என் மலர்tooltip icon

    வேலூர்

    • ஆந்திர அரசு அணை கட்டக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டிருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தகவல்
    • நாங்கள் எந்த காலத்திலும் பயங்கரவாதத்துக்கு துணைபோவதில்லை என மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதில்

    காட்பாடி:

    ஆந்திர அரசு அணை கட்ட முயற்சிக்கும் விவகாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இரட்டை வேடம் போடுவதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டினார். இதற்கு, பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், 'பாவம்... அவர் கலங்கிப் போய் எதையெதையோ பேசிக் கொண்டிருக்கிறார். அதைப்பற்றியெல்லாம் பேசவேண்டாம். வேறு யாராவது சொன்னால் சொல்லுங்கள்' என்றார். காட்பாடியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

    மேலும், ஆந்திர அரசு அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டிருப்பதாகவும், அணை கட்டுவதற்கு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தால் அந்த வழக்கை விரைவுபடுத்துவோம் என்றும் அமைச்சர் கூறினார்.

    மேலும், திமுக அரசு பயங்கரவாதத்துக்கு துணைபோவதாக மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அஷ்வினி குமார் செளபே கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், "யாரோ விவரம் தெரியாத மந்திரி அவர். நாங்கள் எந்த காலத்திலும் பயங்கரவாதத்துக்கு துணைபோவதில்லை, எங்கள் கொள்கையும் அதுவல்ல' என்றார்.

    • போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை
    • மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு

    வேலூர்:

    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் இந்தியாவில் 5 ஆண்டுகள் செயல்பட மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    மேலும் சாலை சந்திப்புகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.

    தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை செய்யப்பட்டுள்ளதால் அதற்கு ஆதரவாக யாரும் பேசக்கூடாது‌. அவ்வாறு நடந்து கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

    இதே போல திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.பஸ் நிலையம் ரெயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இன்று காலை முதல் இந்த மாவட்டங்களில் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டது. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பாஜக கட்சி அலுவலகங்கள் பாஜக இந்து முன்னணி பிரமுகர்கள் வீடுகளிலும் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    • மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை
    • சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவால் பரபரப்பு

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் தெரு நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதனால் நாய்கள் தொல்லையும் ஏராளமாக உள்ளன. நாய்களின் அட்டகாசத்தால் சில இடங்களில் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலையும் உள்ளது. இது குறித்து மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளனர்.

    தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்துவது குறித்து மாநகராட்சி நிர்வாகமும் பல்வேறு ஆலோசனை செய்து வருகின்றனர். ‌இந்த நிலையில் வேலூர் வசந்தபுரம் பகுதியில் நாய்களை கொன்று பிடிப்பது போல வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் இன்று வெளியானது.

    இது சமூக மற்றும் விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் கடும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

    வேலூர் மாநகராட்சியில் நாய் தொல்லை உள்ளது உண்மை. ஆனால் தற்போது நாய்கள் பிடிக்கும் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. அந்த வீடியோ வேலூரில் எடுக்கப்பட்டது அல்ல. வேலூரில் நாய்களை கொன்று பிடிப்பதாக வதந்தி பரப்பி உள்ளனர்.

    இது போன்ற சம்பவங்கள் வேலூரில் நடைபெறவில்லை.தவறான தகவல்களை சமூக வலைத்தளத்தில் பரப்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • எ.ன்.சி.சி. மாணர்கள் சுத்தம் செய்தனர்
    • தினமும் 20 லட்சம் லிட்டர் குப்பை கழிவு நீர் கலக்கும் அவலம்

    வேலூர்:

    வேலூர் மாநகரில் இருந்து நாள்தோறும் 20 லட்சம் லிட்டர் குப்பை கலந்த கழிவுநீர் பாலாற்றில் கலக்கிறது. பாலாற்றுப் பகுதியில் தினந்தோறும் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.பிளாஸ்டிக் கழிவுகளும் அதிக அளவில் கொட்டப்படுகிறது.

    பல ஆண்டுகளுக்குப் பிறகு பாலாறு உயிர்த்தெழுந்து தண்ணீர் பாய்ந்து ஓடி வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீரிலும் அதிக அளவில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் அடித்து வரப்படுகின்றன.

    வேலூர் பாலாற்றில் இன்று காலை என்சிசி மாணவ மாணவிகளின் மூலம் குப்பை மற்றும் பிளாஸ்டிக் சுத்தம் செய்யும் பணி நடந்தது.

