என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாஜக வெற்றி பெற்றால் புதுவை மாநிலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாக்கப்படும். அதற்கான வேலையை பாஜக செய்து வருகிறது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க. அதிகாரம் மற்றும் பணபலத்தை வைத்து இந்த தேர்தலை எதிர்கொள்கிறது. மத்திய அரசின் அமைப்புகள் புதுவை வந்து முகாமிட்டு ஒரு சில நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது அதிகார து‌‌ஷ்பிரயோகம்.

    பா.ஜ.க. தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் மீதும், என் மீதும் கூறி வருகிறது.

    பா.ஜ.க. வெற்றி பெற்றால் புதுவை மாநிலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாக்கப்படும். அதற்கான வேலையை பா.ஜ.க. செய்து வருகிறது. ஏற்கனவே மின்துறை, அரசு அச்சகத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசு எடுத்த நடவடிக்கையால் தான் அது தடுக்கப்பட்டுள்ளது. எனவே நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வேண்டும்.

    சட்டசபை தேர்தலில் நான் போட்டியிட வேண்டும் என்று சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் வலியுறுத்தினர்.

    தற்போது மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தேர்தலில் போட்டியிடுவதால் தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக நான் தேர்தலில் நிற்கவில்லை.

    ஏனாம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் திடீரென காங்கிரசில் இருந்து விலகி என்.ஆர்.காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் அங்கு போட்டியிட வேட்பாளரை தேர்வு செய்ய காலதாமதம் ஏற்பட்டது.

    எனவே அந்த தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் கோலப்பள்ளி அசோக்குக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிக்கும். புதுச்சேரி தேர்தல் பிரசாரத்திற்கு ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி ஆகியோர் வர உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுவையில் மொத்தம் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் 13 தொகுதிகளில் குடும்ப, வாரிசு வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர், சபாநாயகர், மத்திய மந்திரி என புதுவை அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்தவர் பரூக். இவரது மகன் ஷாஜகான்.

    இவர் கடந்த காலங்களில் லாஸ்போட்டை, காலாப்பட்டு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தற்போது காமராஜர் நகர் தொகுதியில் களம் இறங்கியுள்ளார்.

    புதுவை அரசியலில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அசைக்க முடியாத சக்தியாக திகழ்பவர் ரங்கசாமி. இவரது அண்ணன் ஆதிகேசவன் மருமகன் நமச்சிவாயம்.

    கடந்த 96-ம் ஆண்டு அரசியலுக்கு வந்தார். 3 முறை அமைச்சர் பதவி வகித்த நமச்சிவாயம் தற்போது பா.ஜனதா வேட்பாளராக மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடுகிறார்.

    காங்கிரஸ் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தவர் சந்திர காசு. இவரது மகள் சந்திர பிரியங்கா. என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக நெடுங்காட்டில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் தற்போது 2-வது முறையாக களமிறங்கியுள்ளார்.

    காரைக்கால் வடக்கு தொகுதியில் காங்கிரஸ் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருமுருகன். தற்போது என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் முன்னாள் எம்.எல்.ஏ. நளமகராஜனின் மகனாவார் .

    காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று சபாநாயகர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர் சிவக்குமார். இவரது மகன்கள் மனோகரன், ராஜகணபதி ஆகியோர் பா.ஜனதா வேட்பாளராகவும், சுயேச்சையாகவும் போட்டியிடுகின்றனர்.

    முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதனின் மகன் செந்தில்குமார். இவர் பாகூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவரது அண்ணன் ராதாகிருஷ்ணன் சபாநாயகர், எம்.பி .உள்ளிட்ட பதவிகளை வகித்தவர்.

    புதுவை கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குருசாமி. இவர் எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். இவரது மகன் பன்னீர்செல்வம் உழவர்கரை தொகுதியில் 3-வது முறையாக என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    வில்லியனூர் தொகுதியில் வெற்றிபெற்ற அமைச்சர் பதவி வகித்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆனந்த பாஸ்கரன். இவரது அண்ணன் மகனான சண்.குமாரவேல மங்கலம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

    சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்த உத்தரவேலுவின் மகன் லட்சுமிகாந்தன்.

