என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • சபரிமலை அய்யப்பன் மனித வாழ்வைத் துறந்து சபரிமலையில் ஐக்கியமானார்.
    • அவரைக்காண வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னர் அடிக்கடி செல்வார்.

    சபரிமலை அய்யப்பன் மனித வாழ்வைத் துறந்து சபரிமலையில் ஐக்கியமானார்.

    அவரைக்காண வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னர் அடிக்கடி செல்வார்.

    செல்லும் பாதை படு மோசமாக இருக்கும். அவரது இருப்பிடத்தை அடைய பல நாட்களாகும்.

    மகனைக் காண செல்லும் தந்தை பண்டங்களை கொண்டு செல்வார்.

    நீண்ட நாட்கள் செல்ல வேண்டும் என்பதால் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக நெய்ப்பண்டங்களை கொண்டு செல்வார்.

    நெய்ப்பண்டம் அதிக நாள் கெட்டுப்போகாமல் இருக்கும்.

    இந்த வழக்கத்தின் காரணமாகத்தான் பிற்காலத்தில் அய்யப்பனுக்கு நெய் தேங்காய் கொண்டு போகும் பழக்கம் ஏற்பட்டது.

    • சபரிமலையில் ஓரிடத்திற்கு ஆரியங்காவு என்று பெயர். ஆரியங்காவு என்றால் ஆரியனின் காடு என்று பொருள்.
    • சாஸ்தா என்பதே தமிழில் சாத்தன் என்பது. தமிழ்நாட்டில் சாத்தனூர் என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன.

    ஐயப்பன் மதங்களுக்கு அப்பாற்பட்ட கடவுளாக பாவிக்க படுகிறார்.

    இன்றும் ஐயப்பனின் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் எருமேலியிலுள்ள முன்னாளில் கொள்ளைக்காரனாக இருந்து அய்யப்பனின் அருளால் திருந்தி அவரது நண்பராக மாறிய வாவரின் தர்காவிற்கு சென்ற பின்னரே ஐயப்பனை தரிசிக்கின்றனர்.

    தமிழ்நாட்டில் ஐயர் (குருக்கள்) பூஜிக்காத கிராமக் கோவில்களில் உள்ள கடவுள்தான் ஐயன் அய்யனார்.

    சபரிமலையில் ஓரிடத்திற்கு ஆரியங்காவு என்று பெயர். ஆரியங்காவு என்றால் ஆரியனின் காடு என்று பொருள்.

    சாஸ்தா என்பதே தமிழில் சாத்தன் என்பது. தமிழ்நாட்டில் சாத்தனூர் என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன.

    அங்கெல்லாம் சாஸ்தாதான் முக்கிய தெய்வமாக விளங்குகிறார். தமிழ்நாட்டில் கிராமத்துக்கு கிராமம் ஐயனார் கோவில் உள்ளது.

    ஆனால் கேரளத்தில் கிராம தேவதையாக இல்லாமல் வேறு விதத்தில் ஐயப்ப வழிபாடு வழக்கிலுள்ளது.

    • அவ்வாறு சிவபெருமானுக்காக மோகினி மீண்டும் அவதரித்த பொழுது சிவனும் மோகனியும் ஒன்று சேர்ந்து பிறந்தவரே ஐயப்பன் என்பது ஒரு புராணம்.
    • இதன் காரணமாகவே ஐயப்பனுக்கு ஹரி (விஷ்ணு) ஹரன் (சிவன்) என்ற பெயரும் உண்டு.

    பாற்கடல் அமுதம் கடைந்து அதை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு- பகிர்ந்தளித்த லீலையின்போது சிவபெருமான் ஆழந்த யோகத்தில் இருந்ததால் சிவபெருமானால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலாமல் போனது.

    பின்னர் யோகம் களைந்து எழுந்த பொழுது நடந்த திருவிளையாடல்களை அறிந்த சிவபெருமான் விஷ்ணு வின் அந்த மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார்.

    அவ்வாறு சிவபெருமானுக்காக மோகினி மீண்டும் அவதரித்த பொழுது சிவனும் மோகனியும் ஒன்று சேர்ந்து பிறந்தவரே ஐயப்பன் என்பது ஒரு புராணம்.

    இதன் காரணமாகவே ஐயப்பனுக்கு ஹரி (விஷ்ணு) ஹரன் (சிவன்) என்ற பெயரும் உண்டு.

    ஐயன் என்பது ஆர்ய என்பதின் திரிபு. ஆர்ய என்றால் மதிப்புக்குரிய என்று பொருள்.

