என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • சிவன் 96 தத்துவங்களை கடந்தவர். முகருப்பெருமாள் 36 தத்துவங்களை கடந்தவர்.
    • தர்மசாஸ்தா அய்யப்பனோ 18 தத்துவங்களை கடந்தவர். எனவே தான் சபரிமலை கோவிலில் 18 படிகள் அமைந்துள்ளன.

    சிவன் 96 தத்துவங்களை கடந்தவர். முகருப்பெருமாள் 36 தத்துவங்களை கடந்தவர்.

    தர்மசாஸ்தா அய்யப்பனோ 18 தத்துவங்களை கடந்தவர். எனவே தான் சபரிமலை கோவிலில் 18 படிகள் அமைந்துள்ளன.

    முதல் 5 படிகள் இந்திரியங்கள் ஐந்தையும் குறிக்கும்.

    அடுத்த 8 படிகள் அஷ்டமாசித்திகளை குறிக்கும், 14,15,16 வது படிகள் 3 குணங்களையும் குறிக்கும்.

    17 வது படி ஞானத்தையும்,18 வது படி அஞ்ஞானத்தையும் குறிக்கிறது.

    புலன் ஐந்து,பொறி ஐந்து, பிராணன் ஐந்து,மனம் ஒன்று,புத்தி ஒன்று, ஆலங்காரம் ஒன்று ஆக மொத்தம் பதினெட்டு.

    இவைகளை கடந்து கடவுளை காண வேண்டும் என்ற கருத்தின் படியே 18 படிகளும் அமைந்துள்ளது.

    • காட்டுப்பாதையில் சரண கோஷம் நமக்கு ஒரு பாதுகாப்பு.
    • படிகள் எற ஏற அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்து கொண்டே இருப்பார்கள் என்பது பலரும் அனுபவித்த உண்மை.

    சபரிமலை என்றதும் "சாமியே சரணம் அய்யப்போ" என்ற சரண கோஷம் தான் காதுகளில் பாயும் மகத்துவம் மிக்க இந்த சரண கோஷத்தில் "ச" என்ற எழுத்து விரோதிகளை அழிக்கக்கூடியது"ர" என்ற உச்சரிப்பு ஞானம் தர வல்லது "ண" என்ற எழுத்து சாந்தம் அளிப்பது "சுவாமியே சரணம்" என்று அடி வயிற்றில் இருந்து நாம் எழுப்பும் ஒலியானது சக்தி, ஞானம், சாந்தம் ஆகிய மூன்றும் தருகிறது.

    மேலும் சம் சரணாகதி கர்ம வினைகளையும் போக்கி விடும் உக்கிரமாக சரண கோஷம் எழுப்பும் போது காட்டில் உள்ள விலங்குகள் பயந்து ஓடும்.

    காட்டுப்பாதையில் சரண கோஷம் நமக்கு ஒரு பாதுகாப்பு.

    படி ஏற... படி ஏற... வாழ்வு உயருதய்யா!

    அய்யப்ப பக்தர்கள் மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரத முறைகளை நெறியாகவும், முறையாகவும் கடைபிடித்து "தான்" என்னும் அகங்காரத்தை விட்டொழித்து இறைவனிடம் முழுநம்பிக்கை வைத்து, முழு சரணாகதி அடைந்து ஒரு முகமாக வழிபட்டால் இறைவனின் அருள் காடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும்.

    படிகள் எற ஏற அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்து கொண்டே இருப்பார்கள் என்பது பலரும் அனுபவித்த உண்மை.

    • “சரணம் அய்யப்பா” என்ற சரணாகதி மந்திரத்தை தூய மனதுடன் ஓதுகிறவன் முக்தி பெறுவான்.
    • பதினெட்டு படியேறி தரும சாஸ்தாவின் சந்நிதி எட்டியதும் கடவுள் தரிசனம் கிடைக்கிறது.

    தன்னை காணவரும் பக்தர்களுக்கு அய்யப்பன் சில அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

    தூய மனத்தில் ஞானம் ஒளிரும், ஞானம் வாழ்வின் லட்சியம் ஆகும்.

    நற்கருமத்துக்கு இடையூறாவது காமம், வெகுளி, பேராசை ஆகியன

    இவற்றில் இருந்து விடு பெற கடவுளை நினைத்து தியானம் செய்வது அவசியம்.

    தியானத்தில் மனம் நிலை பெறும் போது சாந்தியும், பேரின்பமும் உண்டாகும்.

    கடவுளிடம் சரணாகதி அடைவதே பக்தியின் இறுதிமொழி.

    "சரணம் அய்யப்பா" என்ற சரணாகதி மந்திரத்தை தூய மனதுடன் ஓதுகிறவன் முக்தி பெறுவான்.

    பதினெட்டு படியேறி தரும சாஸ்தாவின் சந்நிதி எட்டியதும் கடவுள் தரிசனம் கிடைக்கிறது.

    • சபரி என்பவள் ஒரு வேடர் குல தலைவனின் மகள்.
    • சபரி மதங்க முனிவர் ஆசிரமத்தில் பணிவிடை செய்து தவத்தில் ஈடு படுகிறாள்.

    சபரி என்பவள் ஒரு வேடர் குல தலைவனின் மகள்.

    இவளுக்கு வேடர் குலத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்த போது பிராணிகளை வேட்டையாடும் ஒருவரை மணம் முடிக்க மாட்டேன் என்று வெறுத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி தபசியாக மாறிவிடுகிறாள்.

    மதங்க முனிவர் ஆசிரமத்தில் பணிவிடை செய்து தவத்தில் ஈடு படுகிறாள்.

