என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோசடி
    X
    மோசடி

    மருத்துவ கல்லூரி மாணவரிடம் ரூ.1.70 லட்சம் மோசடி செய்த முன்னாள் வங்கி அதிகாரி

    மருத்துவ கல்லூரி மாணவரிடம் ரூ.1.70 லட்சம் மோசடி செய்த முன்னாள் வங்கி அதிகாரி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவரது மகன் ஜெய்குல் (வயது22). இவர் புதுவை அரியூரில் ஒரு வாடகை வீட்டில் தங்கி அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவர் தங்கியிருந்த வாடகை வீட்டின் அருகே கிருஷ்ணகிரி மீன்குடியல் பகுதியை சேர்ந்த சார்லஸ் (38) என்பவரும் வாடகைக்கு வசித்து வந்தார். இவர் ஜெய்குலிடம் தனது மோட்டார் சைக்கிள், ஐபேடு மற்றும் சில பொருட்கள் தருவதாக கூறி ரூ.1.லட்சத்து 70 ஆயிரம் வாங்கினார். ஆனால் சார்லஸ் அந்த பொருட்களை கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.

    இந்த நிலையில் திடீரென வீட்டை காலி செய்து விட்டு சார்லஸ் தலைமறைவாகி விட்டார். இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஜெய்குல் இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சார்லஸ் இதற்கு முன்பு சென்னையில் ஒரு தேசிய வங்கியில் மானேஜராக பணிபுரிந்து பலரை ஏமாற்றி பணம் மோசடி செய்திருந்ததும், இதனால் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து பணம் மோசடி செய்து தலைமறைவான சார்லசை போலீசார் தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×