என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கோவாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை-பெங்களூரு ஆட்டம் டிராவில் முடிந்தது.
    கோவா:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 83-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-சென்னையின் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது.

    பெங்களூரு அணி தான் ஆடியுள்ள 16-வது ஆட்டத்தில் 4 வெற்றி, 7 டிரா, 5 தோல்வியுடன் 6-வது இடத்தில் உள்ளது.

    சென்னை அணி 3 வெற்றி, 8 டிரா, 5 தோல்வியுடன் 8-வது இடத்திலும் உள்ளது.

    இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி.- ஏ.டி.கே. மோகன் பகான் அணிகள் சந்திக்கின்றன.
    சென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். ஏலத்தில் கலந்து கொள்ள 1,097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த வீரர்கள் ஆவார்கள்.
    சென்னை:

    கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

    14-வது ஐ.பி.எல். சீசன் வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் தொடங்க உள்ளது. இதற்கிடையே, ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

    ஐபிஎல் ஏலத்திற்கு 1,097 வீரர்கள்  பதிவு செய்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த வீரர்கள் ஆவார்கள். இதில் 814 இந்திய வீரர்களும் 283 வெளிநாட்டு வீரர்களும் பதிவுசெய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    வீரர்கள் பதிவு காலக்கெடு நேற்றுடன்  முடிவுற்றது. பதிவு செய்துள்ள 283 வெளிநாட்டு வீரர்கள் விவரம்  பின்வருமாறு:

    மேற்கிந்திய தீவுகள்- 56 வீரர்கள், ஆஸ்திரேலியா - 42 வீரர்கள், தென்னாப்பிரிக்கா- 38 வீரர்கள், இலங்கை -31 வீரர்கள், ஆப்கானிஸ்தான் -30 வீரர்கள், நியூசிலாந்து- 29 வீரர்கள், இங்கிலாந்து - 21 வீரர்கள், ஐக்கிய அரபு அமீரகம் -9 வீரர்கள், நேபாளம் - 8 வீரர்கள், ஸ்காட்லாந்து- 7 வீரர்கள், வங்காளதேசம் - 5 வீரர்கள், அயர்லாந்து - 2 வீரர்கள், அமெரிக்கா -  2 வீரர்கள், ஜிம்பாப்வே- 2 வீரர்கள், நெதர்லாந்து - 1 வீரர்.
    ஜோ ரூட் 100-வது டெஸ்ட் போட்டியில் சதம் விளாச, கடைசி ஓவரில் பும்ரா விக்கெட் வீழ்த்த இங்கிலாந்து முதல்நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் சேர்த்துள்ளது.
    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 13 மாதங்களுக்கு பிறகு இந்தியாவில் சர்வதேச போட்டி தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு காரணமாக இந்த போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    இந்திய அணி 6 பேட்ஸ்மேன்கள், 2 வேகப்பந்து வீரர்கள் (பும்ரா, இஷாந்த் சர்மா), 3 சுழற்பந்து வீரர்களுடன் (அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், சாபாஷ் நதீம்) களம் இறங்கியது.

    இலங்கைக்கு எதிரான தொடரில் இடம்பெறாத பென் ஸ்டோக்ஸ், ஜாஃப்ரா ஆர்ச்சர், ரோரி பர்ன்ஸ் ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு மீண்டும் திரும்பினார்கள்.

    100-வது டெஸ்டில் விளையாடும் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோரூட் டாஸ் வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். ரோரி பேர்ன்சும், சிப்லியும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இங்கிலாந்து அணி நிதானமாக ஆடியது. இதனால் 19.3 ஓவர்களில் அந்த அணி 50 ரன்னை தொட்டது.

    அந்த அணியின் தொடக்க ஜோடியை அஷ்வின் பிரித்தார். ரோரி பேர்ன்ஸ் 33 ரன்னில் அவரது பந்தில் ரி‌ஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 63 (23.5 ஓவர்) ஆக இருந்தது. அடுத்து வந்த லாரன்ஸ் விக்கெட்டை பும்ரா எளிதில் வீழ்த்தினார். அவர் ரன் எதுவும் எடுக்கவில்லை. 63 ரன்னில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டை இழந்தது.

    மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன் எடுத்திருந்தது. சிப்லி 26 ரன்னுடனும், ஜோரூட் 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. சிப்லி, ஜோ ரூட் அபாரமாக விளையாடினர்.  இவர்கள் இருவரையும் பிரிக்க இந்தியாவின் ஐந்து பந்து வீச்சாளர்களும் திணறினார்கள்.
    ஜோ ரூட்

    டாம் சிப்லி 159 பந்தில் அரைசதம் அடித்தார். இருவரும் 2-வது செசன் முழுவதும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். தேனீர் இடைவேளையின்போது இங்கிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. டாம் சிப்லி 53 ரன்களுடனும், ஜோ ரூட் 45 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    தேனீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஜோ ரூட் 110 பந்தில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த பின் ஜோ ரூட் ஆட்டத்தில் வேகத்தை கூட்டினார். இதனால் இங்கிலாந்து அணியின் ரன் விகிதம் உயர ஆரம்பித்தது.

    ஜோரூ ரூட் சிறப்பாக விளையாடி டாம் சிப்லி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜோ ரூட் 164 பந்தில் சதம் அடித்தார். 51 ரன்னில் இருந்து 100 ரன்னைத்தொட ஜோ ரூட்டுக்கு 54 பந்துகளே தேவைப்பட்டது. 100-வது போட்டியில் சதம் அடித்து ஜோ ரூட் அசத்தினார்.

    80 ஓவர்கள் முடிந்து புதிய பந்தை எடுத்த பின்னரும், இந்திய பந்து வீச்சாளர்களால் நெருக்கடி கொடுக்கமுடியவில்லை.

    கடைசி ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை யார்க்கராக வீசினார். பேட்டால் எதிர்கொள்ள முடியாமல் போனதால் டாம் சிப்லி எல்.பி.டபிள்யூ ஆனார். அவர் 286 பந்தில் 87 ரன்கள் அடித்தார். டாம் சிப்லி - ஜோ ரூட் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் குவித்தது.

    டாம் சிப்லி ஆட்டமிழந்ததுடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஜோ ரூட் 128 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்திய அணி தரப்பில் பும்ரா 2 விக்கெட்டும், அஷ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 430 ரன்கள் குவித்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 259 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகியுள்ளது.
    வங்காளதேசம்- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்சில் 430 ரன்கள் குவித்தது.

    அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் சதம் (103) விளாசினார். ஷத்மான் இஸ்லாம் 59 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 68 ரன்களும் எடுத்தனர்.

    பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் பிராத்வைட் சிறப்பாக விளையாடி 76 ரன்கள் எடுத்தார். ஜெர்மைன் பிளாக்வுட் 68 ரன்களும், கைல் மேயர்ஸ் 40 ரன்களும், ஜோஷுவா டி சில்வா 42 ரன்களும் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 259 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    வங்காளதேச அணி சார்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டும் தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 171 ரன்கள் முன்னிலைப் பெற்று 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. 3-வது நாள் ஆட்ட முடிவில் வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை வங்காளதேசம் 218 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
    சேப்பாக்கம் மைதானத்தில் 100-வது டெஸ்டில் களம் இறங்கிய ஜோ ரூட், சதம் அடித்து அசத்தியுள்ளார். இது அவரின் ஹாட்ரிக் சதமாகும்.
    இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணியின் தொடக்க வீரர் ரோரி பேர்ன்ஸ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டான் லாரன்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

    3-வது விக்கெட்டுக்கு டாம் சிப்லியுடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர்.

    ஜோ ரூட் அரைசதத்தை சதமாக மாற்றினார். அவர் 164 பந்தில் 12 பவுண்டரியுடன் சதம் அடித்தார். அவருக்கு இது 100-வது டெஸ்ட் போட்டியாகும். இதன்மூலம் 100-வது டெஸ்டில் சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார். அத்துடன் தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் சதம் விளாசியுள்ளார். இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதமும், 2-வது டெஸ்டில் சதமும் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பாபர் அசாம், ஃபவாத் அலாம், பஹீம் அஷ்ரப் ஆகியோர் சிறப்பாக விளையாட பாகிஸ்தான் ராவல்பிண்டி டெஸ்டில் முதல் இன்னிங்சில் 272 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகியுள்ளது.
    பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ராவல்பிண்டியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் 22 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு கேப்டன் பாபர் அசாம் உடன் ஃபவாத் அலாம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது.