    • ஐயப்பன் வழிபாடு கேரளா, தமிழ்நாடு, இலங்கை ஆகிய இடங்களில் முதன்மை பெறுகிறது.
    • சபரிமலை ஐயப்பனின் முக்கிய வழிபாட்டுத் தலம்.

    ஐயப்பன் வழிபாடு கேரளா, தமிழ்நாடு, இலங்கை ஆகிய இடங்களில் முதன்மை பெறுகிறது.

    சபரிமலை ஐயப்பனின் முக்கிய வழிபாட்டுத் தலம்.

    தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் அய்யனார் வழிபாடும் ஐய்யப்பன் வழிபாடும் ஒருங்கே சேர்ந்து பார்க்கப்பட்டாலும் இரண்டுக்கும்மிடையில் முக்கிய வித்தியாசங்கள் உண்டு.

    ஐய்யப்பன் வழிபாடு கேரளத்தில் இந்து சமய பிராமண முறையை தழுவியது.

    அய்யனார் வழிபாடு தமிழர் மத்தியில் காணப்படும் ஒரு சிறுதெய்வ வழிபாடு ஆகும்.

    அய்யனார் என்பது ஐயப்பனின் பத்து அவதாரங்களில் ஒரு அவதாரமே.

    ஐயப்பனின் வேறு பெயர்கள்

    மணிகண்டன்

    பூதநாதன்

    பூலோகநாதன்

    தர்மசாஸ்தா எருமேலிவாசன்

    ஹரிஹரசுதன்

    ஹரிஹரன்

    கலியுகவரதன்

    கருணாசாகர்

    லட்சுமண பிராணதத்தா

    பந்தளவாசன்

    பம்பாவாசன்

    ராஜசேகரன்

    சபரி

    சபரீஷ்

    சபரீஷ்வரன்

    சபரி கிரீஷ்

    சாஸ்தா

    வீரமணி

    என்பவை எல்லாம் ஐயப்ப கடவுளின் வேறு பெயர்களில் முக்கியமானவைகளாகும்.

    • திருமலையில் மாற்றுமத பிரசாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • திருப்பதி மலையில் பக்தர்கள், தலைவர்கள் அரசியல் பேச்சு பேசக்கூடாது.

    திருப்பதி:

    திருப்பதி தேவஸ்தானத்தின் முதல் அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு கூறியதாவது:-

    திருப்பதி கோவிலில் நேரடி இலவச தரிசனம் செய்ய 20 முதல் 30 மணி நேரம் வரை ஆகிறது. செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்ப உதவியுடன் 2 முதல் 3 மணி நேரத்திற்குள் தரிசனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக நாங்கள் ஒரு சிறப்பு ஆலோசனையை ஏற்பாடு செய்வோம்.

    திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் மாற்று மதத்தினரை விடுவிப்போம். அவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிப்பது பற்றி விவாதிப்போம்.

    அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், நகராட்சி அல்லது பிற துறைகளுக்கு மாற்ற பரிந்துரை செய்வோம். திருமலையில் மாற்றுமத பிரசாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பதி மலையில் பக்தர்கள், தலைவர்கள் அரசியல் பேச்சு பேசக்கூடாது. விதிகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். அன்னப்பிரசாதத்தின் தரத்தை மேம்படுத்துவோம்.

    லட்டு பிரசாதத்திற்கு தரமான நெய் கொள்முதல் செய்ய நிபுணர்கள் கொண்ட குழுவை அமைப்போம்.

    பல மாநிலங்களுக்கு சுற்றுலாத் துறையால் தினசரி ஒதுக்கப்பட்ட 4,000 தரிசன டிக்கெட்டுகளின் ஒதுக்கீட்டை நாங்கள் ரத்து செய்துள்ளோம்.

    இந்த டிக்கெட்டுகளை சிலர் முறைகேடாக பயன்படுத்தியது விஜிலென்ஸ் விசாரணையில் தெரியவந்தது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 62,085 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 21,335 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோவில் உண்டியலில் ரூ.3.78 கோடி காணிக்கை வசூல் ஆனது. சுமார் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • 800 ஆண்டுகள் பழமையான ஆலயமாக கருதப்படுகிறது.
    • மணக்கரையில் வீற்றிருக்கும் இறைவன் என்பதால் மணக்கரைநாதர் என்று அழைக்கின்றனர்.