    பாலாற்றில் புனித் சாகர் அபியான் திட்டத்தின் கீழ் 10 வது பட்டாலியன் என்சிசி மாணவர்கள் மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இணைந்து பாலாற்றில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.

    தேசிய மாணவர் படை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் உடன் இருந்தனர்.

    • வேலூர் நறுவீ மருத்துவமனை கருத்தரங்கில் அலுவலர் தகவல்
    • உலக இதய தின கருத்தரங்கம் நடந்தது

    வேலூர்:

    செப்டம்பர் 29-ம் தேதி உலக இதய தினம் கடைப்பிடிக்கபடுகிறது. இதையொட்டி வேலூர் நறுவீ மருத்துவமனையில் உலக இதய தின கருத்தரங்கம் 'ஒவ்வொரு இதயத்திற்கும் இதயத்தை பயன்படுத்துங்கள்' என்ற கருப்பொருளை தலைப்பாக கொண்டு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத் தலைமை வகித்தார். துணை தலைவர் அனிதா சம்பத் முன்னிலை வகித்தார். மருத்துவ சேவைகளை தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர் வரவேற்றார் நிகழ்ச்சியில் பேசுகையில் பேசுகையில்:-

    மனித உடல் நலத்தில் இதயத்தின் பங்கு முக்கியமானது. மனித இழப்பை தடுக்க இதயத்தை காப்பது மிகவும் அவசியம். உலக அளவில் ஆண்டு தோரும் 18.6 மில்லியன் மனிதர்கள் இதய நோய் பாதிப்புக்குள்ளாகி இறக்க நேரிடுகிறது. இதய நோய் பாதிப்புக்கு முக்கிய காரணமாக இருப்பது புகை பிடிப்பது, கொழுப்பு சத்து அதிகமுள்ள உணவுகளை உட்கொள ;வது காரணமாக அமைகின்றன என்றார்.

    இதில் உலக இதய தினம் நோக்கம் பற்றி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ் விளக்கி கூறுகையில்:-

    ஏற்படுத்த 2000-ம் ஆண்டு முதல் உலக இதய தினம் அனுசரிக்கப்படுகிறது. மனித உடலில் உள்ள இதயத்தின் அளவு 450 கிராம் மட்டுமே, ஆனால் இது தான் மனிதனுடைய வாழ்க்கையை இயங்க செய்யும் முக்கிய உறுப்பாகும்.

    இந்தியாவில் 1000 பேருக்கு 275 பேர் இதய நோயால் பாதிக்கபடுகின்றனர். இதுவே மேலை நாடுகளில் அதன் அளவு 235 என உள்ளது. ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், அதிக கொழுப்பு மற்றும் புகை பிடித்தல் ஆகியவை இதய நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. உலக அளவில் நமது நாட்டில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து இன்று இந்தியா சர்க்கரை நோயின் தலைநகராக உள்ளது. எனவே, இதயத்தை காக்க அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு, புகையை தவிர்ப்பது, இரத்த கொதிப்பை கட்டுக்குன் வைத்திருப்பது மற்றும் நாள் தோரும் குறைந்தது 30 நிமிடமாவது நடைபயிற்சி மேற்கொள்வது அவசியம் என்றார்.

    நிகழ்ச்சியில் அமெரிக்க நாட்டின் புகழ் பெற்ற ஹென்றி போர்டு ஹெல்த் சிஸ்டம் நிறுவனத்தின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்காட் கவுரவ விருந்தினராக பங்கேற்று பேசுகையில்:-

    இன்றைய மருத்துவ வளர்ச்சியில் இதய அறுவை சிகிக்சை என்பது எளிதாக மாறியிருக்கிறது. இதய அறுவை சிகிச்சையில் முப்பரிமான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் அமெரிக்காவின், மிச்சிகன் ஸ்டேட் பல்கலைகழகத்தின் மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் ஆரோன் சோஸா சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்து கருத்தரங்கையொட்டி நடத்தப்பட்ட இதய நோய் மருத்துவம் பற்றிய கட்டுரை போட்டி, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள வழங்கினர். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    எங்களது பல்கலைகழகமானது 5,000 பேராசிரியர்கள், 5,0000 மாணவர்கள கொண்டு உலகில் பெரிய உயர்கல்வி நிறுவனமாக விளங்கி வருகிறது.

    மருத்துவ கல்வி வழங்குவதில் சிறப்பு பெற்ற எங்கள் பல்கலைகழகத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து மாணவர்கள் அதிக அளவில் கல்வி கற்பதற்கும், ஆராய்ச்சிக்காகவும் வருகின்றனர்.

