என் மலர்tooltip icon

    கால்பந்து

    • பரபரப்பான இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் அரியானாவை வீழ்த்தியது.
    • அர்ப்பணிப்பு, திறமை மற்றும் குழுவாக இணைந்து செய்த முயற்சி பெருமை அளிப்பதாக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    பெண்களுக்கான தேசிய சீனியர் கால்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அமிர்தசரஸ் குரு நானக் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தமிழக அணி, அரியானா அணியை 2-1 என்ற கோல்கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது.

    நிறைவு விழாவில் இந்திய கால்பந்து சம்மேளன தலைவா கல்யாண் சவுபே கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார். பஞ்சாப் கால்பந்து சங்க துணை தலைவர் பிரியா தாபார் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    முதலமைச்சர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 27வது சீனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக மகளிர் அணி சிறப்பான வெற்றியை பெற்றதற்கு பாராட்டுக்கள். தோல்வியுறாத சாதனையுடன் நீங்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதால், இந்த சாதனை முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் குழுவாக இணைந்து செய்த முயற்சி பெருமை அளிக்கிறது. நீங்கள் தொடர்ந்து உயர்ந்து நம் மாநிலத்திற்கு மேலும் பெருமை சேர்க்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கூறியிருப்பதாவது:-

    தேசிய சீனியர் மகளிர் கால்பந்தாட்ட சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழ்நாடு மகளிர் கால்பந்தாட்ட அணிக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 2 - 1 என்ற கோல் கணக்கில் ஹரியானாவை வீழ்த்தி தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித்தந்துள்ள சந்தியா, இந்துமதி உட்பட அத்தனை வீராங்கனையரையும் பாராட்டுகிறேன்.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயின்ற வீராங்கனைகளை அதிகம் கொண்ட தமிழ்நாடு மகளிர் கால்பந்தாட்ட அணி, இன்னும் பல சாதனைகளை புரியட்டும். கழக அரசு அவர்களுக்கு துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஏ பிரிவில் இன்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, குவைத் அணிகள் மோதின.
    • ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்க, போட்டி டிரா ஆனது.

    பெங்களூரு:

    14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஏ பிரிவில் இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, குவைத் அணிகள் மோதின.

    தொடக்கம் முதலே இந்திய அணி சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில் கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதியிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. இதனால் ஆட்டத்தின் 90-வது நிமிடம் முடிந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் 2-வது நிமிடத்தில் தடுப்பாட்டத்தில் இந்திய அணியின் அன்வர் அலி செய்த தவறால் பந்து கோல் வளைக்குள் செல்ல குவைத் அணிக்கு கோல் வழங்கப்பட்டது. ஆட்ட நேர முடிவில் 1-1 என போட்டி டிராவில் முடிந்தது.

    ஏற்கனவே இந்தியா மற்றும் குவைத் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சுனில் சேத்ரி 91-வது சர்வதேச கோலை பதிவு செய்துள்ளார்
    • ‘ஏ’ பிரிவில் இருந்து குவைத், இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்

    14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா- நேபாளம் அணிகள் மோதின. முதல்பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    2-வது பாதிநேர ஆட்டத்தில் இந்தியாவின் கை ஓங்கியது. ஆட்டத்தின் 64-வது நிமிடத்தில் இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்தார். இதனால் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. சுனில் சேத்ரிக்கு இது 91-வது சர்வதேச கோலாகும்.

    அடுத்த 6-வது நிமிடத்தில் இந்தியா மேலும் ஒரு கோல் அடித்தது. சேத்ரி கொடுத்த பாஸை மகேஷ் சிறப்பான முறையில் கோலாக்கினார். அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால் இந்தியா 2-0 என வென்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 'ஏ' பிரிவிலா் இடம் பிடித்துள்ள மற்றொரு அணியான குவைத்தும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    • நமது வாழ்க்கையின் ஒரு பகுதியான நீ என்னுடன் வேண்டும்.
    • புருனா, நான் ஏற்கனவே எனது தவறுகள், தேவையற்ற சர்ச்சைகளுக்காக மன்னிப்பு கேட்டு விட்டேன்.

    பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், தமது கர்ப்பிணி காதலியிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். இதனை சமூக ஊடக பக்கத்தில் தமது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பகிர்ந்துள்ளார். 31 வயதான நெய்மர் தமது காதலி புருனா பியான்கார்டி-ஐ தாம் கனவு கண்டிருந்த பெண் என கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் இதனை உனக்காகவும் உனது குடும்பத்துக்காகவும் செய்கிறேன். இது பிரச்சினைகளை தீர்க்குமா என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் முயற்சி செய்ய விரும்புகிறேன் என்பதை உறுதியாக தெரிவிக்கிறேன். நமக்கான தேவை, நம் குழந்தை மீது நாம் வைத்திருக்கும் அன்பு வெல்லும். நாம் இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதல் நம்மை பலப்படுத்தும்.

    நமது வாழ்க்கையின் ஒரு பகுதியான நீ என்னுடன் வேண்டும். அதுமட்டுமின்றி, உங்களை பற்றி வெளிவந்த செய்திகள் உங்களை எவ்வளவு காயப்படுத்தியது, நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள் என்பது எனக்கு தெரியும். இந்த சூழலில் உனக்கு ஆதரவாக இருக்கிறேன்.

    களத்தின் உள்ளே மற்றும் வெளியே நான் பல தவறுகளை செய்திருக்கிறேன். நான் செய்த தவறுக்கு தினந்தோறும் மன்னிப்பு கேட்க தயங்குகிறேன். வீட்டில் எனது தனிமை, குடும்பத்தார், நண்பர்களிடம் மட்டுமே நான் எனது தவறுகளை திருத்திக்கொள்ள முடியும்.

    இவை அனைத்தும் என் வாழ்வில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நபரை அதிக அளவில் பாதித்துள்ளது. என்னுடன் பயணிக்க வேண்டும் என்று நான் விரும்பிய பெண், எனது குழந்தையின் தாய் இதில் அடங்குவர். இது எனது குடும்பத்தை காயப்படுத்தி இருக்கிறது.

    அவள் சமீபத்தில்தான் கருவுற்று மகிழ்ச்சியான காலக்கட்டத்தை துவங்கி இருக்கிறாள். புருனா, நான் ஏற்கனவே எனது தவறுகள், தேவையற்ற சர்ச்சைகளுக்காக மன்னிப்பு கேட்டு விட்டேன். இதற்காக பொதுவெளியில் பேச வேண்டும் என்று கருதுகிறேன். ஒரு தனிப்பட்ட விஷயம் பொதுவெளிக்கு வந்து விட்டால், அதற்கான மன்னிப்பும் பொதுவெளியிலேயே கேட்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    நெய்மரின் இந்த பதிவுக்கு ஆதரவு குவிந்து வருகிறது. அவர் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே 7 மில்லியன் ரசிகர்கள் தங்கள் ஆதரவை பதிவு செய்துள்ளனர்.

    • தனது 200 சர்வதேச போட்டியில் அவர் கோல் அடித்து முத்திரை பதித்தார்.
    • அவர் 123-வது சர்வதேச கோலை பதிவு செய்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

    ரெய்க்ஜவிக்:

    ஐரோப்பிய கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 14 முதல் ஜூலை 14 வரை ஜெர்மனியில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்ஜவிக்கில் நடந்த யூரோ தகுதி சுற்று போட்டி ஒன்றில் போர்ச்சுக்கல்- ஐஸ்லாந்து அணிகள் மோதின.

    போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த உலகின் முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இதில் விளையாடினார். அவருக்கு இது 200-வது சர்வதேச போட்டியாகும். இதன் மூலம் ரொனால்டோ புதிய சாதனை படைத்தார். 200 சர்வதேச போட்டிகளில் ஆடிய முதல் வீரர் ஆவார்.

    போர்ச்சுக்கல் நாட்டுக்காக 200 போட்டிகளில் விளையாடிய 38 வயதான அவருக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.

    123- வது கோல் இந்த ஆட்டத்தில் போர்ச்சுக்கல் 1-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை தோற்கடித்தது. 89-வது நிமிடத்தில் ரொனால்டோ இந்த கோலை அடித்தார்.

