என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் தனது தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் முதல்வர் பேசினார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில்,  அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் மனு அளித்தனர். இதையடுத்து, நாராயணசாமி தலைமையிலான அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டார். இதற்காக புதுச்சேரி சட்டசபை சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

    அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்து பேசினார். அப்போது, புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என்றார். முந்தைய ஆளுநர் கிரண்பேடி மூலம் அரசுக்கு தொல்லை கொடுக்கப்பட்டதாகவும், நெருக்கடியை கடந்தும் ஆட்சி நீடித்ததாகவும் கூறினார். மேலும் மக்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளதாக கூறிய அவர், தனது ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை விளக்கினார். 

    மத்திய அரசிடம் இருந்து போதிய நிதி கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

    புதுச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 12 ஆக உள்ளது. எதிர்க்கட்சிகளின் பலம் நியமன உறுப்பினர்களையும் சேர்த்து 14 ஆக உள்ளது. நியமன எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து ஓட்டுரிமை அளிக்காத பட்சத்தில் அரசு தப்பிக்க வாய்ப்பு உள்ளது.
    புதுவையில் பெய்த கனமழையால் பெண் ஒருவர் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சண்முகாபுரத்தை அடுத்த வடக்கு பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி ஹசீனாபேகம் (வயது 35). மீன் வியாபாரம் செய்து வந்தார். அந்த பகுதியில் உள்ள மக்கள், தங்களது வாகனங்களை அங்குள்ள ஓடை பகுதியில் நிறுத்தி வைப்பது வழக்கம். ஹசீனா பேகமும் தனது ஸ்கூட்டரை நேற்று முன்தினம் இரவு அங்கு நிறுத்தி வைத்திருந்தார்.

    இந்தநிலையில் நேற்று பெய்த கனமழையால் ஓடையில் மழை நீர் பெருக்கெடுத்து வரத்தொடங்கியது. நேற்று காலை ஸ்கூட்டர் மூழ்கியபடி தண்ணீர் சென்று கொண்டிருப்பதை பார்த்து ஹசீனாபேகம் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தனது ஸ்கூட்டரை மீட்டு எடுத்து பாதுகாப்பான இடத்தில் விடுவதற்காக சென்றார்.

    அப்போது தண்ணீர் அதிகமாக வந்ததால் நிலை தடுமாறி ஹசீனாபேகம் ஓடையில் விழுந்தார். இதனால் அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அது முடியவில்லை.

    இதுகுறித்து கோரிமேடு தீயணைப்பு நிலையத்துக்கும், மேட்டுப்பாளையம் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது கதி என்னவென்று தெரியவில்லை. அவரை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு படுதோல்வியை சந்திக்கும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுச்சேரியில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியின் முதல்-அமைச்சராக நாராயணசாமி உள்ளார். முதல்-அமைச்சரின் மக்கள் விரோத போக்கு, மத்திய அரசு, கவர்னருடன் மோதல், மாநில வளர்ச்சியில் அக்கறையின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளால் மாநில நலன் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் நாராயணசாமியின் சர்வாதிகாரமான செயலை கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். தற்போது ஆளுங்கட்சியில் 12 எம்.எல்.ஏ.க்களும், எதிர்கட்சிக்கு 14 எம்.எல். ஏ.க்களும் உள்ளனர். எனவே மெஜாரிட்டியை இழந்த புதுவை அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.

    சட்டசபையில் நாளை (இன்று) நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஆளும் அரசு படுதோல்வியை சந்திக்கும். புதுச்சேரி சிறிய மாநிலம் என்பதால் நமக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி மத்திய அரசுடனும், கவர்னருடனும் இணக்கமாக செயல்பட்டிருக்க வேண்டும். வருகிற தேர்தலில் மக்கள் காங்கிரஸ், தி.மு.க.வுக்கு சரியான பாடத்தை புகட்டுவார்கள். புதுவையில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டால் அதற்கு புதுவையை ஆளும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியாளர்கள் தான் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுச்சேரியில் இன்று அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், ஆதரவு எம்எல்ஏக்களுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக இன்று புதுச்சேரி சட்டசபை சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

    அடுத்தடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், புதுச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 12 ஆக குறைந்தது. எதிர்க்கட்சிகளின் பலம் நியமன உறுப்பினர்களையும் சேர்த்து 14 ஆக உள்ளது. நியமன எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து ஓட்டுரிமை அளிக்காத பட்சத்தில் அரசு தப்பிக்க வாய்ப்பு உள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் நாராயணசாமி, ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். துணை சபாநாயகர் பாலன் இல்லத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. சட்டசபை நடைமுறை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
    பொதுமக்கள் கட்டணமில்லா பேரிடர் மேலாண்மை தொலைபேசி எண் 1070 மற்றும் 1077 ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு தங்கள் புகார்கள், குறைகளை தெரிவிக்கலாம்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இயக்குனர் மலர்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் நேற்று அதிகாலை முதல் எதிர்பாராதவிதமாக பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க வருவாய்த்துறையின் கீழ் இயங்கும் அவசரகால செயல் மையம் முழுவீச்சில் செயல்பட்டது. அனைத்து துறைகளின் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு அதிகாரிகள் களத்திற்கு சென்று மக்களின் தேவையான உதவிகள் செய்தனர்.

