என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் இந்திய பெண்கள் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தினார்.
    ஓவல்:

    இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் கராரா ஓவலில் நடைபெற்று வருகிறது . டாஸ் வென்ற ஆஸ்திரேலியாவின் கேப்டன் மெக் லானிங் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் களமிறங்கிய இந்தியாவின் மந்தனா மற்றும் ஷபாலி வர்மா சிறப்பான தொடக்கம் அமைத்தனர். ஷபாலி வர்மா 31 ரன்னில் ஆட்டமிழந்தார் .  

    இந்தியா 44.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் முதல் நாள் ஆட்டம் பாதியிலே ரத்து செய்யப்பட்டது. மந்தனா அரைசதம் அடித்து 80 ரன்னிலும், பூனம் ரவுத் 16 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர் .

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. சிறப்பாக ஆடிய ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தினார். அவர் 127 ரன்னில் ஆட்டமிழந்தார். பூனம் ரவுத் 16 ரன்னிலும், கேப்டன் மிதாலி ராஜ் 30 ரன்னிலும் அவுட்டாகினர். யஸ்திகா பாட்டியா 19 ரன்னில் வெளியேறினார். 

    இந்திய அணி 101.5 ஓவரில் 276 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தீப்தி சர்மா 12 ரன்னில் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
    இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மந்தனா சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

    ஓவல்:

    இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் ஒரே ஒரு பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கரரா ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தியாவின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. தொடக்க வீராங்கனை ‌ஷபாலி வர்மா 31 ரன்னில் அவுட் ஆனார். இந்திய அணி 44.1 ஓவரில் 132 ரன் எடுத்திருந்த போது மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது. அப்போது மந்தனா 80 ரன்னுடனும் பூனம் ரவுத் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தனா டெஸ்டில் தனது முதல் சதத்தை அடித்தார். ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த முதல் இந்திய வீரங்கனை என்ற சாதனையையும் அவர் பெற்றார். அவர் 170 பந்தில் 100 ரன்னை தொட்டார். இதில் 18 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். அதன்பின் மந்தனா 127 ரன்னிலும், புனம் ரவுத் 36 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இந்திய அணி 81 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 224 ரன் எடுத்திருந்தது.

    பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க எஞ்சியுள்ள அனைத்து போட்டியிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் வெற்றிபெற வேண்டி இருப்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    துபாய்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் தொடங்கும் 45-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

    கொல்கத்தா 11 ஆட்டத்தில் 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திலும், பஞ்சாப், 11 ஆட்டத்தில் 4 வெற்றி, 7 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 6-வது இடத்திலும் உள்ளது.

    பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க எஞ்சியுள்ள அனைத்து போட்டியிலும் இரு அணிகளும் வெற்றிபெற வேண்டும்.

    இதனால் அந்த அணிகள் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மோத உள்ளன. இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் நன்கு ஆதரவு அளித்து வருகிறார்கள் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் டோனி பெருமையுடன் கூறினார்.

    சார்ஜா:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு சார்ஜாவில் நடந்த 44-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்கடித்தது.

    முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 134 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சகா 44 ரன் எடுத்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. ருதுராஜ் கெய்க்வாட் 45 ரன்னும், டுபெலிசிஸ் 41 ரன்னும் எடுத்தனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 139 ரன் எடுத்து வென்றது. அந்த அணி பெற்ற 9-வது வெற்றி (11 ஆட்டம்) இதுவாகும். இதன் மூலம் முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

    வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி கூறியதாவது:-

    கடந்த போட்டி முடிந்த பிறகு பரிசு அளிப்பு விழாவில் நான் பேசும்போது, நாங்கள் வலுவாக திரும்பி வர வேண்டும் என்று கூறினேன். அதிலிருந்து நீங்கள் கற்று கொண்டிருக்க வேண்டும். முதல் கட்ட ஐ.பி.எல். போட்டியில் கூட அதை நாங்கள் செய்தோம்.

    ஒவ்வொரு பாராட்டும் வீரர்கள் மற்றும் அணி ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த ஆடுகளம், பந்து திரும்பும் வகையில் இல்லை. ஆனால் நல்ல பவுன்ஸ் இருந்தது. பந்து வீச்சாளர்கள், வேகத்தையும், சரியான அளவிலும் வீசினர்.இதை தான் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு கூறினேன்.

    அந்த திட்டத்தை சரியாக செயல்படுத்தினர். ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் நன்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். நாங்கள் ரசிகர்களை பற்றி பெருமைப்படுகிறோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக நான் பெருமையுடன் சொல்ல முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால்தான் பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பு என்ற நிலையில், கிறிஸ் கெய்ல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐ.பி.எல். 2021 தொடரின் 2-வது பகுதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன.