    தனது 200 சர்வதேச போட்டியில் அவர் கோல் அடித்து முத்திரை பதித்தார். அவர் 123-வது சர்வதேச கோலை பதிவு செய்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக குவைத் வீரர் அல் முதாவா 196 சர்வதேச போட்டியில் விளையாடி உள்ளார்.

    அர்ஜென்டினாவை சேர்ந்த உலகின் மற்றொரு முன்னணி கால்பந்து வீரரான லியோனல் மெஸ்சி 175 சர்வதேச போட்டியில் பங்கேற்று 10-வது இடத்திலும், 103 கோல்கள் அடித்து 3-வது இடத்திலும் உள்ளார்.

    • பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்தார்.
    • இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை மறுதினம் நேபாளத்தை சந்திக்கிறது.

    பெங்களூரு:

    14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீவரா ஸ்டேடியத்தில் நேற்று மாலை தொடங்கியது. ஜூலை 4-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, குவைத், நேபாளம், பாகிஸ்தான் அணிகளும், 'பி' பிரிவில் லெபனான், மாலத்தீவு, பூடான், வங்காளதேசம் அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதியை எட்டும்.

    இதில் நேற்று இரவு நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது. மழைக்கு மத்தியில் இந்த போட்டி அரங்கேறியது.

    இந்த போட்டியில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி தொடர்ச்சியாக 3-வது கோலை அடித்து 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார். அத்துடன் சர்வதேச போட்டியில் அவர் அடித்த 90-வது கோலாக இது பதிவானது.

    இதன் மூலம் சுனில் சேத்ரி (90 கோல்கள், 138 ஆட்டங்கள்) சர்வதேச கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் மலேசியாவின் மோக்தார் தஹாரியை (89 கோல், 142 ஆட்டங்கள்) பின்னுக்கு தள்ளி 4-வது இடத்துக்கு முன்னேறினார். இந்த பட்டியலில் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 123 கோல்களுடன் (200 ஆட்டங்கள்) முதலிடத்திலும், ஈரானின் அலி டாய் (109 கோல்) 2-வது இடத்திலும், அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி (103 கோல்) 3-வது இடத்திலும் உள்ளனர். மேலும் அதிக கோல்கள் அடித்த ஆசிய வீரர்களில் சுனில் சேத்ரி 2-வது இடம் வகிக்கிறார்.

    இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை மறுதினம் நேபாளத்தை சந்திக்கிறது. 

    • பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் ஷாஜாத் அன்வரும் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
    • ஸ்டிமாக்கிற்கு ரெட் கார்டும், பாகிஸ்தானின் மேலாளர் ஷாஜாத் அன்வாருக்கு மஞ்சள் அட்டையும் வழங்கப்பட்டது.

    பெங்களூருவில் இன்று தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கியது. இந்த போட்டியை இந்தியா தலைமையில் நடைபெறுகிறது. இதில், இந்தியா உள்பட 8 அணிகள் கலந்துகொள்கின்றன.

    இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, குவைத், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. 'பி' பிரிவில் வங்கதேசம், பூடான், லெபனான், மாலத்தீவுகள் ஆகிய அணிகள் உள்ளன.

    இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்தித்தது.

    ஆட்டம் தொடங்கியது முதல் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி முன்னிலை பெற்றது.

    இதற்கிடையே, போட்டியின் முதல்பாதியின் இறுதி நிமிடங்களில் இந்தியா- பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது.

    ஆடுகளத்தில், இந்திய தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக், இக்பாலை த்ரோ-இன் எடுக்க விடாமல் தடுத்து, அவரது கையிலிருந்து பந்தை தட்டிச் சென்றார். இது இரு தரப்பு வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது இரு அணிகளின் வீரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் ஷாஜாத் அன்வரும் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

    பின்னர், போட்டியின் நிர்வாகிகள் தலையிட்டு வீரர்களை அமைதிப்படுத்தி மீண்டும் ஆட்டத்தை தொடங்கினர்.

