என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மூலக்குளம் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மூலக்குளம்:

    மூலக்குளம் அடுத்த கல்மேடுபேட் அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 49). இவரது மகள் சர்மிளா (26). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் சர்மிளாவுக்கு கர்ப்பப்பை கட்டி பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் மயங்கி கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரியில் மே 24ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கொரோனா தொற்று பன்மடங்கு அதிகரித்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானவா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்த நிலையில் புதுச்சேரியில் மே 24ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

    மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    சட்டமன்ற பா.ஜ.க. தலைவராக நமச்சிவாயம் தேர்வு செய்யப்பட்டார். இதனை மத்திய உள்துறை இணை மந்திரி கி‌‌ஷண்ரெட்டி தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைகிறது. முதல்-அமைச்சராக ரங்கசாமி நேற்று பதவியேற்றுக்கொண்டார். அமைச்சர்கள் விரைவில் பதவியேற்க உள்ளனர்.

    இத்தகைய சூழ்நிலையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் மத்திய மந்திரி கி‌‌ஷண்ரெட்டி, மாநில பா.ஜ.க. பொறுப்பாளர்கள் சி.டி.ரவி, நிர்மல்குமார் சுரானா, தேர்தல் பொறுப்பாளர் ராஜீவ்சந்திரசேகர் எம்.பி., மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன், எம்.எல்.ஏ.க்கள் நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம், சாய் சரவணன், ஜான்குமார், ரிச்சர்ட், கல்யாணசுந்தரம், கோலப்பள்ளி சீனிவாஸ் அசோக் (சுயேச்சை) ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பா.ஜ.க. சட்டமன்ற கட்சி தலைவராக நமச்சிவாயம் தேர்வு செய்யப்பட்டார். இதனை மத்திய உள்துறை இணை மந்திரி கி‌‌ஷண்ரெட்டி தெரிவித்தார். இதையடுத்து நமச்சிவாயத்துக்கு பா.ஜ.க. முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
    கொரோனா பாதித்த நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து வெளியே வர தடை விதித்து இருப்பதாக சப்-கலெக்டர் ஆதர்ஷ் எச்சரித்தார்.
    காரைக்கால்:

    காரைக்கால் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட நாட்கள் தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நலவழித்துறை அறிவுறுத்தி உள்ளது.

    ஆனால் இதை மீறி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் வீட்டை விட்டு வெளியில் செல்வதால் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட காரைக்கால் தருமபுரம் பகுதியில் சப்-கலெக்டர் ஆதர்ஷ், தாசில்தார் பொய்யாதமூர்த்தி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது சப்-கலெக்டர் ஆதர்ஷ் கூறுகையில், ‘கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டைவிட்டு வெளியில் வரக்கூடாது. கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து, அங்குள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மகளிர் சுயஉதவிக்குழுவினரை பயன்படுத்தலாம்’ என்றார்.
    ரங்கசாமி பதவியேற்பு விழாவில், எம்.எல்.ஏ.க்கள், அரசு செயலாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க. 6 இடங்களிலும் வெற்றிபெற்றது. இந்த கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத்ததால் ஆட்சி அமைக்கும் பணியை தொடங்கின. 

    என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ரங்கசாமி சட்டமன்ற குழு தலைவராக (முதல்-அமைச்சர்) தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கடந்த 3-ந்தேதி கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தையும் அவர் வழங்கினார்.

    பதவியேற்பு விழா

    அதை பெற்றுக்கொண்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ஆட்சியமைக்கும்படி ரங்கசாமிக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி புதுவை முதல்-அமைச்சராக ரங்கசாமி இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

    விழாவில், எம்.எல்.ஏ.க்கள், அரசு செயலாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
    கொரோனா தொற்று பரவலை கருத்தில்கொண்டு மீண்டும் கவர்னர் மாளிகை வளாகத்தில் பதவி ஏற்பு விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

    சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க. 6 இடங்களிலும் வெற்றிபெற்றது. இந்த கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத்ததால் ஆட்சி அமைக்கும் பணியை தொடங்கின. என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ரங்கசாமி சட்டமன்ற குழு தலைவராக (முதல்-அமைச்சர்) தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கடந்த 3-ந்தேதி கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தையும் அவர் வழங்கினார்.

