என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • கேரி கிர்ஸ்டன், கில்லெஸ்பி பதவி விலகியதால் ஆகிப் ஜாவித் இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
    • பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியில் மோசமாக விளையாடியதால் இவரை விடுவிக்க பிசிபி முடிவு செய்துள்ளது.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்ததால், இந்தியா விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது.

    அதன்படி கராச்சி, லாகூர், ராவல்பிண்டி மற்றும் துபாயில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. "ஏ" பிரிவில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் இடம் பிடித்துள்ளன.

    போட்டியை நடத்தும் பாகிஸ்தான் எளிதாக அரையிறுதிக்கு முன்னேறும். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 60 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் 240 ரன் மட்டுமே அடித்தது. பின்னர் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

    இதனால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்துள்ளது. இன்றைய போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக நியூசிலாந்து வெற்றி பெற்றால், இந்தியா மற்றும் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறிவிடும். பாகிஸ்தானில் தொடரில் இருந்து வெளியேற்றப்படும்.

    முதல் இரண்டு போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், பாகிஸ்தான் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளர் மற்றும் துணை பயிற்சியாளரை என ஒட்டுமொத்தமாக அனைவரையும் பதவியில் இருந்து விடுவிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த வருடம் பாகிஸ்தான் ஒயிட் பால் அணிகளுக்கு தென்ஆப்பிரிக்காவின் கேரி கிர்ஸ்டன் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். பின்னர் ஆஸ்திரேலியாவின் கில்லெஸ்பி ரெட் பால் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். இதனால் அகிப் ஜாவித் இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

    பாகிஸ்தான் அணி மார்ச் 16-ந்தேதி முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரை நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின்போது புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

    வெளிநாட்டு பயிற்சியாளர்கள் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு விருப்பம் இல்லை. இதனால் முன்னாள் வீரர்களில் ஒருவரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க வாய்ப்புள்ளது.

    • பிரேஸ்வெல் 10 ஓவரில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார்.
    • ஷான்டோ 110 பந்தில் 9 பவுண்டரியுடன் 77 ரன்கள் விளாசினார்.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 6-வது போட்டி ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் "ஏ" பிரிவில் இடம் பிடித்துள்ள வங்கதேசம்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

    டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்தது. தன்ஜித் ஹசன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 8.2 ஓவரில் 45 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. தன்ஜித் ஹசன் 24 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஷான்டோ உடன் மெஹிதி ஹசன் மிராஸ் ஜோடி சேர்ந்தார். மெஹிதி ஹசன் மிராஸ் 14 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    மறுமுனையில் ஷான்டோ சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இதற்கிடையே தவ்ஹித் ஹிரிடோய் 7 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹிம் 2 ரன்னிலும், மெஹ்முதுல்லா 4 ரன்னிலும் வெளியேறினர்.

    இதனால் 118 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்து திணறியது. 6-வது விக்கெட்டுக்கு ஷான்டோ உடன் ஜாகர் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஷோடி தாக்குப்பிடித்து விளையாடியது. என்றாலும் ஷான்டோ 110 பந்தில் 9 பவுண்டரியுடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது வங்கதேசம் 37.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின் ஜாகர் அலியுடன் ஜோடி சேர்ந்த ரிஷாத் ஹொசைன் 25 பந்தில் 26 ரன்கள் அடித்தார். ஜாகர அலி இறுதி வரை போராடி 55 பந்தில் 45 ரன்கள் அடிக்க, வங்கதேசம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்துள்ளது.

    நியூசிலாந்து அணி சார்பில் மைக்கேல் பிரேஸ்வெல் 10 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ஓ'ரூர்கே 10 ஓவரில் 48 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து பேட்டிங் செய்ய இருக்கிறது.

    • சாம்பியன்ஸ் டிராபியில் 10,000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்பார்வையிட்டு வருகிறார்.

    2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.

    1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் ஐ.சி.சி. தொடரை நடத்துகிறது. 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை அந்நாடு நடத்தியது. அதன் பிறகு பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அந்நாட்டில் ஐ.சி.சி. கிரிக்கெட் தொடர்கள் நடைபெறாமல் இருந்தது.

    லாகூர், கராச்சி மற்றும் ராவல்பிண்டியில் உள்ள மைதானங்கள் மற்றும் கிரிக்கெட் அணியினர் தங்கும் ஓட்டல்களில் உயர் கமாண்டோ பிரிவுகள் உட்பட 10,000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (PCB) தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வி, போட்டிக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டு வருகிறார்.

