என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஜப்பான் வீராங்கனை 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஜப்பானைச் சேர்ந்த நவாமி ஒசாகா, அமெரிக்காவின் எம்மா நவாரோ உடன் மோதினார்.

    இதில் நவாமி ஒசாகா 4-6, 1-6 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி வெற்றி பெற்றது.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, நெதர்லாந்தின் ராபின் ஹாசி-சாண்டர் அரெண்ட்ஸ்

    ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் போபண்ணா ஜோடி 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நார்வே வீரர் ரூட் தோற்றார்.

    லண்டன்:

    ஒவ்வொரு ஆண்டும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், இத்தாலி நாட்டைச் சேர்ந்த பேபியோ போஜினி உடன் மோதினார்.

    இதில் காஸ்பர் ரூட் 4-6, 5-7, 7-6 (7-1), 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • மழை காரணமாக 3 ஆவது ஒருநாள் போட்டி 42 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது.
    • 5 விக்கெட் வீழ்த்திய லாரன் பெல் ஆட்டத்தின் சிறந்த வீராங்கனைக்கான விருதை பெற்றார்.

    இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.

    அதில், முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் 3 ஆவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

    மழை காரணமாக 3 ஆவது ஒருநாள் போட்டி 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து.

    பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 38.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 - 0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

    இப்போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட லாரன் பெல் ஆட்டத்தின் சிறந்த வீராங்கனைக்கான விருதை பெற்றார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
    • தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்சாண்டர் வுகிக் உடன் மோதினார்.

    இதில் கார்லோஸ் 7-6 (7-5), 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே, குரோசியாவின் போர்னா கோரிக்குடன் மோதினார். இதில் தியாபே 7-6 (7-5), 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் தோற்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல்-செர்பியாவின் துசன் லாஜோவிக் ஜோடி, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெட்ரோ மார்டினெஸ்-ஜௌம் மூனார் ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் சுமித் நாகல் ஜோடி 2-6, 2-6 என நேர் செட்களில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஜப்பான் வீராங்கனை முதல் சுற்றில் வென்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் இருமுறை சாம்பியனும், இங்கிலாந்து வீரரான ஆண்டி முர்ரே, செக் குடியரசின் தாமஸ் மசாக்குடன் மோதுவார் என அறிவிக்கப்பட்டது.

    ஆனால், கடந்த வாரம் முதுகில் செய்து கொண்ட ஆபரேஷனால் ஒற்றையர் பிரிவில் இருந்து விலகுவதாக ஆண்டி முர்ரே அறிவித்தார்.

    இதையடுத்து, விம்பிள்டன் தொடரில் இருந்து முர்ரே வெளியேறினார். ஆனால், இரட்டையர் பிரிவில் விளையாட உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    லண்டன்

    டென்னிஸ் போட்டியில் ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இதில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நேற்று தொடங்கியது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பிய வீரர் ஜோகோவிச், செக் குடியரசைச் சேர்ந்த விட் கோப்ரிவா உடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ராபர்டோ கார்பலேஸ், ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் உடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கம் முதல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வரேவ் 6-2, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ராபர்டோவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
    • இதில் இந்திய வீரர்களான சாய் சுதர்சன், பிரிதிவி ஷா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட் போட்டிகளில் இந்திய இளம் வீரர்களான சாய் சுதர்சன், பிரிதிவி ஷா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    இதில் சாய் சுதர்சன் சர்ரே அணிக்காக விளையாடி வருகிறார். முதல் இன்னிங்சில் 14 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    இதேபோல், நார்த்தம்டன்ஷைர் அணிக்காக விளையாடிய பிரித்வி ஷா முதல் இன்னிங்சில் 31 ரன்னும், 2வது இன்னிங்சில் 37 ரன்னும் எடுத்தார்.

    கவுன்டி போட்டிகளில் விளையாடி வரும் இளம் இந்திய வீரர்கள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் குறைந்த ரன்களில் அவுட்டானது ரசிகர்களை ஏமாற்றத்துக்கு ஆளாக்கியுள்ளது.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் முன்னணி வீராங்கனைகள் காயத்தால் முதல் சுற்றில் வெளியேறினர்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீராங்கனைகளான பெலாரசின் அரினா சபலென்கா மற்றும் பெலாரசின் விக்டோரியா அசரென்கா ஆகியோர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினர்.

    பெலாரசின் விக்டோரியா அசரென்கா, அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சுடன் மோத இருந்தார். தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட அவர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    இதேபோல், பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் எமினா பேக்தாசுடன் மோத இருந்தார். காயம் காரணமாக சபலென்காவும் போட்டியில் இருந்து விலகினார்.

    முன்னணி வீராங்கனைகளான அரினா சபலென்கா, விக்டோரியா அசரென்கா ஆகியோர் காயம் காரணமாக முதல் போட்டியில் இருந்து விலகியது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    சமீபத்தில் நடந்த பெர்லின் ஓபன் தொடரிலும் சபலென்கா காயம் காரணமாக காலிறுதியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஜப்பான் வீராங்கனை முதல் சுற்றில் வென்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஜப்பானைச் சேர்ந்த நவாமி ஒசாகா, பிரான்சின் டயான் பாரியுடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை ஒசாக 6-1 என கைப்பற்றினார். 2வது செட்டை பாரி 1-6 என கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 6-4 என கைப்பற்றினார்.

    இறுதியில், 6-1, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்ற நவாமி ஒசாகா அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    4 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள நவாமி ஒசாகா, 2018-ம் ஆண்டுக்குப் பிறகு விம்பிள்டனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார் ஒசாகா.

    • கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடக்கிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    டென்னிசில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நேற்று தொடங்கியது. அதன்படி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தகுதிபெற்ற ஒரே இந்தியரான சுமித் நாகல், தரவரிசையில் 53-ம் நிலை வீரரான செர்பியாவின் மியோமிர் கெச்மனோவிச்சுடன் முதல் சுற்றில் நேற்று மோதினார்.

    இதில் சுமித் நாகல் 2-6, 6-3, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    ×