    கடந்த தேர்தலில் ஏம்பலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார் தற்போது 2-வது முறையாக என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    உத்தரவேலுவின் தம்பியும், முன்னாள் அமைச்சருமான ராஜவேலு தற்போது நெட்டப்பாக்கம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக 2-வது முறையாக போட்டியிடுகிறார்.

    நெல்லிதோப்பு தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களமிறங்கியுள்ள விவியன் ரிச்சர்ட்ஸ். அரசியலுக்கு புதுமுகம். இவரது தந்தை முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்குமார்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தி தம்பி ஆனந்தன் மணவெளி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்துள்ளார். இவர் கொம்யூன் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்துள்ளார்.

    உப்பளம் தொகுயில் தொடர்ந்து 4 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அன்பழகன். இவரது தம்பி பாஸ்கர் 3-வது முறையாக முதலியார்பேட்டையில் களமிறங்கி உள்ளார்.

    நாராயணசாமி, அவரது மகன் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கான நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசு தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றாத வாக்குறுதிகள், ஊழல் குற்றச்சாட்டுகளை பா.ஜனதா கையேடாக தயாரித்துள்ளது. அதனை தேர்தல் பிரசாரத்தில் வாக்காளர்களிடம் வினியோகிக்க உள்ளனர்.

    இந்த அறிக்கையில் நாராயணசாமியை கடுமையாக விமர்சித்துள்ளனர். அத்துடன் அவரை தவிர வேறு யாரையும் குறிப்பிடவில்லை.ஊழல் விவகாரங்களை பட்டியலிட்டுள்ளனர்.

    நாராயணசாமி, அவரது மகன் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கான நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

    ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம், இலவச வேட்டி, சேலை திட்டம், முதல் அமைச்சர் நிவாரண நிதி மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு, மாகி துறைமுக பணியில் நிதி முறைகேடு, மதுக்கடைகளை குத்தகைக்கு விட்டத்தில் முறைகேடு என ஊழல் பட்டியல் நீள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

    புதுவை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள கிரிக்கெட் வீரர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை கிரிக்கெட் அணியில் இடம் பெற்று இருப்பவர் சத்யநாராயண ராஜூ. ஆந்திராவை சேர்ந்த இவர் புதுவையில் வசிப்பதாக குடியிருப்பு ஆவணம் கொடுத்தார். அதனை ஆய்வு செய்த போது போலி ஆவணம் என்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் சத்ய நாராயணராஜூ மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரியில் தனியார் நிதி நிறுவனங்கள், பைனான்சியர் வீடுகள் உள்பட 7 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபை தேர்தலை நேர்மையாக நடத்தவும், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் மற்றும் மதுபானங்கள் கொடுப்பதை தடுக்கவும் தேர்தல் பறக்கும் படையினர் உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் வாக்காளர்களுக்கு பணம், பட்டுவாடா செய்ய தனியார் நிதி நிறுவனங்கள், பைனான்சியர் வீடுகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு வந்தனர். தனியார் ஓட்டலில் தங்கி இருந்த அவர்கள் தனியார் நிதி நிறுவனங்கள், பைனான்சியர் வீடுகளை ரகசியமாக கண்காணித்தனர். இதையடுத்து நேற்று பல்வேறு குழுக்களாக பிரிந்து 7 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அதன்படி புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள பைனான்ஸ், நிறுவனங்கள் மற்றும் போர்வால் வட்டி கடை ஆகியவற்றில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    இதேபோல் புதுவை இளங்கோ நகர், எல்லைபிள்ளைச்சாவடி பெரியார் நகர், லாஸ்பேட்டையில் உள்ள 4 பைனான்சியர் வீடுகளிலும் சோதனை நடந்தது. மொத்தம் 7 இடங்களில் நடந்த இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

    சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி வருமான வரித்துறை சோதனை நடத்தியது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக தீவிர ரோந்துப்பணியில் போலீசாா் ஈடுபட்டுள்ளனர். அணைக்கரை மேடு பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் லாஸ்பேட்டை போலீஸ் ஏட்டு சீனிவாசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த காத்தவராயன் (வயது 31) என்பவர் பா.ஜ.க.வுக்கு ஆதரவு கேட்டு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து காத்தவராயனை கைது செய்து அழைத்துச் சென்ற போலீசார் அவரிடமிருந்து ரூ.29 ஆயிரம் ரொக்கம், 6 துண்டுகளை பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதுவை பிரதேச மக்கள் அனைவரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்து தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    சர்வதேச மகிழ்ச்சி தினம் மற்றும் உலக சிட்டுக்குருவி தினம் ஆகியவை நேற்று கவர்னர் மாளிகையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி கவர்னர் மாளிகை வளாகத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மரக்கன்று நட்டார். மேலும் அங்குள்ள மரம் ஒன்றில் சிட்டுக்குருவி கூண்டையும் பொருத்தினார்.

    நிகழ்ச்சியில் கவர்னரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, ஏ.பி.மகேஸ்வரி, சிறப்பு செயலாளர் சுந்தரேசன், விவசாய அதிகாரி சாந்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். அப்போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதுவை பிரதேச மக்கள் அனைவரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்து தெரிவித்தார்.
    புதுச்சேரிக்கு 30-ந்தேதி பிரதமர் மோடி வருகிறார். தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரிக்கு 30-ந்தேதி பிரதமர் மோடி வருகிறார். தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

    மாநில பா.ஜ.க. பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சராக இருந்த நாராயணசாமியின் நிர்வாக திறமையின்மை காரணமாக, புதுவை மாநிலம் 20 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றுவிட்டது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொன்னதில் 90 சதவீதத்தை நிறைவேற்றவில்லை. மில்கள் மூடப்பட்டதால் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த கால காங்கிரஸ் அரசின் சாதனை என்பது மின் கட்டணத்தை உயர்த்தியது, குப்பைக்கு வரிபோட்டது, சொத்துவரி, தண்ணீர் வரியை உயர்த்தியது தான். முதல்-அமைச்சர் நிவாரண நிதி, சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகேட்டு ஊழல் பட்டியல் தயார் செய்துள்ளோம்.

    தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி 30-ந் தேதி புதுச்சேரி வருகிறார். அன்றைய தினம் மாலை 4 மணியளவில் ரோடியர் மில் திடலில் நடக்கும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இ்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

    மத்திய மந்திரி நிதின்கட்காரி நாளை (திங்கட்கிழமை) புதுவை வருகிறார். மாலையில் ஜெயராம் திருமண மண்டபத்தில் நடக்கும் கூட்டத்தில் அவர் கலந்துகொள்கிறார்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் லாஸ்பேட்டை மற்றும் மண்ணாடிப்பட்டு தொகுதிகளில் நடிகை கவுதமி பிரசாரம் மேற்கொள்கிறார். அதேபோல் வருகிற 24-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் புதுவையில் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் ராஜீவ்சந்திர சேகர் எம்.பி. கூறுகையில்,

    தோல்வி பயத்தால் தேர்தலில் நாராயணசாமி போட்டியிடவில்லை. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு பெரிய அளவில் ஊழல் செய்துள்ளது. அதை நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் வெளியில் கொண்டுவருவோம். மத்திய அரசு புதுவை மாநிலத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடி கொடுத்தது. அந்த நிதி எங்கே போனது?

