என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன், அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
    ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன். இவர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரிலும், அதனைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டியிலும் விளையாட இருந்தார்.

    அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகியுள்ளார். 

    இதுகுறித்து கேன் ரிச்சர்ட்சன் கூறுகையில் ‘‘ஐபிஎல் லீக் போன்ற சிறந்த தொடரில் இருந்து விலகுவது கடினமான ஒன்று. உலகின் தலைசிறந்த லீக்குகளில் ஒன்று ஐபிஎல். முதல் குழந்தை பிறக்க இருப்பதால் வீட்டில் சவால்கள் நிறைந்துள்ளன.

    குழந்தை பிறக்கும் நேரத்தில் வீட்டில் இல்லாமல் இருக்கும் ரிஸ்க்கை எடுக்க விரும்பவில்லை. ஐபிஎல் போட்டியை தவற விடுவது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால், இன்னொரு முறை ஐபிஎல் போட்டிக்கான வாய்ப்பு வரலாம். ஆனால் குழந்தை பிறக்கும்போது மனைவி அருகில் இருக்கும் வாய்ப்பு எப்போதும் கிடைக்கும் என்றும் நான் நினைக்கவில்லை’’ என்றார்.
    கரீபியன் பிரிமீயர் லீக்கில் லென்டில் சிம்மன்ஸ் 63 பந்தில் 96 ரன்கள் விளாசியதால், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 59 ரன்னில் வெற்றி பெற்றது.
    கரீபியன் பிரிமீயர் லீக்கில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் விளாசியது. தொடக்க வீரர் லென்டில் சிம்மன்ஸ் 63 பந்தில் 7 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 96 ரன்கள் விளாசினார். டேரன் பிராவோ 36 பந்தில் 36 ரன்கள் அடித்தார்.

    பின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி களம் இறங்கியது, அந்த அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் டிரின்பாகோ 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    விராட் கோலி மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரை மட்டுமே சார்ந்து ஆர்சிபி அணி இருக்கிறது என்பதை ஏற்க இயலாது என்று உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருபவர் விராட் கோலி. அதுபோல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ஏபி டி வில்லியர்சும் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர். இருவரும் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார்கள்.

    இருவரும் அந்த அணியின் பேட்டிங்கில் முதுகெலும்பாக உள்ளனர். இரண்டு பேரும் உடனடியாக ஆட்டம் இழந்தால், அந்த அணி திணறிவிடும். அதனால் இருவரையும் சார்ந்தே அணி இருக்கிறது எனச் சொல்லப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இருவரையும் சார்ந்துதான் ஆர்சிபி அணி உள்ளது என்று அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் கூறுகையில் ‘‘அவர்கள் எங்களுக்கு ஏராளமான ஆட்டங்களையும் வென்று கொடுத்துள்ளனர். நாங்கள் அவர்களை நம்பியிருப்பதாக மக்கள் கூறுவார்கள், ஆனால், கடந்த வருடம் நடைபெற்ற கடைசி போட்டியை பார்த்தால், குர்கீரத் மான், ஹெட்மையர் எங்களுக்கு போட்டியை வென்று கொடுத்தனர். ஆகவே, உண்மையிலேயே இரண்டு பேரை மட்டும் நாங்கள் சார்ந்திருக்கவில்லை.

    எங்கள் அணியில் 11 வீரர்கள் உள்ளனர். அவர்கள் இரண்டு பேரையும் மட்டுமே நம்பியிருந்தால், அதன்பிறகு மற்றவர்கள் ஏன் விளையாட வேண்டும். ஒவ்வொரு நபரும் அணிக்கு தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர். மற்றவர்களை விட இரண்டு பேரும் சற்று அதிகமான பங்களிப்பை கொடுக்கின்றனர். அவர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருப்பது அணிக்கு சிறந்ததாக உள்ளது’’ என்றார்.
    ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிசிசிஐ மருத்துவக்குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக்கில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்பட 8 அணிகளும் அங்கு ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளன.

    கடந்த வாரம் 3-வது கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்கள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு கொரோனால் இல்லை. இதனால் பயிற்சிக்கு தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில் பிசிசிஐ-யின் மருத்துவக்குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ‘‘இது உண்மைதான். ஆனால் சீனியர் மருத்து அதிகாரியால் எந்த பிரச்சினையும் இல்லை. அறிகுறி இல்லாத கொரோனா தொற்றுதான். அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் யாருடன் தொடர்வில் இல்லை. ஐக்கிய அரபு அமீரகம் பயணம் போது அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம்.

