என் மலர்
புதுச்சேரி

புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. சார்பில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில், உப்பளத்தில் உள்ள தலைமைக் அலுவலகத்தில் அண்ணா உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. சார்பில் மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தலைமையில் குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் அண்ணா உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே குருவிமலை கிராமத்தை சேர்ந்தவர் சேட் (வயது50). இவரது மகன் ராஜ்குமார்(27). கடந்த 20-ந் தேதி சேட் திடீரென தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து எலி மருந்து தின்று விட்டார். அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 30-ந்தேதி இறந்து விட்டார். அவரது உடல் அடக்கம் 31-ந் தேதி நடந்தது.
தந்தை தற்கொலை செய்து கொண்டதால் மனவேதனையடைந்த ராஜ்குமார் அன்றிரவு அங்கிருந்து பஸ் மூலம் புதுவைக்கு வந்தார்.
புதுவை பஸ் நிலையத்தில் திடீரென ராஜ்குமார் தனது தந்தை தற்கொலை செய்து கொண்டது போல் அவரும் எலி மருந்து தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மயங்கி கிடந்த அவரிடம் உருளையன்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி அவரது உறவினரை வரவழைத்தனர்.
இதையடுத்து உறவினர்கள் ராஜ்குமாரை சிகிச்சைக்காக திருவண்ணாமலைக்கு கொண்டு சென்று அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் ராஜ்குமார் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை ராஜ்குமார் பரிதாபமாக இறந்து போனார்.
ராஜ்குமார் புதுவை பஸ் நிலையத்தில் எலி மருந்து தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் இதுகுறித்து அவரது உறவினர் பாக்கியராஜ் புதுவை உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவரது மகன் ஜெய்குல் (வயது22). இவர் புதுவை அரியூரில் ஒரு வாடகை வீட்டில் தங்கி அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் தங்கியிருந்த வாடகை வீட்டின் அருகே கிருஷ்ணகிரி மீன்குடியல் பகுதியை சேர்ந்த சார்லஸ் (38) என்பவரும் வாடகைக்கு வசித்து வந்தார். இவர் ஜெய்குலிடம் தனது மோட்டார் சைக்கிள், ஐபேடு மற்றும் சில பொருட்கள் தருவதாக கூறி ரூ.1.லட்சத்து 70 ஆயிரம் வாங்கினார். ஆனால் சார்லஸ் அந்த பொருட்களை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.
இந்த நிலையில் திடீரென வீட்டை காலி செய்து விட்டு சார்லஸ் தலைமறைவாகி விட்டார். இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஜெய்குல் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சார்லஸ் இதற்கு முன்பு சென்னையில் ஒரு தேசிய வங்கியில் மானேஜராக பணிபுரிந்து பலரை ஏமாற்றி பணம் மோசடி செய்திருந்ததும், இதனால் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து பணம் மோசடி செய்து தலைமறைவான சார்லசை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
வேலூர் திருநகரை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகள் பொழில் இளவேனில் (வயது24). இவரும் அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரமேஷ் (26) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி இருவரும் புதுவைக்கு சுற்றுலா வந்தனர். நோணாங்குப்பம் படகு குழாம் அருகே ஒரு தனியார் விடுதியில் தங்கி புதுவையில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து வந்தனர்.
நேற்று முன்தினம் ஆரோவில் கடற்கரைக்கு சென்று விட்டு இரவு விடுதியில் தங்கினர். அப்போது நள்ளிரவு 1.30 மணியளவில் ரமேசுக்கு திடீர் நெஞ்சுவலி வந்தது. உடனே பொழில்இளவேனில் காதலனை சிகிச்சைக்காக புதுவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார். அங்கு சிகிச்சை அளித்த பின்னர் மீண்டும் விடுதிக்கு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை ரமேசுக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி சரிந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பொழில்இளவேனில் விடுதி ஊழியர்கள் உதவியோடு ரமேசை 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது வரும் வழியிலேயே ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பொழில் இளவேனில் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
அதன்படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மின்துறையை தனியார் மயமாக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்தநிலையில் கடந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசில் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மின் ஊழியர்கள் சங்க பிரதிநிதி களை டெல்லிக்கு அழைத்துச் சென்று மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து மீண்டும் மின்துறையை தனியார்மயமாக்குவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு முடுக்கி விட்டது.
