search icon
என் மலர்tooltip icon

    தமிழக பட்ஜெட் - 2021

    கிருஷ்ணகிரியில் தோட்டக்கலைக் கல்லூரி புதிதாக தொடங்குவதற்கு முதல்கட்ட நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    வேளாண் பட்ஜெட்டில் கூறி இருப்பதாவது:-

    விவசாயிகளுக்கு ஏற்றுமதி குறித்த விவரங்கள், விற்பனை வாய்ப்புகள், தரச்சான்றுகள் பெறும் முறைகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து வழங்கிட சென்னை கிண்டியில் ரூ.1 கோடி மதிப்பில் வேளாண் ஏற்றுமதி சேவை மையம் அமைக்கப்படும்.

    முதன் முறையாக ஏற்றுமதியாளராகப் பதிவு செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏ.வி. இ.டி.ஏ. தரச்சான்று ஆய்வுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும்.

    முருங்கை அதிகளவில் விளையும் தேனி, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி, அரியலூர், திருப்பூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் ‘முருங்கைக்கான ஏற்றுமதி மண்டலமாக’ அறிவிக்கப்படும்.

    மதுரையில் முருங்கைக்கு என சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் அமைத்து, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்திட உலர்த்திட, இலைகளை பொடியாக்கும் எந்திரங்கள், தானியங்கி சிப்பம் கட்டும் எந்திரம் போன்ற கட்டமைப்பு வசதிகள் அமைத்து தர ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மஞ்சள் பயிருக்கான ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கப்படும்.

    கிருஷ்ணகிரியில் தோட்டக்கலைக் கல்லூரி புதிதாக தொடங்குவதற்கு முதல்கட்ட நிதியாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    வேளாண்மையில் தொழில் முனைவோர்களை ஈர்க்க வேளாண் தொழில் முனைப்பு மையம் வலுப்படுத்தப்படுவதுடன் தேவையான இடங்களில் தொழில் முனைப்பு மையம் தொடங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கடலூர் மாவட்டம் வடலூரில் ரூ.1 கோடியில் புதிதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து  பேசியதாவது:-

    * வேளாண்மைக்கென தனியாக ஓர் அருங்காட்சியகம் சென்னையில் அமைக்கப்படும்.

    * வேளாண் கருவிகள் தர ரூ.15 கோடி செலவில் வேளாண் உபகரணங்கள் தொகுப்பு செயல்படுத்தப்படும்.

    * டெல்டா தென்னை விவசாயிகளுக்காக தென்னை மதிப்பு கூட்டும் மையம் தஞ்சையில் அமைக்கப்படும்.

    * மதிய உணவு திட்டத்திலும், ரேசன் கடையிலும் பயிறு வகைகள் விநியோகிக்கப்படும்.

    * இந்தாண்டு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தர மின்சார வாரியத்துக்கு ரூ.4,508.23 கோடி நிதி ஒதுக்கீடு.

    * ஒவ்வொரு பம்ப்செட்டுக்கும் ஆண்டுதோறும் அரசே விவசாயிகள் சார்பில் ரூ.20 ஆயிரத்தை செலுத்துகிறது.

    காய்கறி


    * காய்கறி, கீரை சாகுபடியை பெருக்க மானியம் அளிக்கும் திட்டத்திற்கு ரூ.95 கோடி  நிதி ஒதுக்கீடு.

    * தோட்டக்கலை பயிர்கள் அதிகமாக விளையும் மாவட்டங்களில் தோட்டக்கலை கிடங்குகள் அமைக்கப்படும்.

    * மழையில் நெல்மூட்டைகள் பாதிக்கப்படுவதை தடுக்க ரூ.52.02 கோடியில் விவசாயிகளுக்கு தார்ப்பாய்கள் வழங்கப்படும்.

    * கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டாரத்தில் பலாப்பழ பயிருக்கான சிறப்பு மையம் ரூ.5 கோடியில் அமைக்கப்படும்.

    * கடலூர் மாவட்டம் வடலூரில் ரூ.1 கோடியில் புதிதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்படும்.