    அப்போது அந்த முனிவர் சபரியிடம் என்னிடம் பணி செய்து உன் காலத்தை கடத்தி விட்டாய்.

    ஆனால் நான் தியானித்து வரும் திருமால், ஸ்ரீராமன், சீதாதேவி ஆகியோர் சித்திர கூடத்தில் இருக்கிறார்கள்.

    அவர்கள் சிலகாலங்களுக்குள் இங்கு வருவார்கள். எனக்கு பதிலாக நீ அவர்களை உபசரிக்க வேண்டும் என்று கூறிய முனிவர் அக்கினியை வளர்த்து தன் பூத உடலை அழித்துக் கொள்கிறார்.

    முனிவர் சொன்னது போல சபரியும் அங்கு வரும் ராமர், சீதாதேவி ஆகியோரை உபசரிக்கிறார். அந்த சபரியின் பெயராலேயே இந்த சிறப்பு மிக்க தலம் சபரிமலை ஆயிற்று.

    • பக்தர்கள் நெருக்கடியை தவிர்க்கும் வகையில் சன்னிதானத்திற்கும் மாளிகைபுரத்திற்கும் ஒருவழிப்பாதை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • சபரிமலை வரும் பக்தர்களுக்கு மருத்துவ குணம் கொண்ட மூலிகை கலந்த தண்ணீர் ஆங்காங்கே வழங்கப்படுகிறது.

    சாமியே சரணம் அய்யப்பா என்ற சரண கோஷம் பக்தர்கள் மத்தியில் ஒரு பரவசத்தை ஏற்படுத்தி வருகிறது. கார்த்திகை மாதம் பிறந்து விட்டால் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி விடுவார்கள்.

    சபரிமலையில் ஜாதி பேதமின்றி பக்தர்கள் அய்யப்ப சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுவதும் அய்யப்பனின் திருநாமத்தில் பக்தர்கள் அழைக்கப்படுவதும் இக்கோவிலுக்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு.

    மூர்த்தி சிறியது. கீர்த்தி பெரியது என்பது போல சிறு கோவிலாக காட்சி தரும் சபரிமலை அய்யப்பன் சன்னதி பக்தர்களின் மனக்கோவிலில் பெரும் இடத்தைப் பிடித்து விட்டது. 1978ம் ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜைகளில் சுமார் 60 லட்சம் பக்தர்கள் மட்டுமே வருகை புரிந்து உள்ளனர்.

    ஆனால் தற்போது 10 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

    பக்தர்கள் நெருக்கடியை தவிர்க்கும் வகையில் சன்னிதானத்திற்கும் மாளிகைபுரத்திற்கும் ஒருவழிப்பாதை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    சபரிமலை வரும் பக்தர்களுக்கு மருத்துவ குணம் கொண்ட மூலிகை கலந்த தண்ணீர் ஆங்காங்கே வழங்கப்படுகிறது.

    இதற்காக பம்பை முதல் சன்னிதானம் வரை தண்ணீர் பந்தல்கள் பல இடங்களில் அமைக்கப்பட்டும், மேலும் மலை ஏறும் போது மூச்சு திணறலுக்கு ஆளாகும் பக்தர்களுக்கு ஆக்ஸிஜன் மூலம் மூச்சு திணறல் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது.

    சபரிமலையில் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் துப்புரவு பணியில் தினமும் ஏராளமான ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள்.

    சீசன் காலங்களில் 300 ஊழியர்கள் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள்.

    சீசன் காலங்களில் சபரிமலை, எருமேலி, பம்பை ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    சபரிமலையில் மதியம் அன்னதானம் (சாப்பாடு) வழங்கப்படுகிறது. இதில் 3 வகையான கூட்டு மற்றும் குழம்பு வழங்கப்படும்.

    எருமேலியில் பகல் கஞ்சி வழங்கப்படும். இதில் இஞ்சி, சுக்கு உள்பட மருந்துகள் சேர்த்து சமைக்கப்படுகிறது.

    பம்பையில் ரூ.12 கோடி செலவில் ஸ்ரீ அய்யப்பா மெடிக்கல் சென்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆம்புலன்ஸ் வசதி ரூ.50 லட்சம் செலவில் செய்யப்பட்டுள்ளது.

    சபரிமலை வரும் பக்தர்கள் விரதம் இருந்து ஈருமுடிக்கட்டுக் கட்டி வரவேண்டும்.

    சபரிமலை 60 கி.மீ. சுற்றளவில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. பத்தினம்திட்டையில் இருந்து 60 கி.மீ. தூரத்தில் பம்பை உள்ளது. பம்பையில் இருந்து சன்னிதானம் 4 கி.மீ. தூரத்தில் மலை மீது அமைந்துள்ளது.

    சபரிமலையின் உயரம் 4 ஆயிரம் அடியாகும். சபரிமலை அய்யப்ப சுவாமி கோவில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

    இங்கு அய்யப்ப சுவாமியின் நண்பராக விளங்கிய வாபருக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. இங்கு முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த வாபரை இந்து மதத்தைச் சேர்ந்த பக்தர்களும் வணங்கிச் செல்கிறார்கள்.

    சபரிமலைக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடநாட்டில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். அதுமட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்களும் இருமுடிக்கட்டு கட்டி சபரிமலை வருகிறார்கள்.

    • சுவாமி அய்யப்பன் அவதார வரலாறு பக்தி பூர்வமானது மட்டுமல்ல நெஞ்சை நெகிழ வைக்கும் உன்னத வரலாறு ஆகும்.
    • காலவ மகிஷியின் மகளான லீலாவதி,, ஒரு சாபத்தின் விளைவாக மகிஷியாக பிறந்தாள்.