    அதை பெற்றுக்கொண்ட கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் நல்லநேரம் பார்த்து அவர்கள் தெரிவிக்கும் நேரத்தில் பதவி ஏற்கலாம் என்று தெரிவித்தார். அதன்படி புதுவை முதல்-அமைச்சராக ரங்கசாமி இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.20 மணிக்கு பதவி ஏற்றுக் கொள்கிறார்.

    இதற்கான விழா கவர்னர் மாளிகை வளாகத்தில் நடக்கிறது. அங்கு பந்தல் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. எளிமையாக நடக்கும் விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் புதிய முதல்-அமைச்சராக ரங்கசாமிக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்து வாழ்த்து தெரிவிக்கிறார்.

    அதைத்தொடர்ந்து சட்ட சபைக்கு வரும் ரங்கசாமி தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொள்கிறார். ரங்கசாமியுடன் பிற அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்கவில்லை.

    அதன்பின்னரே அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. பா.ஜ.க.வை சேர்ந்த நமச்சிவாயம் துணை முதல்-அமைச்சராக பதவி ஏற்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. இதுதவிர என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 3 பேரும், பா.ஜ.க.வை சேர்ந்த மேலும் ஒருவரும் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர்.

    ரங்கசாமியின் பதவி ஏற்பு விழா முதலில் கவர்னர் மாளிகையில் நடைபெறும் என்று கூறப்பட்டது. அதன்பின் கடற்கரை காந்தி சிலை முன்பு பதவி ஏற்க திட்டமிடப்பட்டு பந்தல்போடும் பணி நடந்தது.

    அணிவகுப்பு மரியாதை செய்வதற்காக சட்டசபை வளாகத்தில் போலீசார் ஒத்திகை நடத்தினர்

    ஆனால் கொரோனா தொற்று பரவலை கருத்தில்கொண்டு மீண்டும் கவர்னர் மாளிகை வளாகத்தில் பதவி ஏற்பு விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. விழாவில் கலந்துகொள்ள புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், அரசு செயலாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    விழாவில் கலந்துகொள்பவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
    திண்டிவனத்தில் இருந்து வானூருக்கு மது பாட்டில்கள் கடத்திய போலீஸ்காரரை விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வானூர்:

    புதுவை மாநிலத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் அங்கு மதுக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

    எனவே, தமிழக பகுதியில் இருந்து ஏராளமானோர் மதுப்பாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

    அதன்படி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் அருவாபாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி விசாரணை நடத்தினர். சோதனையில் அந்த காரில் 10 அட்டைப்பெட்டிகளில் 480 மதுப்பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவை திண்டிவனத்தில் இருந்து புதுவை பகுதிக்கு கடத்தி வந்துள்ளனர்.

    அந்த காரை புதுவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அங்கப்பன் ஓட்டி வந்தார். அந்த காருக்குள் புதுவை அய்யங்குட்டி பாளையத்தை சேர்ந்த சுந்தர் (வயது 35) என்பவர் இருந்தார். இவர் புதுவையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

    உடனே போலீசார் மதுப்பாட்டில்கள், காரை பறிமுதல் செய்தனர். கார் டிரைவர் அங்கப்பன், போலீஸ்காரர் சுந்தர் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கவர்னர் மாளிகையில் எளிய முறையில் நடக்கும் விழாவில் புதுவை முதல்-அமைச்சராக ரங்கசாமி நாளை பதவி ஏற்கிறார்.
    புதுச்சேரி:

    புதுவையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் மொத்தம் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

    அதாவது என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க. 6 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. எனவே இந்த கூட்டணி சார்பில் ஆட்சி அமைக்கப்படுகிறது. இதுதொடர்பாக பா.ஜ.க. மேலிட தலைவர் நிர்மல்குமார் சுரானா உள்ளிட்ட தலைவர்கள் ரங்கசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது அமைச்சரவையில் இடம் பெறுவது தொடர்பாக இரு கட்சி தலைவர்களும் பேசியதாக தகவல்கள் வெளியாயின.

