என் மலர்
விளையாட்டு
உலக கோப்பை வில்வித்தை போட்டி (நிலை 1) குடெமலாவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ‘ரிகர்வ்’ தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 7-3 என்ற கணக்கில் மெக்சிகோவின் அலிஜான்ட்ரா வாலென்சியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். உலக கோப்பை போட்டியில் தனிநபர் பிரிவில் அவர் வென்ற 3-வது தங்கம் இதுவாகும். ஆண்களுக்கான தனிநபர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அதானு தாஸ் 6-4 என்ற கணக்கில் ஸ்பெயினின் டேனியல் கேஸ்ட்ரோவை தோற்கடித்து முதல்முறையாக தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் அதானு தாஸ், தீபிகா குமாரி ஆகியோர் இந்த ஆண்டுக்கான உலக கோப்பை இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றனர். இந்த ஜோடி கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இல்வாழ்க்கையில் இணைந்தது நினைவிருக்கலாம்.

ஐபிஎல் தொடரின் 21-வது லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சார்பில் பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், சுனில் நரைன் 2 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இதையடுத்து, 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான நிதிஷ் ரானா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஷுப்மான் கில் 9 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து வந்த சுனில் நரேன்டக் அவுட்டானார்.
ஓரளவு பொறுப்புடன் ஆடிய ராகுல் திரிபாதி 41 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய கேப்டன் மார்கன் சிறப்பாக விளையாடி 47 ரன்னுடன் அவுட்டாகாமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இறுதியில், கொல்கத்தா அணி 16.4 ஓவரில் 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது கொல்கத்தா பெற்ற இரண்டாவது வெற்றி ஆகும். பஞ்சாப் அணி பெற்ற 4வது தோல்வி ஆகும்.




— Pat Cummins (@patcummins30) April 26, 2021



மும்பை:
ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை மிகவும் எளிதாக வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது.
இந்த போட்டியில் ஜடேஜாவின் ஆல்ரவுண்டர் பணி மிகவும் அபாரமாக இருந்தது. பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என 3 துறையிலும் சிறப்பாக செயல்பட்டார்.
5-வது வீரராக களம் இறங்கிய ஜடேஜா 28 பந்தில் 62 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும்.
ஹர்ஷல் படேல் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரை ஜடேஜா முற்றிலும் மாற்றினார். அந்த ஓவரில் மட்டும் நோ பால் உட்பட 37 ரன் கிடைத்தது. ஜடேஜா 36 ரன்கள் (6,6,6,6,2,6,4) விளாசி புதிய சாதனை படைத்தார்.
இதற்கு முன்பு கிறிஸ் கெய்ல் 2011-ம் ஆண்டில் ஒரே ஓவரில் 36 ரன்கள் (6,6,4,4,6,6,4) ரன்கள் விளாசினார். அதை ஜடேஜா தற்போது சமன் செய்துள்ளார்.
பேட்டிங்கில் அதிரடியை வெளிப்படுத்திய ஜடேஜா பந்துவீச்சிலும் சாதித்தார். அவர் 13 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். அதிரடி பேட்ஸ்மேன்களான மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை அவுட் செய்தார்.
அதோடு கிறிஸ்டியனை ரன் அவுட் செய்தார்.
ஜடேஜாவின் ஆட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி வெகுவாக பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஜடேஜா எப்போதுமே ஆட்டத்தை மாற்றுபவர். அவர் தனது சொந்த ஆட்டத்தையே மாற்றக்கூடியவர். ஒருசில ஆண்டுகளாகவே அவர் பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டுள்ளார் என்பதை நாங்கள் அறிவோம்.
இவ்வாறு டோனி கூறினார்.
ஆட்ட நாயகன் விருது பெற்ற ஜடேஜா கூறியதாவது:-
பொதுவாக ஆல்ரவுண்டராக இருப்பது கடினமானது. ஏனெனில் அனைத்து பிரிவுகளிலும் சிறந்து விளங்கவேண்டும். பயிற்சியின்போது 3 பிரிவிலும் கவனம் செலுத்த மாட்டேன்.
பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என இதில் ஏதாவது ஒன்றில் மட்டும் பயிற்சி செய்வேன். ஆட்டத்தின் கடைசி ஓவரில் எனக்கு டோனி நம்பிக்கை அளித்தார். ஹர்ஷல் படேல் ‘அவுட் சைடு ஆப்’ திசையில்தான் பந்து வீசுகிறார். தைரியமாக விளாசு என்றார்.
அதிர்ஷ்டவசமாக அனைத்தும் சிக்சர்களாக மாறியது. தொடக்கத்தில் நான் கொடுத்த கேட்சை பிடித்திருந்தால் எனது நாளாக அமைந்திருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
சி.எஸ்.கே. 6-வது ஆட்டத்தில் ஐதராபாத்தை 28-ந் தேதி டெல்லியில் எதிர்கொள்கிறது. பெங் களூர் அணி 27-ந் தேதி டெல்லியுடன் (அகமதாபாத்) மோதுகிறது.
ஐ.பி.எல். போட்டியில் சென்னை, மும்பையில் நேற்றுடன் ஆட்டங்கள் முடிந்தது. இனி டெல்லி, அகமதாபாத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன.
மும்பை:
ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது.
அந்த அணி குறிப்பிட்ட நேரத்தில் பந்தை வீசி முடிக்கவில்லை. இதனால் மெதுவாக பந்து வீசியதற்காக பெங்களூர் அணி மீது ஐ.பி.எல். விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மெதுவாக பந்து வீசியதற்காக பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி, மும்பை இந்தியன் கேப்டன் ரோகித் சர்மா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மார்கன் ஆகியோர் மீது இதே நடவடிக்கைக்காக தலா ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.