    எங்களது நோக்கமே குறைந்த செலவில் இருதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்குவதே. புகை பிடித்தல் காரணமாக உடலில் உள்ள நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு இதயம் இயங்குவதை தடை செய்கிறது. இதனால், உயிரிழப்பு அதிக அளவில் ஏற்படுகிறது.

    எனவே, இதய நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு விரைவான சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை அளிப்பதன் மூலம் இறப்பை தடுக்க முடியும் என்றார்.

    ஹென்றி போர்டு ஹெல்த் சிஸ்டம் முதன்மை ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு அலுவலர் டாக்டர் லிசா பிரசாத், நறுவீ மருத்துவமனை தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், தலைமை நிதி அலுவலர் வெங்கட், பொது மேலாளர் நித்தின் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில், மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி நன்றி கூறினார்.

    • ஒரு மணி நேர மழைக்கே தாங்காத சாலைகள்
    • வாகன ஓட்டிகள் அவதி

    வேலூர்:

    வேலூரில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது.இரவு நேரங்களிலும் வெப்ப காற்று வீசியது. இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது.

    ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. வேலூரில் அதிகபட்சமாக 63 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    இதேபோல் காட்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    மழை காரணமாக வேலூர் மாநகர சாலைகளில் ஆறு போல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அண்ணா சாலையில் திருப்பதி தேவஸ்தானம், தெற்கு போலீஸ் நிலையம், கிரீன் சர்க்கிள் பகுதி ஆகிய இடங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. இதில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்தனர்.

    இது ஒரு புறம் இருக்க வேலூர் மாநகர பகுதியில் உள்ள தெருக்கள் ஒரு மணி நேரத்திற்கு கூட தாங்கவில்லை. அனைத்து தெருக்களிலும் சேறும் சகதியுமாக காட்சி அளித்தது.கால்வாய் மற்றும் சிமெண்ட் சாலை போடப்பட்ட தெருக்களிலும் மழை வெள்ளம் சரியாக வடியாமல் குளம் போல தேங்கி கிடந்ததை காண முடிந்தது.

    சத்துவாச்சாரி டபுள் ரோட்டில் இருபுறமும் கால்வாய் பணிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. சிமெண்டு சாலை போடப்பட்டுள்ளது.ஆனால் டபுள் ரோட்டில் குளம் போல தண்ணீர் தேங்கி கிடந்தது. இந்த வெள்ளம் வடிய 2 மணி நேரத்திற்கு மேலானது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    சத்துவாச்சாரி நேதாஜி நகரை அடுத்துள்ள ஸ்ரீ சக்தி நகருக்கு செல்லும் வழியில் தண்ணீர் அதிகளவு தேங்கி கிடந்தது. அந்த பகுதியில் தற்போது சாலை பணிகள் நடந்து வருகிறது. இந்த பகுதி பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    காட்பாடியில் சாலை பணிகள் நடைபெறாத தெருக்கள் சேறும் சகதியுமாக காட்சியளித்தன.

    வள்ளலார்பகுதியில், எஸ்.பி.ஐ வங்கிக்குச் செல்லும் சாலையில் மழைநீர் குளம்போல தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    அதில் ஆட்டோ ஒன்று சிக்கிக் கொண்டதால் அதனை மீட்க பொதுமக்கள் படாதபாடு பட்டனர். சாலை அமைக்கும் பணியில் மெத்தனம் காட்டுவதன் விளைவே இம்மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்ள காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    பருவ மழைக்கு முன்பாக சாலைகள் அனைத்தையும் சீரமைக்க வேண்டும். ஏற்கனவே கால்வாய் மற்றும் சாலை பணிகள் முடிந்த இடங்களிலும் தண்ணீர் குளம் போல தேங்கி இருக்கிறது. இதனை கண்டறிந்து மீண்டும் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கர்ப்பிணிகள் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்
    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிவுரை

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சா ரியில் உள்ள தனியார் அரங்கத்தில் இன்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து வார விழா மற்றும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது‌. இதில் 200 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு செய்யப்பட்டு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். கார்த்திகேயன் எம் எல் ஏ, துணை மேயர் சுனில் குமார், 2-வது மண்டல குழு தலைவர் நரேந்திரன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கோமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது

    கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் நாம் அரணாக இருக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் வகையில் இது போன்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் நமது முன்னோர்களால் நடத்தப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.

    தமிழக முதல்அமைச்சர் மு க ஸ்டாலின் பெண்களுக்கு எந்தெந்த சலுகைகள் வழங்க வேண்டும் என யோசித்து எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    பெண்களுக்கு இலவச பஸ் பயணம் கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். கர்ப்பிணிகளுக்காக சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு வருகிறது.