    அதன்படி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு முதல்-அமைச்சர் உள்பட 4 அமைச்சர் பதவிகளும், பா.ஜ.க.வுக்கு 2 அமைச்சர் பதவிகளும் ஒதுக்குவது என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    இந்த கூட்டணி அரசின் முதல்-அமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து தனக்கு எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டு கொடுத்துள்ள ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரினார்.

    இந்தநிலையில் புதிய முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்பது எப்போது? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கிடையே சட்டசபையில் முதல்- அமைச்சர் அலுவலகம் உள்ளிட்ட மற்ற அலுவலகங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது 4-வது முறையாக ரங்கசாமி நாளை (வெள்ளிக்கிழமை) பதவி ஏற்பது உறுதியாகி உள்ளது. இதனை அவரே நேற்று சேலத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    கவர்னர் மாளிகையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிற்பகல் 1 மணியளவில் முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்றுக் கொள்கிறார். அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

    ரங்கசாமியுடன் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்களா? என்பது பற்றி உறுதியாக தெரியவில்லை. தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் பதவியேற்பு விழாவினை மிகவும் எளிமையாக நடத்தவும், முக்கிய பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை புதுவை அரசு அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
    என்.ஆர்.காங்கிரசை பொறுத்தவரை யார் யார்? அமைச்சர் ஆக வேண்டும் என்பதை ஆன்மிகவாதியான ரங்கசாமி ஜாதகம் பார்த்து அதன் அடிப்படையிலேயே தேர்வு செய்வார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற தேர்தல் முடிந்து என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி 16 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ளது. சட்டமன்ற குழு தலைவராக (முதல்-அமைச்சராக) ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னரை சந்தித்து ரங்கசாமி கடிதம் கொடுத்துள்ளார்.

    என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணியில் தற்போதைய நிலவரப்படி துணை முதல்-அமைச்சர் உள்பட 2 அமைச்சர் பதவிகளை பா.ஜ.க. கேட்டு வருகிறது. துணை முதல்-அமைச்சராக நமச்சிவாயம் பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.

    என்ஆர் காங்கிரஸ்

    மற்ற அமைச்சர் பதவி இடங்களை பிடிக்க பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. துணைத்தலைவரான சாய் சரவணன், பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் இந்த பதவியை பெற கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.

    இவர்களில் ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதை முன்னிறுத்தி அமைச்சர் பதவியை பெறுவதில் சாய்சரவணன் உறுதியாக உள்ளார்.

    இதற்கிடையே புதிதாக கட்சியில் இணைந்து காமராஜ் நகர் தொகுதியில் வெற்றிபெற்று தனது மகனையும் எம்.எல்.ஏ.வாக உருவாக்கியுள்ள ஜான்குமாரும் அமைச்சர் பதவிக்கு குறி வைத்துள்ளார். சிறுபான்மையினர் என்ற ரீதியில் இந்த முயற்சியில் அவர் இறங்கி உள்ளார். முன்னாள் அமைச்சரான கல்யாண சுந்தரமும் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

    என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு முதல்-அமைச்சர் மற்றும் 3 அமைச்சர் பதவிகள் கிடைக்கிறது. முதல்-அமைச்சராக ரங்கசாமி தேர்வாகியுள்ள நிலையில் மீதமுள்ள 3 அமைச்சர் பதவிகளை பெற அங்கும் கடும்போட்டி நிலவுகிறது. இதற்கான களத்தில் காரைக்கால் பிராந்தியத்தில் திருமுருகன், சந்திர பிரியங்கா ஆகியோர் உள்ளனர்.

    மூத்த நிர்வாகி மற்றும் ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்த பெண் அடிப்படையில் இருவரும் கட்சி தலைமையிடம் எதிர்பார்ப்பில் உள்ளனர். நடந்து முடிந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒரே பெண் எம்.எல்.ஏ. சந்திர பிரியங்கா என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர்கள் தவிர லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக் குமார், ராஜவேலு உள்ளிட்டோரும் ஆவலுடன் அமைச்சர் கனவில் உள்ளனர்.

    என்.ஆர்.காங்கிரசை பொறுத்தவரை யார் யார்? அமைச்சர் ஆக வேண்டும் என்பதை ஆன்மிகவாதியான ரங்கசாமி ஜாதகம் பார்த்து அதன் அடிப்படையிலேயே தேர்வு செய்வார்.

