என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பிளேடால் கழுத்தை அறுக்க முயன்ற விவசாயி பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் இன்று நடந்தது. இதில் ஒடுக்கத்தூர் அருகே உள்ள அத்திகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த தருமன் (வயது 70). என்பவர் மனு கொடுக்க வந்தார்.

    திடீரென அவர் தான் பையில் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து தனது கழுத்தை அறுக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். என்னை சாக விடுங்கள். நான் இங்கேயே தான் சாகவேண்டும்.

    இந்த பிளேடு இல்லை என்றால் என்ன நான் வேறு பிளேடை எடுத்து வந்து இங்கே தற்கொலை செய்து கொள்வேன் என ஆவேசமாக அவர் பேசினார் போலீசார் அவரை சமாதானம் செய்தனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    எனது பங்காளி நிலத்தை ஒருவர் வேறு ஒருவருக்கு விற்று விட்டார்.அதில் எனக்கு சொந்தமான நிலம் உள்ளது.இது குறித்து வருவாய் துறை அதிகாரியிடம் கேட்டபோது உனது பெயரில் நிலம் இல்லை என கூறுகின்றனர்.

    இதற்கு சரியான முடிவு எடுக்க வேண்டும் என் மீட்டு நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார். இதனால் கலெக்டர் ஆபீசில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    குடியாத்தம் நெல்லூர்பேட்டை பாவோடும் தோப்பு பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் காந்தி வேடம் அணிந்த ஈரோடு சண்முக காந்தி என்பவருடன் மனு கொடுக்க வந்தனர். பாவடோம்தோப்பு கவுண்டன்ய ஆற்றங்கரையில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. தற்போது ஆற்றில் நீர்வரத்து பகுதிகளில் உள்ள வீடுகளை இடித்து வருகின்றனர்.

    எங்கள் பகுதியில் இருந்து பள்ளி கல்லூரிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த கல்வி ஆண்டு நிறைவடையும் வரையில் எங்களது வீடுகளை இடிக்க கூடாது. அது வரை கால அவகாசம் தரவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    வேலூர் அருகே உள்ள இலங்கை தமிழர் குடியிருப்பை சேர்ந்த பெண்கள்  கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு 5 பவுனுக்கு குறைவான வேளாண் வங்கிகளில் நகைக் கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்துள்ளது. இந்த திட்டத்தில் எங்களுடைய பெயர்கள் விடுபட்டுள்ளன. 

    இது சம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாங்கள் பெற்றுள்ள வங்கிக்கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
    வேலூர்- காட்பாடியில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 450 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வேலூர்:

    மத்திய அரசுக்கு எதிராக அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. வேலூர் அண்ணா சாலையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தலைமை தபால் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    அரசு ஊழியர்கள் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். 

    இந்த மறியல் போராட்டத்தால் 20 நிமிடங்களுக்கு மேலாக அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல பி.எஸ்.என்.எல். மற்றும் தபால் நிலைய ஊழியர்களும் அவர்களது அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். 

    ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் சீனிவாசன். ஜாக்டோ ஜியோ செய்தி தொடர்பாளர் வாரா, முன்னாள் அரசு ஊழியர் சங்க தலைவர் சரவணராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள கனரா வங்கி முன்பு வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதில் 30&க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

    இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்திலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் சுமார் ரூ.200 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

    காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே சிஐடியு ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் உள்பட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் காட்பாடி திருவலம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 20 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காட்பாடி போலீசார் கைது செய்தனர்.

    மொத்தம் 150 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

    காட்பாடி ரெயில் நிலையம் முன்பு எஸ் ஆர் எம் யு ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மத்திய அரசை கண்டித்தும் ரெயில்வே தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
    7-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி செய்ததை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த திருவலம் அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள டீக்கராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன் (வயது 55).காட்பாடி அடுத்த திருவலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இந்த பள்ளியில் 7& ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிமியிடம் தொடந்து சில்மிஷத்தில் ஈடுபட்டு பாலியல் தொல்லை கொடுத்தார். மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் இருந்த தின்னரை குடித்து தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை பெற்றோர் மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் இதுதொடர்பாக திருவலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    பள்ளி மாணவிக்கு தொடர்ந்து 15 நாட்கள் ஆசிரியர் முரளிகிருஷ்ணன் தொல்லை கொடுத்துள்ளார். 

    இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். ஆசிரியரின் அத்துமீறலால் மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

    மாணவியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் முரளி கிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இது தொடர்பாக வேலூர் மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆசியர் முரளி கிருஷ்ணனை சஸ்பெண்டு செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
    அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த வங்கி ஊழியர்கள் 3 ஆயிரம் பேரில் 1,300 பேர் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 614 பஸ்களில் 100-க்கும் குறைவான பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. மொத்தமாக 75 சதவீதத்துக்கு மேல் பஸ்கள் ஓட வில்லை என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். தனியார் பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன.

    அதிகளவில் அரசு பஸ்கள் இயக்கப்படாததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 12 ஆயிரம் ஆட்டோக்கள் உள்ளன. இன்று காலை 50 சதவீத ஆட்டோக்கள் ஓடவில்லை.

    இதேபோல அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த வங்கி ஊழியர்கள் 3 ஆயிரம் பேரில் 1,300 பேர் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 70 சதவீத பஸ்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

    திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்திற்கு திருவண்ணாமலை அ.தி.மு.க. கட்சி அலுவலகத்திலும், தெற்கு மாவட்டத்திற்கு செய்யாறில் உள்ள கட்சி அலுவலகத்திலும் அமைப்பு தேர்தல் நடந்தது.

    வேலூர்:

    வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் இன்று நடந்தது.

    வேலூர் மாநகர மாவட்டத்திற்கு அமைப்பு தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் எம்.பி.க்கள் வேணுகோபால், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    காட்பாடியில் உள்ள வேலூர் மாநகர மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று தேர்தல் நடந்தது. இதில் பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், பேரூராட்சி, நகராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் ஜோலார்பேட்டை ஆர்.எஸ். மஹால் திருமண மண்டபம் மற்றும் வாணியம்பாடி கட்சி அலுவலகத்தில் நடந்தது.

    ராணிப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் அமைப்பு தேர்தல் நடந்தது.

    இதேபோல் திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்திற்கு திருவண்ணாமலை அ.தி.மு.க. கட்சி அலுவலகத்திலும், தெற்கு மாவட்டத்திற்கு செய்யாறில் உள்ள கட்சி அலுவலகத்திலும் அமைப்பு தேர்தல் நடந்தது.

    வீடு, குழந்தைகள் விளையாடும் இடங்களில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் போட வேண்டாம் என விற்பனையாளர் அறிவுறுத்தி உள்ளார்.
    வேலூர்:

    வேலூரை சேர்ந்த எலக்ட்ரிக் பைக் விற்பனையாளர் ஒருவர் கூறியதாவது:-

    மின்சார இருசக்கர வாகனங்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே சார்ஜ் செய்ய வேண்டும்.

    பேட்டரி அதிக நேரம் சார்ஜ் செய்வதால் பேட்டரி அதிகம் சூடாவதோடு அது வெடிக்கும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.

    ஷார்ட் சர்க்யூட் ஏற்படும்போதும் தீ விபத்து அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    அதிக வெப்பமோ அல்லது குளிர்ச்சியோ இல்லாத இடங்களிலும் மிதமான தட்பவெப்ப சூழலில் உள்ள இடங்களிலும் மின்சார சக்கர வாகனங்களை சாட் செய்யலாம்.

    எக்காரணம் கொண்டும் வீடுகளின் உட்பகுதியில் அல்லது காற்றோட்ட வசதி இல்லாத இடங்கள் மற்றும் குழந்தைகள் விளையாடும் இடங்களில் எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.

    முதலில் இருசக்கர வாகனத்தில் உள்ள சார்ஜிங் பாயிண்டில் மின் இணைப்பு வயரை இணைத்த பின்புதான் மின்சார இணைப்பு கொடுக்க வேண்டும்.

    சார்ஜ் செய்யும் முன்பும் சார்ஜ் செய்த பின்பும் 10 முதல் 20 நிமிடங்கள் கழித்து வாகனங்களை இயக்க வேண்டும்.

    காற்றோட்டம் உள்ள இடங்களில் மட்டுமே சார்ஜ் செய்ய வேண்டும். முடிந்தவரை பேட்டரியை கழற்றி சார்ஜ் செய்வது நல்லது. 