ஏற்கனவே தனியார் மய எதிர்ப்பு போராட்ட குழு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம், தர்ணா உள்ளிட்ட போராட்டங்களில் மின்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். இவர்களது போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.
ஆனால் அவர்களது கோரிக்கை ஏற்கப்படாததையடுத்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்துறை தலைவரின் எச்சரிக்கையையும் மீறி கடந்த 2 நாட்களாக போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இதனால் மின் வினியோக பணிகள் பாதிக்கப்பட்டன.
இதன்காரணமாக மாநிலம் முழுவதும் நகர, கிராமப் புறங்களில் பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் இதை கண்டித்து பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல், மின் அலுவலகம் முற்றுகை, பஸ் சிறை பிடிப்பு போன்ற போராட்டங்களில் குதித்தனர்.
இதனால் மின்துறை ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி மின்துறை ஊழியர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டனர். இதையடுத்து சட்டசபையில் உள்ள கேபினட் அறையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் நேற்று இரவு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில் அமைச்சர் நமச்சிவாயம், மின்துறை தலைவர் சண்முகம் மற்றும் மின்துறை தொழிற்சங்க நிர்வாகிகள், மத்திய தொழிற்சங்கத்தினரும் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், மின்துறை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் இருதரப்பிலும் தற்காலிகமாக சமரசம் செய்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-
மின்துறை ஊழியர்களின் போராட்டத்தை வாபஸ் பெற அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதன்படி முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் மின்துறை தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் மின்துறை தனியார் மயம் தொடர்பாக பல்வேறு சாதக, பாதகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஊழியர்கள் பணி பாதுகாப்பு, மக்கள் நலன் குறித்து ஆராயப்பட்டது.
புதுச்சேரியின் தற்போதைய நிலை குறித்து மீண்டும் மத்திய அரசுக்கு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி அரசியல் கட்சி தலைவர்கள், மின்துறை ஊழியர்கள், பொதுமக்களின் கருத்துகளை அறிந்து மின்துறை தனியார் மயம் குறித்து அரசு முடிவு எடுக்கும்.
மின்துறை ஊழியர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்படி மின்துறை ஊழியர்களும் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர். மின்துறை ஊழியர்களுக்கு அறிவித்த உத்தரவாதத்தை அரசு நிறைவேற்றும். மின்துறை ஊழியர்கள் தொடர்ந்து பணியை மேற்காள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரி மின்துறை போராட்டக்குழு பொதுச்செயலாளர் வேல்முருகன் கூறியதாவது:-
மின்துறை தனியார் மயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 நாட்களாக மாபெரும் போராட்டம் நடந்தது. இந்தநிலையில் முதல்-அமைச்சர், அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் மின்துறை ஊழியர்கள், பொதுமக்களை கலந்து ஆலோசிக்காமல் மின்துறை தனியார் மயம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கமாட்டோம் என உறுதி அளித்துள்ளனர். மின்துறை தொழிற்சங்க ஊழியர்கள் அளிக்கும் கருத்துக்களை மத்திய அரசுக்கு விளக்கி தனியார் மயமாக்கமாட்டோம் வாக்குறுதி அளித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து வேலைநிறுத்த போராட்ட்ம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினரும் நாளை (இன்று வியாழக்கிழமை) முதல் பணிக்கு திரும்புவோம். மின்துறை தனியார் மயம் நடவடிக்கை தொடர்ந்தால் ஊழியர்களின் போராட்டமும் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.






