என் மலர்tooltip icon

    ஆப்கானிஸ்தான்

    • கடுமையான நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
    • பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என்றனர்.

    காபுல்:

    ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள குனார் என்ற மாகாணம் மலைகள் நிறைந்த இடமாகும். இது பாகிஸ்தானை ஒட்டிய பகுதியாகும். இங்குள்ள வீடுகளில் பெரும்பாலானவை மண்ணால் கட்டப்பட்டவை.

    நேற்று முன்தினம் இரவு 11.47 மணிக்கு குனார் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. நங்கர்ஹார் மாகாணத்தில் நுலாலாபாத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த கடுமையான நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்து பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது. இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,000 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நங்கர்ஹார் மாகாணத்தில் நுலாலாபாத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்பட்டது.

    ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் குனார் என்ற மாகாணம் உள்ளது. இது பாகிஸ்தானை ஒட்டிய பகுதியாகும். இது பெரும்பாலும் மலைகள் நிறைந்த இடமாகும்.

    இங்குள்ள வீடுகளில் பெரும்பாலானவை மண்ணால் கட்டப்பட்டவை ஆகும். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு 11.47 மணிக்கு குனார் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.

    நங்கர்ஹார் மாகாணத்தில் நுலாலாபாத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இரவில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்து பலியாகினர் என்று ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

    மேலும் 2,500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்பட்டது.

    இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,100-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,500 பேர் காயமடைந்துள்ளதாக ஊடக மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அப்துல் ஜப்பார் பெஹிர் தெரிவித்துள்ளார்.

    • நிலநடுக்கம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வரை உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • 2,500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.

    ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் குனார் மாகாணம் உள்ளது. இது பாகிஸ்தான் எல்லையை யொட்டிய பகுதியாகும்.

    குனார் மாகாணத்தில் நேற்று இரவு 11.47 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கு அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0-வாக பதிவாகி இருந்தது. அடுத்தடுத்து 4.5 ரிக்டர் அளவில் பதிவானது.

    நகங்கா் மாகாணத்தில் ஜலாலாபாத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிழக்கு- வடகிழக்கே 27 கிலோ மீட்டர் தொலைவில் 8 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது. அதை தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவானது.

    நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமானது. இரவில் ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமானவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். எங்கு பார்த்தாலும் ஒரே அலறல் சத்தமாக கேட்டது.

    நிலநடுக்கத்தில் முதலில் 622 பேர் பலியானதாக தகவல் வெளியானது. ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இதை தெரிவித்தார். 1,300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    குனார் மாகாணம்தான் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்குதான் அதிகமானோர் பலியாகி இருக்கலாம் என்றும், ஏராளமானோர் காயம் அடைந்து இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

    நூர்குல், சோகி, வாட்பூர் மனோகி, சபதாரே ஆகிய மாவட்டங்களில் குறைந்தது 250 பேர் பலியானதாக குனார் மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.

    இந்நிலையில், கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 800-ஆக உயர்ந்தளு்ளது.

    2,500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

    காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது.

    சாலை வழியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு வர முடியாதவர்களை வான் வழியில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது. பல இடங்க ளில் சாலைகள் கட்டிட இடிபாடுகளால் சூழப்பட்டு இருப்பதால் மீட்பு குழுவினர் நுழைய முடியாமல் தவிப்பதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    ஒரே மாகாணத்தில் அடுத்தடுத்து 3 கிராமங்கள் ஒட்டு மொத்தமாக சேதம் அடைந்து உள்ளது. இங்கு உள்ள கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வரை உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வருவது, கட்டிடங்கள் இடிந்து விழுவது போன்ற பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

    ஆப்கானிஸ்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. வெள்ளத்தைதொடர்ந்து நிலச்சரிவு உள்ளிட்டவற்றால் உள்கட்டமைப்புகள் பெரிதும் சேதமடைந்து இருந்த நிலையில் நில நடுக்கம் அதன் கோர முகத்தைக் காட்டியிருக்கி றது. இதனால் சாலை வசதிகள் இன்றி மக்கள் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் நேரிட்ட நிலநடுக்கத்தால் ஆயிரம் பேருக்கும் மேல் பலியான நிலையில், இயற்கைச் சீற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முன்னணி இடம் வகிக்கிறது.

    • நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் தூங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள் திடுக்கிட்டு எழுந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
    • இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

    காபூல்:

    தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 11.57 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3 புள்ளிகளாக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

    ஜலாலாபாத்தில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 27 கிலோமீட்டர் தொலைவில், 8 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. 20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் மற்றொரு நில நடுக்கம் ஏற்பட்டது. இது 10 கி.மீ. ஆழத்தில் 4.5 ரிக்டர் அளவில் பதிவானது.

    நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் திடுக்கிட்டு எழுந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    இந்த சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் இருந்து விழுந்ததில் 500 பேர் உயிரிழந்தனர். மேலும் 1000-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வரை உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வருவதையும் கட்டிடங்கள் இடிந்து விழுவதும் போன்ற பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

    • ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது.

