என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட காட்சி.
    X
    தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட காட்சி.

    பாகூரில் தாசில்தார் அலுவலகம் முற்றுகை

    பாகூர் அருகே மூதாட்டி கற்பழிப்பு சம்பவ குற்றவாளிகளை கைது செய்ய கோரி தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    புதுச்சேரி:

    பாகூரை அடுத்த கிராமப் பகுதியைச் சேர்ந்த 63 வயதுள்ள மூதாட்டி ஒருவர் கடந்த 29-ந் தேதி சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றின் அருகே உள்ள தன்னுடைய நிலத்திற்கு வேலை செய்வதற்காக சென்றார். 

    அங்கு நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது சுமார்  25 வயதுள்ள இளைஞர் ஒருவர் உருட்டு கட்டையால் தாக்கி மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் படுகாயமடைந்த மூதாட்டி புதுவை மகளிர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள். 

    இதற்கிடையே சோரியாங்குப்பம் கிராமப் பகுதியில் இருக்கும் மதுக்கடைகளால் அடிக்கடி பெண்களிடம் பாலியல் சீண்டல்கள் நடைபெற்று வருவதாகவும், தொடர்ந்து அந்த பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை நடந்து வருவதாகும் கிராம மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

    இந்நிலையில்,  சோரியாங்குப்பத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 100&க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாகூர் தாசில்தார் அலுவலகம் எதிரே   முற்றுகை போராட்டம் நடத்தினர். 

    அதில், பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மூதாட்டியை தாக்கியவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லைப் புறங்களில் உள்ள விவசாய நிலம் அருகே உள்ள மதுக்கடைகளை உடனே அகற்ற வேண்டும். 

    குடியிருப்புக்கும், விவசாய நிலங்களுக்கும் அருகில் மதுக்கடைகளை வைத்து விவசாய நிலங்களையும் சுற்றுச்சூழலையும் அழிவினை ஏற்படுத்தும் அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். 

    இந்த முற்றுகைப் போராட் டத்திற்கு சோரியாங்குப்பம் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் தமிழ்ச்செல்வன், அருள்ஒளி, வடிவேலு, முருகன், முத்துலிங்கம், வெங்கடாச்சலம், ஜீவா, பூபதி, குமுதம், ராசா, குமரகுரு, முத்து உள்ளிட்ட 100 பேர் ஈடுபட்டனர்.
    Next Story
    ×