என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர், சபாநாயகர், மத்திய மந்திரி என புதுவை அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்தவர் பரூக். இவரது மகன் ஷாஜகான்.
இவர் கடந்த காலங்களில் லாஸ்போட்டை, காலாப்பட்டு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தற்போது காமராஜர் நகர் தொகுதியில் களம் இறங்கியுள்ளார்.
புதுவை அரசியலில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அசைக்க முடியாத சக்தியாக திகழ்பவர் ரங்கசாமி. இவரது அண்ணன் ஆதிகேசவன் மருமகன் நமச்சிவாயம்.
கடந்த 96-ம் ஆண்டு அரசியலுக்கு வந்தார். 3 முறை அமைச்சர் பதவி வகித்த நமச்சிவாயம் தற்போது பா.ஜனதா வேட்பாளராக மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தவர் சந்திர காசு. இவரது மகள் சந்திர பிரியங்கா. என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக நெடுங்காட்டில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் தற்போது 2-வது முறையாக களமிறங்கியுள்ளார்.
காரைக்கால் வடக்கு தொகுதியில் காங்கிரஸ் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருமுருகன். தற்போது என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் முன்னாள் எம்.எல்.ஏ. நளமகராஜனின் மகனாவார் .
காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று சபாநாயகர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர் சிவக்குமார். இவரது மகன்கள் மனோகரன், ராஜகணபதி ஆகியோர் பா.ஜனதா வேட்பாளராகவும், சுயேச்சையாகவும் போட்டியிடுகின்றனர்.
முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதனின் மகன் செந்தில்குமார். இவர் பாகூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவரது அண்ணன் ராதாகிருஷ்ணன் சபாநாயகர், எம்.பி .உள்ளிட்ட பதவிகளை வகித்தவர்.
புதுவை கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குருசாமி. இவர் எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். இவரது மகன் பன்னீர்செல்வம் உழவர்கரை தொகுதியில் 3-வது முறையாக என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
வில்லியனூர் தொகுதியில் வெற்றிபெற்ற அமைச்சர் பதவி வகித்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆனந்த பாஸ்கரன். இவரது அண்ணன் மகனான சண்.குமாரவேல மங்கலம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்த உத்தரவேலுவின் மகன் லட்சுமிகாந்தன்.
கடந்த தேர்தலில் ஏம்பலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார் தற்போது 2-வது முறையாக என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
உத்தரவேலுவின் தம்பியும், முன்னாள் அமைச்சருமான ராஜவேலு தற்போது நெட்டப்பாக்கம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக 2-வது முறையாக போட்டியிடுகிறார்.
நெல்லிதோப்பு தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களமிறங்கியுள்ள விவியன் ரிச்சர்ட்ஸ். அரசியலுக்கு புதுமுகம். இவரது தந்தை முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்குமார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தி தம்பி ஆனந்தன் மணவெளி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்துள்ளார். இவர் கொம்யூன் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்துள்ளார்.
உப்பளம் தொகுயில் தொடர்ந்து 4 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அன்பழகன். இவரது தம்பி பாஸ்கர் 3-வது முறையாக முதலியார்பேட்டையில் களமிறங்கி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அரசு தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றாத வாக்குறுதிகள், ஊழல் குற்றச்சாட்டுகளை பா.ஜனதா கையேடாக தயாரித்துள்ளது. அதனை தேர்தல் பிரசாரத்தில் வாக்காளர்களிடம் வினியோகிக்க உள்ளனர்.
இந்த அறிக்கையில் நாராயணசாமியை கடுமையாக விமர்சித்துள்ளனர். அத்துடன் அவரை தவிர வேறு யாரையும் குறிப்பிடவில்லை.ஊழல் விவகாரங்களை பட்டியலிட்டுள்ளனர்.
நாராயணசாமி, அவரது மகன் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர். தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கான நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம், இலவச வேட்டி, சேலை திட்டம், முதல் அமைச்சர் நிவாரண நிதி மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு, மாகி துறைமுக பணியில் நிதி முறைகேடு, மதுக்கடைகளை குத்தகைக்கு விட்டத்தில் முறைகேடு என ஊழல் பட்டியல் நீள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.
புதுவை கிரிக்கெட் அணியில் இடம் பெற்று இருப்பவர் சத்யநாராயண ராஜூ. ஆந்திராவை சேர்ந்த இவர் புதுவையில் வசிப்பதாக குடியிருப்பு ஆவணம் கொடுத்தார். அதனை ஆய்வு செய்த போது போலி ஆவணம் என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் சத்ய நாராயணராஜூ மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரிக்கு 30-ந்தேதி பிரதமர் மோடி வருகிறார். தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.
மாநில பா.ஜ.க. பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சராக இருந்த நாராயணசாமியின் நிர்வாக திறமையின்மை காரணமாக, புதுவை மாநிலம் 20 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றுவிட்டது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொன்னதில் 90 சதவீதத்தை நிறைவேற்றவில்லை. மில்கள் மூடப்பட்டதால் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.
கடந்த கால காங்கிரஸ் அரசின் சாதனை என்பது மின் கட்டணத்தை உயர்த்தியது, குப்பைக்கு வரிபோட்டது, சொத்துவரி, தண்ணீர் வரியை உயர்த்தியது தான். முதல்-அமைச்சர் நிவாரண நிதி, சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகேட்டு ஊழல் பட்டியல் தயார் செய்துள்ளோம்.
தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி 30-ந் தேதி புதுச்சேரி வருகிறார். அன்றைய தினம் மாலை 4 மணியளவில் ரோடியர் மில் திடலில் நடக்கும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இ்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
மத்திய மந்திரி நிதின்கட்காரி நாளை (திங்கட்கிழமை) புதுவை வருகிறார். மாலையில் ஜெயராம் திருமண மண்டபத்தில் நடக்கும் கூட்டத்தில் அவர் கலந்துகொள்கிறார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் லாஸ்பேட்டை மற்றும் மண்ணாடிப்பட்டு தொகுதிகளில் நடிகை கவுதமி பிரசாரம் மேற்கொள்கிறார். அதேபோல் வருகிற 24-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் புதுவையில் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் ராஜீவ்சந்திர சேகர் எம்.பி. கூறுகையில்,
தோல்வி பயத்தால் தேர்தலில் நாராயணசாமி போட்டியிடவில்லை. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு பெரிய அளவில் ஊழல் செய்துள்ளது. அதை நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் வெளியில் கொண்டுவருவோம். மத்திய அரசு புதுவை மாநிலத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடி கொடுத்தது. அந்த நிதி எங்கே போனது?
5 வருடம் பொது நிதியை தவறாக பயன்படுத்தி உள்ளனர். அதை அப்போதைய கவர்னர் தட்டிக்கேட்டு வெளிப்படையாக நடக்கச் சொன்னதால் அவருடன் சண்டை போட்டார்கள் என்றார்.