    அய்யப்பனின் தரிசனத்தைப்போல அவரின் அவதார வரலாறும் ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம்.

    சுவாமி அய்யப்பன் அவதார வரலாறு பக்தி பூர்வமானது மட்டுமல்ல நெஞ்சை நெகிழ வைக்கும் உன்னத வரலாறு ஆகும்.

    காலவ மகிஷியின் மகளான லீலாவதி,, ஒரு சாபத்தின் விளைவாக மகிஷியாக பிறந்தாள்.

    தனது சகோதரன் மகிஷாசுரணை ஆதிபராசக்தி அழித்ததால் பிரம்மனை நோக்கி கடும் தவம் இருந்தாள்.

    வரம் பெற்ற அவள் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினாள்.

    பிரம்மாசுரனை அழிக்க மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவை கண்டு சிவபெருமான் மோகம் கொண்டார்.

    இதன் விளைவாக அய்யப்பன் அவதாரம் நிகழ்ந்தது.

    அரிகர புத்திரனாக மணிகண்டன் அவதரித்தார். குழந்தையின் கழுத்தில் மணிமாலை இட்டுவிட்டு அவர்கள் இருவரும் மறைந்தனர்.

    காட்டுக்கு வேட்டையாட வந்த பந்தளநாட்டு மன்னன் ராஜசேகரன் குழந்தையை கண்டெடுத்து அதற்கு மணிகண்டன் என்று பெயரிட்டு சீரும் சிறப்புமாக வளர்த்தான்.

    இந்த நிலையில் ராணி, ராஜராஜன் என்ற மகனை பெற்றெடுத்தாள் மந்திரியின் துர்போதனையால் அவள் மதிமயங்கினாள்.

    சதி திட்டம் தீட்டப்பட்டது. ராணி தலைவலியால் துடித்தாள் ராணியைக் குணப்படுத்த வைத்தியர் புலிப்பால் வேண்டும் என்றார்.

    மன்னன் அதிர்ச்சி அடைந்தான். புலிப்பாலை கொண்டுவர 12 வயது ஆன மணிகண்டன் புறப்பட்டார்.

    பம்பை ஆற்றங்கரையில் மணிகண்டனுக்கும் மகிஷிக்கும் இடையே கடும்யுத்தம் நடந்தது. முடிவில் மகிஷி வீழ்ந்தாள்.

    லீலாவதியாக அவள் சாப விமோசனம் பெற்றாள். அய்யனை தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு திருவடி பணிந்து நின்றாள்.

    அய்யன் தான் நித்ய பிரம்மச்சாரி என்றைக்கு தன்னைத்தேடி கன்னி அய்யப்பன்மார் வராமல் இருக்கிறார்களோ அன்று அவளை மணந்து கொள்வதாக கூறி தமது இடப்பக்கத்தில் மாளிகைப்புறத்து மஞ்சள்மாதாவாக வீற்றிருக்க அருள்பாலித்தார்.

    இந்திரன் புலிவடிவம் தாங்கிட அய்யப்பன் அதன்மீதேறி நாடு திரும்பினார். அதை கண்டு மிரண்ட ராணி, தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள்.

    அய்யப்பன் தமது அவதார நோக்கினை எடுத்துக்கூறி தர்மசாஸ்தாவான தனக்கு விடை கொடுக்குமாறு வேண்டினார்.

    இதைக்கேட்டதும் ராஜசேகர மன்னன் மனம் உடைந்தார். அவர் திருப்திக்காக அய்யப்பன் சபரிமலையில் தங்கி இருக்க சம்மதித்தார்.

    பம்பை நதிக்கரையில் மணிகண்டன் அம்பு எய்தார். அந்த இடத்தில் பந்தளமன்னன் கோவில் கட்டினான்.

    பரசுராமர் அங்கு அய்யப்பன் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார். சபரி என்ற யோகியின் நினைவாக அந்த இடம் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.

    இருமுடிகட்டி தம்மைதரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் மகரசங்கராந்தி அன்று அய்யப்பன் ஜோதிவடிவில் இன்றும் அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார்.

    • பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
    • கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த 15-ந் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    இதற்கிடையே சபரிமலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சபரிமலை சீசனையொட்டி இந்த ஆண்டு ஆன்லைன் தரிசன முன்பதிவு முறையில் செய்யப்பட்ட நவீன மாற்றங்கள் காரணமாக பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு 4,800 பக்தர்களுக்கு குறையாமல் தரிசனம் செய்கிறார்கள். 18-ம் படியில் பணியமர்த்தப்பட்டுள்ள போலீசார் 15 நிமிடத்திற்கு ஒருமுறை மாற்றப்படுகிறார்கள். அதாவது 15 நிமிடங்களுக்கு பின் ஓய்வு அளிக்கப்படுகிறது. இதனால் 18-ம் படியில் அதிக அளவில் பக்தர்கள் ஏற்றி விடப்படுகிறார்கள்.

