search icon
என் மலர்tooltip icon

    வட கொரியா

    • நாட்டின் பாதுகாப்புக்காக தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
    • 2 அதிநவீன ஏவுகணைகளை வடகொரியா அனுப்பி சோதனை மேற்கொண்டது.

    பியாங்யாங்:

    வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுகிறது. இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்புக்காக தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனை பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக கருதும் வடகொரியா இந்த பயிற்சிகளை உடனடியாக நிறுத்தும்படி எச்சரித்தது. ஆனால் தென்கொரியா தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

    இந்தநிலையில் தென்கொரியாவில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது போலவும், போர் ஏற்பட்டால் தென்கொரிய எல்லைகளை ஆக்கிரமிப்பது போலவும் வடகொரியா ஒத்திகை பயிற்சி மேற்கொண்டது. அதன்படி 2 அதிநவீன ஏவுகணைகளை வடகொரியா அனுப்பி சோதனை மேற்கொண்டது.

    ஐ.நா. உடன்படிக்கையை மீறும் வடகொரியாவின் இந்த செயல் சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது என கூறி தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்தது.

    • அமெரிக்கா- தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகிறது
    • அமெரிக்க அணுஆயுத கப்பல்கள் தென்கொரியா கடற்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன

    வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்து வரும் நிலையில், தென்கொரியா தன்னை பாதுகாத்துக் கொள்ள அமெரிக்காவுடன் நட்பு வைத்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க போர் கப்பல்கள் கொரிய தீபகற்பத்தில் கால் பதித்துள்ளன.

    மேலும், அமெரிக்கா- தென்கொரிய ராணுவம் இணைந்து போர் பயிற்சியை கடந்த 21-ந்தேதி தொடங்கியுள்ளது. இந்த போர் பயிற்சி 11 நாட்கள் நடைபெற இருக்கிறது. இது வடகொரியாவை கோபத்திற்குள்ளாக்கியது. இதனால் அடிக்கடி ஆயுத தொழிற்சாலைகளில் காணப்பட்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், நவீன ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டிருந்தார்.

    இந்த நிலையில் அமெரிக்கா- தென்கொரியா இணைந்து எப்போது வேண்டுமென்றாலும் வடகொரியா மீது போர் தொடுக்கலாம் என நினைக்கிறார். இதனால் அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பை முறியெடுக்க, தொடர்ந்து தயார் நிலையில் இருக்கும்படி வடகொரிய ராணுவத்தை கேட்டுக்கொண்டுள்ளார். கப்பல் படை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது உரையாற்றிய கிம் ஜாங் உன், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    மேலும், அமெரிக்கா- தென்கொரியா- ஜப்பான் உச்சி மாநாட்டினை தொடர்ந்து, அமெரிக்கா அணு ஆயுதம் தொடர்பான மூலோபாய சொத்துகளை (போர்க்கப்பல் உள்பட) குவித்து, பயிற்சியில் ஈடுபட்டு வருவதை குறிப்பிட்டார்.

    இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. சில தினங்களுக்கு முன் வடகொரியா, தனது உளவு செயற்கைக்கோளை 2-வது முறையாக ஏவியது. பின்னர், இந்த முறையும் தோல்வியடைந்ததாக தெரிவித்திருந்தது.

    • செயற்கைகோளை சுமந்து சென்ற ராக்கெட் வெடித்து கடலில் விழுந்தது.
    • அக்டோபர் மாதம் மீண்டும் செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    வடகொரியா, கடந்த மே மாதம் ராணுவ உளவு செயற்கைகோளை விண்ணில் ஏவியது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. செயற்கைகோளை சுமந்து சென்ற ராக்கெட் வெடித்து கடலில் விழுந்தது. இந்நிலையில் இன்று 2-வது முறையாக ராணுவ உளவு செயற்கை கோளை வடகொரியா ஏவியது. ஆனால் இதுவும் தோல்வி அடைந்தது. வடகொரியாவின் தேசிய விண்வெளி மேம்பாட்டு நிர்வாகம் இன்று அதிகாலை மல்லிஜியாங்-1 என்ற புதிய வகை ராக்கெட்டில் சோஹே செயற்கைகோளை விண்ணில் ஏவியது. ராக்கெட்டின் முதல் மற்றும் 2-ம் நிலைகளின் விமானங்கள் இயல்பாக செயல்பட்டன.