    பாபர் அசாம் அரைசதம் அடித்தார். அலாம் அரைசதத்தை நெருங்கினார். மதிய தேனீர் இடைவேளையின்போது பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. தேனீர் இடைவேளை முடிந்த ஆட்டம் தொடங்க இருந்த நிலையில் மழை பெய்ததால், முதல் நாள் ஆட்டம் அத்துடன் முடிவு பெற்றது. பாபர் அசாம் 77 ரன்களுடனும், ஃபவாத் அலாம் 42 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பாபர் அசாம் நேற்றைய 77 ரன்களிலேயே ஆட்டமிழந்தர். ஃபவாத் அலாம் 45 ரன்னில் ரன்அவுட் ஆனார்.

    ஆனால் பஹீம் அஷ்ரப் சிறப்பாக விளையாரை அரைசதம் அடித்தார். ஹசன் அலி, யாசிர் ஷா, நௌமான் அலி  ஆகியோர் தலா 8 ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான்  முதல் இன்னிங்சில் 272 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பஹீம் அஷ்ரப் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் அன்ரிச் நோர்ஜே 5 விக்கெட்டும், கேஷவ் மகாராஜ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    விளம்பர வருவாய் மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ரூ.1737 கோடி சம்பாதித்து முதல் இடத்தில் உள்ளார்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான (டெஸ்ட், ஒருநாள் ஆட்டம் மற்றும் 20 ஓவர்) போட்டிக்கும் கேப்டனாக விராட் கோலி உள்ளார். 3 வடிவிலும் அவர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார்.

    விராட் கோலி கிரிக்கெட் மட்டுமல்லாமல் விளம்பரங்கள் மூலமும் கோடி கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். இந்திய பிரபலங்களில் அவர் மதிப்பு மிக்கவராக இருக்கிறார்.

    இதனால் விளம்பர நிறுவனங்கள் அவரை போட்டி போட்டுக்கொண்டு ஒப்பந்தம் செய்து வருகிறார்கள். 30-க்கும் மேற்பட்ட விளம்பர நிறுவனங்கள் அவர் கைவசம் இருக்கிறது.

    இந்த நிலையில் 2020-ம் ஆண்டுக்கான இந்திய பிரபலங்களில் மதிப்புமிக்கவர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி விளம்பர வருமானம் மூலம் விராட் கோலி ரூ.1737 கோடி சம்பாதித்து முதல் இடத்தில் உள்ளார்.

    பாலிவுட் பிரபலங்கள் எல்லோரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு அவர் தொடர்ந்து 4-வது ஆண்டாக முதல் இடத்தில் உள்ளார்.

    கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட இந்திய அணி முன்னாள் கேப்டன் டோனி 2 இடங்கள் பின்தங்கி உள்ளார். அவர் விளம்பரங்கள் மூலம் ரூ.262 கோடி சம்பாதித்துள்ளார்.

    அமீர்கான், ரன்பீர் கபூர், பிரியங்கா சோப்ரா ஆகியோரை விட டோனி முன்னிலையில் உள்ளார்.

    அக்‌ஷய் குமார் விளம்பரங்கள் மூலம் ரூ.860 கோடி சம்பாதித்து 2-வது இடத்தில் உள்ளார். ரன்வீர் சிங் ரூ.740 கோடியுடனும், ஷாருக்கான் ரூ.371 கோடியுடனும், தீபிகா படுகோனே ரூ.364 கோடியுடனும் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 400 விக்கெட் சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளது.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின் 400 விக்கெட் சாதனையை படைக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு இன்னும் 23 விக்கெட் தேவை. 4 டெஸ்ட் என்பதால் அவரால் இந்த தொடரிலேயே இந்த சாதனையை புரிய முடியும்.

    400 விக்கெட்டை கைப்பற்றும் 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். உலக அளவில் 16-வது வீரர் என்ற சாதனையை படைப்பார். 400 விக்கெட்டை அதிவேகத்தில் வீழ்த்திய இந்திய வீரர் என்ற புதிய சாதனையையும் நிகழ்த்தலாம்.