    சிரமமின்றி தரிசனம் செய்ய பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு வலியநடை பந்தலில் தனிவழி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் தரிசனம் முடிந்து மலை இறங்கும் பக்தர்களின் சிரமங்களை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சபரிமலையில் கடந்த ஆண்டு வரை தனியார் நிறுவனத்திடம் இருந்து களபாபிஷேகத்திற்கான சந்தனம் வாங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு சந்தனத்தை அரைக்க 3 அரவை எந்திரங்களை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கி உள்ளார். அந்த எந்திரங்கள் மூலம் தற்போது சந்தனம் அரைக்கப்பட்டு களபாபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த சந்தனம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    சபரிமலையில் ஏற்கனவே 40 லட்சம் டின் அரவணை இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர தற்போது தினமும் 1 லட்சம் டின் அரவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருவெண்காடு, திருக்கழுகுன்றம், திருவாடானை, திருக்கடவூர் கோவில்களில் 1008 சங்காபிஷேகம்.
    • சிவன் கோவில்களில் காலை சோமவார அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு கார்த்திகை-3 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திருதியை இரவு 10.49 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: மிருகசீரிஷம் இரவு 7.56 மணி வரை பிறகு திருவாதிரை

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவெண்காடு, திருக்கழுகுன்றம், திருவாடானை, திருக்கடவூர் கோவில்களில் 1008 சங்காபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்தியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவில்களில் காலை சோமவார அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ண நாதர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-நற்பலன்

    மிதுனம்-வெற்றி

    கடகம்-மகிழ்ச்சி

    சிம்மம்-உழைப்பு

    கன்னி-வரவு

    துலாம்- உறுதி

    விருச்சிகம்-உண்மை

    தனுசு- வியப்பு

    மகரம்-பெருமை

    கும்பம்-ஆக்கம்

    மீனம்-பயணம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதன் முதலில் பரசுராமரே சாஸ்தா கோவிலை எழுப்பினார்.
    • சபரிமலையில் மகர சங்கராந்தி தரிசனம் சிறப்பு.

    1. சபரிமலையில் முதன் முதலில் பரசுராமரே சாஸ்தா கோவிலை எழுப்பினார். அப்போது தர்மசாஸ்தாவின் விக்ரகத்தை அவர் அங்கே பிரதிஷ்டை செய்தார்.

    2. அவதார நோக்கமான மகிஷி சம்ஹாரம் முடிந்ததும், சின் முத்திரைக்காட்டி யோக பட்டம் தரித்து தவக்கோலத்தில் அமர்ந்த ஐயப்பன், தவத்தின் நிறைவாக, பரசுராமர் அமைத்த தர்மசாஸ்தா விக்ரகத்தில் ஐக்கியமானார். அதன் பிறகே சின்முத்திரை காட்டி யோக பட்டம் தரித்து, அமர்ந்த நிலையில் உள்ள ஐயப்பனின் வடிவம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.


    3. ஆதிகாலத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்த சாஸ்தாவின் வடிவிற்கு ஆண்டுக்கு ஒரு முறை மகர சங்கராந்தி, அன்று மட்டுமே வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஐயப்பன் வடிவம் அமைந்த பிறகே மாத பூஜைகள், மண்டல பூஜைகள் மகரவிளக்கு பூஜைகள் தொடங்கப்பட்டன. அதனால்தான் இன்று சபரி மலையில் மகர சங்கராந்தி தரிசனம் சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

    4. ஐயப்பன் என்றதும் சின்முத்திரை காட்டி, யோகபட்டம் தரித்து அமர்ந்திருக்கும் வடிவமே பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் அவர் நான்கு விதமான ஆசனங்களில் அமர்ந்து, நான்கு வகையான முத்திரைகளைக் காட்டுபவர் என்கிறது பூதநாததோ பாக்யானம், தியானபிந்து ஆசனத்தில் அபய சின்முத்திரை தரித்தும், கிருக நாரீயபீட ஆசனத்தில் யோகப் பிராண முத்திரையுடனும், குதபாத சிரேஷ்டாசனத்தில் அபான பந்த முத்திரையோடும் அஷ்டகோண சாஸ்தா பீடத்தில் யோக பத்ராசனத்திலும் வீற்றிருந்து அருள்கிறார் ஐயப்பன்.

    5. ஹரிஹர புத்ரனாகிய மணிகண்டனுக்கு ஐயப்பன் என்ற பெயர் வந்ததன் காரணமாக ஒரு வரலாறு கூறப்படுகிறது. பந்தளராஜன் மகனாக வளர்ந்த மணிகண்டன், அவதார நோக்கம் முடித்து, பந்தளராஜனை விட்டுப் பிரிய வேண்டிய நேரம் வந்தது.

    அந்த சமயத்தில் கலங்கி நின்ற தனது வளர்ப்புத் தந்தையிடம் நான் இனி வனத்தில் வாசம் செய்வேன். என்னை காண வேண்டும் என நீங்கள் நினைத்தால், கல்லும் முள்ளும் நிறைந்த காட்டு வழியே வர வேண்டும். வழி தெரியாமல் நீங்கள் திணறாமல் இருக்க கருடன் உங்களுக்கு வழிகாட்டுவான் என்று சொல்லி விடை பெற்றுச் சென்றார்.

    தன் மைந்தன் மணிகண்டனைப் பார்க்க சென்ற போதெல்லாம் பந்தளராஜன் காடு, மலைக்களைக் கடக்க மிகவும் சிரமப்பட்டார். அப்போது ஐயனே, அப்பனே என்றெல்லாம் அவர் சொன்ன வார்த்தைகளே இணைந்து ஐயன், அப்பன் ஐயப்பன் என்றாகி விட்டதாகச் சொல்லப்படுகிறது.