    ஆனால் 3-ம் கட்டத்தில் அவசர வெடிப்பு அமைப்பில் ஏற்பட்ட தவறு காரணமாக ஏவுதல் தோல்வி அடைந்தது என்று வடகொரியா தெரிவித்தது. மேலும், இந்த தகவலுக்கான காரணம் ஒரு பெரிய பிரச்சினை இல்லை என்றும் சிக்கலை ஆராய்ந்து அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு. அக்டோபர் மாதம் மீண்டும் செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    • முதல் ஏவுதலில் என்ன தவறு ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று வட கொரியா தெரிவித்தது.
    • அதே வேளையில் வடகொரியா எந்த வகையான செயற்கைக் கோளை ஏவ உள்ளது என்பது குறித்து தெரிவிக்கவில்லை

    அமெரிக்கா-தென் கொரியா நாடுகள் இணைந்து போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதற்கிடையே கடந்த மே மாதம் ராணுவ உளவு செயற்கைக்கோளை வடகொரியா விண்ணில் ஏவியது. ஆனால் ராக்கெட் கடலில் விழுந்து தோல்வியில் முடிந்தது. முதல் ஏவுதலில் என்ன தவறு ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று வட கொரியா தெரிவித்தது. இந்நிலையில் உளவு செயற்கை கோளை மீண்டும் விண்ணில் ஏவ வடகொரியா திட்டமிட்டு உள்ளது.

    இது தொடர்பாக ஜப்பான் அதிகாரிகள் கூறும்போது, வடகொரியா வரும் நாட்களில் உளவு செயற்கைகோளை ஏவ திட்டமிட்டுள்ளது என்றனர்.

    வருகிற 24-ந்தேதி முதல் 30-ந்தேதிக்குள் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும் திட்டம் குறித்து வடகொரியா அதிகாரிகள் தெரிவித்ததாக ஜப்பான் கடலோர காவல் படை கூறியுள்ளது.

    அதே வேளையில் வடகொரியா எந்த வகையான செயற்கைக் கோளை ஏவ உள்ளது என்பது குறித்து தெரிவிக்கவில்லை என்று கடலோர காவல் படை செய்தி தொடர்பாளர் ஹிரோ முனே கிகுச்சி தெரிவித்தார். ஆனால் அந்த செயற்கைக்கோள் கடந்த மே மாதம் ஏவப்பட்ட உளவு செயற்கைக் கோளை போலவே இருக்கலாம் என்று நம்புகிறேன் என்றார்.

    • ஆயுத தொழிற்சாலைக்கு சென்ற கிம் ஜாங் உன், உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தல்
    • தென்கொரியா- அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ள இருக்கும் நிலையில் கிம் ஜாங் உன் முடிவு

    கொரிய தீபகற்பத்தில் எப்போதுமே அசாதாரண சூழ்நிலைதான் நிலவி வருகிறது என்றால் அது மிகையாகாது. அதற்கு முக்கிய காரணம் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்துவதுதான்.

    வடகொரியாவிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள தென்கொரியா அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. இது வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னிற்கு பிடிக்கவில்லை. இதனால் தென்கொரியாவை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், வடகொரியா ஆயுதங்கள் சப்ளை செய்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. கடந்த மாதம் அமெரிக்காவின் அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் தென்கொரிய கடற்பகுதியில் காணப்பட்டது. இதற்கு வடகொரிய ஆட்சேபனை தெரிவித்தது.

    வருகிற 21 மற்றும் 24-ந்தேதிகளுக்கிடையில் அமெரிக்காவுடன் இணைந்து ராணுவ பயிற்சியில் ஈடுபட இருப்பதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

    இதை வடகொரியாவுக்கான அச்சுறுத்தல் என கிம் ஜாங் உன் பார்க்கிறார்.

    இந்த நிலையில் வடகொரியாவின் ராணுவ தலைமை ஜெனரலை நீக்கியுள்ளார். அவருக்குப் பதிலாக ரி யோங் கில் என்பவரை ராணுவ தலைமை ஜெனரலாக நியமித்துள்ளார். இவர் பாதுகாப்பு மந்திரியாகவும் இருந்து வருகிறார். அந்த பதவியில் தொடர்ந்து நீடிப்பாரா? எனத் தெரியவில்லை.