    கோவில் முகப்புத் தோற்றம்

    தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே உள்ள மணக்கரைநாதர் கோவில், சுமார் 800 ஆண்டுகள் பழமையான ஆலயமாக கருதப்படுகிறது.


    திருமணத் தடை, நவக்கிரக தோஷம் உள்ளவர்கள், இங்குள்ள அனுமனுக்கு வடைமாலை, வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்து பயனடைந்து வருகின்றனர்.

    தென்பாண்டி சீமையை ஆண்டு வந்தான், உக்கிர வழுதி பாண்டியன். அவன் காலத்தில் தாமிரபரணி ஆறு பெருக்கெடுத்து ஓடியது.

    ஒரு முறை தாமிரபரணி ஆற்று நீர், கரைகளை கடந்து ஊருக்குள் நுழைந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களும், படைவீரர்களும் மன்னனிடம் முறையிட்டனர். மன்னனும் தன் வீரர்களுடன் தாமிரபரணி கரையில் முகாமிட்டான்.

    படை வீரர்களையும், பொதுமக்களையும் திரட்டி வந்து, தாமிரபரணியின் கரையை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டான்.

    ஆனால் அவனது முயற்சி பலன் அளிக்கவில்லை. இதனால் நிம்மதியின்றி அலைந்து திரிந்து கொண்டிருந்தான். அவன் மனமோ இறைவன் மீது நாட்டம் கொண்டது.

    ஒரு நாள் மன்னன், தாமிரபரணி கரை ஓரத்தில் லிங்க ரூபத்தில் இறைவனை கண்டான். அந்த லிங்கத்தின் முன்பு மண்டியிட்டான். "தாமிரபரணிக்கு தடைபோட என்னால் இயலவில்லை. ஆனால் இறைவா உன்னால் முடியும்" என லிங்கநாதரை தீர்க்கமாக பற்றிக்கொண்டான்.

    பல நாள் அங்கேயே தங்கினான். தினமும் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து, லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டான்.

    ஒரு நாள் இறைவன் அசரீரியாக பேசினார். "உக்கிரவழுதி! உன் பக்தியை மெச்சுகிறேன். மக்களுக்காக நீ படும் வேதனை என்னை ஈர்த்து விட்டது. தாமிரபரணிக்கு கரை அமைக்கும் முயற்சியை, மீண்டும் ஒரு முறை என்னை நம்பி செய். எம் அருளால் உனது முயற்சி வெற்றியாகும்" என்று அருளினார்.

    மன்னன் அகமகிழ்ந்து, இறைவனை வணங்கி, தன் படை வீரர்களைத் திரட்டி, தாமிரபரணி நதி நீர் ஊருக்குள் நுழையாதபடி கரை அமைக்கும் பணியில் மீண்டும் ஈடுபட்டான்.

    ஊர் முழுக்க தண்டோரா போட்டான். இறைவன் உத்தரவு கிடைத்து விட்டது. இனி என்ன? என ஊர் மக்கள் உற்சாகமாக திரண்டனர்.

    இறைவனும் ஒரு குதிரை வீரனாக மக்களோடு மக்களாக தோன்றினார். பலவகையான படை வீரர்களை உருவாக்கினார். மன்னர் படையோடு சிவபெருமான் படையும் தாமிரபரணி கரையில் திரண்டனர்.

    நதிக்கரையில் மணலால் கரை அமைத்தனர். மிக வேகமாக வேலை நடைபெறுகிறது. மன்னனுக்கு சந்தோஷம். 'நம் மக்களிடம் இவ்வளவு திறமையா?' என எண்ணி மன்னன் வியந்தான்.

    வேலைகள் முடிந்ததும், லிங்கத்தின் முன்னால் வந்த மன்னன் இறைவனுக்கு நன்றி கூறி நின்றான். அப்போது குதிரை வீரனாக இருந்த சிவபெருமான், லிங்கத்துக்குள் சென்று மறைந்தார். அவருடன் வந்த சேனைகளும் மறைந்தன.

    "இதுவரை நமக்கு உதவி செய்தது சிவபெருமானும், அவரின் சேனைகளுமா?" என சிவபெருமானின் அருளை எண்ணி மகிழ்ந்தான் மன்னன்.

    இறைவன் உறைந்த லிங்க ரூபத்துக்கு, ஆகம விதிப்படி கோவில் அமைத்தான். அவருக்கு 'சொக்கநாதர்' என பெயர் வைத்தான். தொடர்ந்து பூஜைகள் செய்து வழிபட்டான். மக்களும் தவறாமல் வெள்ளத்தில் இருந்து தங்களை காப்பாற்ற தங்களுக்காக மண் சுமந்த சிவபெருமானை வணங்கி நின்றனர்.