    பஞ்சாப் அணி மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் கடைசி இரண்டு போட்டிகளில் கிறிஸ் கெய்ல் இடம் பிடித்தார். முதல் போட்டியில் 14 ரன்களும், 2-வது போட்டியில் 1 ரன்னும் எடுத்தார்.

    இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும். இந்த நிலையில் திடீரென ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று தாக்காமல் இருக்க வீரர்களுக்கு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்காரணமாக சோர்வு ஏற்பட்டதால் இந்த முடிவுக்கு கிறிஸ் கெய்ல் வந்துள்ளார்.

    இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘கடந்த சில மாதங்களாக கரீபியன் பிரிமீயர் லீக், தற்போது ஐ.பி.எல். ஆகியவற்றின் பாதுகாப்பு வளையத்தில் (Bio-Bubble) இருந்துள்ளேன். மனரீதியில் புத்துணர்ச்சி பெற்று, புதுத்தெம்புடன் வர விரும்புகிறேன்.

    டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு உதவுவதற்கான மீண்டும் கவனம் செலுத்த விரும்புகிறேன். இதனால் துபாயில் ஓய்வு எடுக்க இருக்கிறேன். இதற்கான நேரத்தை கொடுத்த பஞ்சாப் அணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அணிக்கு என்னுடைய வாழ்த்து மற்றும் நம்பிக்கையை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள்’’ என்றார்.

    11 போட்டிகளில் இரண்டில் மட்டுமே தோல்வியை தழுவிய நிலையில் 9 வெற்றிகளுடன் அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இந்த முறை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் விளையாடியது சென்னை சூப்பர் கிங்ஸ். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

    இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் 11 போட்டிகளில் 9-ல் வெற்றி பெற்று அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடமும், 7-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடமும் தோல்வியை சந்தித்திருந்தது. இந்த சீசனில் தொடர்ந்து ஐந்து முறையும், தொடர்ந்து நான்கு முறையும் வெற்றி பெற்றுள்ளது.
    தொடக்க ஜோடியான ருதுராஜ், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டின் 44-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. வழக்கும்போல் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் சொதப்ப 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணியின் தொடக்க பேட்ஸ்மேன் சாகா 46 பந்தில் 44 ரன்கள் எடுத்தது அதிகபட்ச ஸ்கோராகும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ருதுராஜ், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.1 ஓவரில் 75 ரன்கள் சேர்த்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீது இருந்த நெருக்கடியை குறைத்தது.

    ருதுராஜ் 38 பந்தில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொயீன் அலி 17 பந்தில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரெய்னா 2 ரன்னில் வெளியேற, டு பிளிஸ்சிஸ் 36 பந்தில் 41 ரன்கள் எடுத்து வெளியேறினார். டு பிளிஸ்சிஸ் ஆட்டமிழக்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் 15.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது.

    5-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் எம்.எஸ். டோனி ஜோடி சேர்ந்தார். அப்போது சென்னை அணிக்கு 25 பந்தில் 27 ரன்கள் தேவைப்பட்டது.

    கடைசி 3 ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரின் 4-வது பந்தில் டோனி கொடுத்த கடினமான கேட்சை ஜேசன் ராய் பிடிக்க தவறினார். இதனால் டோனி 2 ரன்னில் ஆட்டமிழப்பதில் இருந்து தப்பினார். அடுத்த பந்தை அம்பதி ராயுடு பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் 6 ரன்கள் கிடைத்தது.

    மொயீன் அலி விக்கெட்டை வீழ்த்திய ரஷித்கான்

    19-வது ஓவரை புவி வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார் அம்பதி ராயுடு. 4-வது பந்தை பவுண்டரிக்கு விராட்டினார் டோனி.  கடைசி ஓவரில் சென்னை அணிக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது.

    கடைசி ஓவரை சித்தார்த் கவுல் வீசினார்.  4-வது பந்தை டோனி சிக்சருக்கு தூக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சகா ஓரளவு தாக்குப்பிடித்து 44 ரன்கள் எடுத்தார்.
    சார்ஜா:

    ஐ.பி.எல். தொடரின் 44-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் மோதுகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 2 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேப்டன் வில்லியம்சன் 11 ரன்னில் வெளியேறினார். பிரியம் கார்க் 7 ரன்னிலும், அபிஷேக் வர்மா 18 ரன்னிலும், அப்துல் சமது 18 ரன்னிலும் அவுட்டாகினர்.