    அதன்படி தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் தங்குவதற்காக உடனடியாக 15 முகாம்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைக்கேற்ப கூடுதல் முகாம்கள் திறக்கப்படும். வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதியில் மின் மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள அரசுத்துறை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் கட்டணமில்லா பேரிடர் மேலாண்மை தொலைபேசி எண் 1070 மற்றும் 1077 ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு தங்கள் புகார்கள், குறைகளை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
    புதுவை, கடலூரில் கொட்டித்தீர்த்த கனமழையால், நேற்று 10 ஆயிரம் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
    புதுச்சேரி:

    வளிமண்டல சுழற்சி காரணமாக புதுச்சேரியில் நேற்று அதிகாலை 4 மணி முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது.

    புதுவை ரெயின்போநகர், வெங்கட்டாநகர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

    புதுச்சேரியில் நேற்று அதிகாலை முதல் மதியம் வரை 21 செ.மீ. மழை பதிவானது. வார இறுதி நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருவது வழக்கம். அதே போல் நேற்று புதுவைக்கு வந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் வெளியே வராமல் விடுதியின் உள்ளே முடங்கி கிடந்தனர்.

    நெல் மூட்டைகள் தண்ணீரில் மூழ்கின.


    புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை இன்று (திங்கட்கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளது.

    புதுவையில் கடந்த 9.2.1930 அன்று 11.9 செ.மீ மழை பதிவாகி இருந்ததே அதிக அளவு மழையாக இருந்தது. கடந்த 27.2.2000-ம் ஆண்டு 11.7 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. இந்த நிலையில் நேற்று பெய்த 21 செ.மீ. மழையே அதிக அளவில் பெய்துள்ளதாக பதிவாகி உள்ளது.

    மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

    புதுச்சேரி சண்முகாபுரத்தை அடுத்த வடக்கு பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹசீனாபேகம் (வயது 35). மீன் வியாபாரம் செய்து வந்தார். நேற்று பெய்த கனமழையால் ஓடையில் மழை நீர் பெருக்கெடுத்து வரத்தொடங்கியது. நேற்று காலை தனது ஸ்கூட்டரை மீட்டு எடுத்து பாதுகாப்பான இடத்தில் விடுவதற்காக சென்றார்.

    அப்போது தண்ணீர் அதிகமாக வந்ததால் நிலை தடுமாறி ஹசீனாபேகம் ஓடையில் விழுந்தார். இதனால் அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அது முடியவில்லை. அவரை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    கடலூரிலும் இடைவிடாமல் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் தண்ணீரை வாரி இறைத்து வெளியேற்றினர்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 19 சென்டி மீட்டர் மழை பதிவானது.

    இந்த மழை கடலூரில் வரலாற்று சாதனையாக பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இது பற்றி அவர் மேலும் கூறுகையில், ‘கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் பெய்த மழையானது புதிய வரலாற்று சாதனையாக பதிவாகி உள்ளது. கடலூரில் இன்று (நேற்று) காலை 8.30 மணி வரை பெய்த மழை 19 சென்டி மீட்டர் பதிவாகி உள்ளது.

    கடந்த 9.2.1930 அன்று கடலூரில் 11.9 சென்டி மீட்டர் மழை பெய்ததே பிப்ரவரி மாதத்தில் பெய்த அதிகபட்ச மழையாக இருந்தது. ஆனால் 91 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று விடிய, விடிய பெய்த கனமழை, முந்தைய சாதனையை முறியடித்தது’ என்றார்.

    கடலூர் அருகே குமளங்குளம் ஏரியில் அரசு தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

    பலத்த மழையின் காரணமாக வெள்ளம் ஏரிக்கு பெருக்கெடுத்து வந்தது. இதனால் அங்கு அமைக்கப்பட்டிருந்த நெல் கொள்முதல் நிலையம் மூழ்கியது. நெல் மூட்டைகள் தண்ணீர் அடித்து செல்லப்பட்டது. மேலும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளும் மூழ்கி வீணாகி உள்ளன.

    கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால் 550 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெல், மணிலா, எள், காய்கறிகள் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
    புதுச்சேரி அரசியலில் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ள நிலையில், நாளை சட்டசபை தொடங்கும்முன் இறுதி முடிவு எடுக்கப்படும் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரியில் ஆளும் அமைச்சரவையில் அங்கம் வகித்த நமச்சிவாயம், காங்கிரஸ் எம்எல்ஏ தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களுடைய எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து விட்டு, கடந்த மாதம் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தனர். இவர்களைத் தொடர்ந்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தனது அமைச்சர் மற்றும் எல்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் அ.ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    புதுச்சேரியில் 30 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில், ஆளும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், காங்கிரஸ் கட்சிக்கு 16 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 2016-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் வென்றிருந்தது.

    அங்கு ஏற்கனவே ஒரு உறுப்பினரின் பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்ட நிலையில், கடந்த 18-ந்தேதி நிலவரப்படி காங்கிரஸின் பலம் 10 ஆக இருந்தது. அதன் கூட்டணியில் உள்ள திமுக 3, சுயேச்சை உறுப்பினர் 1 என கூட்டினால் ஆளும் கூட்டணியின் பலம் 14 ஆக இருந்தது.

    அதே சமயம், எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் 7, அதிமுக 4, பாஜக நியமன உறுப்பினர்கள் 3 பேர் என அந்த அணிக்கும் 14 உறுப்பினர்களின் பலம் உள்ளது.

    அத்தகைய சூழலில்தான் புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி நீக்கப்பட்டு அப்பதவிக்கு தெலங்கானா மாநில ஆளுநரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை குடியரசு தலைவர் நியமித்தார்.

    இதையொட்டி புதுச்சேரியில் தமிழிசை செளந்தரராஜனுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். துணைநிலை ஆளுநர் பொறுப்பை தமிழிசை ஏற்ற சில மணி நேரத்தில், முதல்வர் நாராயணசாமி அரசு வரும் 22-ம்தேதி பெரும்பான்மையை பேரவையில் நிரூபிக்க துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து கடந்த 18-ந்தேதி புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. வருகிற 21-ந்தேதி காங்கிரஸ் மற்றும் திமுக எம்.எல்.ஏ.-க்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும். அதன்பின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ., திமுக எம்.எல்.ஏ.-க்கள் ராஜினாமா செய்தார்கள். இதனால் காங்கிரஸ் கட்சியின் பலம் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையில் இன்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், கூட்டணி கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    ஆலோசனை கூட்டம் முடிந்த பின் நாராயணசாமி கூறுகையில் ‘‘இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்கும் நடவடிக்கை குறித்து ஆலோசித்தோம். இறுதி முடிவு எடுக்கவில்லை. நாளை காலை 10 மணிக்கு சட்டசபை கூடுவதற்கு முன் இறுதி முடிவு எடுக்கப்படும். என்ன நிலை எடுப்போம் என்பதை சட்டசபையில் தெரிவிப்போம்’’ என்றார்.
    புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசேன் ராஜினாமா செய்தார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஒருவர் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் நாராயணசாமி தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது என பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் எதிர்க்கட்சிகள் முறையிட்டன. இதையடுத்து அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக நாளை காலை 10 மணிக்கு புதுச்சேரி சட்டசபை சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

    நியமன எம்எல்ஏக்களை பாஜகவைச் சேர்ந்தவர் என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் பார்த்தால், ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் தலா 14 எம்எல்ஏக்களுடன் சம பலத்தில் இருந்தன. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, நியமன எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. அவ்வாறு செய்யும்பட்சத்தில் அரசுக்கு சிக்கல் இல்லை. 

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார். ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான லட்சுமி நாராயணன் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் வீட்டிற்கு சென்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 13 ஆக குறைந்துள்ளது. சட்டசபையில் எம்எல்ஏக்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆக குறைந்துள்ளது. 

    இந்த நிலையில் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசேனும் ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் சிவக்கொழுந்து இல்லத்திற்கு சென்று ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். ஏற்கனவே 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் தற்போது திமுக எம்எல்ஏவும் ராஜினாமா செய்துள்ளார். திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்ததால் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 12 ஆக குறைந்துள்ளது.
    புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் ஆய்வு செய்தார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. காலையிலும் தொடர்ந்து கனமழை பெய்தது. குளிர்ந்த காற்றும் வீசியது.  கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது. நகரப்பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நகரின் ஒருசில பகுதிகளில் வீடுகளை சுற்றி மழை வெள்ளம் சூழ்ந்தது. 

    இந்நிலையில், மழை பாதிப்பு நிலவரம் தொடர்பாக ஆளுநர் மாளிகையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர், சப்-கலெக்டர் மற்றும் வருவாய் அதிகாரிகள், பொதுப்பணித் துறை அதிகாரிகள் கலந்துகொண்டு, மழை பாதிப்புகள் குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் விளக்கினர்.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழையால் அதிகம் பாதிப்புக்குள்ளான ரெயின்போ காலனி, சோனம்பாளையம், முருங்கப்பாக்கம், தேங்காய்த்திட்டு பகுதியில் பார்வையிட்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தண்ணீர் தேங்கிய பகுதிகளில் உள்ள தண்ணீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குறிப்பாக வடிகால்கள், கால்வாய்களை சுத்தம் செய்தால் தண்ணீர் விரைவாக வடியும் என அறிவுறுத்தினார். 