    மன்னனின் வேண்டுகோளை ஏற்று, சிவனே மணலால் கரை அமைத்ததால் இத்தலம் 'மணல்கரை' எனப்பெயர் பெற்றது. பின் 'மணக்கரை'யாக மருவியது. மணக்கரையில் வீற்றிருக்கும் இறைவன் என்பதால் இவரை 'மணக்கரைநாதர்' என்றும் அழைக்கின்றனர்.

    உக்கிரவழுதி மன்னனால் கட்டப்பட்டு, பிற்காலத்தில் கொங்குராயர் என்ற மன்னரால் விரிவுபடுத்தப்பட்டது. திருமணத் தடை, நவக்கிரக தோஷம் உள்ளவர்கள், இங்குள்ள அனுமனுக்கு வடைமாலை, வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்து பயனடைந்து வருகின்றனர்.

    புதிதாக வீடு கட்டுபவர்கள் சிவபெருமானால் அமைக்கப்பட்ட மணல் கரையில் உள்ள ஆற்று மணலை சிறிது எடுத்துக்கொண்டு போய், தங்களின் புதிய கட்டிடத்துக்குப் பயன்படுத்துகிறார்கள்.

    மணக்கரைநாதர், மீனாட்சி உடனாய சொக்கநாதராக வீற்றிருக்கிறார். இவரை மூன்று வாரங்கள் தொடர்ச்சியாக வந்து வழிபாடு செய்தால், திருமண பாக்கியம் கிடைக்கும். திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.

    மணவாழ்வில் பிரச்சினை இருந்தால் அதுவும் சரியாகும். பிரிந்த தம்பதிகள் ஒன்றுசேரவும் வாய்ப்பு உருவாகும் என்கிறார்கள். மணக்கரையில் இருக்கும் மற்றொரு ஆலயமான மலைபார்வதி அம்மன் கோவில் மிகவும் விசேஷமானது.

    அமைவிடம்

    தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தாலூகாவில் உள்ள மணக்கரைக்கு, திருநெல்வேலி- தூத்துக்குடி சாலையில் உள்ள வல்லநாட்டில் இருந்தும், திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் உள்ள கருங்குளத்தில் இருந்தும் ஆட்டோ மற்றும் பஸ் வசதி உண்டு.

    • கங்கையில் ஏராளமான முதலைகள் வசித்து வந்தன.
    • கங்கை கரையைச் சுற்றிலும் நிறைய இடங்கள் நகரங்களாக வளர்ந்து விட்டது.

    கங்கை நீரை குறைந்தது ஒரு வருடம் அல்லது இரண்டு வருட காலம் வைத்திருந்தால் கூட கெட்டுப் போகாது என்பார்கள். 'தற்போது நாம் காணும் கங்கையின் நீர் மிக அசுத்தமாக உள்ளதே' என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் எழலாம்.


    கங்கை கரையில் மணிகர்னிகா காட், அரிச்சந்திரா காட் போன்ற இடங்களில் பிணங்களை எரித்து, அந்த சாம்பலை அப்படியே கங்கையில் விடுவார்கள்.

    மேலும் சன்னியாசிகள், அகோரிகள் போன்ற சில குறிப்பிட்டவர்களின் உடலை எரிக்காமல் அப்படியே கங்கையில் விட்டுவிடுவார்கள். இதெல்லாம் கங்கை அசுத்தமாவதற்கு காரணமா? என கேட்டால், நிச்சயமாக இல்லை எனச் சொல்லலாம்.

    ஏனெனில் இந்த பழக்கங்கள் எல்லாம் பல்லாயிரம் வருடங்களாக வழக்கத்தில் இருக்கிறது. அப்போதெல்லாம் கங்கை எந்த நிலையிலும் அசுத்தம் ஆகவில்லை. தற்பொழுது சுமார் 50, 60 வருடங்களாக ஏன் இந்த நிலை என சிந்தித்தால், கங்கை கரையைச் சுற்றிலும் நிறைய இடங்கள் நகரங்களாக வளர்ந்து விட்டது.


    கழிவுநீர் அனைத்தையும் கங்கை நீரில் விட ஆரம்பித்துவிட்டனர். ஆலைகளில் இருந்து வரக்கூடிய கழிவுநீரையும் சுத்திகரிக்காமல் அப்படியே கங்கை நீரில் கலக்கவிடுகின்றனர். இதுபோன்ற காரணங்கள்தான், கங்கையின் இப்போதைய அசுத்த நிலைக்கு காரணம்.