    அதனால் யாருக்கு அமைச்சர், சபாநாயகர், துணை சபாநாயகர் பதவிகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இதற்கிடையே மத்திய உள்துறையிடம் ஒப்புதல் பெற்று கூடுதலாக ஒரு அமைச்சர் பதவியை பெற பா.ஜ.க. முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இன்னும் ஓரிரு நாளில் ரங்கசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்க உள்ள நிலையில் அமைச்சரவையில் இடம் பெறப் போகிறவர்கள் யார்? என்கிற கேள்விக்கு விடை கிடைத்து விடும்.
    துணை முதலமைச்சர் பதவியை கேட்டுப்பெற்று அந்த இடத்தில் நமச்சிவாயத்தை அமர வைக்க பா.ஜ.க. மேலிடம் திட்டமிட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 30 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட சட்டசபைக்கு பாதிக்கு மேல் இடங்களை பெற்று இருப்பதால் ஆட்சி அமைக்கும் தகுதியை இந்த கூட்டணி பெற்றுள்ளது.

    அந்தவகையில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதற்கிடையே பா.ஜ.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

    பாஜக

    இதன்பின் நிருபர்களிடம் பேசிய பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அமைச்சரவையில் பா.ஜ.க. இடம் பெறும் என்று தெரிவித்தார்.

    இந்தநிலையில் கூட்டணி அரசின் முதல்-அமைச்சராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை கவர்னர் மாளிகைக்கு சென்ற ரங்கசாமி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். நல்லநேரம் பார்த்து ஓரிரு நாளில் முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவி ஏற்க திட்டமிட்டுள்ளார்.

    புதிய அமைச்சரவையில் பா.ஜ.க.வுக்கு 2 அமைச்சர்கள் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில் துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், துணை சபாநாயகர் பதவி இடங்களை கேட்டு பா.ஜ.க. தரப்பில் என்.ஆர்.காங்கிரசை வலியுறுத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

    புதுவையை பொறுத்தவரை கடந்த காலங்களில் துணை முதல்-அமைச்சர் பதவி என்பது உருவாக்கப்படாத நிலை தான் இருந்து வருகிறது. ஆனால் தற்போது மத்திய உள்துறை மூலம் துணை முதல்-அமைச்சர் பதவியை உருவாக்கிட பா.ஜ.க. பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    துணை முதல்-அமைச்சர் பதவியை கேட்டுப் பெற்று அந்த இடத்தில் நமச்சிவாயத்தை அமர வைக்க பா.ஜ.க. மேலிடம் திட்டமிட்டுள்ளது.

    இதன்மூலம் எதிர்காலத்தில் புதுச்சேரியில் கட்சியை பெரிய சக்தியாக வளர்க்க முடியும் என்று பா.ஜ.க. தரப்பில் கருதுவதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுதவிர அமைச்சர்கள், துணை சபாநாயகர் பதவிகளை பிடிக்க பா.ஜ.க.வில் முட்டி மோதி வருகிறார்கள்.

    அரசியல் சாசன விதிகளின்படி புதுச்சேரியில் 3 எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்துக் கொள்ளலாம் என்பதால் அந்த இடங்களை நிரப்பவும் பா.ஜ.க. மேலிடம் தீவிரம் காட்டி வருகிறது.
    புதுச்சேரியில் நேற்று ஒரேநாளில் 799 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் நேற்று ஒரேநாளில் 799 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் இதுவரை 62 ஆயிரத்து 160 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 848 பேர் உயிரிழந்து உள்ளனர்.
    புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி சந்தித்து பேசினார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து பெரும்பாலான தொகுதிகளை ரங்கசாமி கைப்பற்றினார். 

    இந்தநிலையில் பாஜக எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க ரங்கசாமி தமது எம்.எல்.ஏ.க்களுடன் ஆதரவு கோரினார்.
    தமிழிசை செளந்தரராஜன்
    இதனையடுத்து ஆட்சியமைக்க ரங்கசாமிக்கு தமிழிசை செளந்தரராஜன் அழைப்பு விடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தேதி அறிவித்தவுடன் பதவியேற்பு விழா நடைபெறும் என்று கூறினார்.
    ×