    5 வருடம் பொது நிதியை தவறாக பயன்படுத்தி உள்ளனர். அதை அப்போதைய கவர்னர் தட்டிக்கேட்டு வெளிப்படையாக நடக்கச் சொன்னதால் அவருடன் சண்டை போட்டார்கள் என்றார்.
    பாகூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்கள் கடத்தி வந்த 2 பேரை கைது செய்தனர்.
    பாகூர்:

    பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் நேற்று சோரியாங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி போலீசார் சைகை செய்தனர். ஆனால் அந்த மோட்டார் சைக்கிள் நிற்காமல் வேகமாக சென்றது.

    இதையடுத்து போலீசார் தங்களது வாகனத்தில் விரட்டி சென்று மோட்டார் சைக்கிளை மடக்கி பிடித்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பைகளில் 50-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், தேங்காய்திட்டு திலகர் நகர் பகுதியை சேர்ந்த கணேஷ் (வயது 38), பாப்பஞ்சாவடி பகுதியை சேர்ந்த ஜீவகன் (36) என்பதும் தெரியவந்தது. 

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மதுபாட்டில்கள், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
    வில்லியனூர் அருகே வீட்டில் கேமரா வைத்த தகராறில் முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே சுல்தான் பேட்டை ஏ.ஆர்.ஆர். நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஹனிப் (வயது 62). இவர் பாதுகாப்புக்காக தனது வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தி இருந்தார்.

    இதற்கு அதே பகுதியை சேர்ந்த ஜின்னா என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் ஹனிப் தொழுகை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த ஜின்னா மற்றும் அவரது தரப்பை சேர்ந்த உபைதுர் ரகுமான், சபியுதீன் மற்றும் இலியாஸ் ஆகிய 4 பேரும் ஹனிப்பை தகாத வார்த்தைகளால் திட்டி வீட்டு முன்பு பொருத்தி உள்ள கண்காணிப்பு கேமராவை அகற்றாவிட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டினர்.

    அதோடு ஹனிப்பை அவர்கள் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இந்த தாக்குதலில் மயங்கி விழுந்த ஹனிபை அவரது நண்பர் சதாம் நிவாஸ் மற்றும் அங்குள்ளவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ் பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற ஹனிப் பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜின்னா உள்பட 4 பேரை தேடி வருகிறார்கள். 
    வில்லியனூர் அருகே பெண் போலீஸ்காரரின் கணவர் மயங்கி விழுந்து இறந்து போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே ஒதியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் தேவநாதன் (வயது 43). இவர், பொதுப் பணித்துறையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மாலா. இவர், புதுவை காவல்துறை தலைமை அலுவலகத்தில் பெண் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று காலை தேவநாதன் வீட்டில் டீ குடித்து விட்டு வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அவரது மனைவி மாலா மற்றும் உறவினர்கள் தேவநாதனை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக் டர்கள் வரும் வழியிலேயே தேவநாதன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மனைவி மாலா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி அருகே சுடுதண்ணீரில் தவறி விழுந்து 2½ வயது ஆண் குழந்தை பரிதாபமாக இறந்து போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    முருங்கப்பாக்கம் துலுக் கானத்தம்மன் நகர் 9-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரகு. இவர்தேங்காய்திட்டில் சொந்தமாக கார் பெயிண்டிங் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி தமிழ் செல்வி.இவர்களது 2½ வயது ஆண் குழந்தை யாதவ் சம்பவத்தன்று தமிழ்செல்வி குடிப்பதற்காக சிறிய பாத்திரத்தில் சுடு தண்ணீரை காய்ச்சி வீட்டு வராண்டாவில் வைத்திருந்தார்.

    அப்போது வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை யாதவ் சுடு தண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்து விட்டான். இதில், உடல் முழுவதும் வெந்து யாதவ் துடிதுடித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தமிழ் செல்வி உடனடியாக குழந்தையை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    பின்னர் குழந்தையை மேல் சிகிச்சைக்காக அரியூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் குழந்தை பரிதாபமாக இறந்து போனது.

    இதுகுறித்து ரகு கொடுத்த புகாரின் பேரில் முதலியார் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×