    இதற்கு முன் கங்கையில் விடப்பட்ட பிணங்கள், சாம்பல் போன்றவை எப்படி அசுத்தம் ஆகாமல் இருந்தது என்றால், கங்கையில் ஏராளமான முதலைகள் வசித்து வந்தன. சாதாரண முதலைகளுக்கும், கங்கை நீர் முதலைகளுக்கும் உருவத்தில் நிறைய வித்தியாசம் உண்டு.


    இந்த கங்கை நீர் முதலைகள், நதியில் விடப்படும் பிணங்களையும் மற்ற அசுத்தங்களையும் உண்டு வாழ்ந்தது. ஆலைகளின் ரசாயனம் கலந்த நீர் கங்கையில் கலந்ததால் தற்பொழுது இந்த முதலை இனம் கிட்டத்தட்ட முழுவதுமாக அழிந்துவிட்டது.

    • 21-ந்தேதி சஷ்டி விரதம்.
    • 23-ந்தேதி மகாதேவாஷ்டமி.

    19-ந்தேதி (செவ்வாய்)

    * சங்கடஹர சதுர்த்தி,

    * சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.

    * திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    20-ந்தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

    * பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    21-ந்தேதி (வியாழன்)

    * முகூர்த்த நாள்.

    * சஷ்டி விரதம்.

    * சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * மேல்நோக்கு நாள்.

    22-ந்தேதி (வெள்ளி)

    * ராமேஸ்வரம் பர்வத வர்த்தினி அம்மன் நவ சக்தி மண்டபம் எழுந் தருளி தங்கப் பல்லக்கில் பவனி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.

    * திருத்தணி முருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை.

    * கீழ்நோக்கு நாள்.

    23-ந்தேதி (சனி)

    * மகாதேவாஷ்டமி.

    * திருவள்ளூர் வீரராகவ பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள். திருவரங்கம் நம்பெருமான் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்

    * அகோபிலமடம் திருமத் 31-வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்.

    * கீழ்நோக்கு நாள்.

    24-ந்தேதி (ஞாயிறு)

    * கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் அனுமனுக்கு திருமஞ்சனம்.

    * திருவில்லிபுத்தூர், திருமயம் தலங்களில் ஆண்டாள் புறப்பாடு.

    * திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    25-ந்தேதி (திங்கள்)

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்

    • இன்று சங்கடஹர சதுர்த்தி.
    • சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு கார்த்திகை-4 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தி இரவு 10 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம்: திருவாதிரை இரவு 7.15 மணி வரை பிறகு புனர்பூசம்

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சங்கடஹர சதுர்த்தி. பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருச்சி உச்சிப் பிள்ளையார், ஸ்ரீ மாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீ முக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகப் பெருமான் கோவில்களில் கணபதி ஹோமம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் சிறப்பு அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகப் பெருமாள் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-புத்துணர்ச்சி