    அதனோடு போருக்கு தயாராகும்படி அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு ஏற்ப ஆயுத தயாரிப்பை அதரிக்கவும் வலியுறுத்தியுள்ளார். கடந்த வாரம் ஆயுத தொழிற்சாலைக்கு சென்றிருந்தார். அப்போது ஏவுகணை என்ஜின், பீரங்கி மற்றும் ஆயுதங்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய கேட்டுக்கொண்டார்.

    அங்குள்ள மீடியா ஒன்று, கிம் ஜாங் உன் தென்கொரியாவின் தலைநகர் சியோல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை வரைபடத்தில் சுட்டிக்காட்டியது போன்ற படத்தை வெளியிட்டுள்ளது. இதனால் கிம் ஜாங் உன் போர் தொடுப்பதற்கு, ராணுவத்தை தயார் படுத்துகிறார் என பார்க்கப்படுகிறது.

    வடகொரியா குடியரசு நிறுவப்பட்ட 75-ம் ஆண்டையொட்டி அடுத்த மாதம் வடகொரியா ராணுவ அணிவகுப்பை நடத்த இருக்கிறது. ராணுவத்தை பலப்படுத்த பல்வேறு குழுக்களை வடகொரியா பயன்படுத்தி வருகிறது. போருக்கு தயாராகும் வகையில், தற்போதைய நவீன ஆயுதங்களை கொண்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • கொரியா போரில் வடகொரியாவின் 70-வது வெற்றி தின கொண்டாட்டத்தில் ரஷிய படை பங்கேற்பு
    • சீன ராணுவ வீரர்களும் வெற்றி விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்

    ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்கேய் ஷாய்கு வடகொரியா சென்றுள்ளார். வடகொரிய சென்றுள்ள அவர், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்தார். அப்போது ரஷிய அதிபர் புதின் கொடுத்து அனுப்பிய கடிதத்தை வழங்கினார். கடிதத்தை பெற்ற கிம் ஜாங் உன், பாதுகாப்புத்துறை மந்திரி தலைமையில் ராணுவ குழுவை அனுப்பியதற்கு நன்றி தெரிவித்தார்.

    மேலும், இருவர் இடையிலான ஆலோசனை மூலோபாய மற்றும் பாரம்பிய வடகொரியா- ரஷியா நட்பு குறித்ததாக இருக்கும் எனக் கூறினார்.

    கொரிய போரில் வடகொரியாவின் வெற்றியை கொண்டாடும் வகையில், 70-வது வெற்றி தினம் இந்த வாரம் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ரஷிய வீரர்கள், சீன வீரர்கள் வட கொரியாக சென்றுள்ளது.

    அதிபர் சந்திப்பிற்குப்பின் வடகொரியா ராணுவ மந்திரியை சந்தித்தார். அப்போது ரஷியா மந்திரி செர்கேய் ஷாய்கு ''உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ராணுவம்'' என வடகொரியாவை பாராட்டினார்.

    • கடந்த புதன்கிழமை அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தென்கொரியா பகுதியில் தென்பட்டது
    • ஏற்கனவே ஏவுகணைகளை வீசிய வடகொரியா இன்று அதிக அளவில் குரூஸ் ஏவுகணையை பயன்படுத்தியுள்ளது

    கொரியா தீபகற்பத்தின் மேற்கு பகுதியில் உள்ள கடலில் வடகொரியா குரூஸ் ஏவுகணைகளை அடுத்தடுத்து செலுத்தியுள்ளது அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

    ஆணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடைவிதித்துள்ளது. அதையும் தாண்டி அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

    வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தும்போதெல்லாம், தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா கொரிய கடற்பகுதியில் ராணுவ பலத்தை அதிகரிக்கும்.

    கடந்த புதன்கிழமை தென்கொரிய புகுதியில் அணுஆயுத ஏவுகணைகளை செலுத்தும் ஆற்றல் படைத்த அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தென்பட்டுள்ளது. இதனால் கொரியா ஏவுகணைகளை வீசி எச்சரித்தது.

