தலைமுறை தர்ப்பணம்
அமாவாசை திதி நாளை அதிகாலை 03.06 மணிக்கு தொடங்கி, மறுநாளான 25-ந்தேதி அதிகாலை 01.48 வரை உள்ளது. இதனால் நாளை காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்குச் சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவற்றை தர்ப்பணத்துக்கு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தர்ப்பணம் கொடுக்க மதியவேளை மிகவும் சிறந்ததாகும். தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், குலதெய்வம், தந்தை வழி மற்றும் தாய் வழியில் மூன்று தலைமுறையினரின் பெயர்களை சொல்லி, தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.
அமாவாசையன்று பித்ருக்கள் வழிபாட்டின்போது, வீட்டில் முன்னோர்களின் படத்துக்கு துளசி மாலையோ, துளசி இலையோ சமர்ப்பிக்க வேண்டும். இது மகா விஷ்ணுவை மகிழ்விக்கும். இதனால் பித்ருக்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். அவர்கள் மகிழ்ச்சியில் தமது சந்ததியினரை வாழ்த்துவார்கள். அதன் மூலம் நமது துயர்நீங்கி வாழ்வில் சுபீட்சம் ஏற்படும்.
அகத்திக்கீரை
முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலையில் படையல் போட்டு வணங்க வேண்டும்.
கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவுக்கு தானமாக வழங்க வேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும்வரை, தினசரி செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யலாம்.
- வழக்கமாக ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு சாத்தப்படும்.
- 1-ம் நாளான29-ந்தேதி தபசு மண்டகப்படியில் சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 30-ந்தேதி சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 4-ம் நாளான நேற்று காலை பர்வதவர்த்தினி அம்பாள் தங்க பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு அம்பாள் தங்கசிம்ம வாகனத்திலும் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருவிழாவின் 6-வது நாளான நாளை (வியாழக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை 9 மணிக்கு அம்பாள் தங்க பல்லக்கிலும், தொடர்ந்து பகல் 11 மணிக்கு ராமபிரான் தங்க கருட வாகனத்திலும் அக்னிதீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருள்கிறார்கள்.
வழக்கமாக ராமேசுவரம் கோவில் நடையானது அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு சாத்தப்படும். பின்னர் 3 மணிக்கு திறக்கப்பட்டு 8 மணிக்கு சாத்தப்படும். இந்த நிலையில் நாளை ஆடி அமாவாசை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனிதநீராடி, சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது மதியம் 1 மணிக்கு சாத்தப்படாமல் பகல் முழுவதும் திறந்திருந்து இரவு 8 மணிக்கு சாத்தப்படும் என கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆடித்திருக்கல்யாண திருவிழாவின் 7-ம் நாளான நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு அம்பாள் வெள்ளி தேரோட்டமும், 9-ம் நாளான 27-ந்தேதி காலை 10 மணிக்கு அம்பாள் தேரோட்டமும் நடைபெறுகிறது. 11-ம் நாளான29-ந்தேதி தபசு மண்டகப்படியில் சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், 30-ந்தேதி சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.
ஆகஸ்டு 4-ந்தேதி சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் கோவிலில் இருந்து ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.






