என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

ஐயப்ப புராணம்
- அவ்வாறு சிவபெருமானுக்காக மோகினி மீண்டும் அவதரித்த பொழுது சிவனும் மோகனியும் ஒன்று சேர்ந்து பிறந்தவரே ஐயப்பன் என்பது ஒரு புராணம்.
- இதன் காரணமாகவே ஐயப்பனுக்கு ஹரி (விஷ்ணு) ஹரன் (சிவன்) என்ற பெயரும் உண்டு.
பாற்கடல் அமுதம் கடைந்து அதை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு- பகிர்ந்தளித்த லீலையின்போது சிவபெருமான் ஆழந்த யோகத்தில் இருந்ததால் சிவபெருமானால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலாமல் போனது.
பின்னர் யோகம் களைந்து எழுந்த பொழுது நடந்த திருவிளையாடல்களை அறிந்த சிவபெருமான் விஷ்ணு வின் அந்த மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார்.
அவ்வாறு சிவபெருமானுக்காக மோகினி மீண்டும் அவதரித்த பொழுது சிவனும் மோகனியும் ஒன்று சேர்ந்து பிறந்தவரே ஐயப்பன் என்பது ஒரு புராணம்.
இதன் காரணமாகவே ஐயப்பனுக்கு ஹரி (விஷ்ணு) ஹரன் (சிவன்) என்ற பெயரும் உண்டு.
ஐயன் என்பது ஆர்ய என்பதின் திரிபு. ஆர்ய என்றால் மதிப்புக்குரிய என்று பொருள்.
Next Story