    வழிநடை சரணங்கள்

    சுவாமியே ஐயப்போ- ஐயப்போ சுவாமியே

    பகவானே பகவதியே- பகவதியே பகவானே

    தேவனே தேவியே- தேவியே தேவனே

    வில்லாளி வீரனே- வீரமணிகண்டனே

    வீரமணிகண்டனே- வில்லாளி வீரனே

    பகவான் சரணம்- பகவதி சரணம்

    பகவதி சரணம்- பகவான் சரணம்

    தேவன் சரணம்- தேவி சரணம்

    தேவி சரணம்- தேவன் சரணம்

    பள்ளிக்கட்டு சபரிமலைக்கு- சபரிமலைக்கு பள்ளிக்கட்டு

    பாத பலம்தா- தேக பலம்தா

    தேக பலம்தா- பாத பலம்தா

    கல்லும் முள்ளும்- காலுக்கு மெத்தை

    காலுக்கு மெத்தை - கல்லும் முள்ளும்

    குண்டும் குழியும் - கண்ணுக்கு வெளிச்சம்

    கண்ணுக்கு வெளிச்சம்- குண்டும் குழியும்

    தாங்கி விடப்பா- ஏந்தி விடப்பா

    ஏந்தி விடப்பா- தாங்கி விடப்பா

    தூக்கி விடப்பா- ஏற்றம் கடினம்

    ஏற்றம் கடினம்- தூக்கி விடப்பா

    சாமி பாதம் ஐயன் பாதம்- ஐயன் பாதம் சாமி பாதம்

    யாரைக்காண- சாமியை காண

    சாமியை கண்டால்- மோட்சம் கிட்டும்

    கற்பூர ஜோதி- சுவாமிக்கே

    நெய் அபிஷேகம்- சுவாமிக்கே

    பன்னீர் அபிஷேகம்- சுவாமிக்கே

    முத்திரைத் தேங்காய்- சுவாமிக்கே

    காணிப்பொன்னும் சாமிக்கே- வெற்றிலை அடக்கம் சாமிக்கே

    கதலிப்பழம் சாமிக்கே- விபூதி அபிஷேகம் சாமிக்கே

    கட்டுக்கட்டு- இருமுடிக்கட்டு

    யாரோட கட்டு- சாமியோட கட்டு

    சாமிமாரே- ஐயப்பமாரே

    ஐயப்பமாரே- சாமிமாரே

    பம்பா வாசா- பந்தள ராஜா

    பந்தள ராஜா- பம்பா வாசா

    சாமி அப்பா ஐயப்பா- சரணம் அப்பா ஐயப்பா

    வாரோம் அப்பா ஐயப்பா- வந்தோம் அப்பா ஐயப்பா

    பந்தள ராஜா ஐயப்பா- பம்பா வாசா ஐயப்பா

    கரிமலை வாசா ஐயப்பா- கலியுக வரதா ஐயப்பா

    • எல்லா விரதங்களிலும், பிரம்மச்சாரிய விரதம் முக்கியமான தாகும்.
    • போதையூட்டும் பொருட்கள், புகைப்பிடித்தல் முதலியவற்றை தவிர்க்க வேண்டும்.

    1. ஐயப்ப பக்தர்கள் இயன்றவரை கார்த்திகைத் திங்கள் முதல் நாள் மாலை அணிந்து கொள்வது சாலச்சிறந்தது. அன்று நாள், கிழமை பார்க்க வேண்டியதில்லை. அதற்குப் பின் மாலை அணிபவர்கள் கார்த்திகை 19 தேதிக்குள் ஏதாவதொரு நல்ல நாளில் மாலை அணியலாம். எப்படியும் சன்னி தானத்திற்கு செல்லும் தினத்திற்கு முன்னதாக குறைந்தது ஒரு மண்டலம் (41 நாட்கள்) விரதம் இருக்கும்படி பார்த்து அதற்குள் மாலை அணிந்து கொள்ளவேண்டும்.


    2. துளசிமணி அல்லது உருத்திராட்சமாலை 108 அல்லது 54 மணிகள் உள்ளதாகப் பார்த்து வாங்கி அத்துடன் ஐயப்பன் திருவுருவப்பதக்கம் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும். அத்துடன் துணை மாலை ஒன்றும் அணிந்து கொள்வது நல்லது.

    3. பலமுறை விரதமிருந்து சபரிமலை சென்று வந்து பக்குவமடைந்த பழமலை ஐயப்பன்மார் ஒருவரைக் குருவாக ஏற்று திருவிளக்கு முன்பாகவோ, திருக்கோவில்களிலோ குருநாதரை வணங்கி அவர் திருக்கரங்களால் மாலை அணிந்து கொள்ள வேண்டும், அல்லது தாய், தந்தையர் மூலமாகவோ, இறைவன் திருவடிகளில் வைத்து எடுக்கப்பெற்ற மாலையினையோ அணிந்து கொள்ளலாம். மாலை அணிந்து கொண்டவுடன், குருநாதருக்குத் தங்களால் இயன்ற தட்சிணையைக் கொடுத்து அடி வணங்கி ஆசிபெற வேண்டும்.

    ஐயப்பனாக மாலை தரித்த நிமிடத்தில் இருந்து குருசாமியை முழுமனதுடன் ஏற்று அவர்தம் மொழிகளை தேவ வாக்காக மதித்து மனக்கட்டுப்பாட்டுடன் பணிந்து நடந்துக்கொண்டு பயணத்தை இனிதாக்க ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.

    4. நீலம், கருப்பு, காவி, பச்சை, மஞ்சள் இவற்றுள் ஏதாவது ஒரு நிறத்தில் உடைகள் அணிய வேண்டும். தங்கள் கடமைகளை ஆற்றுகின்ற சமயங்களில் இயலாவிட்டாலும் பஜனைகளில் கலந்து கொள்ளும்போதும், யாத்திரையின்போது முழுவதும் கண்டிப்பாக வர்ண உடை அணிய வேண்டியது அவசியம்.