    கர்ப்பிணி தாய்மார்கள் நல்ல சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் உங்களுடைய ஆரோக்கியத்தை வளர்த்து நல்ல முறையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

    சரியான உணவு விகிதத்தை கடைபிடித்து உங்களுக்கு சிவப்பு அணுக்கள் அதிகரிக்க கூடிய மாதுளை மற்றும் பழ வகைகள் நாட்டு காய்கறிகள் தானிய வகைகளை சாப்பிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • குடியாத்தத்தில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் வேலூர் மாவட்டம் மாநாடு நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் பீமராஜன் தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் தியாகராஜன் அறிக்கை வாசித்தார்.

    இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க நிர்வாகி பொன்னம்பலம், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாமிநாதன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் ஷாபுதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    சென்னை மண்டல செயலாளர் மகேஷ், மாநில பொருளாளர் சாமுவேல், மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்.

    இந்த மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சட்ட விரோதமாக வாய்மொழி உத்தரவாக நிர்வாகமே பணி வழங்காமல் தொழிலாளர்களின் சம்பளம் முறைகேடு செய்யப்படுவதற்கும் செயற்கையாக ஆள் பற்றாக்குறை ஏற்படுத்து வதற்கும் எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள கொள்ளுதல்

    உள்ளிட்ட ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த மாநாட்டில் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாநாட்டை முன்னிட்டு சங்க கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

    • நாளை தொடங்குகிறது
    • கல்லூரி முதல்வர் அறிவிப்பு

    குடியாத்தம்:

    குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் 2022-2023 கல்வியாண்டிற்கான முதுநிலை தமிழ், ஆங்கிலம், பொருளியல், வரலாறு, வணிகவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.

    மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி முதல்வர் கோ.கிருஷ்ணன் செய்தி குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.

    • இந்து முன்னணி சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்து முன்னணி சார்பில் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே இந்துக்களையும், இந்து தெய்வங்களையும் அவதூறாக பேசி இழிவு படுத்தி வரும் திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவை கைது செய்து அவரது பதவியை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் டி.கே.தரணி தலைமை தாங்கினார். இந்து வழக்கறிஞர் முன்னணி மாநில செயலாளர் வி. ரத்தினகுமார் கண்டன உரையாற்றினார்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சோமசுந்தரம், வக்கீல் சந்திரமவுலி, ஹரிஷ், மணிகண்டன், இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர் செல்வி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர் ராசா எம்பிக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • பா.ம.க. மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நடுப்பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேலூர் மேற்கு மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது .

    கூட்டத்திற்கு வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் என்.குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத் தலைவர் கு. வெங்கடேசன், முன்னாள் மாநில துணைத்தலைவர் ரமேஷ் நாயுடு, மாவட்ட அமைப்பு செயலாளர் ஆர். பாலாஜி, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் ஜி. சுரேஷ் குமார், நகர செயலாளர் எஸ்.ரமேஷ் உள்பட ஏராளமான மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதில் குடியாத்தம் நகரத்தில் போக்கு வரத்துக்கு இடையூறாக இருக்கும் நேதாஜி சவுக் மற்றும் காமராஜர் பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொள்வது, குடியாத்தம் ஊராட்சி க்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்படும் சாலைகள் மற்றும் கால்வாய்கள், நீர் தேக்க தொட்டிகள் மற்றும் அனைத்து பணிகளையும் தரமாக செய்ய வேண்டும் என குடியாத்தம் மற்றும் கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலர்களை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்
    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    கணியம்பாடி அருகே உள்ள ஆற்காட்டான் குடிசை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சாரதி வர்மன் என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆற்காட்டான் குடிசை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 67 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஏற்கனவே 2 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. ஒரே வகுப்பறையில் 8 வகுப்புகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியில் சத்துணவு சமைக்கப்படுகிறது. இடிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடங்கள் இதுவரை கட்டப்படவில்லை.

    இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை போடப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் குடிநீர் தொட்டி கட்டக்கூடாது என்று ஆட்சேபனை செய்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளன. பள்ளிக்கூடத்தை சீர்குலைக்கும் வகையில் குடிநீர் தொட்டி கட்டுவது சரியான நடைமுறை ஆகாது.

    உடனடியாக அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.ஆற்க்காட்டான் குடிசை கிராமத்தில் பல ஏக்கர் புறம்போக்கு நிலங்கள் உள்ளன. அதில் குடிநீர் தொட்டி கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×