    அவர் கண்காணிப்பில் உள்ளார். அடுத்த சுற்று பரிசோதனையின் போது அவர் குணமடைந்துவிடுவார். அவருடன் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இரண்டு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ,-க்கு தகவல் கிடைத்துள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட லங்கா பிரிமீயர் லீக்கின் புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    பிசிசிஐ ஐபிஎல் டி20 லீக் போட்டியை நடத்துவது போல் இலங்கை கிரிக்கெட் போர்டும் லங்கா பிரிமீயர் லீக் என்ற பெயரில் டி20 தொடரை நடத்த ஏற்பாடு செய்து வருகிறது.

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்தி்வைக்கப்பட்டது. அதன்பின் ஆகஸ்டு 28-ந்தேதி தொடங்கப்படும் என்று இலங்கை கிரிக்கெட் போர்டு தெரிவித்தது. ஆனால் வெளிநாட்டு வீரர்களை 14 நாட்களுக்கு மேல் தனிமைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் தொடர் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் நவம்பர் மாதம் 14-ந்தேதி முதல் டிசம்பர் 6-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து அணிகள் 23 போட்டிகளில் வி்ளையாட உள்ளது.

    கொழும்பு, கண்டி, காலோ, தம்புல்லா, ஜாஃப்னா ஆகிய ஐந்து நகரங்களை மையமாக கொண்டு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
    பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் பணம் கொழிக்கும் விளையாட்டான ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போட்டி ஆண்டுதோறும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான 13-வது ஐ.பி.எல். போட்டி கொரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளி வைக்கப்பட்டதால் அந்த காலக்கட்டத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், ஐக்கிய அரபு எமிரேட்சில் போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி ஐ.பி.எல். போட்டி வருகிற 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்று விட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தவிர மற்ற அணிகள் பயிற்சியை தொடங்கி விட்டன.

    சென்னை அணியில் தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய 2 வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இதனால் சி.எஸ்.கே. அணியின் பயிற்சி தாமதம் ஆனது. நாளை முதல் சி.எஸ்.கே. அணி வீரர்கள் பயிற்சியை தொடங்குகிறார்கள்.

    ஐ.பி.எல். தொடங்குவதற்கு இன்னும் 16 தினங்கள் உள்ள நிலையில் போட்டி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. அட்டவணை வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.

    பல்வேறு வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். போட்டியின் தற்போதைய நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளார்கள். இனதால் ஐ.பி.எல். போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளன.

    இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக பி.சி.சி.ஐ.யின் பொருளாளர் அருண்துமால் கூறியதாவது:-

    அனைத்து சி.எஸ்.கே. வீரர்களுக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியாகி உள்ளது. ஐ.பி.எல். போட்டி திட்டமிட்டபடி நடைபெறும். அதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம்.

    வழிகாட்டு நெறிமுறைகளை வீரர்கள் பின்பற்றி வருகிறார்கள். பார்வையாளர்கள் இல்லாமல் ஐ.பி.எல். போட்டி நடைபெற உள்ளது. எனவே எந்த பிரச்சினையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் வெற்றி பெற்று அசத்தினார்.
    நியூயார்க்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சுமித் நாகல், அமெரிக்காவின் பிராட்லி கிளானை எதிர்கொண்டார். 2 மணி 12 நிமிடங்கள் நடந்த விறுவிறுப்பான இந்த மோதலில் சுமித் நாகல் 6-1, 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் பிராட்லியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். பிராட்லி 10 ஏஸ் சர்வீஸ் வீசிய போதிலும், பந்தை அதிகமுறை வெளியே அடித்துவிட்டு (40 முறை) தவறிழைத்து சரிந்து போனார். ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டி ஒன்றில் ஒற்றையர் பிரிவில் இந்தியர் ஒருவர் வெற்றி காண்பது கடந்த 7 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடைசியாக இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் 2013-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய கிராண்ட்ஸ்லாமில் முதல் சுற்றில் வெற்றி பெற்றிருந்தார். முதல் சுற்று வெற்றியின் மூலம் டெல்லியைச் சேர்ந்த சுமித் நாகலுக்கு ரூ.45 லட்சம் பரிசு உறுதியாகி இருக்கிறது.