    இதைதொடர்ந்து, ஸ்டிமாக்கிற்கு ரெட் கார்டும், பாகிஸ்தானின் மேலாளர் ஷாஜாத் அன்வாருக்கு மஞ்சள் அட்டையும் வழங்கப்பட்டது.

    இந்த ஆட்டத்தின் முடிவில் 4-0 என பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி சுனில் சேத்ரி கோல் அடித்தார்.
    • 81வது நிமிடத்தில் இந்திய அணியின் உதாண்டா சிங் கோல் அடித்தார்.

    பெங்களூருவில் இன்று தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கியது. இந்த போட்டியை இந்தியா தலைமையில் நடைபெறுகிறது. இதில், இந்தியா உள்பட 8 அணிகள் கலந்துகொள்கின்றன.

    இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, குவைத், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. 'பி' பிரிவில் வங்கதேசம், பூடான், லெபனான், மாலத்தீவுகள் ஆகிய அணிகள் உள்ளன.

    இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்தித்தது.

    ஆட்டம் தொடங்கியது முதல் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி முன்னிலை பெற்றது.

    தொடர்ந்து 16வது நிமிடம் மற்றும் 74வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி சுனில் சேத்ரி கோல் அடித்தார். இது அவரது ஹாட்ரிக் கோல் ஆகும் .

    தொடர்ந்து 81வது நிமிடத்தில் இந்திய அணியின் உதாண்டா சிங் கோல் அடித்தார். பதில் கோல் அடிக்க பாகிஸ்தான் அணி போராடி முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் 4-0 என பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அசத்தலாக வெற்றி பெற்றது.

    • எம்பாப்பே 55-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார்
    • 69-வது நிமிடத்தில் கிரீஸ் வீரர் ரெட் கார்டு பெற்று வெளியேறினார்

    ஐரோப்பிய யூனியனில் உள்ள கால்பந்து நாடுகளுக்கு இடையில் தகுதிச்சுற்று நடைபெற்று யூரோ கோப்பைக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டும். 2023-24-ம் ஆண்டு யூரோ கோப்பைக்கான தகுதிக்சுற்று தற்போது நடைபெற்றது வருகிறது.

    இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ்- கிரீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    ஆட்டம் தொடங்கிய வினாடியில் இருந்து இரு அணி வீரர்களும் எதிரணி வீரர்களை கோல் அடிக்கவிடக் கூடாது என்ற நோக்கத்தில் விளையாட முதல் பாதி நேர ஆட்டத்தில் இரண்டு அணியும் கோல் அடிக்கவில்லை.

    2-வது பாதி நேர ஆட்டத்திலும் இரு அணி வீரர்கள் கோல் அடிக்க திணறினர். இறுதியில் 55-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி கிலியான் எம்பாப்வே கோல் அடித்தார். ஆகவே, பிரான்ஸ் 55-வது நிமிடம் முடிவில் 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.

    69-வது நிமிடத்தில் கிரீஸ் வீரர் மவ்ரோபனாஸ் ரெட் கார்டு பெற்று வெளியேறினார். இதனால் கிரீஸ் 10 வீரர்களுடன் விளையாடியது. என்றாலும் பிரான்ஸ் அணியை மேலும் கோல் அடிக்கவிடாமல் பார்த்துக்கொண்டது. கிரீஸ் அணியாலும் ஆட்டம் முடியும்வரை கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பிரான்ஸ் 1-0 என வெற்றி பெற்றது.

    'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள பிரான்ஸ் நான்கு போட்டிகளில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்றுள்ளது. கிரீஸ் 3-ல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    • இன்டர்கான்டினென்டல் கோப்பை போட்டியை நடத்துவது பெருமைக்குரிய விஷயம் என நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
    • ஒடிசா அரசுக்கு, அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் சவுபே நன்றி தெரிவித்தார்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு மைதானத்தில் ஹீரோ இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றது. நேற்று இரவு நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி லெபனானை வீழ்த்தியது. ஆட்டத்தின் சிறப்பான அம்சமாக கேப்டன் சுனில் சேத்ரியின் 87வது சர்வதேச கோல் மூலமாகவும், லாலியன்சுவாலா சாங்டேவின் ஸ்டிரைக் மூலமாகவும் லெபனானை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இன்டர்கான்டினென்டல் கோப்பையை வென்றது.