    இதற்கிடையே தென்கொரியாவில் அமெரிக்காவின் போர்க்கப்பல், ஏவுகணைகள் செலுத்தும் நீர்மூழ்கிக் கப்பல்கள், குண்டுகள் தென்கொரியா கடற்கரையில் காணப்படுவது, நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான அளவுகோல் என வடகொரிய எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், தற்போது குரூஸ் ஏவுகணைகளை அடுத்தடுத்து வீசியுள்ளது. குரூஸ் ஏவுகணை வழிகாட்டுதல் ஏவுகணை என்றும் அழைக்கப்படும். தரை மற்றும் கடலில் எதிரிகளின் இலக்குகளை துல்லியாக கணக்கிட்டு தாக்கக்கூடிய வல்லமை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • டிராவிஸ்கிங் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
    • தென்கொரியாவில் இருந்த டிராவிஸ் கிங், அங்கு தாக்குதல் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் இரண்டு மாதம் இருந்தார்.

    வடகொரியா எல்லைக்குள் நுழைந்ததாக அமெரிக்க ராணுவ வீரரை அந்நாட்டு ராணுவம் கைது செய்துள்ளது. டிராவிஸ்கிங் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

    தென்கொரியாவில் இருந்த டிராவிஸ் கிங், அங்கு தாக்குதல் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் இரண்டு மாதம் இருந்தார். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த அவர் வடகொரியா எல்லைக்குள் நுழைந்தார். அப்போது அவரை வடகொரியா ராணுவம் தடுத்து நிறுத்தி கைது செய்தது. எல்லை கிராமமான பன்முன்ஜோமிலுக்குள் அவர் நுழைந்த போது பிடிபட்டார். இது தொடர்பாக அமெரிக்க படைகளின் கொரிய செய்தித் தொடர்பாளர் கர்னல் ஐசக் டெய்லர் கூறும்போது, டிராவிஸ் கிங், வேண்டுமென்றே மற்றும் அங்கீகாரம் இல்லாமல் எல்லையை தாண்டி சென்றுள்ளார் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது.
    • கொரியா தீபகற்பத்தில் ஜப்பான் கடல் பகுதியில் அணு ஆயுதம் தாங்கிய போர் கப்பலை நிறுத்த அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது.

    பியாங்யாங்:

    வடகொரியா அடிக்கடி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை நடத்தி வருகிறது. தென் கொரியாவுடனான மோதல் காரணமாகவும், அமெரிக்கா-தென்கொரியா இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிராகவும் இது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்த ஆண்டு தொடக்கம் முதலே வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தியது. அமெரிக்கா-தென்கொரியாவின் எச்சரிக்கையை மீறி வடகொரியா சோதனையை நடத்தி வருகிறது.

    இந்தநிலையில் வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது. வட கொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா ஏவி சோதனை நடத்தியதாக தென் கொரியா தெரிவித்தது.

    இந்த ஏவுகணை, ஜப்பான் கடல் பரப்பில் விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தென்கொரியாவின் கூட்டு படைத்தலைவர்கள், இன்று காலை வடகொரியா தனது ஏவுகணையை ஏவியதை உறுதிப்படுத்தினர்.

    ஆனால் ஏவுகணை எவ்வளவு தூரம் பறந்தது உள்ளிட்ட கூடுதல் விவரங்களை தெரிவிக்கவில்லை. ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, வடகொரியா ஏவுகணையை ஏவியதை கண்டறிந்து உள்ளதாக தெரிவித்தது.

    கொரியா தீபகற்பத்தில் ஜப்பான் கடல் பகுதியில் அணு ஆயுதம் தாங்கிய போர் கப்பலை நிறுத்த அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. இதற்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தங்களது வான் வெளியில் அமெரிக்க உளவு விமானம் அத்துமீறி நுழைந்ததாக வடகொரியா குற்றம் சாட்டியது. வட கொரியா வான்வெளியில் நுழையும் அமெரிக்கா உளவு விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தது.

    இந்த நிலையில் தான் வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது. இதனால் கொரியா தீப கற்பத்தில் பதற்றம் நிலவுகிறது.

    • வடகொரியாவின் கிழக்கு வான்வெளியில் அமெரிக்க உளவு விமானம் இரண்டு முறை அத்துமீறி நுழைந்தது.
    • கடந்த காலங்களில் அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்திய சம்பவங்களை நினைவுப்படுத்துகிறோம்.

