என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையில் யார் யாருடன் மோதுகிறார்கள் என்பதற்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.
    2021 டி20 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்த ஐசிசி முடிவு செய்தது. அக்டோபர் 17-ந்தேதி முதல் நவம்பர் 14-ந்தேதி வரை டி20 கிரிக்கெட் திருவிழா நடக்கிறது.

    முதலில் 8 அணிகளுக்கான தகுதிச்சுற்று நடைபெறும். ‘ஏ’, ‘பி’ என இரண்டு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 12 அணிகள் கொண்ட குரூப் 12 சுற்றுக்கு முன்னேறும். 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோத உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

    டி20 உலகக்கோப்பைக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. எந்த அணி எந்த அணியுடன் மோதுகிறது என்பதை பார்ப்போம்.

     

     

    ரவுண்டு-1

     

    தேதி

    குரூப்

    அணிகள்

    இடம்

    அக்- 17

    பி

    ஓமன்- பப்பு நியூ கினியா

    ஒமன்

    அக்- 17

    பி

    வங்காளதேசம்- ஸ்காட்லாந்து

    ஒமன்

    அக்-18

    அயர்லாந்து- நெதர்லாந்து

    அபுதாபி

    அக்-18

    இலங்கை- நமீபியா

    அபுதாபி

    அக்-19

    பி

    ஸ்காட்லாந்து- பப்பு நியூ கினியா

    ஓமன்

    அக்-19

    பி

    ஓமன்- வங்காளதேசம்

    ஓமன்

    அக்-20

    நமீபியா- நெதர்லாந்து

    அபுதாபி

    அக்-20

    இலங்கை- அயர்லாந்து

    அபுதாபி

    அக்-21

    பி

    வங்காளதேசம்- பப்பு நியூ கினியா

    ஓமன்

    அக்-21

    பி

    ஓமன்- ஸ்காட்லாந்து

    ஓமன்

    அக்-22

    நமீபியா- அயர்லாந்து

    ஷார்ஜா

    அக்-22

    இலங்கை- நெதர்லாந்து

    ஷார்ஜா

     

     

     

     

     

     

    சூப்பர் 12- குரூப்- 1

     

    அக்- 23

     

    ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா

    அபுதாபி

    அக்- 23

     

    இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ்

    துபாய்

    அக்- 24

     

    ஏ1- பி2

    ஷார்ஜா

    அக்- 26

     

    தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ்

    துபாய்

    அக்- 27

     

    இங்கிலாந்து- பி2

    அபுதாபி

    அக்- 28

     

    ஆஸ்திரேலியா- ஏ1

    துபாய்

    அக்- 29

     

    வெஸ்ட் இண்டீஸ்- பி2

    ஷார்ஜா

    அக்-30

     

    தென்ஆப்பிரிக்கா- ஏ1

    ஷார்ஜா

    அக்-30

     

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா

    துபாய்

    நவ-1

     

    இங்கிலாந்து- ஏ1

    ஷார்ஜா

    நவ-2

     

    தென்ஆப்பிரிக்கா- பி2

    அபுதாபி

    நவ-4

     

    ஆஸ்திரேலியா- பி2

    துபாய்

    நவ-4

     

    வெஸ்ட் இண்டீஸ்- ஏ1

    அபுதாபி

    நவ-6

     

    ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ்

    அபுதாபி

    நவ-6

     

    இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா

    ஷார்ஜா

     

     

     

     

     

     

    சூப்பர் 12 குரூப்- 2

     

    அக்-24

     

    இந்தியா - பாகிஸ்தான்

    துபாய்

    அக்-25

     

    ஆப்கானிஸ்தான் - பி1

    ஷார்ஜா

    அக்-26

     

    பாகிஸ்தான் - நியூசிலாந்து

    ஷார்ஜா

    அக்-27

     

    பி1 - ஏ2

    அபுதாபி

    அக்-29

     

    ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான்

    துபாய்

    அக்-31

     

    ஆப்கானிஸ்தான்- ஏ2

    அபுதாபி

    அக்-31

     

    இந்தியா- நியூசிலாந்து

    துபாய்

    நவ-2

     

    பாகிஸ்தான்- ஏ2

    அபுதாபி

    நவ-3

     

    நியூசிலாந்து- பி1

    துபாய்

    நவ-3

     

    இந்தியா- ஆப்கானிஸ்தான்

    அபுதாபி

    நவ-5

     

    நியூசிலாந்து- ஏ2

    ஷார்ஜா

    நவ-5

     

    இந்தியா- பி1

    துபாய்

    நவ-7

     

    நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான்

    அபுதாபி

    நவ-7

     

    பாகிஸ்தான்- பி1

    ஷார்ஜா

    நவ-8

     

    இந்தியா - ஏ2

    துபாய்

     

     

     

     

    நவ-10

     

    அரையிறுதி-1

     

    நவ-11

     

    அரையிறுதி-2

     

    நவ-14

     

    இறுதிப்போட்டி

     

    இந்தியா குரூப்-2 பிரிவில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் அதில் உள்ளன.

