என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குடியாத்தம் காமராஜர் பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்
- பா.ம.க. மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
குடியாத்தம்:
குடியாத்தம் நடுப்பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேலூர் மேற்கு மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது .
கூட்டத்திற்கு வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் என்.குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத் தலைவர் கு. வெங்கடேசன், முன்னாள் மாநில துணைத்தலைவர் ரமேஷ் நாயுடு, மாவட்ட அமைப்பு செயலாளர் ஆர். பாலாஜி, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் ஜி. சுரேஷ் குமார், நகர செயலாளர் எஸ்.ரமேஷ் உள்பட ஏராளமான மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் குடியாத்தம் நகரத்தில் போக்கு வரத்துக்கு இடையூறாக இருக்கும் நேதாஜி சவுக் மற்றும் காமராஜர் பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொள்வது, குடியாத்தம் ஊராட்சி க்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்படும் சாலைகள் மற்றும் கால்வாய்கள், நீர் தேக்க தொட்டிகள் மற்றும் அனைத்து பணிகளையும் தரமாக செய்ய வேண்டும் என குடியாத்தம் மற்றும் கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலர்களை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்