    பியாங்யாங்:

    அமெரிக்கா-வடகொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. தென்கொரியா-அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதையடுத்து அமெரிக்கா-தென்கொரியா இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

    இந்த நிலையில் தங்களது வான்வெளிக்குள் அமெரிக்க உளவு விமானம் அத்து மீறி நுழைந்ததாக வடகொரியா குற்றம் சாட்டியது.

    இதுதொடர்பாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் கூறும்போது, வடகொரியாவின் கிழக்கு வான்வெளியில் அமெரிக்க உளவு விமானம் இரண்டு முறை அத்துமீறி நுழைந்தது.

    நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே அமெரிக்க உளவு நடவடிக்கைகளுக்கு வடகொரியா நேரடியாக பதிலளிக்காது. ஆனால் அமெரிக்க ராணுவம் அதன் கடல்சார் ராணுவ எல்லை கோட்டை தாண்டினால் தீர்மானமான நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் அமெரிக்க உளவு விமானம் ஊடுருவினால் கடும் விளைவை சந்திக்கும் என்றார்.

    இதுதொடர்பாக வடகொரிய தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, எங்களது வான்வெளியில் அத்துமீறி நுழையும் அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்துவோம்.

    இதுபோன்ற சம்பவம் கிழக்கு கடலில் நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கடந்த காலங்களில் அமெரிக்க விமானங்களை சுட்டு வீழ்த்திய சம்பவங்களை நினைவுப்படுத்துகிறோம்.

    அமெரிக்காவால் வெறித்தனமாக அரங்கேற்றப்பட்ட வான் உளவு செயல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார்.

    • விலையுயர்ந்த மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகள் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்துவதாக தகவல்.
    • வடகொரியாவிற்கு உயர்தர மதுபானங்களை இறக்குமதி செய்ய ஆண்டுக்கு சுமார் ரூ.250 கோடி செலவிடுகிறார்.

    ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்து கொண்டிருந்தான் என படித்திருப்போம்.

    கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள வடகொரியாவில், மக்கள் கடுமையான உணவு பஞ்சத்தில் தவிக்கும் நேரத்தில், அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன் தன் வாழ்வில் இன்பங்களை அனுபவிப்பதில் எல்லையற்ற ஈடுபாட்டுடன் உலகிலேயே சிறந்தவற்றை பயன்படுத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    விலையுயர்ந்த மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகள் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தும் அவர் இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியைத்தான் உண்கிறார்.

    பிரிட்டனின் பாதுகாப்பு நிபுணர் ஒருவர் கூறுகையில், "கிம் ஜாங் உன் ஒரு மது பிரியர். அதுலும் அவர் பிளாக் லேபிள் ஸ்காட்ச் விஸ்கி மற்றும் ஹென்னெஸ்ஸி பிராந்தி ஆகியவற்றையே விரும்பி பருகுகிறார். இதன் விலை, பாட்டில் ஒன்றுக்கு சுமார் ரூ.6 லட்சம் ($7000) ஆகும்" என கூறியிருக்கிறார்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு சீன பொது சுங்க நிர்வாகத்தால் பகிரங்கப்படுத்தப்பட்ட வர்த்தக தரவுகளின்படி, 40 வயதாகும் கிம், வடகொரியாவிற்கு உயர்தர மதுபானங்களை இறக்குமதி செய்ய ஆண்டுக்கு சுமார் ரூ. 250 கோடி ($30 மில்லியன்) செலவிடுகிறார்.

    கிம், மதுவகைகளை தவிர மிகச்சுவையான உணவு வகைகளையும் விரும்பி உண்கிறார். பார்மா ஹாம், (இத்தாலியின் பார்மா பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு வகை உணவு) மற்றும் சுவிஸ் எமென்டல் சீஸ் ஆகியவற்றையே ரசித்து உண்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கிம் மற்றும் அவரது தந்தை, இருவருமே கோப் ஸ்டீக்ஸ் (Kobe steaks) எனப்படும் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த மற்றும் மிகவும் விரும்பப்படும் மாட்டிறைச்சி மற்றும் கிறிஸ்டல் ஷாம்பெயின் (Cristal champagne) ஆகியவற்றை விரும்பி எடுத்துக் கொள்வார்கள்," என அவரது முன்னாள் சமையல்காரர் கூறியிருக்கிறார்.