    உலக தரவரிசையில் 124-வது இடம் வகிக்கும் சுமித் நாகல் அடுத்து 3-ம் நிலை வீரர் டொமினிக் திம்மை (ஆஸ்திரியா) இன்று சந்திக்கிறார். பலம் வாய்ந்த டொமினிக் திம்மை அவர் சமாளிப்பது கடினமே. 23 வயதான சுமித் நாகல் கூறுகையில், ‘கிராண்ட்ஸ்லாமில் எனது முதல் வெற்றியை பெற்றிருக்கிறேன். இது எனக்கு சிறப்பு வாய்ந்த, மகிழ்ச்சியான தருணமாகும். இந்த ஆட்டத்தை ஒரு போதும் மறக்க மாட்டேன். சிறப்பாக செயல்பட வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.’ என்றார்.

    முன்னாள் நம்பர் ஒன் வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, ஜப்பானின் யோஷிஹிட்டோ நிஷியோகாவுடன் மோதினார். முதல் இரு செட்டுகளை இழந்து அதிர்ச்சிக்குள்ளான ஆன்டி முர்ரே அதன் பிறகு எதிராளியின் ஒரு மேட்ச் பாயிண்ட் ஆபத்தில் இருந்தும் தன்னை காப்பாற்றிக்கொண்டு ஒரு வழியாக எஞ்சிய 3 செட்டுகளை போராடி தன்வசப்படுத்தி நிம்மதி பெருமூச்சு விட்டார். 4 மணி 39 நிமிடங்கள் மல்லுகட்டிய முர்ரே 4-6, 4-6, 7-6 (7-5), 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிக்கனியை பறித்தார்.

    டேனில் மெட்விடேவ் (ரஷியா), டிமிட்ரோவ் (பல்கேரியா), பெரேட்டினி (இத்தாலி), மிலோஸ் ராவ்னிக் (கனடா), பாவ்டிஸ்டா அகுட் (ஸ்பெயின்), மரின் சிலிச் (குரோஷியா) ஆகிய நட்சத்திர வீரர்களும் முதல் சுற்றில் வெற்றி கண்டனர்.

    செரீனா வில்லியம்ஸ்


    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் முதலாவது சுற்றில் 7-5, 6-3 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் கிறிஸ்டி அன்னை விரட்டினார். அமெரிக்க ஓபன் வரலாற்றில் ஒற்றையரில் செரீனா பதிவு செய்த 102-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அமெரிக்க ஓபனில் அதிக வெற்றி பெற்றவரான கிறிஸ் எவர்ட்டின் (அமெரிக்கா) சாதனையை முறியடித்தார். இதே போல் விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்), சோபியா கெனின் (அமெரிக்கா), ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), சபலென்கா (பெலாரஸ்), மரியா சக்காரி (கிரீஸ்) உள்ளிட்டோரும் 2-வது சுற்றை எட்டினர்.

    அதே சமயம் செரீனாவின் சகோதரி வீனஸ் வில்லியம்ஸ், 3 முறை சாம்பியனான பெல்ஜியத்தின் கிம் கிலிஸ்டர்ஸ் ஆகியோர் முதல் சுற்றுடன் நடையை கட்டினர்.
    மும்பை இந்தியன்ஸ் அணியில் யார்க்கர் மன்னன் லசித் மலிங்கா விளையாடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. ‘யார்க்கர்’ என்றாலே நினைவுக்கு வருவது லசித் மலிங்காதான். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். மும்பை அணி வெற்றியில் இவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

    இந்நிலையில் இந்த சீசனில் லிசித் மலிங்கா இடம் பெறமாட்டார் என்று மும்பை இந்தியன்ஸ் அணி அறிவித்துள்ளது. மேலும், அவருக்குப் பதிலாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ‘‘மும்பை இந்தியன்ஸ் அணியின் வலிமைக்கு தூணாக இருந்தவர் ஜாம்பவான் லசித் மலிங்கா. இந்த சீசனில் அவரை நாங்கள் மிஸ் செய்கிறோம். எனினும், இந்த நேரத்தில் அவருடைய குடும்பத்துடன் இருக்க வேண்டியதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். எங்களுடைய ஒரே குடும்பத்திற்கு ஜேம்ஸ் பேட்டின்சனை வரவேற்கிறோம்’’ என்று மும்பை இந்தியன்ஸ் அணி தெரிவித்துள்ளார்.
    பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் நட்சத்திர வீரரும், பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரருமான நெய்மர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுளளார்.
    பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர்கள் நெய்மர். இவர் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் லீக்-1 கால்பந்து தொடரின் முன்னணி அணியான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இந்நிலையில் மூன்று வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பிஎஸ்ஜி அணி தெரிவித்துள்ளது. பெயர்களை வெளியிடவில்லை என்றாலும் நெய்மர், டி மரியா, லயாண்ட்ரோ பரேடஸ் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    யூரோ சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிஎஸ்ஜி அணி பிரெஞ்ச் லீக்கில் அவர்களுடைய 2-வது போட்டியை தள்ளி வைக்க கேட்டுக்கொண்டது. அதன்படி ஆகஸ்ட் 29-ந்தேதி நடபெற இருந்தது அக்டோபர் 10-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    நெய்மர் விடுமுறையை கொண்டாட இபிஸா தீவுக்கு சென்றதாக தெரிகிறது. அங்கு அவருக்கு கொரோனா தொற்றிக்கொண்டுள்ளது.
    அந்த்ரே ரஸல் 23 பந்தில் 4 சிக்ஸ், ஐந்து பவுண்டரியுடன் 50 ரன்கள் அடித்த போதிலும், அவருடைய அணி 19 ரன்னில் தோல்வியை சந்தித்தது.
    கரீபியன் பிரிமீயர் லீக்கில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஜமைக்கா தல்லாவாஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    முதலில் விளையாடிய டிரி்ன்பாகோ நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் சுனில் நரைன் 11 பந்தில் 29 ரன்கள் அடித்தார். கொலின் முன்றோ 54 பந்தில் 65 ரன்களும், கேப்டன் பொல்லார்டு 16 பந்தில் 33 ரன்களும் அடித்தனர்.