    5. மலைக்குச் செல்ல கருதி, மாலை அணிய விரும்பும் பக்தரை, தாய், தந்தை, மனைவி, மக்கள் முதலியோர் தடுத்தல் கூடாது. எவ்வித அச்சமுமில்லாமல் தர்மசாஸ்தாவிடம் முழு பொறுப்பினையும் வைத்து, முகமலர்ச்சியுடன் அனுப்பி வைக்க வேண்டும்.

    6. மேற்கொள்ள வேண்டிய விரதங்களில் மிகவும் ஒழுங்குடன் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியது பிரம்மச்சாரிய விரதமாகும். மனம், வாக்கு, செயல் என்ற மூவகைகளிலும் காம இச்சையை அறவே நீக்கவேண்டும்.

    7. காலை, மாலை இருவேளைகளிலும் குளிர்ந்த நீரில் தவறாமல் நீராடி ஐயப்பன் திருவுருவப் படத்தை வைத்து வணங்குதல் வேண்டும். தினமும் ஆலய வழிபாடும், பஜனைகளில் கலந்து கொண்டு வாய்விட்டுக்கூவி சரணம் விளித்து ஐயப்பன் புகழ்பாடி மகிழ்தலும் பேரின்பம் பயக்கும்.


    8. படுக்கை, தலையணைகளை நீக்கி, தன் சிறு துண்டை மட்டும் தரையில் விரித்து படுக்கவேண்டும். பகல் நேரத்தில் தூங்குவதைத் தவிர்க்கவேண்டும்.

    9. களவு, சூதாடுதல், பொய், திரைப்படங்கள், விளையாட்டு, வேடிக்கைகள், உல்லாசப்பயணங்கள், போதையூட்டும் பொருட்கள், புகைப்பிடித்தல் முதலியவற்றை தவிர்க்க வேண்டும்.

    10. எண்ணெய் தேய்த்து குளிப்பது, சவரம் செய்து கொள்வது, காலணிகள், குடை உபயோகிப்பது முதலியவற்றைக் தவிர்க்கவேண்டும்.

    11. மற்றவர்களிடம் பேசும் பொழுது, 'சாமி சரணம்' எனத் தொடங்கி, பின் விடை பெறும்பொழுதும் 'சாமிசரணம்' எனச் சொல்ல வேண்டும்.

    12. விரத காலத்தில் அசைவ உணவு அருந்துவது மாபெரும் தவறாகும். எனவே இயன்றவரை வீட்டிலேயே தூய்மையாகத் தயாரித்து சைவ உணவே உண்ண வேண்டும். மாலை தரித்த ஐயப்பன்மார் வீட்டைத் தவிர மற்றவர்கள் வீட்டில் எக்காரணத்தினாலும் உணவு அருந்தக்கூடாது.

    13. பக்தர்கள் மாலை தரித்த பிறகு சந்திக்கின்ற ஆண்களை ஐயப்பா என்றும், பெண்களை மாளிகைப்புறம் என்றும், சிறுவர்களை மணிகண்டன், சிறுமிகளை கொச்சி என்றும் குறிப்பிட்டு அழைக்கவேண்டும்.

    14. சபரிமலை செல்லும் பக்தர்கள் புதிதாக பயணம் வர விரும்புகிறவர்களிடம் 'நான் பத்திரமாக கூட்டிக் கொண்டு போய் வருகிறேன். என்னோடு தைரியமாக வரலாம்' என்று சொல்லக்கூடாது.

    பயணம் புறப்படும் பொழுது 'போய் வருகிறேன்' என்று யாரிடமும் சொல்லிக் கொள்ளக்கூடாது. எல்லாப் பொறுப்பினையும் ஐயப்பனிடம் ஒப்படைத்து அவன் திருவடிகளே சரணம் என்ற பக்தி உணர்வுடன் சரணம் விளித்துப் புறப்பட வேண்டும்.

    15. மாலையணிந்த ஐயப்பமார்கள் தங்களது கடமைக்கு இடையூறு இல்லாமல் சுறு சுறுப்புடன் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்யவேண்டும்.

    16. மாலை அணிந்தது முதல் பக்தர்கள் நாள்தோறும் 108 சரணங்கள் சொல்லி காலை, மாலை வழிபட்டு, துளசி, கற்கண்டு, நாட்டு சர்க்கரை, பால் இவற்றுள் ஏதாவது ஒன்றை சிறிதளவு வைத்து நைவேத்தியம் செய்து வணங்கவேண்டும்.


    17. யாத்திரை புறப்படுவதற்கு சில நாட்கள் முன்னதாக கன்னி பூஜை நடத்த வேண்டும். எல்லா ஐயப்ப பக்தர்களும் தங்கள் வீட்டிலோ அல்லது குருசாமி மற்றும் ஐயப்பன் பக்தர்கள் வீட்டிலோ, பொது இடங்களிலோ சற்று விரிவான முறையில் கூட்டு வழிபாடு (பஜனை) நடத்தி எல்லோருக்கும் பிரசாதம் வழங்கி அருள் பெறுவது சாலச் சிறந்தது. ஐயப்பமார் ஒருவருக்காவது அன்னமிடுதல் மிக்க அருள் பாலிக்கும்.