    * பழப்பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்க ரூ.29.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * நவீன முறையில் பூச்சி மருந்து தெளிக்க 4 ட்ரோன்கள் உள்ளிட்ட எந்திரங்கள் வாங்க ரூ.23.29 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * 1,700 நீர் சேமிப்புக் கட்டமைப்புகளில் ரூ.5 கோடியில் பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
    பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட்டில் பனைத்தொழிலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:

    * 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள் மற்றும் ஒரு லட்சம் பனங்கன்றுகளை முழு மானியத்தில் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

    * பனை வெல்லத்தை பனை வாரியம் மற்றும் வேளாண் கூட்டுறவு சங்கங்கள் ஒருங்கிணைந்து நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

    * பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு

    * பனை மரங்களை வேரோடு வெட்டி விற்பதை தடுக்க அரசால் உத்தரவு பிறப்பிக்கப்படும்

    * பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்படும்
    வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக ஆக்குவதில் அரசு தீவிரம் கவனம் செலுத்தும் என வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து  பேசியதாவது:-

    *  2020-21 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகைக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.42.50 வழங்கப்படும்.

    * கரும்பின் பிழிதிறனை அதிகரிக்கும் வகையில் சிறப்பு திட்டத்திற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * 2021-22ஆம் ஆண்டில் பயிர்க்காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.2,327 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோராக்கும் திட்டம் ரூ.2.68 கோடியில் மத்திய-மாநில நிதியில் செயல்படுத்தப்படும்.

    * வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோராக ஆக்குவதில் அரசு தீவிரம் கவனம் செலுத்தும்.
    வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கு என தனிப்பிரிவு உருவாக்கப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து  பேசியதாவது:-

    * தமிழகத்தில் நிகர சாகுபடி பரப்பான 60 விழுக்காடு என்பதை 75 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    * 10 லட்சம் ஹெக்டேர் இருபோக சாகுபடி பரப்பினை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 20 லட்சம் ஹெக்டேரோக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கருணாநிதி


    * கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்.

    * ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் வேளாண் வருவாயை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    * சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணைந்து கூட்டுப்பண்ணை முறை ஊக்குவிக்கப்படும்.

    * சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசன முறைகள் விரிவுபடுத்தப்படும்.

    * பணப்பயிர் வேளாண் ஆக்கத்திறனில் முதல் மூன்று இடங்களுக்குள் தமிழகம் இடம்பிடிக்கும்.

    * தமிழ்நாட்டில் 19.31 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலம் இருப்பது கண்றியப்பட்டுள்ளது.

    * முதலமைச்சர் மானாவாரி நில மேம்பாடு இயக்கத்திற்கு ரூ.146.64 கோடி நிதி ஒதுக்கீடு.

    * வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கு என தனிப்பிரிவு உருவாக்கப்படும்.

    * இயற்கை வேளாண்மை வளர்ச்சி திட்டம் நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்படும்.

    * தோட்டக்கலைத்துறையின் மூலம் தோட்டக்கலை நடவுப்பொருட்கள் உற்பத்தி மேற்கொள்ளப்படும்.

    * தோட்டக்கலை நடவுப்பொருட்கள் உற்பத்தி ரூ.21.8 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

    * ஒரு குவிண்டால் சன்னரக நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை ரூ.70 லிருந்து ரூ.100 ஆக உயர்த்தப்படும்.
    நடப்பாண்டில் 2,500 கிராமங்களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று வேளாண்மைத் துறைக்கான தனி பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:-

    * தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் ஆரம்ப கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது 19.31 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்கள் உள்ளன எனத் தெரியவந்துள்ளது. 

    * தரிசாக உள்ள நிலங்களில் 11.75 லட்சம் ஹெக்டேர் பரப்பில் குறைந்த நீர் செலவில் சாகுபடி செய்யப்படும்

    * வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

    * நடப்பாண்டில் 2,500 கிராமங்களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்

    * சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறி, பழம் பயிரிட்டு நிகர சாகுபடி பரப்பு 75% ஆக உயர்த்தப்படும்

    * தமிழகத்தின் மரபுசார் நெல் ரகங்களை திரட்டி பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது

    * திருவள்ளூர், கடலூர், தஞ்சை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் உள்ள அரசு விதைப்பண்ணைகளில் மரபுசார் விதை நெல்கள் வழங்கப்படும்

    * மரபுசார் விதை நெல் உருவாக்கும் திட்டத்திற்கு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

    * படித்த இளைஞர்கள் சொந்த ஊரிலேயே வேளாண்மையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல 'ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம்' தொடங்கப்படும்.
    வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கு என தனிப்பிரிவு உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று வேளாண்மைத் துறைக்கான தனி பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 

    ‘வேளாண்மை துறையில் இயற்கை வேளாண்மைக்கு என தனிப்பிரிவு உருவாக்கப்படும். இயற்கை வேளாண்மை வளர்ச்சி திட்டம் நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்படும். இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்பட்டு ஊக்கப்படுத்தப்படும்.