    இந்நிலையில், ஹீரோ இன்டர்கான்டினென்டல் கோப்பையை வென்ற, இந்திய ஆண்கள் கால்பந்து அணிக்கு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    "இந்த மதிப்புமிக்க இன்டர்கான்டினென்டல் கோப்பை போட்டியை நமது மாநிலம் நடத்துவது பெருமைக்குரிய விஷயம். கடுமையான போட்டியை எதிர்கொண்டு இந்தியா வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். ஒடிசாவில் இன்னும் பல கால்பந்து நிகழ்வுகளை ஒடிசா மற்றும் இந்தியாவில் நடத்தி இந்த விளையாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்." என்று நிறைவு விழாவின் போது பட்நாயக் கூறினார்.

    போட்டியை வெற்றிகரமாக நடத்திய ஒடிசா அரசுக்கு, அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் சவுபே நன்றி தெரிவித்தார்.

    "இதை விட ஒரு சிறப்பான ஹீரோ இன்டர்கான்டினென்டல் கோப்பையை நாங்கள் சிறப்பாக நடத்தியிருக்க முடியாது. பங்கேற்கும் அணிகளுக்கு அனைத்து ஆதரவையும் விருந்தோம்பலையும் வழங்கியதற்காகவும், ஒரு அற்புதமான போட்டியை நடத்தியதற்காகவும் ஒடிசா அரசுக்கு நன்றி," என்று அவர் கூறினார்.

    • ஆட்டம் தொடங்கிய 3 நிமிடத்தில் ஜிராடு கோல் அடித்தார்
    • பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி எம்பாப்பே கோலாக்கினார்

    ஐரோப்பா சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் முன்னணி அணியான பிரான்ஸ் ஜிப்ரால்டரை எதிர்கொண்டது. இதில் பிரான்ஸ் 3-0 என வெற்றி பெற்றது.

    ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் கிங்ஸ்லி வழங்கிய பந்தை சிறப்பான முறையில் கோலாக்கினார் ஜிராடு. பிரான்ஸ் அணிக்காக அவர் அடித்த 54-வது கோல் இதுவாகும்.

    அதன்பிறகு முதல் பாதிநேரம் ஆட்டம் முடியும் தருவாயில் இருக்கும்போது பெனால்டி வாய்ப்பு மூலம் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் பிரான்ஸ் அணிக்காக எம்பாப்வே அடித்த கோல்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

    2-வது பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் மேலும் ஒரு கோல் அடிக்க 3-0 என வெற்றி பெற்றது.

    நேற்று நடைபெற்ற மற்ற ஆடடங்களில் பின்லாந்து, இங்கிலாந்து, துருக்கி, உக்ரைன், கிரீஸ், அர்மேனியா, டென்மார்க், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், கஜகஸ்தான் அணிகள் வெற்றி பெற்றன.

    'பி' பிரிவில இடம்பிடித்துள்ள பிரான்ஸ் 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றிபெற்று முதல் இடம் வகிக்கிறது.

    • அர்ஜென்டினா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டி நேற்று நடந்தது.
    • மெஸ்சியின் 103-வது சர்வதேச கோலாக இது பதிவானது.

    பீஜிங்:

    உலக சாம்பியன் அர்ஜென்டினா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டி சீன தலைநகர் பீஜிங்கில் நேற்று நடந்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

    அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி ஆட்டம் தொடங்கிய 79-வது வினாடிக்குள் சூப்பராக கோல் அடித்து அசத்தினார். அவரது கால்பந்து வாழ்க்கையில் அடிக்கப்பட்ட அதிவேக கோல் இதுதான்.


    இதற்கு முன்பு கிளப் போட்டியில் 127-வது வினாடியில் பந்தை வலைக்குள் அனுப்பியதே அவரது மின்னல்வேக கோலாக இருந்தது. மொத்தத்தில் மெஸ்சியின் 103-வது சர்வதேச கோலாக இது பதிவானது.

    ×