    மின்சார வாகனங்களை பயன்படுத்துவோருக்கு அதனை கையாளும் வழிமுறைகள் குறித்து விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக அறிவுரைகள் வழங்க வேண்டும்.

    இரவில் தூங்கச் செல்லும் போது மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதை தவிர்த்து குறிப்பிட்ட கால அளவு நேரத்தில் மட்டுமே சார்ஜ் செய்ய வேண்டும்.

    பாஸ்ட் சார்ஜிங் பயன்படுத்தினாலும் பேட்டரி வெடிக்க வாய்ப்புகள் இல்லை. ஆனால் உரிய செய்முறை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். சந்தையில் மின்சார இருசக்கர வாகனங்கள் குவிந்து கிடக்கின்றன.

    தரமான உரிய அங்கீகாரம் பெற்ற இருசக்கர வாகனங்களை தேர்வு செய்து வாங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
    வேலூரில் வாங்கிய 2 நாளில் எலக்ட்ரிக் பைக் வெடித்து சிதறியது எப்படி?
    வேலூர்:

    வேலூர் சின்ன அல்லா புரத்தை சேர்ந்த துரைவர்மா என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு எலக்ட்ரிக் பைக் வாங்கி பயன்படுத்தி வந்தார். அந்த பைக்கை வீட்டில் நிறுத்தி வைத்து எலக்ட்ரிக் சார்ஜ் செய்ய மின் இணைப்பு கொடுத்திருந்தார்.

    நேற்று அதிகாலையில் எலக்ட்ரிக் பைக் பேட்டரி திடீரென வெடித்து சிதறி தீப்பற்றியது. அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு பெட்ரோல் பைக்குக்கும் தீ பரவியது.2 பைக்குகளும் தீப்பிடித்து எரிந்ததால் கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டது. இதில் 

    வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த துரைவர்மா மற்றும் அவரது 13 வயது மகள் மோகனா பிரீத்தி மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தனர்.

    துரைவர்மாவின் 10 வயது மகன் அபினேஷ் அருகில் இருந்த உறவினர் வீட்டில் தூங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    தந்தை மகள் உயிரிழப்பிற்கு புதிதாக வாங்கிய எலக்ட்ரிக் பைக் தான் காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    தீ விபத்து காரணமாக வீட்டின் முன்பகுதி முழுவதும் எரிந்து சேதமடைந்தது. 

    மேலும் வீட்டினுள் இருந்த பல லட்சம் மதிப்பிலான வீடியோ சாதன உபகரணங்களும் கணினி சாதனங்களும் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் குறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நிதி இல்லாததால் பாலாறு-தென்பெண்ணை இணைப்பு திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
    வேலூர்:

    காட்பாடி சில்க் மில் அருகே உள்ள பூங்காவில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்ட தொடக்க விழா இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். அமைச்சர் துரைமுருகன்  மரக்கன்றுகளை நட்டு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக மாநகராட்சி தேர்தல் நடைபெறாததால் காட்டு ராஜா ஆட்சி போல நடந்து வந்தது. எவ்வளவு பணம் வருவாய் வந்தது எவ்வளவு செலவு செய்தார்கள் என கணக்கு தெரியாது. விருதம்பட்டு அருகே உள்ள சர்க்கார் தோப்பு பகுதியில் ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்ததாக கூறுகின்றனர்.

    அதில் எவ்வளவு அடித்தார்கள் என விசாரணை கமிஷன் அமைத்து யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை நிச்சயம். துரைமுருகன் தொகுதியில் வேலை செய்வதாக அதிகாரிகள் கருதவேண்டும் கிராமப்புற நூறு நாள் வேலைத் திட்டத்தால் விவசாய பணிக்கு ஆட்கள் இல்லாமல் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

    நகர்ப்புற வேலை திட்டத்தில் இதுவரை மாநகராட்சி பகுதியில் 4,500 பேர் தேர்வு செய்துள்ளனர். 

    கமிஷனர் முதல் அதிகாரிகள் வரை நல்ல முறையில் வேலை செய்தால் அவர்களை உச்சிமுகர்ந்து விடுவேன். அப்படி இல்லை என்றால் அதிகாரிகளை தூக்கவும் தயங்கமாட்டேன். சில்க் மில் அருகே உள்ள சமுதாய கூடத்தை தனி ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளார். 