    பின்னர் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜமைக்கா அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் வால்டன் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரர் கிளென் பிலிப்ஸ் 31 பந்தில் 41 ரன்கள் சேர்த்தார்.

    அதன்பின் வந்த பிளாக் வுட் 12 ரன்களும், நிருமா போனர் 26 ரன்களும் சேர்த்தனர். 6-வது வீரராக களம் இறங்கிய அந்த்ரே ரஸல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 23 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 50 ரன்கள் அடித்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

    இறுதியில் ஜமைக்கா அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிறகு 165 ரன்கள் மட்டுமே அடித்ததால் 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கேரி ஸ்டீட்டின் பதவிக்காலம் 2023 உலகக்கோப்பை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அந்நாட்டின் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் கேரி ஸ்டீட் இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் முடிவடையும் நிலையில், 2023 உலக கோப்பை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இவரது தலைமையில் நியூசிலாந்து அணி வெளிநாட்டு மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், இலங்கைக்கு எதிராகவும் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.

    உலக கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் பவுண்டரி அடிப்படையில் தோல்வியை சந்தித்தது. சொந்த மண்ணில் வங்காளதேசம், இங்கிலாந்து, இந்தியா, இலங்கைக்கு எதிராக தொடரை வென்றது.

    டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்திற்கும், ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 3-வது இடத்திற்கும் முன்னேறியது. இதன்மூலம் அவரது பதவிக்காலம் 2023 உலக கோப்பை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    பயிற்சிக்குப்பின் வார்ம்-அப் போட்டிகள் நடைபெற்றால் நன்றாக இருக்கும் என ஐபிஎல் போட்டியில் விளையாடும் பெரும்பாலான அணிகள் விரும்புகின்றன.
    ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இன்னும் 17 நாட்கள் மட்டுமே உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தவிர மற்ற அணிகள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    மார்ச் மாதத்திற்குப்பிறகு கிரிக்கெட் வீரர்கள் எந்தவிதமாக போட்டி விளையாட்டில் விளையாடவில்லை. தற்போது பயிற்சி முடித்த கையுடன் நேரடியாக மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது.

    இதனால் ஒன்றிரண்டு வார்ம்-அப் போட்டிகள் நடைபெற்றால் நன்றாக இருக்கும் என்று பெரும்பாலான அணிகள் விரும்புகின்றன.

    முன்னணி அணியின் நிர்வாகி ஒருவர் ‘‘சில வார்ம்-அப் மேட்ச்கள் தொடருக்கு சிறந்ததாக இருக்கும்’’ என்றார்.

    மற்றொரு அணியின் சிஇஓ ‘‘வார்ம்-அப் போட்டிகளுக்கு என்னுடைய 100 சதவீதம் ஆதரவு உண்டு’’என்றார்.

    ஆர்சிபி அணி வீரர்கள்

    மேலும் இரண்டு அணிகள் ‘‘வார்ம்-அப் போட்டிகளால் மட்டுமே தொடரின் முதல்நாளில் இருந்தே வீரர்கள் சரியான வழியில் பழைய ஆட்டத்திற்கு திரும்ப முடியும்’’ என்றார்.

    போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் நிறுவனமும் வார்ம்-அப் போட்டியை விரும்புகிறது. வார்ம்-அப் போட்டிகள் மூலம் எதிர்ப்பார்ப்பை தூண்ட உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
    ×