    காபுல்:

    ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் நேற்று நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.47 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூரிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை.

    ஆப்கானிஸ்தானில் கடந்த 16 மற்றும் 13-ம் தேதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது.

    • காபூலை நோக்கிப் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானது.
    • பேருந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் ஒரு பயணிகள் பேருந்து, லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி தீப்பிடித்து எரிந்ததில் 17 குழந்தைகள் உட்பட 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஆப்கானியர்களை ஏற்றிக்கொண்டு, எல்லையைக் கடந்து காபூலை நோக்கிப் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணித்த அனைத்து பயணிகளும் இஸ்லாம் காலாவில் வாகனத்தில் ஏறிய புலம்பெயர்ந்தோர் என்று அம்மாகாண அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    பேருந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.



    • ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானது.

    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 11.05 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 36.83 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.01 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

    ஆப்கானிஸ்தானில் கடந்த 13-ம் தேதி மற்றும் 8-ம் தேதி ஆகிய நாட்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது.

    • கோடை வெப்பத்தை சமாளிக்க உள்ளூர் மக்கள் வித்தியாசமான நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.
    • வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    ஆப்கானிஸ்தானில் கோடைக்காலம் தொடங்கி கடுமையான வெப்ப அலைவீ சுகிறது. இந்தநிலையில் அங்குள்ள காந்தகார் நகரில் கோடை வெப்பத்தை சமாளிக்க உள்ளூர் மக்கள் வித்தியாசமான நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.

    அதாவது வாடகை டாக்சிகளில் உள்ளூர்காரர்களால் உருவாக்கப்பட்ட ஏர்கூலர் எந்திரத்தை காரின் மேல் பொருத்தி வருகிறார்கள். ஏர் கூலர் எந்திரத்துடன் ராட்சத குழாய் ஒன்றை சொருகி கார் ஜன்னலோடு அதை இணைந்துள்ளனர். வாகனம் முன்னே செல்ல செல்ல, ஏர் கூலர் எந்திரத்தில் ஊற்றப்பட்டுள்ள தண்ணீர் காற்றுடன் இணைந்து ராட்சத குழாய் மூலமாக குளிர்ந்த காற்றாக ஜன்னல் வழியாக காருக்குள் வீசுவதுபோல் வடிவமைத்துள்ளனர்.

    இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் அங்குள்ள டாக்சிக்காரர்கள் அனைவரும் இந்த முறையை செயல்படுத்தி வருகிறார்கள். இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.



    • இஸ்லாமிய ஷரியாவில் சதுரங்கம் சூதாட்டத்தின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது.
    • "நன்மையை ஊக்குவித்தல் மற்றும் தீமையைத் தடுப்பதற்கான சட்டத்தின்" படி தடைசெய்யப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது.

    இதுகுறித்து விளையாட்டு இயக்குநரக செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி கூறுகையில், இஸ்லாமிய ஷரியாவின் கீழ் சதுரங்கம் சூதாட்டத்தின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது.

    இது நாட்டின் "நன்மையை ஊக்குவித்தல் மற்றும் தீமையைத் தடுப்பதற்கான சட்டத்தின்" படி தடைசெய்யப்பட்டுள்ளது. சதுரங்கத்திற்கு மத ரீதியான ஆட்சேபனைகள் உள்ளன.

    இந்த ஆட்சேபனைகள் தீர்க்கப்படும் வரை, ஆப்கானிஸ்தானில் இந்த விளையாட்டு நிறுத்தி வைக்கப்படும்" என்று கூறினார்.

    இந்த முடிவு சதுரங்க ஆர்வலர்கள் மற்றும் தொடர்புடைய வணிகங்கள் மத்தியில் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. முன்னதாக பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்கத் தாலிபான் அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
    • ஆப்கானிஸ்தானை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது

    காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.

    இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதனிடையே ஆப்கானிஸ்தானை குறிவைத்து இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பாகிஸ்தானின் குற்றசாட்டை ஆப்கானிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்

    • பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
    • முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

    முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான் அரசு கவலை தெரிவித்துள்ளது.

    இந்தியாவும், பாகிஸ்தானும் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என தலிபான் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    • இன்று மதியம் 12.17 மணிக்கு 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • ஜம்மு காஷ்மீர், டெல்லி உள்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது.

    ஆப்கானிஸ்தானில் இன்று (சனிக்கிழமை) 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    தேசிய நில அதிர்வு மையம் (NCS) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லைப்பகுதியில் 86 கிலோமீட்டர் ஆழத்தில்இன்று மதியம் 12.17 மணிக்கு 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

    நிலநடுக்கத்தின்போது கட்டிடங்கள் அதிர்ந்ததால் அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

    ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. ஜம்மு காஷ்மீர், டெல்லி உள்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. 

    ×