    அவரிடமிருந்து சமுதாயக் கூடத்தை மீட்டு சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.இதேபோல் பூங்காவில் நடப்பட்ட மரக் கன்றுகளுக்கு தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். 

    பொதுமக்கள் நடைப் பயிற்சி செய்வதற்கு வயதில் வசதி செய்து தரவேண்டும். வேலூர் மாநகராட்சியில் குடிநீர் குழாய் பதித்தல் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்தால் பொதுமக்கள் ஏராளமான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். 

    மழைக்காலங்களில் பாதி பேர் காயமடைந்து ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டனர்.உடனடியாக அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவுன்சிலர்கள் அனைவரும் தங்களது வார்டு தினமும் சுற்றிப்பார்த்து குறைகளை கேட்டறிய வேண்டும். 

    வார்டுகளுக்கு என்ன தேவை என்பதை என்னிடம் தெரிவித்தால் அதற்கு உண்டான நிதியை வாங்கித் தர தயாராக இருக்கிறேன். விரைவில் பொன்னையில் 100 படுக்கை வசதிகள் கொண்ட ஆஸ்பத்திரி அமைத்து தரப்படும். 

    இந்த 5 வருட காலத்தில் காட்பாடி தொகுதியில் சிப்காட் தொழிற்சாலை ஏற்படுத்தி தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து  நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது இதனால் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டு வருகிறது. அவர்களுக்கு விரைவில் மாற்று இடம் தருமாறு கலெக்டருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    அகரம் ஆற்றின் குறுக்கே கோவிந்தவாடி என்ற இடத்தில் விரைவில் தடுப்பணை அமைக்கப்படும். கோதாவரி- காவிரி ஆறு இணைப்பு, தென்பெண்ணை செய்யாறு இணைப்பு, தாமிரபரணி கருமேனியாறு இணைப்பு திட்டங்கள் பரிசீலனையில் உள்ளது. 

    தென்பெண்ணை- பாலாறு இணைப்பு திட்டம் நிதி இல்லாததால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கதிர் ஆனந்த் எம்.பி, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், கமிஷனர் அசோக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். 
    வேலூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் இன்று நடந்தது.
    வேலூர்:

    காட்பாடியில் உள்ள மாநகர அ.தி.மு.க அலுவலகத்தில் கட்சி அமைப்பு தேர்தல் இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமை தாங்கினார். 

    தேர்தல் பொறுப்பாளர்களாக ,மாநில மருத்துவர் அணி செயலாளர் வேணுகோபால், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    இதில் வேலூர் மாநகர ஒன்றிய பகுதி பேரூராட்சி செயலாளர், நிர்வாகிகள் 126 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. ஒன்றிய, பகுதி செயலாளர்களுக்கு ரூ.5 ஆயிரமும், பேரூராட்சி செயலாளர்களுக்கு ரூ.2500 தேர்தல் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. மதியம் வரை 100-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மனு அளித்தனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் மூர்த்தி, மண்டல தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ஜனனி சதீஷ்குமார், அறங்காவலர் குழு தலைவர் ஜெயபிரகாஷ்,பி.எஸ்.பழனி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் ஜோலார்பேட்டை ஆர்.எஸ். மஹால் திருமண மண்டபம் மற்றும் வாணியம்பாடி கட்சி அலுவலகத்தில் நடந்தது. ராணிப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் அமைப்பு தேர்தல் நடந்தது. 

    இதேபோல் திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்திற்கு திருவண்ணாமலை அ.தி.மு.க. கட்சி அலுவலகத்திலும், தெற்கு மாவட்டத்திற்கு செய்யாறில் உள்ள கட்சி அலுவலகத்திலும் அமைப்பு தேர்தல் நடந்தது.
    காட்பாடி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக முரளி கிருஷ்ணன் என்பவர் 9 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

    திருவலம் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 13 வயது மாணவி ஒருவர் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். முரளிகிருஷ்ணன் கடந்த சில நாட்களாக மாணவியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    அந்த மாணவியிடம் தனது வீட்டுக்கு வருமாறு துண்டு சீட்டில் தனது விலாசத்தை எழுதி கொடுத்துள்ளார். இதுகுறித்து யாரிடமும் தெரிவிக்காமல் மன உளைச்சலில் மாணவி இருந்தார்.