    துபாய்:

    ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் நடந்த அந்த போட்டியில் டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இதுவரை 6 போட்டிகள் நடந்துள்ளன.

    வெஸ்ட் இண்டீஸ் 2 முறையும் (2012, 2016), இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இங்கிலாந்து (2010), இலங்கை (2014) ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் உலககோப்பையை வென்றுள்ளன.

    7-வது 20 ஒவர் உலக கோப்பை போட்டி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற வேண்டியது. கொரோனா பாதிப்பு காரணமாக இந்த போட்டி ரத்து செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு (2022) அங்கு நடக்கிறது.

    7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டியை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. இந்தியாவில் இந்த போட்டியை நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப்பட்டது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதிவரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (துபாய், அபுதாபி, சார்ஜா) மற்றும் ஓமனில் நடக்கிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்கின்றன. மொத்தம் 45 போட்டிகள் நடக்கிறது.

    20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. முதல் சுற்றில் (தகுதி சுற்று) 8 அணிகள் விளையாடும். இதில் இருந்து 4 அணிகள் 2-வது ரவுண்டான ‘சூப்பர் 12’ சுற்றுக்கு முன்னேறும்.

    இந்தியா உள்பட 8 நாடுகள் நேரடியாக 2-வது சுற்றில் விளையாடும்.

    முதல் சுற்றில் விளையாடும் 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளும், பி பிரிவில் வங்காளதேசம், ஓமன், ஸ்காட்லாந்து, பப்புவா நியூகுனியா அணிகள் ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.

    அக்டோபர் 17-ந் தேதி ஓமனில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஓமன்- பப்புவா நியூகுனியா மோதுகின்றன. மற்றொரு போட்டியில் வங்காளதேசம்- ஸ்காட்லாந்து அணிகள் விளையாடுகின்றன.

    22-ந் தேதியுடன் முதல் சுற்று ஆட்டம் முடிவடைகிறது. 2 பிரிவுகளில் இருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெறும்.

    ‘சூப்பர் 12’ ஆட்டங்கள் அக்டோபர் 23-ந் தேதி தொடங்குகிறது. இதில் விளையாடும் 12 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியா குரூப்-2 பிரிவில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் அதில் உள்ளன.

    தகுதி சுற்றில் ‘பி’ பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும் அணியும், ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தை பிடிக்கும் அணியும் குரூப் 2 பிரிவில் இடம்பெறும்.

    இன்று வெளியிட்ட போட்டி அட்டவணைப்படி இந்தியா- பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 24-ந் தேதி மோதுகின்றன. இந்த ஆட்டம் துபாயில் நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

    இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்துடன் 31-ந் தேதியும், 3-வது போட்டியில் ஆப்கானிஸ்தானுடன் நவம்பர் 3-ந் தேதியும் மோதுகிறது. தகுதி சுற்று அணிகளை இந்தியா நவம்பர் 5 மற்றும் 8-ந் தேதிகளில் எதிர்கொள்கிறது.

    குரூப் 1 பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட்இன்டீஸ் ஆகிய அணிகளும் தகுதி சுற்றில் இருந்து 2 அணிகளும் (ஏ-1, பி-2) இடம்பெற்றுள்ளன.

    நவம்பர் 8-ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. இதன் முடிவில் 2 பிரிவில் இருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். 10 மற்றும் 11-ந் தேதிகளில் அரை இறுதி நடைபெறுகிறது.

    இறுதிப்போட்டி நவம்பர் 14-ந் தேதி துபாயில் நடக்கிறது.

    இந்திய வீரர் திலீப் வெங்சர்கார் லார்ட்ஸ் மைதானத்தில் 1979, 1982, 1986 என 3 முறை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
    லண்டன்:

    லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது.

    கபில்தேவ் மற்றும் எம்.எஸ்.தோனி தலைமையில் மட்டுமே இந்தியா லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றியை பெற்றிருந்தது.
      