    18. மரணம் போன்ற துக்க காரியங்கள் எதிலும் ஐயப்ப மார்களும் அவர்கள் குடும்பத்தினரும் கலந்துக் கொள்ளக் கூடாது. தவிர்க்க முடியாத நெருங்கிய உறவில், மரணம் நேரிட்டு கலந்து கொள்ள வேண்டிய திருந்தால் தான் அணிந்த மாலையைக் கழற்றி ஐயப்பன் படத்தில் மாட்டிய பிறகு தான் கலந்துகொள்ள வேண்டும். மாலையைக் கழற்ற நேர்ந்தால் மீண்டும் உடனே அணிந்து கொண்டு யாத்திரை செல்ல முற்படக்கூடாது. ஐயப்பன் திருவருளை வேண்டி மறுவருடம் சென்று வரவேண்டும்.

    19. எல்லா விரதங்களிலும், பிரம்மச்சாரிய விரதம் முக்கியமான தாகும். எனவே எந்த பெண்களைக் கண்டாலும் தாயென்றே கருத வேண்டும். மாதவிலக்கான பெண்களை காணக்கூடாது. தவறுதலாகக் காண நேர்ந்தால் உடனே நீராடி ஐயப்பனை வழிபட வேண்டும். பெண்கள் ருதுமங்கள சடங்கு விழாவிற்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ சென்று கலந்து கொள்ளக் கூடாது.


    20. இருமுடிக்கட்டு பூஜையை தன் வீட்டிலோ, இயன்ற தட்சிணை கொடுத்து, குருவின் கரங்களால் இருமுடியைத் தலையில் ஏற்று, வீதிக்கு வந்ததும் வாசற்படியில் விடலைத் தேங்காய் உடைத்து ஐயப்பன் சரண கோஷத்துடன் பின்னால் திரும்பிப் பார்க்காமல் ஒரே நோக்கத்துடன் பயணம் தொடர வேண்டும். யாரிடமும் போய் வருகிறேன் என்று சொல்லக் கூடாது.

    22. கன்னி ஐயப்பமார்கள் யாத்திரை புறப்பட்ட நேரத்தில் இருந்து ஐயப்பன் சன்னிதானம் செல்லும் வரை அவர்களாக இருமுடியை தலையில் இருந்து இறக்கி வைக்கவோ, ஏற்றிக் கொள்ளவோ கூடாது. குருநாதர் அல்லது மற்ற பழமலை ஐயப்பன்மாரைக் கொண்டு ஏற்றவோ, இறக்கவோ வேண்டும்.

    23. 12 வயதுக்கு கீழ்பட்ட சிறுமிகளும் ருதுகாலம் நின்ற வயதான பெண்களும் மட்டுமே சபரி யாத்திரையில் கலந்து கொள்ளலாம்.

    24. யாத்திரை வழியில் அடர்ந்த வனங்களில் காட்டு யானை, புலி, கரடி முதலான விலங்குகள் இருக்கும். எனவே பக்தர்கள் கூட்டமாக சரணம் சொல்லிக்கொண்டே செல்ல வேண்டும். இரவு நேரங்களில் காட்டிற்குள் மலஜலத்திற்காக தனியே அதிக தூரம் செல்லக்கூடாது. சரணம் விளித்தல், சங்கு ஒலித்தல், வெடி வைத்தல் பாதுகாப்புக்கு சிறந்த வழிகளாகும்.


    25. பம்பை நதியில் நீராடும்பொழுது மறைந்த நம் முன்னோர்களுக்கு ஈமக்கடன்கள் செய்து முன்னோர்களின் ஆத்மா சாந்தி பெற வழிவகுக்க வேண்டும்.

    26. பம்பையில் சக்தி பூஜையின்போது ஐயப்பமார்கள் சமைக்கும் அடுப்பில் இருந்து சிறிதளவு சாம்பல் சேகரித்து சன்னதி ஆழியில் இருந்து எடுக்கப்பெற்ற சாம்பலை அத்துடன் கலந்து தயாரிக்கப்பெறுவதுதான் சபரிமலை பஸ்பம், இது மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

    27. இருமுடியில் ஐயப்பனுக்காகக் கொண்டு செல்லும் நெய்த்தேங்காயை சன்னிதானத்தில் உடைத்து, அபிஷேகம் செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் இந்த நெய்யையும், விபூதி பிரசாதங்களையும் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.

    28. ஐயப்பனுக்கு காணிக்கையாக சுற்றத்தார்களும், மற்றவர்களும் கொடுத்தனுப்பும் காணிக்கையை சன்னிதானத்தில் செலுத்தி, அவர்களுக்கு ஐயப்பன் திருவருள் கிடைக்க வேண்டிக்கொள்ள வேண்டும்.

    29. குருசாமிக்கு தட்சணை கொடுக்க வேண்டிய சமயங்களில் எல்லாம் ஐயப்பமார்கள் தாங்கள் விரும்பிய வசதிக்கேற்றவாறு கொடுத்து குருவின் அருளைப் பெறலாம். இதில் எந்தவித நிபந்தனையும் கிடையாது. ஐயப்பமார்கள் கொடுக்கும் காணிக்கை எவ்வளவாக இருந்தாலும் அதை மன மகிழ்வுடன் பெரும்பொருளாக ஏற்று குருவின் குருவான ஐயப்பனுக்கே செலுத்தி பேரருள் பெற்றுய்வது குருமார்களுக்குச் சாலச் சிறந்ததாகும்.

    30. ஐயப்பன்மார்கள் எல்லோரும், குறிப்பாக கன்னி ஐயப்பன் மார்கள் பெரிய பாதையில் (அழுதை வழி) சென்று வருவது மிகுந்த பயன் விளைவிக்கும். ஆனால் சிலர் தங்கள் தொழில், கடமை சூழ்நிலை கருதி எரிமேலியில் இருந்து சாலைக்காயம் வழியாகவும், சிலர் வண்டிப்பெரியாறு வழியாகவும் சபரிமலை செய்கிறார்கள்.

