என் மலர்
பிரிட்டன்
- இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இலங்கை அணி 2வது இன்னிங்சில் 292 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
லண்டன்:
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 427 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் சதமடித்து 143 ரன்னில் ஆட்டமிழந்தார். கஸ் அட்கின்சன் சதமடித்து 118 ரன்னில் அவுட்டானார். பென் டக்கெட் 40 ரன்னிலும், ஹாரி புரூக் 33 ரன்னிலும் அவுட்டாகினர்.
இலங்கை சார்பில் அஷிதா பெர்னாண்டோ 5 விக்கெட்டும், மிலன் ரத்னாயகே, லஹிரு குமரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இலங்கை அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இங்கிலாந்து வீரர்கள் துல்லியமாக பந்துவீசினர். இதனால் சீரான இடைவெளியில் இலங்கை அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
இறுதியில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் அரை சதமடித்து 74 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஒல்லி ஸ்டோன், மேத்யூ பாட்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 231 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து 2வது இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் வீரர்கள் விரைவாக ரன் எடுக்க முயன்றனர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
இறுதியில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஜோ ரூட் சிறப்பாக ஆடி 34வது சதமடித்து 103 ரன்னில் அவுட்டானார்.
இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ, லஹிரு குமாரா தலா 3 விக்கெட்டும், ரத்னாயகே, பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 483 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்கம் முதலே நிதானமாக ஆடியது.
தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணரத்னே அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார். தினேஷ் சண்டிமால் 58 ரன்னும், தனஞ்செய டி சில்வா 50 ரன்னும் எடுத்தனர். பிரியநாத் ரத்நாயகே 43 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 36 ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 292 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 190 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றதுடன், டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.
இங்கிலாந்து சார்பில் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டும், ஒல்லி ஸ்டோன் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்.
- முதல் இன்னிங்சில் ஜோ ரூட் 143 ரன்னில் அவுட்டானார்..
- 2வது இன்னிங்சில் பொறுப்புடன் ஆடி சதமடித்த ஜோ ரூட் 34-வது சதம் பதிவு செய்தார்.
லண்டன்:
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேனியல் லாரன்ஸ் 9 ரன்னிலும், கேப்டன் ஒல்லி போப் ஒரு ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 40 ரன்னில் அவுட்டானார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் விளையாடி சதமடித்த ஜோ ரூட், 33வது சதத்தை பதிவு செய்தார். அப்போது இங்கிலாந்து 67 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 253 ரன்கள் எடுத்திருந்தது.
இதன்மூலம் இங்கிலாந்து அணிக்காக அதிக சதமடித்தவர் என்ற அலெஸ்டர் குக் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.
- இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 427 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இலங்கை அணி முதல் இன்னிங்சில் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
லண்டன்:
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 427 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் சதமடித்து 143 ரன்னில் ஆட்டமிழந்தார். கஸ் அட்கின்சன் சதமடித்து 118 ரன்னில் அவுட்டானார். பென் டக்கெட் 40 ரன்னிலும், ஹாரி புரூக் 33 ரன்னிலும் அவுட்டாகினர்.
இலங்கை சார்பில் அஷிதா பெர்னாண்டோ 5 விக்கெட்டும், மிலன் ரத்னாயகே, லஹிரு குமரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இலங்கை அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இங்கிலாந்து வீரர்கள் துல்லியமாக பந்துவீசினர். இதனால் சீரான இடைவெளியில் இலங்கை அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
இறுதியில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் அரை சதமடித்து 74 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஒல்லி ஸ்டோன், மேத்யூ பாட்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 231 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து 2வது இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் வீரர்கள் விரைவாக ரன் எடுக்க முயன்றனர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
அந்த அணியின் ஜோ ரூட் சிறப்பாக ஆடி 34வது சதமடித்து அசத்தினார். அவர் 103 ரன்னில் அவுட்டானார். ஹாரி புரூக் 37 ரன்னும், ஜேமி ஸ்மித் 26 ரன்னும், பென் டக்கெட் 24 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ, லஹிரு குமாரா தலா 3 விக்கெட்டும், ரத்னாயகே, பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 483 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.
- பொறுப்புடன் விளையாடிய ஜோ ரூட் சதமடித்து 143 ரன்னில் அவுட்டானார்.
- கஸ் அட்கின்சன் அதிரடியாக ஆடி 105 பந்தில் சதமடித்தார்.
