என் மலர்
புதுச்சேரி
உலகம் முழுவதும் கொரோனா ஒமைக்ரான் வைரசாக பரவ தொடங்கியது.
இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது.
இதேபோல புதுவையிலும் கடந்த மாதம் 10-ந் தேதி முதல் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மூடப்பட்டது. தொடர்ந்து 10-ம் வகுப்பு முதல் கல்லூரிகள் வரை 18-ந் தேதி மூடப்பட்டது. ஆன்லைனில் வகுப்புகள் நடந்து வந்தது.
வேகமாக பரவ தொடங்கிய கொரோனா தொற்றின் வேகம் குறைய தொடங்கியது. படிப்படியாக தொற்று பரவல் குறைந்து வருகிறது. இதனால் மீண்டும் பள்ளி- கல்லூரிகளை திறக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி புதுவையில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் இயங்க தொடங்கியது.
கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பள்ளிக்கு வரும் மாணவர்கள் முக கவசம் அணிந்து வந்தனர்.
அவர்களுக்கு வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு, கிருமி நாசினி வழங்கப்பட்டு பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியுடன் மாணவர்கள் அமர வைக்கப்பட்டனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மதிய உணவுக்காக தங்கள் வீடுகளில் இருந்து தட்டு, தம்ளர் கொண்டு வந்தனர். பள்ளிகள் வாரத்தில் 6 நாட்கள் இயங்க கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் வருகை பதிவேடு கட்டாயமில்லை. வகுப்புக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர். இறை வணக்கம், கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் மாணவர்களை அழைத்து வரும் வாகனங்களை நாள்தோறும் சுத்தப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு எழுதும் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கு வருகிற 19-ந் தேதி முதல் திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது.
பள்ளிகள் திறப்பையொட்டி காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. பெற்றோர்கள் தங்கள் வாகனங்களில் நகர்புறத்தில் உள்ள பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்து சென்றனர்.
புதுச்சேரி:
புதுவை அருகே சிலுக்காரிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ்.
இவர் ஏரிப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரசன்யா. (வயது 33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரசன்யா கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2-ந்தேதி காலை வழக்கம் போல் பிரசன்யா கல்லூரிக்கு பணிக்கு சென்றார்.
அதே போல் ஜெகதீஷ் மதியம் 2-வது ஷிப்ட் வேலைக்காக புறப்பட்டு சென்றார். மாலை பணி முடிந்து பிரசன்யா வீட்டுக்கு வந்தார்.
பின்னர் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு வேலை சம்பந்தமாக சென்றார். அங்கு கழிவறைக்கு சென்ற பிரசன்யாவை விஷபூச்சி ஒன்று கடித்து விட்டதாக கூறப்படுகிறது.
உடனே மயங்கி சாய்ந்த அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் பிரசன்யா அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பிரசன்யா நேற்று மதியம் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது கணவர் ஜெகதீஷ் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