    அஸ்வின் 74 டெஸ்டில் தான் விளையாடி இருக்கிறார். கும்ப்ளே 85 டெஸ்டிலும், ஹர்பஜன்சிங் 96 டெஸ்டிலும், கபில்தேவ் 115 டெஸ்டிலும் 400 விக்கெட்டை தொட்டு இருந்தனர்.

    இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
    சென்னை:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது.

    இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

    இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் போட்டியில் இருந்து விலகி உள்ளார். நேற்றைய பயிற்சியின்போது இடது முழங்காலில் காயமடைந்ததால் அவர் முதல் போட்டியில் இருந்து விலகியதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. சுழற்பந்து வீச்சாளர் ஷாபாஸ் நதீம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா பரவலுக்கு பிறகு ஓராண்டு கழித்து இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாகும். கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.

    போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்ட காட்சி

    உள்நாட்டில் இந்தியா எப்போதும் பலம்வாய்ந்த அணியாகவே விளங்குகிறது. அத்துடன், சமீபத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்டுடன் விலகிய நிலையில் ரஹானே தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பிரமாதப்படுத்தியது. தற்போது விராட் கோலி அணிக்கு திரும்பியிருப்பதால் பேட்டிங் வரிசை மேலும் வலுவடைந்துள்ளது. 

    ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த மாதம் இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வசப்படுத்திய கையோடு மிகுந்த நம்பிக்கையுடன் இந்தியாவில் கால்பதித்து இருக்கிறது. எனவே இந்திய அணிக்கு கடுமையான நெருக்கடி அளிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

    போட்டிக்கான இரு அணிகளின் வீரர்கள் வருமாறு:

    இந்தியா:  ரோகித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி (கேப்டன்), புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், இஷாந்த் ஷர்மா, பும்ரா, நதீம்.

    இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லி, லாரன்ஸ், ஜோ ரூட் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஆலி போப், ஜோஸ் பட்லர், டி பெஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
    சென்னையில் இன்று தொடங்க உள்ள முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் விலகி உள்ளார்.
    சென்னை:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது.

    இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. கொரோனா பரவலுக்கு பிறகு ஓராண்டு கழித்து இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

    காலை 9.30 மணிக்கு  போட்டி தொடங்க உள்ள நிலையில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் போட்டியில் இருந்து விலகி உள்ளார். நேற்றைய பயிற்சியின்போது இடது முழங்காலில் காயமடைந்ததால் அவர் முதல் போட்டியில் இருந்து விலகியதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. சுழற்பந்து வீச்சாளர்கள் ஷாபாஸ் நதீம், ராகுல் சாகர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.
    இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.
    சென்னை:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது.

    இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. கொரோனா பரவலுக்கு பிறகு ஓராண்டு கழித்து இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாகும். கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளைp பின்பற்றி அரங்கேறும் இந்த டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.

    இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது.

    கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்டுடன் விலகிய நிலையில் ரஹானே தலைமையில் இந்திய அணி பிரமாதப்படுத்தியது. தற்போது விராட் கோலி அணிக்கு திரும்பியிருப்பதால் பேட்டிங் வரிசை மேலும் வலுவடைந்துள்ளது. புஜாரா, ரஹானே, ரிஷாப் பண்ட், சுப்மான் கில், ரோகித் சர்மா உள்ளிட்டோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் ரஹானேவின் கேப்டன்ஷிப்புக்கு முன்னாள் வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டியதால், கோலி இந்த தொடரை வென்று சாதிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். அத்துடன் கடந்த ஆண்டில் ஒரு சதம் கூட அடிக்காத கோலியின் ரன்வேட்டையை கண்டு ரசிக்கவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

    உள்நாட்டில் இந்தியா எப்போதும் பலம்வாய்ந்த அணியாக விளங்குகிறது என்பதில் சந்தேகமில்லை. 2012-ம் ஆண்டில் 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் டெஸ்ட் தொடரை பறிகொடுத்த இந்திய அணி அதன் பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததில்லை. உள்ளூரில் தொடர்ச்சியாக 12 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியுள்ள இந்திய அணி அந்த வீறுநடையை தொடரும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

