என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டில் கேமரா வைத்த முதியவரை தாக்கி கொலை மிரட்டல் - 4 பேர் கைது
Byமாலை மலர்20 March 2021 10:28 AM GMT (Updated: 20 March 2021 10:28 AM GMT)
வில்லியனூர் அருகே வீட்டில் கேமரா வைத்த தகராறில் முதியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே சுல்தான் பேட்டை ஏ.ஆர்.ஆர். நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஹனிப் (வயது 62). இவர் பாதுகாப்புக்காக தனது வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தி இருந்தார்.
இதற்கு அதே பகுதியை சேர்ந்த ஜின்னா என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் ஹனிப் தொழுகை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.
அப்போது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த ஜின்னா மற்றும் அவரது தரப்பை சேர்ந்த உபைதுர் ரகுமான், சபியுதீன் மற்றும் இலியாஸ் ஆகிய 4 பேரும் ஹனிப்பை தகாத வார்த்தைகளால் திட்டி வீட்டு முன்பு பொருத்தி உள்ள கண்காணிப்பு கேமராவை அகற்றாவிட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டினர்.
அதோடு ஹனிப்பை அவர்கள் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர்.
இந்த தாக்குதலில் மயங்கி விழுந்த ஹனிபை அவரது நண்பர் சதாம் நிவாஸ் மற்றும் அங்குள்ளவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ் பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற ஹனிப் பின்னர் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜின்னா உள்பட 4 பேரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X