    இந்நிலையில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை பார்க்க வரும் வெளிநாட்டு ரசிகர்களை கடத்த ISKP என்ற பயங்கரவாத அமைப்பு திட்டம் போட்டுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஏ பிரிவில் உள்ள நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
    • இப்போட்டியில் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

    ஐ.சிசி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 6-வது லீக் ஆட்டம் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் இன்று நடைபெறுகிறது. இதில் ஏ பிரிவில் உள்ள நியூசிலாந்து - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

    இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

    • முதல் விக்கெட்டை ஹர்திக் பாண்ட்யா எடுத்தார்.
    • வாட்ச்-இன் விலை 8 லட்சம் டாலர்கள் என்று தகவல்.

    துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 5வது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. துவக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட்டை ஹர்திக் பாண்ட்யா எடுத்தார்.

    நேற்றைய போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 8 ஓவர்கள் பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா வெறும் 31 ரன்களை மட்டுமே கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பிறகு பேட்டிங்கின் போது பாண்ட்யா 6 பந்துகளில் 8 ரன் எடுத்த அவுட் ஆனார்.

    இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது ஹர்திக் பாண்ட்யா அணிந்திருந்த வாட்ச் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. அதன்படி ஹர்திக் பாண்டயா நேற்றைய போட்டியின் போது அணிந்திருந்த வாட்ச்-இன் விலை 8 லட்சம் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 6.92 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

    உலகளவில் மிகவும் பெயர்பெற்ற அந்த வாட்ச்-ஐ காண்பது அரிது. இந்த வாட்ச் உண்மையில் புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் ரஃபேல் நடாலுக்காக உருவாக்கப்பட்டது. இந்த வாட்ச் மொத்தத்தில் 50 யூனிட்கள் மட்டுமே உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    சிறப்பான பந்துவீச்சு மற்றும் ஆடம்பர வாட்ச் தவிர்த்து நேற்றைய போட்டியில் வைத்து ஹர்திக் பாண்ட்யா சர்வதேச போட்டிகளில் 200 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை கடந்தார். 

    • இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றன.
    • இரு அணிகளிலும் திறமையான வீரர்கள் இருப்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    ஐ.சிசி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 7-வது லீக் ஆட்டம் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் நாளை (25-ந்தேதி) நடக்கிறது. இதில் பி பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றன. இதனால் 2-வது வெற்றியை பெற்று அரை இறுதி வாய்ப்பை பெறப்போவது ஆஸ்திரேலியாவா? தென் ஆப்பிரிக்காவா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்டீவ் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு எதிராக 352 ரன் இலக்கை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜோஷ் இங்கிலிஷ் , மேத்யூ ஷார்ட், மேக்ஸ்வெல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 315 ரன்களை குவித்து 102 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரியான் ரிக் கெல்டன், கேப்டன் பவுமா, மர்க்கிராம், வான்டர் டூசன் ஆகியோர் பேட்டிங்கிலும், ரபடா, நிகிடி, வியான் முல்டர் பந்து வீச்சிலும் திறமையை வெளிப்படுத்தி இருந்தனர்.

    இரு அணிகளிலும் திறமையான வீரர்கள் இருப்பதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி.
    • இந்திய அணி விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி.

    சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த முறை சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. இந்த தொடரில் உலகம் முழுவதிலும் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

    இந்தப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து, பாகிஸ்தான் அணி தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கேள்விக்குறியாகி விட்டது. தொடரில் ஏற்கனவே நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி இருந்தது. தற்போது இந்திய அணியிடமும் தோல்வியை தழுவி இருக்கிறது.

    தொடரின் இரு போட்டிகளில் தோல்வி அடைந்ததை அடுத்து அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில், முற்றிலுமாக பறிபோக வில்லை. பாகிஸ்தான் அணி வங்காளதேசம் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் வெற்றி பெற்று, நாக் அவுட் சுற்றில் மற்ர அணிகளின் முடிவுகள் அடிப்படையில், அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.

    அதன்படி நியூசிலாந்து அணி வங்காளதேசம் மற்று்ம இந்தியா அணிகளுடன் அடுத்து விளையாட உள்ள போட்டிகளில் தோல்வியை தழுவ வேண்டும். பாகிஸ்தான் அணிக்கு தனக்கு எஞ்சியுள்ள கடைசி போட்டியில் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு செய்யும் போது மூன்று போட்டிகளின் முடிவில் அவர்களுக்கு 2 புள்ளிகள் கிடைக்கும்.

    அப்போது, நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகளும் இதேபோன்ற நிலையில் இருக்கும். இந்த சூழல் உருவாகும் பட்சத்தில் நெட் ரன்-ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உருவாகலாம்.

    நேற்றைய போட்டியை பொருத்தவரை முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு விராட் கோலி சதம் அடிக்க 42.3 ஓவர்களில் 244 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.

    முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புகள் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டன. பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியுமா என்பதை அடுத்தடுத்த போட்டிகளின் முடிவில் தான் தெரியவரும். 

    • ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்தார்.
    • ஒருநாள் கிரிக்கெட்டில் இது கோலியின் 51-வது சதம் ஆகும்.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் துபாயில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அடுத்து ஆடிய இந்தியா விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் 244 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கு முன்னேறியது. விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருதை விராட் கோலி வென்றார்.

    இந்நிலையில், ஐ.சி.சி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 முறை ஆட்ட நாயகன் விருதை வென்று விராட் கோலி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

    அதன்படி, 2012 டி20 உலகக்கோப்பை, 2015 உலகக் கோப்பை ஒருநாள் போட்டி, 2016 டி20 உலகக் கோப்பை, 2022 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய ஐசிசி தொடரில் ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்.

    • 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜிம்பாப்வே 1-0 என முன்னிலை வகிக்கிறது.
    • இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

    ஹராரே:

    அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.

    முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என அயர்லாந்தும், ஒருநாள் தொடரை 2-1 என ஜிம்பாப்வேவும் கைப்பற்றின.

    இதையடுத்து, இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி ஹராரேவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் லோர்கன் டக்கர் 46 ரன்கள் எடுத்தார்.

    ஜிம்பாப்வே சார்பில் ட்ரெவர் குவாண்டு 3 விக்கெட்டும், ரிச்சர்ட் ங்வாரா, சிக்கந்தர் ராசா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, 138 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. தொடக்கத்தில் ஜிம்பாப்வே அணி விரைவில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சிக்கந்தர் ராசா 22 ரன், ரியான் பர்ல் 27 ரன் எடுத்து அவுட்டாகினர்.

    அந்த அணியின் டோனி முன்யோங்கா ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினார்.

    இறுதியில் ஜிம்பாப்வே அணி 19.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்து போராடி வெற்றி பெற்றது. டோனி முன்யோங்கா 43 ரன் எடுத்து களத்தில் இருந்தார். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என ஜிம்பாப்வே முன்னிலை வகிக்கிறது.

    இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

    • சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு 242 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்
    • நிதானமாக விளையாடிய கோலி சதம் அடித்து அசத்தினார்.

    இந்த தொடரின் 5-வது லீக் போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷகீல் 62 ரன்களும் ரிஸ்வான் 46 ரன்களும் அடித்தனர்.

    இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும் பாண்ட்யா 2 விக்கெட்டுகளும் அக்சர், ஜடேஜா, ஹர்ஷித் ராணா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து, 242 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 42.3 ஓவர்கள் முடிவில் 244 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அபாரமாக விளையாடிய கோலி சதம் அடித்து அசத்தினார். ஷ்ரேயாஸ் அரைசதம் அடித்து அவுட்டானார்.

    இதன் மூலம் அரையிறுதி செல்வதை கிட்டத்தட்ட இந்திய அணி உறுதி செய்துள்ளது. இந்த தோல்வியின் மூலம் அரையிறுதி செல்லும் வாய்ப்பை பாகிஸ்தான் அணி இழந்துள்ளது.

    • முதல் ஓவர் வீசிய முகமது ஷமி அந்த ஓவரில் 5 வைடு பந்துகளை வீசினார்.
    • சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு 242 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரின் 5-வது லீக் போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதனையடுத்து 242 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 24 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் 124 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ரன்னிலும் கில் 46 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    முன்னதாக இப்போட்டியில் முதல் ஓவர் வீசிய முகமது ஷமி அந்த ஓவரில் 5 வைடு பந்துகளை வீசினார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் ஒரு ஓவரில் அதிகபட்ச பந்துகள் (11) வீசிய இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை இர்பான் பதான் மற்றும் ஜாகீர் கான் உடன் முகமது ஷமி சமன் செய்துள்ளார்.

    2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஜாகீர் கான் ஒரு ஓவரில் 11 பந்துகளும் 2006 ஆம் ஆண்டு இர்பான் பதான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓவரில் 11 பந்துகளும் வீசி இந்த மோசமான சாதனையை படைத்துள்ளனர்.

    • சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு 242 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்
    • சச்சின், சங்ககாராவிற்கு பிறகு இந்த சாதனையை கோலி படைத்துள்ளார்.

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரின் 5-வது லீக் போட்டி இன்று துபாயில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதனையடுத்து 242 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் 102 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ரன்னிலும் கில் 46 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இப்போட்டியில் நிதானமாக விளையாடி வரும் கோலி 15 ரன்கள் அடித்தபோது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்களை அதிவேகமாக கடந்து கோலி சாதனை படைத்துள்ளார்.

    சச்சின், சங்ககாராவிற்கு பிறகு இந்த சாதனையை படைத்த 3 ஆவது வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார். 36 வயதான கோலி, 287 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை படைக்க சச்சின் 350 இன்னிங்ஸ்களிலும் சங்ககாரா 378 இன்னிங்ஸ்களிலும் 14,000 ரன்களை கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×