    சென்னை ஆடுகளம் பொதுவாக சுழற்பந்து வீச்சுக்கு உகந்தது. கடைசி இரு நாளில் பந்து அதிகமாக சுழன்று திரும்பும். அதனால் அஸ்வின், குல்தீப் யாதவ் ஆகியோரின் சுழல் ஜாலத்தை எதிர்பார்க்கலாம். இதுவரை 17 டெஸ்டில் ஆடியுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய மண்ணில் டெஸ்டில் முதல்முறையாக ஆட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த மாதம் இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வசப்படுத்திய கையோடு மிகுந்த நம்பிக்கையுடன் இந்தியாவில் கால்பதித்து இருக்கிறது. 30 வயதான ஜோ ரூட் எப்போதும் ஆசிய மண்ணில் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர். அவர் தான் இங்கிலாந்து பேட்டிங்கின் முதுகெலும்பாக இருக்கிறார். இலங்கை தொடரில் கூட 228, 186 ரன் வீதம் விளாசியிருந்தார்.

    மேலும், இது அவருக்கு 100-வது டெஸ்ட் என்பது இன்னொரு சிறப்பம்சமாகும். 2012-ம் ஆண்டு நாக்பூரில் இந்தியாவுக்கு எதிராக தனது டெஸ்ட் பயணத்தை தொடங்கிய அவர் செஞ்சுரி டெஸ்ட் போட்டியையும் இந்தியாவிலேயே விளையாட இருக்கிறார். இந்த மைல்கல்லை எட்டும் 15-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் பெறுகிறார்.

    ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்து வீச்சாளர்கள் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜோப்ரா ஆர்ச்சர், சுழற்பந்து வீச்சாளர்கள் மொயீன் அலி, ஜாக் லீச் ஆகியோரும் தாக்கத்தை ஏற்படுத்தும் திறமைசாலிகள் ஆவர். இந்திய மண்ணில் அற்புதம் நிகழ்த்த வேண்டும் என்றால் முதல் இன்னிங்சில் கணிசமாக ரன்கள் குவிக்க வேண்டும், இந்திய சுழற்பந்து வீச்சு தாக்குதலை தவிடுபொடியாக்க வேண்டும் என்பதை தெளிவாக உணர்ந்துள்ள இங்கிலாந்து வீரர்கள் அதற்கு ஏற்ப தங்களது வியூகங்களைத் தீட்டியுள்ளனர்.

    இளம் பேட்ஸ்மேன் ஜாக் கிராவ்லி, பயிற்சிக்கு கிளம்புவதற்காக ஓய்வறையை விட்டு வெளியே வந்த போது தவறி விழுந்ததில் வலதுகை மணிக்கட்டு பலமாக கீழே இடித்து காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் முதல் இரு டெஸ்டில் அவர் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்ற வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே நியூசிலாந்து தகுதி பெற்றுவிட்ட நிலையில் மற்றொரு அணி எது என்பது இந்த தொடரின் மூலம் தெரிய வரும். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்திய அணி குறைந்தது 2-0, 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றாக வேண்டும். இங்கிலாந்து அணி இறுதி சுற்றை எட்ட வேண்டும் என்றால் கண்டிப்பாக 3 டெஸ்டில் வெற்றி பெற்றாக வேண்டும். அதனால் இந்த தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

    இந்தியா:

    ரோகித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி (கேப்டன்), புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட், அஸ்வின், அக் ஷர் பட்டேல் அல்லது வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா அல்லது முகமது சிராஜ்.

    இங்கிலாந்து:

    ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லி, ஜோ ரூட் (கேப்டன்), ஆலி போப், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, கிறிஸ்வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன் அல்லது ஸ்டூவர்ட் பிராட்.

    காலை 9.30 மணிக்கு தொடங்கும் சென்னை டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 82-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
    கோவா:

    7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 82-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. கோவா அணியில் அலெக்சாண்டர் ரோமாரியோ ஜேசுராஜ் 21-வது நிமிடத்திலும், அமர்ஜித் சிங் 80-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். கவுகாத்தி அணி தரப்பில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பெடரிகோ காலேகோ 41-வது மற்றும் 83-வது நிமிடங்களில் பதில் கோல் திருப்பினார். 15-வது ஆட்டத்தில் ஆடிய இரு அணிகளுக்கும் இது 7-வது டிராவாகும்.

    இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-சென்னையின் எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.
    ×