    இயற்கை எருவை பயன்படுத்தும் உழவர்களின் பட்டியல், இயற்கை விவசாயிகள் பட்டியல் என வட்டாரம் தோறும் தயாரிக்கப்படும். இயற்கை எருவை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயிகள் என்ற சான்றிதழ் வழங்கப்படும். இயற்கை வேளாண் திட்டத்திற்கு ரூ.33.03 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்’ என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    வேளாண் மக்கள் பெருமிதம் கொள்ளும் வகையில் ‘வேளாண்மை-உழவர் நலத்துறை’ என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். 

    அவர் பேசுகையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டை காணிக்கையாக்குவதாக குறிப்பிட்டார்.

    ‘வேட்டையாடித் திரிந்த மனிதனை விளைநிலத்தில் ஊன்றி நாகரிகப்படுத்தியது வேளாண்மை புரட்சி. தன் உணவைத் தானே உற்பத்தி செய்யும் திறனை அடைந்ததும் மனிதன் சிந்திக்கத் தொடங்கினான். நிச்சயமில்லாத வாழ்க்கையில் இருந்து நிம்மதியான வாழ்க்கைக்கு கொண்டு சேர்த்தது வேளாண்மையே. 10,000 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த புரட்சியே மனிதனைப் பண்பட்டவனாக மாற்றியது. அமுதசுரபிகளாக மண்ணை மாற்றும் மகத்துவம் பெற்றவர்கள் உழவர்கள். நாட்டுக்கு உயர்வைத் தரும் கூட்டுறவு முக்கியம். வேளாண்மையை தனித்து பிரித்து பார்க்க முடியாது. 

    வேளாண் மக்கள் பெருமிதம் கொள்ளும் வகையில் ‘வேளாண்மை-உழவர் நலத்துறை’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது. 18 மாவட்ட விவசாயிகளின் கருத்துக்களை அதிகாரிகளுடன் சேர்ந்து கேட்டறிந்தேன். வேளாண் வணிகர்களின் கோரிக்கைகளையும் கேட்டபின் வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது’ என்றும் அமைச்சர் பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.
    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
    சென்னை:

    தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தபிறகு, ஜூன் 21-ந்தேதி சட்டசபையின் முதல் கூட்டம் தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. அதன்பின்னர் நேற்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.  மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். 

    இந்த பட்ஜெட்டில் துறைவாரியான நிதி ஒதுக்கீடு, பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. முழுக்க முழுக்க இந்த பட்ஜெட் காகிதமில்லா இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.

    கூட்டத்தொடரின் 2ம் நாளான இன்று, தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். 

    இந்த பட்ஜெட்டில் வேளாண் துறை, கால்நடைத்துறை, பால்வளத்துறை போன்றவற்றில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள்,  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

    இ-பட்ஜெட் என்பதால் அமைச்சர்  பட்ஜெட்டை வாசிக்கும்போது, அந்த வாசகங்கள், எம்.எல்.ஏ.க்களின் மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர் திரை மூலம் ஓடுகிறது. அதன்மூலம் பட்ஜெட் தொகுப்பை எம்எல்ஏக்கள் கவனித்தனர்.
    விளையாட்டு உட்கட்டமைப்புகளை பராமரிக்க சிறப்பு நிதியளிக்கும் நடைமுறை செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  அதில், விளையாட்டு வசதிகள் இல்லாத அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள விளையாட்டு உட்கட்டமைப்புகளை பராமரிக்க ஒரு சிறப்பு நிதியளிக்கும் நடைமுறை செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை அமைக்க விரிவான சாத்திய கூறுகள், அறிக்கைகள் தயாராக உள்ளன.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-

    2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தில் கோடம்பாக்கம்-பூந்தமல்லி இடையே பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. 4 வருடத்தில் பணிகள் முடிக்கப்பட்டு சேவை தொடங்கும்.

    விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரெயில் பணி விரைவில் தொடங்கும். 2026-க்குள் 2-ம் கட்டப்பணி நிறைவு செய்யப்படும்.

    மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை அமைக்க விரிவான சாத்திய கூறுகள், அறிக்கைகள் தயாராக உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.2,350 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.
    சென்னை:

    தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். பட்ஜெட் உரையில் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * இரண்டுக்கும் குறைவான குழந்தைகள் உள்ள அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை 1-7-2021 முதல் முன்தேதியிட்டு செயல்படுத்தப்படும்.

    * அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 2022 ஏப்ரல் 1 முதல் வழங்கப்படும்.

    * அம்ருத் திட்டத்திற்கு ரூ.1,450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
    * கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் வடிகாலுக்கு ரூ.87 கோடி நிதி ஒதுக்கீடு.
    * பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் நடைபெறும் உயிரியல் அகழ்ந்தெடுக்கும் பணி விரைவுபடுத்தப்படும்
    *சென்னையில் 3 இடங்களில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு
    * ஊரக புத்தாக்க திட்டம் சீரமைக்கப்பட்டு ரூ.212.69 கோடி செலவில் செயல்படுத்தப்படும்
    * நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள மண் சாலைகள் தரம் உயர்த்தப்படும்
    * சென்னையிலுள்ள நீர்வழிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் திட்டம் ரூ.2,371 கோடியில் தீவிரமாக செயல்படுத்தப்படும்

    பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர்

    * அனைத்து நகரங்களிலும் 30 மீட்டர் இடைவெளியில் ஆற்றல் திறன்மிக்க தெருவிளக்குகள் நிறுவப்படும்
    * கணேசபுரம், கொன்னூர் நெடுஞ்சாலை-ஸ்ட்ரான்ஸ் சாலை, தெற்கு உஸ்மான் சாலையில் ரூ.335 கோடியில் மேம்பாலங்கள்
    * ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.2,350 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
    * தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு ரூ.3,954.44 கோடி நிதி ஒதுக்கீடு
    * நகர்ப்புற ஏழைகளுக்கான வீட்டுவசதி தேவையை உறுதிசெய்ய 9,53,446 குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும்
    * தமிழக அரசின் பட்ஜெட்டில் நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899.17 கோடி நிதி ஒதுக்கீடு
    * ஊரக புத்தாக்க திட்டம் சீரமைக்கப்பட்டு ரூ.212.69 கோடி செலவில் செயல்படுத்தப்படும்
    * அடுத்த 10 ஆண்டுகளில் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட தலைமையகத்துடன் இணைக்க 2,200 கி.மீ.க்கு 4 வழிச்சாலைகள்
    * புதிதாக பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி ஒதுக்கீடு
    * மகளிர் இலவச பயணத்திற்கு ரூ.703 கோடி ஒதுக்கீடு

    * 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையானது 1,303 ஆக உயர்த்தப்படும்
    * தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகம் அமைக்க முதற்கட்டமாக ரூ.2 கோடி ஒதுக்கீடு
    * மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு மொத்தம் ரூ.18,933.20 கோடி நிதி ஒதுக்கீடு
    * அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்திற்கு மானியம் வழங்க ரூ.215.64 கோடி நிதி ஒதுக்கீடு
    * சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.165 கோடியில் நிதிநுட்ப நகரம் உருவாக்கப்படும்
    * திருவள்ளூர் மாநல்லூரில் மின் வாகனப் பூங்கா, ஒரகடத்தில் மருத்துவ சாதனங்கள் பூங்கா அமைக்கப்படும்
    * ஓசூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை
    * சென்னை காவனூரில் 2வது கட்டமாக நிதிநுட்ப நகர் உருவாக்கப்படும்
    * தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி முதலீட்டை ஊக்குவிக்க ரூ.1000 கோடியில் அறைகலன்களுக்கான சர்வதேச பூங்கா
    * விழுப்புரம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் டைடல் பூங்காங்கள் உருவாக்கப்படும்
    * ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு
    * மகளிர் கல்வி, முன்னேற்றத்தை ஊக்குவிக்க ரூ.762.23 கோடி நிதி ஒதுக்கீடு
    * இலவச பள்ளிச்சீருடைகள் விநியோக திட்டத்திற்கு ரூ.409.30 கோடி நிதி ஒதுக்கீடு.
    ×