    1986-ம் ஆண்டில் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையி்லான இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

    அதன்பின், 28 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2014-ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    இந்நிலையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி நேற்று அபார வெற்றி பெற்றது. இது லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி பெற்றுள்ள மூன்றாவது வெற்றி ஆகும்.

    மேலும், லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்த 10-வது இந்திய வீரர் கே.எல்.ராகுல் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் நிச்சயம் விளையாடுவோம் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
    லண்டன்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கிருந்து வெளியேறும் நோக்குடன் ஆப்கானியர்களும் வெளிநாட்டினரும் காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து முற்றுகையிட்டு வருகிறார்கள்.

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் டிரண்ட் ராக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். 

    கெவின் பீட்டர்சன்

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து தனது குடும்பம் உடனடியாக வெளியேற முடியாத சூழல் நிலவுவதால் ரஷித் கான் கவலையில் உள்ளார் என இங்கிலாந்து கிரிக்கெட் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக கெவின் பீட்டர்சன் கூறுகையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தற்போதைய நிலை குறித்து நானும், ரஷிதும் நீண்ட நேரம் உரையாடினோம். தனது நாட்டின் நிலையை குறித்து வருத்தப்படும் அவர், தனது குடும்பத்தை அங்கிருந்து வெளிக்கொண்டு வர முடியாத கவலையில் மூழ்கியுள்ளார் என தெரிவித்துள்ளார். 
    கடினமான இலக்கு என்பதால், வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பை விட களத்தில் நிலைத்து நின்று டிரா செய்ய வேண்டும் என்பதில் இங்கிலாந்து வீரர்கள் கவனம் செலுத்தினர்.
    லார்ட்ஸ்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா கே.எல். ராகுலின் (129) சதத்தால் 364 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து ஜோ ரூட்டின் (180 நாட்அவுட்) அபார ஆட்டத்தால் 391 ரன்கள் குவித்தது.

    27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 55 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின்னர், புஜாரா-ரஹானே ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ரஹானே 61 ரன்களும், புஜாரா 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது. 

    இதேபோல், போட்டியின் கடைசி நாளான இன்று 9-வது விக்கெட்டுக்கு இணைந்த முகமது ஷமி-பும்ரா ஜோடி இங்கிலாந்தின் பந்து வீச்சை மிகவும் சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் குவித்தது. உணவு இடைவேளைக்கு பிறகு, இந்தியா 298 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஷமி 56 ரன்களுடனும், பும்ரா 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    ஜோ பர்ன்ஸ் டக் அவுட் ஆனதை கொண்டாடும் பும்ரா, விராட் கோலி

    இதையடுத்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து ஆரம்பத்திலேயே தடுமாறியது. எனவே, வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பை விட களத்தில் நிலைத்து நின்று டிரா செய்ய வேண்டும் என்பதில், கூடுதல் கவனம் செலுத்தினர். எனினும், இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. 
    குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். ஹமீது 9 ரன்கள், பேர்ஸ்டோ 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். சற்று நேரம் தாக்குப்பிடித்து ஆடிய ஜோ ரூட் 33 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

    அதன்பின்னர் ஜோஸ் பட்லர் சிறிது நேரம் தாக்குப்பிடித்து 25 ரன்களில் அவுட்டானார். இதனால் இங்கிலாந்து அணி 120 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட், பும்ரா 3 விக்கெட், இஷாந்த் 2 விக்கெட், ஷமி ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட்டது.

    இந்த வெற்றியின் மூலம் இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி தொடங்குகிறது.
    முகமது ஷமி 56 ரன்களும், பும்ரா 34 ரன்களும் விளாசி கூட்டாக 89 ரன்கள் சேர்க்க, இங்கிலாந்து அணிக்கு 272 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா கே.எல். ராகுலின் (129) சதத்தால் 364 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து ஜோ ரூட்டின் (180 நாட்அவுட்) அபார ஆட்டத்தால் 391 ரன்கள் குவித்தது.

    27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. கே.எல். ராகுல் (5), ரோகித் சர்மா (21), விராட் கோலி (20) ஆகியோர் விரைவாக ஆட்டமிழக்க இந்தியா 55 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

    ஆனால்  4-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ரஹானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. ரஹானே 61 ரன்களும், புஜாரா 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது.

    நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் இந்தியா 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷாப் பண்ட் 14 ரன்னுடனும், இஷாந்த சர்மா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ரிஷாப் பண்ட் 22 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார். இஷாந்த் சர்மா 16 ரன்னில் வெளியேறினார். ஆனால், 9-வது விக்கெட்டுக்கு முகமது ஷமியுடன் பும்ரா ஜோடி சேர்ந்தார். இருவரும் இங்கிலாந்தின் பந்து வீச்சை மிகவும் சிறப்பான எதிர்கொண்டு ரன்கள் குவித்தனர். முகமது ஷமி 57 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்து அசத்தினார். மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்திருந்தது. முகமது ஷமி 52 ரன்களுடனும், பும்ரா 30 ரன்களும் களத்தில் உள்ளனர்.

    உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் இந்தியா 298 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அப்போது 271 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 272 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. முகமது ஷமி 56 ரன்களுடனும், பும்ரா 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
    முகமது ஷமி அரைசதம் அடிக்க, பும்ரா கெத்தாக இங்கிலாந்து பந்து வீச்சை எதிர்கொள்ள இந்தியா 259 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா கே.எல். ராகுலின் (129) சதத்தால் 364 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து ஜோ ரூட்டின் (180 நாட்அவுட்) அபார ஆட்டத்தால் 391 ரன்கள் குவித்தது.

    27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. கே.எல். ராகுல் (5), ரோகித் சர்மா (21), விராட் கோலி (20) ஆகியோர் விரைவாக ஆட்டமிழக்க இந்தியா 55 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

    ஆனால்  4-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் ரஹானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. ரஹானே 61 ரன்களும், புஜாரா 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது.

    நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் இந்தியா 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷாப் பண்ட் 14 ரன்னுடனும், இஷாந்த சர்மா 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ரிஷாப் பண்ட் இந்திய அணியை நல்ல நிலைக்கு எடுத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 22 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார். இஷாந்த் சர்மா 16 ரன்னிலும் வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணிக்கு 200 ரன்கள் கூட இலக்காக நிர்ணயிக்க முடியாத நிலையில் இந்தியா இருந்தது. ரிஷாப் பண்ட் ஆட்டமிழக்கும்போது இந்தியா 167 ரன்களே முன்னிலை பெற்றிருந்தது.

    முகமது ஷமி

    ஆனால், 9-வது விக்கெட்டுக்கு முகமது ஷமியுடன் பும்ரா ஜோடி சேர்ந்தார். இருவரும் இங்கிலாந்தின் பந்து வீச்சை மிகவும் சிறப்பான எதிர்கொண்டு ரன்கள் குவித்தனர். இருவரையும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களால் ஆட்டமிழக்க செய்ய முடியவில்லை. பவுன்சர், ஸ்விங் என மிரட்டினர். ஆனால் இருவரும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் போன்று பேட்டிங் செய்தனர். சில கவர் டிரைவ் ஷாட்களை கச்சிதமாக ஆடியது காண்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது. 

    முகமது ஷமி 57 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்து அசத்தினார். கடைசி நாள் மதிய உணவு இடைவேளை வரை இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய முடியவில்லை. இந்தியா உணவு இடைவேளை வரை 8 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்துள்ளது. முகமது ஷமி 52 ரன்களுடனும், பும்ரா 30 ரன்களும் களத்தில் உள்ளனர். இந்த ஜோடி 77 ரன்கள் குவித்துள்ளது.
    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பையில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியால் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராக முடியாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ஆனால், டி20 உலகக்கோப்பையில் நிச்சயமாக பங்கேற்போம் என, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டின் மீடியா மானேஜர் ஹிக்மாட் ஹசன் தெரிவித்துள்ளார்.

    மேலும் ஹிக்மாட் ஹசன் கூறுகையில் ‘‘நாங்கள் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சில நாட்களில் உலகக்கோப்பைக்கான அணியில் விளையாட இருக்கும் வீரர்கள் காபூல் நகருக்கு பயிற்சி மேற்கொள்ள வருவார்கள். 

    ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் இணைந்து விளையாட இருக்கும் முத்தரப்பு டி20 தொடரை நடத்துவதற்கான இடத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். ஹம்பன்தோடாவில் பாகிஸ்தானுடன் விளையாட இருக்கிறோம். அதன்பின் உள்ளூர் தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளோம். உலகக்கோப்பைக்கு தயார்படுத்த இந்தத் தொடர்கள் சிறந்தவையாக இருக்கும். 