    என்றாலும் பெரிய பாதையில் செல்லும் பொழுது மலைகளில் விளையும் பல மூலிகைகளின் சக்தி கலந்த காற்றினை பெறுவதாலும், பல மூலிகைகளை கலந்த ஆற்று நீரில் குளிப்பதால் உடல்நலம் ஏற்படுவதாலும் எழில்மிக்க இயற்கைக்காட்சிகளைக் கண்டுகளிப்பதால் உள்ளம் பூரிப்பதாலும், பேரின்பமும் பெருநலமும் அடைகிறோம். நீண்டவழிப்பயணத்தில் ஐயப்பன் சரணமொழி அதிகம் சொல்வதால் பகவானின் திருநாம உச்சரிப்பு மிகுந்து பக்தி உணர்ச்சி வளர்கிறது.

    31. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும் ஐயப்பனின் திருவருள் பிரசாதக் கட்டினை தலையில் ஏந்தியபடி, வாயிற்படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டிற்குள் நுழைய வேண்டும். வழிபாட்டு அறையில் கற்பூர ஆர்த்தியோடு கட்டினை அவிழ்த்து பூஜை செய்து பிரசாதங்களை எல்லோருக்கும் வழங்க வேண்டும்.

    32. யாத்திரை இனிது நிறைவேறியதும் குருநாதர் மூலம் மாலையைக் கழற்றி ஐயப்பன் திருவுருவப்படத்திற்கு அணிவித்து விட்டு விரதம் பூர்த்தி செய்து கொள்ளவேண்டும்.

    • திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம்.
    • சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு கார்த்திகை-2 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவிதியை நள்ளிரவு 12.04 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம்: ரோகிணி இரவு 8.33 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சன அலங்கார சேவை. மன்னார்குடி, ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-உழைப்பு

    மிதுனம்-உண்மை

    கடகம்-அன்பு

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-ஆக்கம்

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-நிறைவு

    தனுசு- புகழ்

    மகரம்-இன்பம்

    கும்பம்-பயணம்

    மீனம்-பணிவு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாலை அணிபவர்கள் குறைந்தது ஒரு மண்டலம் அல்லது 41 நாட்கள் விரதம் மேற்கொள்வார்கள்.
    • மகர ஜோதி தரிசனம் செல்பவர்கள் 60 நாட்கள் விரதம் இருப்பார்கள்.

    பக்தி மணம் வீசும் மகத்துவம் வாய்ந்த கார்த்திகை மாதம் இன்று பிறந்தது. அதுவும், பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமையில் கார்த்திகை பிறந்ததால் கூடுதல் சிறப்பை பெற்றுள்ளது. இனி 60 நாட்கள் தமிழகத்தில் 'சாமியே சரணம் ஐயப்பா' என்ற சரண கோஷம் ஒலிக்க உள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை 1-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மண்டல பூஜை, மகர விளக்கு தரிசனத்துக்காக மாலை அணிந்து செல்கிறார்கள். மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து சென்று வருகின்றனர்.

    அந்த வகையில் தமிழகத்தில் பெரும்பாலான பக்தர்கள் இன்று முதல் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டுள்ளர். தங்களின் இஷ்ட தெய்வங்களை வணங்கி அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று குருசாமி, கோவில் குருக்கள் முன்னிலையில் பயபக்தியுடன் சரண கோஷம் முழங்க மாலைகளை அணிந்து கொண்டனர்.

    மாலை அணிபவர்கள் குறைந்தது ஒரு மண்டலம் அல்லது 41 நாட்கள் விரதம் மேற்கொள்வார்கள். மகர ஜோதி தரிசனம் செல்பவர்கள் 60 நாட்கள் விரதம் இருப்பார்கள். முதல் முறையாக சபரிமலைக்கு செல்பவர்கள் கன்னி சாமியாக கருதப்படுவார்கள். கார்த்திகை முதல் நாளான இன்று ஏராளமானவர்கள் முதல் முறையாக மாலை அணிந்தனர்.

    மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்காக அண்ணாநகர் ஐயப்பன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கும், கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

    பக்தர்கள் எந்தவிதமான சிரமமும் இன்றி, மாலை அணிந்து செல்வதற்கு ஐயப்பன் கோவில்களில் தனி வரிசைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அம்பத்தூர், மாதவரம், மூலக்கடை உள்பட பல்வேறு இடங்களில் உள்ள ஐயப்பன் கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    அதனைத்தொடர்ந்து கோவில்களில் விஷேச பூஜைகள் நடத்தப்படுகிறது. தொடர்ந்து கார்த்திகை மாதம் முழுவதும் பஜனைகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே, விரதத்துக்கான பூஜை பொருட்கள் விற்பனை சென்னையில் நேற்று களைகட்டியது. துளசி, சந்தன, மணி மாலைகளை ஐயப்ப பக்தர்கள் வாங்கி சென்றனர். தேங்காய், பழம், சந்தனம், குங்குமம் மற்றும் இருமுடிக்கான பை விற்பனையும் அமோகமாக இருந்தது.

    ஐயப்பன் உருவம் பொறித்த டாலர்கள், சிவப்பு, மஞ்சள், பச்சை, கருப்பு, நீலம், காவி போன்ற வண்ண வேட்டிகளின் விற்பனையும் களைகட்டியது. சென்னை மயிலாப்பூர், புரசைவாக்கம், தியாகராயநகர், வண்ணாரப்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் ஏராளமானவர்கள் பூஜைக்குரிய பொருட்களை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது.

    ×