    இதனை கண்டு கொள்ளாத மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு வந்தார். அப்போது முரளி கிருஷ்ணன் மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு மீண்டும் தனது வீட்டுக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி பள்ளியிலேயே மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.

    இதுகுறித்து மற்ற ஆசிரியர்கள் அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் மாணவியை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை மாணவி தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என பெற்றோரிடம் கூறினார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி திடீரென வீட்டில் இருந்த மர பொருட்களுக்கு பயன்படுத்தும் வார்னீசை குடித்து மயங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவலம் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர்.

    இதனையடுத்து போலீசார் முரளிகிருஷ்ணனை திருவலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    ஆசிரியர் வேறு எந்த மாணவிகளிடமும் இதுபோன்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே நேற்று இரவு மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருவலம் போலீஸ் நிலையத்துக்குச் சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
    தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகாவால் மேகதாதுவில் ஒரு செங்கலை கூட நட முடியாது என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்து துரைமுருகன் கூறியதாவது:-

    மேகதாது விவகாரத்தில் கர்நாடகா எவ்வளவு உறுதியாக இருக்கிறதோ, அதேபோல் நமது நிலைப்பாட்டிலும் நாம் உறுதியாக இருக்கிறோம். கீழே இருக்கிற மாநிலங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எதையும் கட்டக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்திலும், தீர்ப்பாயத்திலும் உத்தரவு கொடுத்திருக்கிறார்கள். தண்ணீர் ஓடி வந்தால் மேலே இருக்கிறவர்களுக்கு சொந்தமில்லை என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

    ஆகவே, எந்த காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டின் இசைவு இல்லாமல் யாரும் ஒரு செங்கல்கூட வைக்க முடியாது. கர்நாடக அரசுக்கும் அது தெரியும். சுப்ரீம் கோர்ட் சொன்னால் என்ன, நாங்கள் செய்வோம் என்றால் எப்படி? உச்ச நீதிமன்ற தீர்ப்புதான் இறுதியானது, அதற்கு கீழ்ப்படிந்து நடப்பதுதான் இந்திய ஜனநாயகம். ஒரு மாநிலமே உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க மாட்டோம்  என்று சொன்னால் ஒருமைப்பாடு எங்கே ஏற்படப்போகிறது? மத்திய அரசுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

    இவையெல்லாம் பெரிய அரசியல் கேள்வியாக எழுப்பக்கூடிய விவகாரமாக உள்ளது. அவ்வளவு சுலபமாக மத்திய அரசு சாய்ந்துவிடாது என்று கருதுகிறேன். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேலூரில் நாளை அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் நடைபெற உள்ளது.
    வேலூர்:

    அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் தமிழகம் முழுவதும் இரு கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல் கட்டமாக வேலூர் மாவட்டம் உள்பட 25 மாவட்டங்களுக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் பகுதி நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான அமைப்பு தேர்தல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    மேலும் வேலூர் மாநகர மாவட்டத்திற்கு அமைப்பு தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் எம்.பி.க்கள் வேணுகோபால், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    காட்பாடியில் உள்ள வேலூர் மாநகர மாவட்ட கட்சி அலுவலகத்தில் நாளை காலை அமைப்பு தேர்தல் நடைபெறுகிறது. 

    இதில் பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், பேரூராட்சி, நகராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

    இது சம்பந்தமாக இன்று மாலை காட்பாடி அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    திருப்பத்தூர் மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தல் நாளை ஜோலார்பேட்டை ஆர்.எஸ். மஹால் திருமண மண்டபம் மற்றும் வாணியம்பாடி கட்சி அலுவலகத்தில் நடக்கிறது.

    ஜோலார்பேட்டையில் திருப்பத்தூர் நாட்றம்பள்ளி கந்திலி ஜோலார்பேட்டை பகுதி நிர்வாகிகள் வாணியம்பாடியில் ஆம்பூர் வாணியம்பாடி ஆலங்காயம் மாதனூர் பகுதி நிர்வாகிகள் தேர்தல் நடைபெறுகிறது.
    ×