    அதன்பின்னர் ஆளுநர் மாளிகையில் மீண்டும் ஆய்வுக் கூட்டம் நடத்திய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
    புதுச்சேரியில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்ததால், நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு சிக்கல் உருவாகி உள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் நான்கு பேர் ராஜினாமா செய்துள்ளனர். ஒருவர் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் நாராயணசாமி தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது என பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் எதிர்க்கட்சிகள் முறையிட்டன. இதையடுத்து அரசு தனது மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக நாளை காலை 10 மணிக்கு புதுச்சேரி சட்டசபை சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

    நியமன எம்எல்ஏக்களை பாஜகவைச் சேர்ந்தவர் என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் பார்த்தால், ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் தலா 14 எம்எல்ஏக்களுடன் சம பலத்தில் இருந்தன. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, நியமன எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. அவ்வாறு செய்யும்பட்சத்தில் அரசுக்கு சிக்கல் இல்லை. 

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார். ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான லட்சுமி நாராயணன் சபாநாயகர் சிவக்கொழுந்துவின் வீட்டிற்கு சென்று தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார். இதன்மூலம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 13 ஆக குறைந்துள்ளது. சட்டசபையில் எம்எல்ஏக்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆக குறைந்துள்ளது. 
    என் உயிர் உள்ளவரை காங்கிரஸ் கட்சியிலேயே நீடிப்பேன் என்று விஜயவேணி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையில் 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததை தொடர்ந்து ஆளுங்கட்சி, எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சமபலத்தில் உள்ளனர்.

    ஆளுங்கட்சிக்கு 14 எம்.எல்.ஏ.க்களும், எதிர்கட்சிகளுக்கு நியமன உறுப்பினர்கள் 3 பேர் உள்பட 14 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இதனால் புதுவை அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டது என்றும், சட்டசபையை உடனே கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மாளிகையில் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

    இந்தநிலையில் புதிய கவர்னராக பதவியேற்ற தமிழிசை சவுந்தரராஜன் நாளை (திங்கட்கிழமை) சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என நாராயணசாமிக்கு உத்தரவிட்டார். அதன்படி நாளை சட்டசபை கூடுகிறது.

    இந்தநிலையில் நெட்டப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான விஜயவேணி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியானது.

    இதனை விஜயவேணி எம்.எல்.ஏ. மறுத்தார். இதுகுறித்து அவரிடம் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:-

    என் உயிர் உள்ளவரை காங்கிரஸ் கட்சியிலேயே நீடிப்பேன். முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எனது ஆதரவு என்றும் தொடரும். ராகுல்காந்திக்கும், சோனியாகாந்திக்கும் நான் களங்கம் விளைவிக்க மாட்டேன். தற்போது வெளியாகி உள்ள தகவல்கள் வதந்தியாகும். இதனை யாரும் நம்பவேண்டாம். காங்கிரசிலே தொடருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுவையில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்க தொடங்கி உள்ளது. நகரப்பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவமழை பெய்தது.

    தொடர்ந்து நிவர் மற்றும் புரெவி புயலில் பெய்த கனமழையால் ஏரி, குளம் என பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி உள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் மழை இல்லை. ஆனால், பனிப்பொழிவு இருந்தது.

    இந்த நிலையில் வளிமண்டல மேல் அடுக்கில் மேற்கு திசை காற்று சுழற்சி காரணமாகவும், கீழ் அடுக்கில் கிழக்கு திசை காற்றின் சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் 2 நாட்கள் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

    நேற்றைய தினம் புதுவையில் பகலில் வெயில் அடித்தது. மதியம் 12 மணி அளவில் லேசான மழை பெய்தது. ஆனால், மழை தொடரவில்லை இந்த நிலையில் இரவு 10 மணியளவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.

    லேசாக பெய்ய தொடங்கிய மழை வேகமெடுத்து நள்ளிரவில் கனமழையாக மாறியது. தொடர்ந்து விடிய, விடிய மழை பெய்த வண்ணம் உள்ளது. அதிலும் அதிகாலை 4 மணிக்கு மேல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.

    கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்க தொடங்கி உள்ளது. நகரப்பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நகரின் ஒருசில பகுதிகளில் வீடுகளை சுற்றி மழை வெள்ளம் சூழ தொடங்கி உள்ளது.

    தொடர்ந்து, கனமழை நீடித்தால் வீடுகளுக்குள் மழை நீர் உட்புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
    ×