    ரிஷபம்-ஆரோக்கியம்

    மிதுனம்-சுகம்

    கடகம்-ஆதாயம்

    சிம்மம்-நன்மை

    கன்னி-செலவு

    துலாம்- உழைப்பு

    விருச்சிகம்-அமைதி

    தனுசு- புகழ்

    மகரம்-நலம்

    கும்பம்-உற்சாகம்

    மீனம்-நட்பு

    • ஏற்றம் கடினம்& தூக்கி விடப்பா
    • சாமி பாதம்& அய்யப்பபாதம்

    சுவாமியே&அய்யப்போ

    அய்யப்போ&சுவாமியே

    பகவானே&பகவதியே

    பகவதியே&பகவானே

    தேவனே& தேவியே

    தேவியே& தேவனே

    வில்லாளி வீரனே&வீரமணிகண்டனே

    வீரமணிகண்டனே& வில்லாளி வீரனே

    பகவான் சரணம்& பகவதி சரணம்

    பகவதிசரணம்&பகவான் சரணம்

    தேவன் சரணம்& தேவி சரணம்

    தேவிசரணம்& தேவன் சரணம்

    பள்ளிக்கட்டு& சபரிமலைக்கு

    சபரிமலைக்கு&பள்ளிக்கட்டு

    பாத பலம் தா&தேக பலம் தா

    தேக பலம் தா&பாத பலம் தா

    கல்லும் முள்ளும்&காலுக்கு மெத்தை

    காலுக்கு மெத்தை& கல்லும் முள்ளும்

    தாங்கி விடப்பா&ஏத்தி விடப்பா

    ஏத்தி விடப்பா& தாங்கி விடப்பா

    தூக்கி விடப்பா& ஏற்றம் கடினம்

    ஏற்றம் கடினம்& தூக்கி விடப்பா

    சாமி பாதம்& அய்யப்பபாதம்

    அய்யப்பபாதம்&சாமி பாதம்

    யாரைக் காண&சாமியைக் காண

    சாமியைக் கண்டால்&மோட்சம் கிட்டும்

    கற்பூரஜோதி&சுவாமிக்கே

    சுவாமிக்கே&கற்பூர ஜோதி

    நெய் அபிஷேகம்&சுவாமிக்கே

    சுவாமிக்கே&நெய் அபிஷேகம்.

    சுவாமியே சரணம் ஐயப்பா!

    • சிவன் 96 தத்துவங்களை கடந்தவர். முகருப்பெருமாள் 36 தத்துவங்களை கடந்தவர்.
    • தர்மசாஸ்தா அய்யப்பனோ 18 தத்துவங்களை கடந்தவர். எனவே தான் சபரிமலை கோவிலில் 18 படிகள் அமைந்துள்ளன.

    சிவன் 96 தத்துவங்களை கடந்தவர். முகருப்பெருமாள் 36 தத்துவங்களை கடந்தவர்.

    தர்மசாஸ்தா அய்யப்பனோ 18 தத்துவங்களை கடந்தவர். எனவே தான் சபரிமலை கோவிலில் 18 படிகள் அமைந்துள்ளன.

    முதல் 5 படிகள் இந்திரியங்கள் ஐந்தையும் குறிக்கும்.

    அடுத்த 8 படிகள் அஷ்டமாசித்திகளை குறிக்கும், 14,15,16 வது படிகள் 3 குணங்களையும் குறிக்கும்.

    17 வது படி ஞானத்தையும்,18 வது படி அஞ்ஞானத்தையும் குறிக்கிறது.

    புலன் ஐந்து,பொறி ஐந்து, பிராணன் ஐந்து,மனம் ஒன்று,புத்தி ஒன்று, ஆலங்காரம் ஒன்று ஆக மொத்தம் பதினெட்டு.

    இவைகளை கடந்து கடவுளை காண வேண்டும் என்ற கருத்தின் படியே 18 படிகளும் அமைந்துள்ளது.

    • காட்டுப்பாதையில் சரண கோஷம் நமக்கு ஒரு பாதுகாப்பு.
    • படிகள் எற ஏற அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்து கொண்டே இருப்பார்கள் என்பது பலரும் அனுபவித்த உண்மை.

    சபரிமலை என்றதும் "சாமியே சரணம் அய்யப்போ" என்ற சரண கோஷம் தான் காதுகளில் பாயும் மகத்துவம் மிக்க இந்த சரண கோஷத்தில் "ச" என்ற எழுத்து விரோதிகளை அழிக்கக்கூடியது"ர" என்ற உச்சரிப்பு ஞானம் தர வல்லது "ண" என்ற எழுத்து சாந்தம் அளிப்பது "சுவாமியே சரணம்" என்று அடி வயிற்றில் இருந்து நாம் எழுப்பும் ஒலியானது சக்தி, ஞானம், சாந்தம் ஆகிய மூன்றும் தருகிறது.

    மேலும் சம் சரணாகதி கர்ம வினைகளையும் போக்கி விடும் உக்கிரமாக சரண கோஷம் எழுப்பும் போது காட்டில் உள்ள விலங்குகள் பயந்து ஓடும்.

    காட்டுப்பாதையில் சரண கோஷம் நமக்கு ஒரு பாதுகாப்பு.

    படி ஏற... படி ஏற... வாழ்வு உயருதய்யா!

    அய்யப்ப பக்தர்கள் மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரத முறைகளை நெறியாகவும், முறையாகவும் கடைபிடித்து "தான்" என்னும் அகங்காரத்தை விட்டொழித்து இறைவனிடம் முழுநம்பிக்கை வைத்து, முழு சரணாகதி அடைந்து ஒரு முகமாக வழிபட்டால் இறைவனின் அருள் காடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும்.

    படிகள் எற ஏற அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்து கொண்டே இருப்பார்கள் என்பது பலரும் அனுபவித்த உண்மை.

    ×