    கிம் குடும்பத்திற்காக பிரத்தியேகமாக பீட்சா தயாரிக்க 1997ல் இத்தாலிய சமையல்காரர் ஒருவர் பணியமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தவிர, விலையுயர்ந்த பிரேசிலியன் காபியைத்தான் கிம் அருந்துகிறார். இதற்காக அவர் ஒரு வருடத்தில் சுமார் ரூ. 8 கோடி ($967,051) செலவழித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மென்மையான தங்கப்படலத்தில் மூடப்பட்டிருக்கும் எவ்ஸ் ஸெயின்ட் லாரன்ட் (Yves Saint Laurent) வகை கருப்பு சிகரெட்டுகள்தான் அவர் விரும்பி புகைக்கிறார்.

    2014ம் ஆண்டு யூ.கே. மெட்ரோ (UK Metro) தெரிவித்த ஒரு செய்தியில் கிம் தொடர்ந்து "பாம்பு ஒயின்" உட்கொள்வதாக கூறியது. இது ஆண்மையை அதிகரிக்கும் என்றும் குழந்தைபேறுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதாகவும் பரவலாக நம்பப்படுகிறது.

    வடகொரியாவின் சர்வாதிகாரியான கிம், "அதிக மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல்" ஆகியவற்றில் ஈடுபடுவதாகவும், அவரது எடை 136 கிலோ தாண்டியுள்ளது என்றும் தென்கொரிய உளவுத்துறை அறிக்கைகள் வந்த பின்னர் கிம் ஜாங் உன்னின் ஆடம்பரமான உணவுமுறை பற்றிய செய்திகள் வந்துள்ளன.

    மார்ல்போரோ சிகரெட்டுகள் (Marlboro cigarettes) மற்றும் தூக்கமின்மைக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் சோல்பிடெம் (zolpidem) போன்ற மருந்துகள் உட்பட அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை கிம் பதுக்கி வைத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உளவு செயற்கைக்கோளை ஏவும் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது
    • தோல்விக்கான காரணம் குறித்து அதிபர் ஆலோசனை நடத்தினார்

    உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா கடந்த சில ஆண்டுகளாகவே அணுஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. இவற்றிற்கு அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து ஒரு சில பதில் நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றன.

    இந்நிலையில் கடந்த மே மாதம், தங்கள் நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோளை தாங்கிய ராக்கெட் ஒன்றை வட கொரியா செலுத்தியது. ஆனால் புறப்பட்ட சில மணி நேரத்திலேயே அந்த ராக்கெட் செயலிழந்தது.

    அமெரிக்காவையும், தென்கொரியாவையும் உளவு பார்க்கும் முயற்சியாக செயல்பட்ட இந்த ராணுவ நடவடிக்கை தோல்வியடைந்தத்து, வட கொரியாவிற்கு இது மிகவும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அந்நாட்டதிபரும், சர்வாதிகாரியாக செயல்பட்டு வரும் தலைவருமான கிம் ஜாங் உன் இதை மிகப்பெரிய தோல்வி நடவடிக்கையாக உணர்வதாகவும், இதனால் மிகவும் அதிருப்தியிலுள்ளார் எனவும் அங்கிருந்து வரும் செய்தி குறிப்பொன்று தெரிவிக்கிறது.

    இந்த செய்திகளிலிருந்து மேலும் சில விவரங்கள்:-

    அனைத்து உயரதிகாரிகளும் கலந்து கொண்ட ஆளும் கட்சியின் 3-நாள் சந்திப்பில், இந்த தோல்வி விரிவாக அலசப்பட்டிருக்கிறது. இதில் அதிபர் கிம் கலந்து கொண்டிருக்கிறார்.