    ரஷித் கான், முகமது நபி ஆகியோர் தற்போது ஆப்கானிஸ்தானில் இல்லை. நாங்கள் எப்போதும் எங்களுடைய வீரர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்திற்கும் உதவி வருகிறோம். எங்களால் என்னென்ன முடியுமோ? அதையெல்லாம் செய்வோம். காபூலில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு இல்லை. நாங்கள் அலுவலகத்திற்கு வந்துள்ளோம். அதனால் கவலைப்படுவதற்கு ஏதுமில்லை’’ என்றார்.
    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3-வது முறையாக டி.என்.பி.எல் கோப்பையை கைப்பற்றி உள்ளது. இதற்கு முன்பு அந்த அணி 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.

    சென்னை:

    டி.என்.பி.எல். (தமிழ்நாடு பிரிமீயர் லீக்) 20 ஓவர் போட்டியில் திருச்சி வாரியர்சை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது.

    சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப் புக்கு 183 ரன் குவித்தது.

    தொடக்க வீரர் ஜெகதீசன் அபாரமாக ஆடி 58 பந்தில் 90 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரியும், 2 சிக்சரும் அடங்கும். கேப்டன் கவுசிக் காந்தி 19 பந்தில் 26 ரன் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். ரஹில் ஷா, பொய்யாமொழி தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய திருச்சி வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 8 ரன்னில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது.

    சரவணக்குமார் 25 பந்தில் 45 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்), அமித் சாத்விக் 16 பந்தில் 36 ரன்னும் (1 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தார். சோனு யாதவ் 2 விக்கெட்டும், ஆர்.சதீஷ், சாய்கிஷோர் அருண், அலெக்சாண்டர், ஹரிஷ் குமார் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    ஆட்டத்தின் கடைசி ஓவரில் திருச்சி அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலையில் சாய் கிஷோர் அபாரமாக பந்துவீசி 4 ரன்களே விட்டுக்கொடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார்.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3-வது முறையாக டி.என்.பி.எல் கோப்பையை கைப்பற்றி உள்ளது. இதற்கு முன்பு அந்த அணி 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.

    சாம்பியன் பட்டம் பெற்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு ரூ. 50 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. 2-ம் இடத்தை பிடித்த திருச்சி வாரியர்ஸ் அணிக்கு ரூ. 30 லட்சம் கிடைத்தது.

    உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

    ஆட்ட நாயகன் விருது ஜெகதீசனுக்கு கிடைத்தது. தொடர்நாயகன் விருதை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டன் ஹரி நிஷாந்த் தட்டிச் சென்றார். 

    சுதந்திர தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களையும், அதில் பங்கேற்றவர்களையும் பாராட்டினார்.

    புதுடெல்லி:

    32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடந்தது.

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 126 வீரர்-வீராங்கனைகள் 18 விளையாட்டுகளில் பங்கேற்றனர். இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அதிகபட்சமாக 7 பதக்கங்களை (ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்) வென்று சாதனை படைத்தது.

    ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். ஒலிம்பிக்கில் தடகளத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சிறப்புமிக்க சாதனையை அவர் படைத்தார்.

    பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, மல்யுத்த வீரர் ரவிகுமார் தகியா ஆகியோர் வெள்ளிப்பதக்கமும், பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் வெண்கல பதக்கமும் பெற்றனர்.

    பிரதமர் மோடி - பிவி சிந்து

    பி.வி.சிந்து ஒலிம்பிக்கில் 2 பதக்கம் பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். அவர் ரியோ டி ஜெனீரோவில் நடந்த ஒலிம்பிக்கிலும் (2016) வெள்ளிப்பதக்கம் பெற்றிருந்தார்.

    ஆக்கி போட்டியில் வெண்கல பதக்கம் கிடைத்தது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் ஆக்கியில் இந்தியா பதக்கம் பெற்று புதிய சாதனை படைத்தது. இதேபோல மகளிர் ஆக்கி அணியும் முதல்முறையாக அரைஇறுதி வரை தகுதி பெற்று 4-வது இடத்தை பிடித்தது.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் சாதித்து நாடு திரும்பிய இந்திய வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த தேனீர் விருந்து கொடுத்து பாராட்டினார்.

    சுதந்திர தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களையும், அதில் பங்கேற்றவர்களையும் பாராட்டினார்.

    இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்-வீராங்கனைகள் பிரதமர் நரேந்திர மோடியை இன்று காலை சந்தித்தனர்.