    44 ரன்கள் அடித்த விருத்திமான் சகா

    தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சகா ஓரளவு தாக்குப்பிடித்து 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் ரஷித்கான் 13 பந்தில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

    சென்னை அணி சார்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    சார்ஜா:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அடுத்த சுற்றை எட்டும் உத்வேகத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் மோதுகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:-

    1. பாப் டு பிளிஸ்சிஸ், ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, டோனி, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ஹேசில்வுட், ஷர்துல் தாக்குர், வெய்ன் பிராவோ. 

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விவரம்:-

    1. ராய் 2. விருத்திமான் சஹா 3. கார்க் 4. கேன் வில்லியம்சன் 5. அபிஷேக் சர்மா 6. அப்துல் சமத் 7. ஹோல்டர் 8.ரஷித் கான் 9. புவனேஸ்வர் குமார் 10. சித்தார்த் கவுல் 11. சந்தீப் சர்மா 
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் இந்திய பெண்கள் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அரை சதம் அடித்து அசத்தினார்.
    ஓவல்:

    இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் கராரா ஓவலில் இன்று தொடங்கியது .

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியாவின் கேப்டன் மெக் லானிங் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இந்தியாவின் மந்தனா மற்றும் ஷபாலி வர்மா சிறப்பான தொடக்கம் அமைத்தனர். அணியின் ஸ்கோர் 93 ரன்னாக இருந்தபோது  ஷபாலி வர்மா 31 ரன்னில் ஆட்டமிழந்தார் . 

    மைதானத்தில் பெய்த மழை

    இந்திய அணி 44.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் முதல் நாள் ஆட்டம் பாதியிலே ரத்து செய்யப்பட்டுள்ளது .

    இந்திய அணியில் மந்தனா அரைசதம் அடித்து 80 ரன்னிலும், பூனம் ரவுத் 16 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர் .
    சர்வதேச போட்டியில் விளையாடாத ஒருவர் ஐ.பி.எல்.லில் அதிக விக்கெட் சாய்த்தவர் என்ற பெருமையை பெங்களூர் அணி வீரர் ஹர்ஷல் பட்டேல் பெற்றுள்ளார்.

    துபாய்:

    ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூர் அணி 7-வது வெற்றியை பெற்றது.

    துபாயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்தது. இதனால் பெங்களூர் அணிக்கு 150 ரன் இலக்காக இருந்தது.

    இவின் லீவிஸ் 37 பந்தில் 58 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), ஜெய்ஷ்வால் 22 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஹர்‌ஷல் படேல் 3 விக்கெட்டும், யசுவேந்திர சாகல், சபாஷ் அகமது தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 17.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மேக்ஸ்வெல் 30 பந்தில் 50 ரன்னும் (6 பவுண்டரி 1 சிக்சர்), ஸ்ரீகர் பரத் 35 பந்தில் 44 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    பெங்களூர் அணி பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 7-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 8 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.

    இந்த ஆட்டத்தில் 3 விக்கெட் கைப்பற்றியதன் மூலம் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீரர் ஹர்‌ஷல் பட்டேல் 26 விக்கெட்டை எடுத்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். 11 ஆட்டத்தில் அவர் 26 விக்கெட் எடுத்துள்ளார். இதன்மூலம் ஹர்‌ஷல் பட்டேல் ஐ.பி.எல். போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார்.

    சர்வதேச போட்டியில் விளையாடாத ஒருவர் ஐ.பி.எல்.லில் அதிக விக்கெட் சாய்த்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் இதே பெங்களூர் அணியை சேர்ந்த யசுவேந்திர சாகல் 23 விக்கெட் கைப்பற்றி இருந்தார். அதை ஹர்‌ஷல் பட்டேல் முறியடித்தார்.

    ஒரு சீசனில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய வீரராக பிராவோ உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான அவர் 2013 ஐ.பி.எல்.லில் 32 விக்கெட் கைப்பற்றினார். அவரது சாதனையை நோக்கி ஹர்‌ஷல் பட்டேல் செல்கிறார். 

    முழுமையாக குணமடைந்து மிக விரைவில் களம் திரும்ப விரும்புகிறேன் என்று குல்தீப் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், பயிற்சியின்போது வலது கால்முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார்.

    இந்த நிலையில் கால்முட்டி காயத்தை சரிசெய்ய அவருக்கு நேற்று ஆபரேஷன் செய்யப்பட்டது. ‘ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது. காயத்தில் இருந்து மீள்வதற்கான மருத்துவம் மற்றும் பயிற்சி நடைமுறைகள் தொடங்கியுள்ளன.

    இந்த சமயத்தில் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. முழுமையாக குணமடைந்து மிக விரைவில் களம் திரும்ப விரும்புகிறேன்’ என்று குல்தீப் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    ×