என் மலர்
திருவண்ணாமலை
- திடிரென பூச்சி மருந்தை குடித்தார்
- உதவி கலெக்டர் விசாரணை
வெம்பாக்கம்:
செய்யாறு தாலுகா வெள்ளாமலையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 30). இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு உத்திரமேரூர் அருகே உள்ள காரனையை சேர்ந்த சந்தியா(26) என்பவருடன் திருமணம் நடந்தது.
இத்தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலை யில் சந்தியா திடிரென பூச்சி மருந்தை குடித்தார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும் சந்தியா சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து சந்தியாவின் தாயார் அளித்த புகாரின் பேரில் தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் உதவி கலெக்டர் அனாமிகா தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டெல்லி திருடனை பொறி வைத்து பிடித்த போலீசார்
- கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
ஆரணி:
ஆரணி டவுன் கார்த்திகேயன் ரோடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 72).ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்.
இவர் கடந்த மாதம் 27 ந்-தேதி ஆரணி ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கச் சென்றார். அப்போது பின் தொடர்ந்து வந்த வாலிபர் ஏ.டி.எம்.,மில் இருந்து பணம் எடுத்துக் கொடுப்பதாக கூறி ஏமாற்றி மாற்று ஏ.டி.எம் கார்டை திருப்பிக் கொடுத்துவிட்டு பணம் வரவில்லை என்று கூறி நூதன முறையில் முதியவரை ஏமாற்றி அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.22ஆயிரம் பணத்தை திருடி சென்றார்.
இது சம்மந்தமாக வங்கியிலும் ஆரணி நகர போலீஸ் நிலையத்திலும் கோவிந்தராஜ் புகார் அளித்தார்.
பின்னர் மீண்டும் தனது வங்கி கணக்கில் இருந்து புதிய ஏ.டி.எம் கார்டு மூலம் பணத்தை எடுக்க முதியவர் சென்றார்.
அதே வாலிபர் மீண்டும் வந்ததை கண்டு வங்கி வளாக பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் முதியவர் புகார் அளித்தார். இதனையடுத்து முதியவரை மீண்டும் ஏ.டி.எம்.மில் பணத்தை எடுக்க போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
அப்போது முதியவரிடம் மீண்டும் அந்த வாலிபர் ஏ.டி.எம் கார்டில் பணம் எடுக்க உதவி செய்யவதாகககூறி ஏ.டி.எம். கார்டை பறிக்க முயன்றார். மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் டெல்லி, பிரேம் நகரை சேர்ந்த சஞ்சய்(32) என்பதும் முதியோர்களை குறி வைத்து ஏ.டி.எம்.,மில் நூதன முறையில் பணம் கொள்ளையடித்ததும் தெரிய வந்தது.
பின்னர் அவரிடமிருந்து 7 ஆயிரம் ரொக்க பணம் 13 ஏ.டி.எம் கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ஆரணி கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
- குடியிருப்பு பகுதி சாலை ஆக்கிரமிப்பு
- தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பெரிய அய்யம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட தேன்ம லைபட்டி கிராமத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் தனியார் நிலத்தின் மூலம் சென்று வருவதாக கூறப்படுகிறது. தற்போது ஏரிக்கரை மேல் சாலையை அமைத்து அந்த பாதையை கிராம பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த தனிநபர் சிலர் ஏரிக்கரை திடீரென பள்ளம் தோண்டி சாலையை ஆக்கிரமிப்பு செய்யபட்டுள்ளதாக கூறப்படுகின்றன. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் வழியில்லாமல் செல்ல முடியவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி 50-க்கும் மேற்பட்டோர் ஆரணி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகை யிட்டு தாசில்தார் மஞ்சுளா விடம் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்யபட்ட சாலையை மீட்டு தர கோரி புகார் மனு அளித்தனர்.
புகார பெற்று கொண்ட தாசில்தார் மஞ்சுளா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- பெங்களூரை சேர்ந்தவர்
- சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது பரிதாபம்
செங்கம்:
பெங்களூரை சேர்ந்தவர்கள் சாந்தி, ரமேஷ். இவர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று காரில் வந்தனர்.
இவர்களுடன் உறவினர்களான தர்மபுரி யை சேர்ந்த துரைராஜ், கிருஷ்ணகிரியை சேர்ந்த பானுமதி என்பவர்கள் உடன் இருந்தனர். சாமி தரிசனம் முடிந்து நள்ளிரவு காரில் அனைவரும் பெங்களூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
உடுமலைப்பேட்டையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டி வந்தார்.
செங்கம் உச்சிமலை குப்பம் அருகே வந்தபோது லாரியின் டயர் வெடித்துள்ளது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி எதிரே சாந்தி ஓட்டி வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
காரில் பயணம் செய்த சாந்தி, ரமேஷ், துரைராஜ், பானுமதி, லாரி டிரைவர் முருகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அந்த வழியாகச் சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சாந்தி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பாய்ச்சல் போலீசார் வழக்கு பதிவு சாந்தி உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிகிச்சைகள் வழங்கினர்
- சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்
புதுப்பாளையம்:
செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் உடைய குழந்தைகளுக்கு மருத்துவ முகாம் நடந்தது.
முகாமிற்கு புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார்.
இதில் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவர் சாந்தகுமார் உள்பட மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பரிசோதனைகள், ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் வழங்கினர். பள்ளி கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பொதுமக்கள் வலியுறுத்தல்
- தவறாக உள்ளதாக புகார்
புதுப்பாளையம்:
செங்கம் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
சாலை அமைக்கும் பணி பெரும்பாலும் முடிந்த நிலையில் ஆங்காங்கே சிறுபாலம் கட்டும் பணி மற்றும் கரியமங்கலம் அருகே டோல்கேட் அமைக்கும் பணி நடக்கிறது.