லண்டன்:
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேனியல் லாரன்ஸ் 9 ரன்னிலும், கேப்டன் ஒல்லி போப் ஒரு ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 40 ரன்னில் அவுட்டானார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் விளையாடி சதமடித்த ஜோ ரூட், 33வது சதத்தை பதிவு செய்தார். அவர் 143 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து அதிரடியாக ஆடிய கஸ் அட்கின்சன் 105 பந்துகளில் சதமடித்தார். அவர் 118 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில 427 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கை சார்பில் அஷிதா பெர்னாண்டோ 5 விக்கெட்டும், மிலன் ரத்னாயகே, லஹிரு குமரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- பொறுப்புடன் விளையாடி சதமடித்த ஜோ ரூட், 33வது சதத்தை பதிவு செய்தார்.
லண்டன்:
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேனியல் லாரன்ஸ் 9 ரன்னிலும், கேப்டன் ஒல்லி போப் ஒரு ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 40 ரன்னில் அவுட்டானார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் விளையாடி சதமடித்த ஜோ ரூட், 33வது சதத்தை பதிவு செய்தார். அப்போது இங்கிலாந்து 67 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 253 ரன்கள் எடுத்திருந்தது.
இதன்மூலம் இங்கிலாந்து அணிக்காக அதிக சதமடித்தவர் என்ற அலெஸ்டர் குக் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.
- கடந்த 2020-ம் ஆண்டில் டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் 1 வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
- 2022-ம் ஆண்டில் இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்திருந்தார்.
லண்டன்:
இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஆன டேவிட் மலான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
டேவிட் மலான் 2017-ம் ஆண்டு இங்கிலாந்தின் டெஸ்ட் அணியில் அறிமுகமானார். இங்கிலாந்து அணிக்காக டேவிட் மலான் கடைசியாக 2023-ம் ஆண்டு விளையாடினார்.
36 வயதாகும் இவர் இதுவரை 22 டெஸ்ட், 30 ஒருநாள் மற்றும் 62 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டில் டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் 1 வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
2022-ம் ஆண்டில் இங்கிலாந்து அணி டி20 உலகக் கோப்பை வென்ற அணியிலும் இடம்பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
- அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.
லண்டன்:
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து அணியின் முன்னணி பந்துவீச்சாளரான மார்க் வுட் தசைப்பிடிப்பு காரணமாக விலகி உள்ளார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
அவருக்கு பதிலாக ஜோஷ் ஹல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 29-ம் தேதி அன்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
- இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுத்துள்ளது.
- இலங்கை 2வது இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
லண்டன்:
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன்னில் ஆல் அவுட்டானது. தனஞ்ஜெயா டி சில்வா 74 ரன்னும், மிலன் ரத்னாயகே 72 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், சோயிப் பஷீர் தலா 3 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து 122 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஜேமி ஸ்மித் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 111 ரன்னில் அவுட்டானார். ஹாரி ப்ரூக் 56 ரன்னும், ஜோ ரூட் 42 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இலங்கை அணி சார்பில் அஷிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
122 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2வது இன்னிங்சை ஆடியது. தொடக்கத்தில் முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். ஏஞ்சலோ மேத்யூஸ் 65 ரன்னில் அவுட்டானார்.
கமிந்து மெண்டிஸ் தனி ஆளாகப் போராடி சதமடித்து அசத்தினார். அவர் 113 ரன்களில் ஆட்டமிழந்தார். தினேஷ் சண்டிமால் 79 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், மேத்யூ பாட்ஸ் 3 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுத்துள்ளது.
லண்டன்:
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன்னில் ஆல் அவுட்டானது. தனஞ்ஜெயா டி சில்வா 74 ரன்னும், மிலன் ரத்னாயகே 72 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், சோயிப் பஷீர் தலா 3 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து நேற்று இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 61 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்துள்ளது. ஜேமி ஸ்மித் 72 ரன்னும், அட்கின்சன் 4 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். ஹாரி ப்ரூக்56 ரன்னும், ஜோ ரூட் 42 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 111 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இங்கிலாந்து 122 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பில் அஷிதா பெர்னாண்டோ 4 விக்கெட்ம், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
- இங்கிலாந்தில் சமீப காலமாக விந்தணு தானம் செய்யும் செயல் கட்டுப்பாட்டை மீறிவிட்டது.
- உலகின் மிகப்பெரிய விந்து வங்கியான கிரையோஸ் கடந்த ஏப்ரலில் மான்செஸ்டரில் ஒரு கிளையை திறந்தது.
