என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனாவுக்கு 2 பேர் பலி

    புதுவையில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் 2-ந் தேதி 3 ஆயிரத்து 82 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதிதாக 499 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 286, காரைக்காலில் 159, ஏனாமில் 53, மாகியில் ஒருவர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
    புதுவையில் 94, காரைக் காலில் 25, ஏனாமில் 7, மாகியில் 8 பேர் என 134 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 432, காரைக்காலில் 141, ஏனாமில் 120,  மாகியில் 18 பேர் என 711 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 63 ஆ யிரத்து 132 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 551 பேர் சிகிச்சையில்  குணமடைந்துள்ளனர். 

    புதுவையில் 4 ஆயிரத்து 135, காரைக்காலில் ஆயிரத்து 971, ஏனாமில் 368, மாகியில் 30 பேர் என 6 ஆயிரத்து 504 பேர்  வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 6 ஆயிரத்து 638 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர்.  

    புதுவை தில்லை மேஸ்திரி வீதியை சேர்ந்த 82 வயது முதியவர், சுதானா நகரை சேர்ந்த 60 வயது பெண் என 2 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு  பலியானோர்  எண்ணிக்கை ஆயிரத்து 943 ஆக உயர்ந்துள்ளது. 

    புதுவையில் 2-வது  தவணை உட்பட 15 லட்சத்து 38 ஆயிரத்து 801 பேர் தடுப்பூசி  போட்டுள்ளனர். 

    இத்தகவலை  சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது.
    Next Story
    ×