    தனது இல்லத்தில் சந்தித்த அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காலை உணவு வழங்கினார். பதக்கம் வென்ற ஒவ்வொரு வீரர்- வீராங்கனைகளையும் அவர் தனித்தனியாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். ஒலிம்பிக்கில் பங்கேற்ற அனைவருக்கும் அவர் பாராட்டுக்களை தெரிவித்தார்.

    இதையும் படியுங்கள்...தமிழகத்தில் 6 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான எதிரான முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    ஜமைக்கா:

    பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் பஹாத் ஆலம் 56 ரன்னும், பஹீம் அஷ்ரப் 44 ரன்னும், பாபர் அசாம் 30 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர், சீலஸ் தலா 3 விக்கெட்டும், ரோச் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 253 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
    பிராத்வெயிட் 97 ரன்னிலும், ஹோல்டர் 58 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிதி 4 விக்கெட்டும், அப்பாஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. 3-ம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. அபித் அலி 34 ரன்னில் ஆட்டமிழந்தார். அசார் அலி 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

     விக்கெட் வீழ்ந்த மகிழ்ச்சியில் வீரர்கள்

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் பாபர் அசாம் 54 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பாகிஸ்தான் 124 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. பாபர் அசாம் 58 ரன்னில் அவுட்டானார். ஹசன் அலி 28 ரன்னில் வெளியேறினார்.
    இறுதியில், பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சில் 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் சீலஸ் 5 விக்கெட்டும், ரோச் 3 விக்கெட்டும், ஹோல்டர், கைல் மேயர்ஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் துல்லியமாக பந்து வீசி அசத்தி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    பிராத்வெயிட் 2 ரன், கிரன் பாவெல் 4 ரன், பானெர் 5 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். 16 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி திணறியது.

    அடுத்து இறங்கிய ரோஸ்டன் சேஸ், பிளாக்வு ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து 68 ரன்கள் சேர்த்த நிலையில், சேஸ் 22 ரன்னில் அவுட்டானார்.

    பொறுப்புடன் ஆடிய பிளாக்வுட் அரை சதமடித்து 55 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கைல் மேயர்ஸ் டக் அவுட்டானார்.
    கேப்டன் ஹோல்டர் 16 ரன்னில் வெளியேற வெஸ்ட் இண்டீஸ் அணியின் தோல்வி உறுதியானது.

    ஆனால் அடுத்து இறங்கிய கீமர் ரோச் நிதானமாக ஆடினார். அவர் பொறுப்புடன் ஆடி ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது சீலஸ்க்கு அளிக்கப்பட்டது.

    பாகிஸ்தான் சார்பில் ஷஹின் அப்ரிதி 4 விக்கெட், ஹசன் அலி 3 விக்கெட், பஹீம் அஷ்ரப் 2 விக்கெட் வீழ்த்தினர்.
    இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்தியாவின் ரகானே பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.
    லண்டன்:
       
    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. 

    முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 364 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 83 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல் 129 ரன்னில் அவுட்டானார். ரிஷப் பண்ட் 37 ரன்னிலும், ஜடேஜா 40 ரன்னிலும் வெளியேறினர்.

    இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டும், ஆலி ராபின்சன் மற்றும் மார்க் வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 391 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூ 180 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் 49 ரன்னில் ஷமியிடம் வீழ்ந்தார். பேர்ஸ்டோவ் அரை சதமடித்து 57 ரன்னில் அவுட்டானார். இங்கிலாந்து அணி 27 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட், இஷாந்த் சர்மா 3, ஷமி 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடக்க ஆட்டக்காரர் 5 ரன்னிலும், ரோஹித் சர்மா 21 ரன்னிலும், விராட் கோலி 20 ரன்னிலும் ஆட்டமிழந்தார். 55 ரன்களை எடுப்பதற்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து இந்தியா தத்தளித்தது. 

    அடுத்து இறங்கிய புஜாராவும், ரகானேவும் பொறுமையுடன் ஆடினர். இந்த ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது. 

    3 விக்கெட் வீழ்த்திய மார்க் வுட்

    அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புஜாரா 45 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ஜடேஜா 3 ரன்னில் அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ரகானே அரை சதமடித்தார். அவர் 61 ரன்னில் ஆட்டமிழந்தார்.  

    நான்காம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 82 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பண்ட் 14 ரன்னும், இஷாந்த் சர்மா 4 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதுவரை இந்தியா 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
     
    இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் 3 விக்கெட்டும், மொயின் அலி 2 விக்கெட்டும், சாம் கர்ரன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    ×