லண்டன்:
இங்கிலாந்து நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு விந்தணுக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. சமீப காலமாக அங்கு விந்தணு தானம் செய்யும் செயல்முறை கட்டுப்பாட்டை மீறியுள்ளது.
அந்நாட்டில் உள்ள விதிகளின்படி, ஒருவரின் விந்தணுவை 10 குடும்பத்துக்கு மேல் கொடுக்கமுடியாது. ஆனால், விந்தணுவை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வரம்பு எதுவும் இல்லை. இதைப் பயன்படுத்தி விந்தணு தானம் அதிகளவில் ஏற்றுமதி செய்யப் படுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், சிலருக்கு இங்கிலாந்திலும், உலக அளவிலும் உடன்பிறப்புகள் இருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:
கடந்த காலங்களில் அமெரிக்கா, டென்மார்க் போன்ற நாடுகளில் இருந்து இங்கிலாந்து விந்தணு மற்றும் முட்டைகளை இறக்குமதி செய்துவந்தது. அதன்பின் நிலைமை முற்றிலும் மாறியது.
2019 மற்றும் 2021-க்கு இடையில் மட்டும் 7,542 ஸ்ட்ரா விந்து இங்கிலாந்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய விந்தணு மற்றும் முட்டை வங்கியான கிரையோஸ் கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் மான்செஸ்டரில் ஒரு கிளையைத் திறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதியில் 90 சதவீத பங்கைக் கொண்ட ஐரோப்பிய விந்தணு வங்கி, ஒரு நன்கொடையாளருக்கு 75 குடும்பங்கள் என உலகளாவிய வரம்பைப் பயன்படுத்துகிறது. அதன் நன்கொடையாளர்கள் சராசரியாக 25 குடும்பங்களுக்கு உதவுகிறார்கள் எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
- ஒவ்வொரு 2 நிமிடத்திற்கு ஒருமுறை நான் என் கண்ணீரை நிறுத்த வேண்டியிருந்தது.
- கெட்ட கனவுகளும் கடந்த கால நினைவுகளும் எனை வாட்டி வதைத்தது.
2022 டிசம்பர் மாதம் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ பிளின்டாஃப், தொலைக்காட்சி தொடரான டாப் கியர் மோட்டாரிங் ஷோவில் நடித்தார். அப்போது 209 கிமீ வேகத்தில் பயணித்த அவரது கார் விபத்துக்குள்ளானதில் அவர் படுகாயம் அடைந்தார்.
விபத்தில் அடிபட்டு சிகிச்சை எடுத்து வந்தபோது தான் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து பிபிசியிடம் அவர் பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், "எனக்கு அப்போது உதவி தேவைப்பட்டது. ஆனால் என்னால் உதவி கெடக்கமுடியவில்லை. ஒவ்வொரு 2 நிமிடத்திற்கு ஒருமுறை நான் என் கண்ணீரை நிறுத்த வேண்டியிருந்தது.
என்னைப் நினைத்து நான் வருத்தப்பட விரும்பவில்லை. எனக்கு அனுதாபம் வேண்டாம். நான் என் கவலையுடன் போராட வேண்டியிருந்தது. கெட்ட கனவுகளும் கடந்த கால நினைவுகளும் எனை வாட்டி வதைத்தது. அதை சமாளிப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.
நான் பாசிட்டிவாக இருக்க வேண்டும். எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் பேசும்போது மிகவும் உணர்ச்சிவசப்படுகிறேன்" என்று தெரிவித்தார்.
79 டெஸ்ட் மற்றும் 141 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள பிளின்டாஃப், 2009 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது.
- போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்கு செல்லாதீர்கள் என அறிவுறுத்தல்
இங்கிலாந்தில் 3 இளம்பெண்கள் மரணம் அடைந்ததை அடுத்து பரவிய வந்ததிகளால் பல இடங்களில் வன்முறை வெடித்தது.
இங்கிலாந்தில் குடிபெயர்ந்த இஸ்லாமியர் ஒருவர் தான் இளம்பெண்களை கொன்றார் என்று பரவிய வதந்தியால் இந்த வன்முறை அரங்கேறியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு பயணம் செய்யும் போது கவனமாக இருக்கும்படி லண்டனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், உள்ளூர் பாதுகாப்பு ஏஜென்சிகள் வழங்கும் செய்திகள் மற்றும் அறிவுரைகளை பின்பற்றும்படியும், போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்கு செல்லாதீர்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