    ராக்கெட் செலுத்துவதற்கான ஆயத்தப்பணிகளில் ஏற்பட்ட குறைபாடுகளுக்காக, இதற்கு காரணமான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிகவும் விமர்சிக்கப்பட்டுள்ளார்கள். தவறுகளுக்கான காரணங்களை கண்டறிந்து, தோல்வியிலிருந்து கற்க வேண்டிய பாடங்களையும் விரைவாக கற்று, மீண்டும் அடுத்த ஒரு ஏவுகணையை செலுத்தியாக வேண்டும் என அவர்கள் நிர்பந்தப்பட்டுள்ளார்கள் என தெரிகிறது.

    இருப்பினும் வடகொரியாவின் உளவுத்துறை, ராக்கெட் தோல்விக்கு காரணம் என்னவென்று கண்டறிவதற்கு சில வாரங்களுக்கு மேல் ஆகலாம் என தெரிவித்திருக்கிறது.

    அடுத்து ராக்கெட் எப்பொழுது விண்ணில் செலுத்தப்படும் என தெரியவில்லை. வட கொரியாவை கண்காணிக்கும் அமைப்புகள், இந்த தோல்விக்காக, எந்த அதிகாரியும் அல்லது விஞ்ஞானியும் பணி நீக்கமோ அல்லது தண்டனைக்குரிய நடவடிக்கைகளுக்கோ ஈடுபடுத்தப்படவில்லை என தெரிவிக்கின்றன.

    அமெரிக்க தலைமையிலான வட கொரிய விரோத வெறுப்பு நடவடிக்கைகளை சமாளிப்பதற்கான எதிர்வினையாக அதிபர் கிம், பல உயர் தொழில்நுட்ப ராணுவ சொத்துக்களை உருவாக்கவும், ஆயுதங்களை சேமித்து வைத்துக் கொள்ள போவதாக உறுதியளித்துள்ளார்.

    பலமுனை- ஏவுகணைகள், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், மற்றும் ஒலியின் வேகத்தை விட பல மடங்கு வேகமாக செல்லும், (ஹைப்பர்சோனிக்) ஏவுகணைகள் ஆகியவை அவர் சேகரிக்க விரும்பும் மற்ற ஆயுத அமைப்புகளாகும்.

    2022-ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, வடகொரியா, 100-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளது. இவற்றில் சில, உளவு ஏவுகணை சம்பந்தமாகவும், கிம்மின் விருப்பப்பட்டியலில் உள்ள சக்திவாய்ந்த ஆயுதங்களை உருவாக்குவது தொடர்பாகவும் உருவாக்கப்பட்டவையாகும்.

    இந்த சந்திப்பின்போது, வடகொரிய அரசாங்கத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும் வல்லமை கொண்ட பொலிட்பீரோ உறுப்பினர்கள், இந்த பிராந்தியத்தில் வட கொரியாவின் போட்டி நாடுகளின் பொறுப்பற்ற போர் நகர்வுகளால் தென்கொரிய- அமெரிக்க கூட்டு நடவடிக்கைகளை குறிப்பிட்டு மிகவும் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமையை விரிவாக ஆய்வு செய்திருக்கின்றனர்.

    அமெரிக்க எதேச்சதிகாரத்தை எதிர்க்கும், வடகொரியாவின் நேச நாடுகளுடன் உள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் போலிட்பீரோ விவாதித்துள்ளது.

    வட கொரியாவின் அதிகரிக்கும் ராணுவ பலம் பெருக்கும் நடவடிக்கைகளுக்கும், அணுஆயுத பரிசோதனைகளையும் எச்சரிக்கும் விதமாக அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து எதிர்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், வட கொரியா அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டால், அது வட கொரியாவின் அழிவில் முடியும் என எச்சரித்துள்ளது.

    ரஷிய நாட்டுடன் உறவை வலுப்படுத்த வேண்டி, அந்நாடு உக்ரைனை ஆக்ரமித்ததையும் வட கொரியா ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வர்த்தகம், தொழில்நுட்பம், பிராந்திய முதலிடம் போன்ற விஷயங்களில் அமெரிக்காவோடு எதிர்ப்பை கடைபிடிக்கும் சீனாவோடும் வட கொரியா உறவுகளை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர்களாக விளங்கும் சீனாவும், ரஷியாவும் தங்கள் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, வட கொரியாவின் அணுஆயுத பரிசோதனைகளுக்காக அதன் மீது அமெரிக்கா கொண்டு வர நினைக்கும் தடை முயற்சிகளுக்கு முட்டுகட்டை போடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    ×