என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெய்ல் திடீர் விலகல்
Byமாலை மலர்30 Sep 2021 9:53 PM GMT (Updated: 30 Sep 2021 9:53 PM GMT)
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால்தான் பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பு என்ற நிலையில், கிறிஸ் கெய்ல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐ.பி.எல். 2021 தொடரின் 2-வது பகுதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன.
பஞ்சாப் அணி மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் கடைசி இரண்டு போட்டிகளில் கிறிஸ் கெய்ல் இடம் பிடித்தார். முதல் போட்டியில் 14 ரன்களும், 2-வது போட்டியில் 1 ரன்னும் எடுத்தார்.
இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும். இந்த நிலையில் திடீரென ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகுவதாக கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று தாக்காமல் இருக்க வீரர்களுக்கு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்காரணமாக சோர்வு ஏற்பட்டதால் இந்த முடிவுக்கு கிறிஸ் கெய்ல் வந்துள்ளார்.
இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘கடந்த சில மாதங்களாக கரீபியன் பிரிமீயர் லீக், தற்போது ஐ.பி.எல். ஆகியவற்றின் பாதுகாப்பு வளையத்தில் (Bio-Bubble) இருந்துள்ளேன். மனரீதியில் புத்துணர்ச்சி பெற்று, புதுத்தெம்புடன் வர விரும்புகிறேன்.
டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு உதவுவதற்கான மீண்டும் கவனம் செலுத்த விரும்புகிறேன். இதனால் துபாயில் ஓய்வு எடுக்க இருக்கிறேன். இதற்கான நேரத்தை கொடுத்த பஞ்சாப் அணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அணிக்கு என்னுடைய வாழ்த்து மற்றும் நம்பிக்கையை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள்’’ என்றார்.
இதையும் படியுங்கள்... தினசரி வருவாய் ரூ. 1,002 கோடியுடன் பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் கவுதம் அதானி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X