செங்கம் முதல் திருவண்ணாமலை வரை தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையில் பெயர் பலகைகள் அமைக்கப்படுகிறது. செங்கம் அருகே உள்ள கரியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்டப்பேட்டை கிராமத்திற்கு செல்லும் வழி பெயர் பலகை கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
அண்டபேட்டை என்பதற்கு பதிலாக ஆண்டாப்பட்டு என்று வேறு ஒரு பகுதியில் உள்ள ஊரின் பெயரை மாற்றி பெயர் பலகை அமைக்க ப்பட்டுள்ளது.
இதனால் புதிதாக அப்பகுதிக்கு வருபவர்கள் குழப்பத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே ஆண்டாப்பட்டு என்று தவறாக அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகையை அண்டபேட்டை என்று மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- பொது சொத்துக்கு பங்கம் விளைவித்துள்ளனர்
- கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு கோட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் சையத் (வயது 23). பாத்திர வியாபாரி. இவரது நண்பர் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் சபீர் கான் (21). இவர்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு சையதும், சபீர் காணும் போக்குவரத்தை வழிமறித்து பொது சொத்துக்கு பங்கம் விளைவித்துள்ளனர். மேலும் அவ்வழியாக சென்ற பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தினர்.
இது குறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சையத் மற்றும் சபீர்கானை கைது செய்தனர்.
மேலும் போளூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி 2 வாலிபர்களை ஜெயிலில் அடைத்தனர்.
- வட மாநிலத்தை சேர்ந்தவர்
- 10 பேர் இரும்பு பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்
வெம்பாக்கம்:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகமது லத்திப் (வயது 25). இவர் திருவண்ணாமலை மாவட்டம், தூசி அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
அப்போது அங்குள்ள பழைய கட்டிடத்தில் முகமது லத்திப் உட்பட வட மாநில தொழிலாளர்கள் 10 பேர் இரும்பு பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திடீரென பழைய கட்டிடத்தின் சுவர் முகமது லத்திப்பின் தலையில் விழுந்தது.
இதில் அவர் பலத்த காயமடைந்தார். சக பணியாளர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தூசி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முகமது லத்திப் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விநாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது
- 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
திருவண்ணாமலை:
கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு கடந்த 11-ம் தேதி முதல் வருகிறது.
அணைக்கு கடந்த 3 நாட்களாக அதிகரித்து வந்த தண்ணீரின் அளவு, நேற்று குறைந்துள்ளது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதும் குறைக்கப்பட்டுள்ளது.
விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் வந்த நிலையில், அணைக்கு நேற்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 805 கனஅடி நீர்வரத்து உள்ளது. தென் பெண்ணையாற்றில் தொடர்ந்து மூன்று நாட்களாக விநாடிக்கு 850 கனஅடி திறக் கப்பட்ட தண்ணீரின் அளவு விநாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணையாற்றில் 4-வது நாளாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள தால், திருவண்ணாமலை உட்பட 5 மாவட் டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடர்கிறது.
- சொத்து தகராரில் விபரீதம்
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு தாலுகா நெடுங்குணம் கிராமத்தில் வசிக்கும் ராஜேஸ்வரி, அவருடைய தம்பி ராஜேந்திரன் (வயது 42) ஆகிய இருவருக்கும் வீட்டுமனை தகராறு இருந்து வந்தது. இந்தநிலையில் ராஜேந்திரன் அக்காள் ராஜேஸ்வரி வீட்டுக்கு சென்று கதவை தட்டி உள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்தராஜேந்திரன் பேனாக்கத்தியால் ராஜேஸ்வ ரியின் கை, கழுத்து பகுதியில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவரை சேத்துப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் இது குறித்து ராஜேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் சேத்துப்பட்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக் குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தார்.
- பீரோ உடைத்து துணிகரம்
- ரூ.24 ஆயிரத்தை திருடி சென்றனர்
ஆரணி:
கண்ணமங்கலம் அடுத்த அம்மாபாளையத்தை சேர்ந்தவர் சரிதா (வயது 50). இவர் வீட்டின் அருகே கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வருகிறார். 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேத்துப்பட்டில் உள்ள அண்ணன் வீட்டிற்கு சரிதா குடும்பத்தோடு சென்றார். சரிதா ஊருக்கு சென்று விட்டதால் உறவினர் பழனி என்பவர் மாடுகளை பராமரித்து வந்தார்.
நேற்று இரவு மாடுகளை கொட்டகையில் கட்டி விட்டு சென்றார். இன்று காலை மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவதற்காக பழனி சரிதா வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
அதே பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (50). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் மதுரையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி கீதா மஞ்சுரி.
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தண்டபாணி மதுரைக்கு சென்று விட்டதால் மனைவி மற்றும் மகன்கள் வீட்டில் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கீதா மஞ்சூரி மற்றும் மகன்கள் தூங்க சென்றனர்.இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் உள்ளே புகுந்து ரூ.24 ஆயிரத்தை திருடி சென்றனர்.
தண்டபாணிக்கு அருகே சொந்தமாக மற்றொரு வீடு உள்ளது. அதிலும் மர்ம கும்பல் திருட முயன்றனர். அங்கு எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் சென்றனர். இன்று காலை கீதா மஞ்சுரி எழுந்து வந்து பார்த்தபோது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் வீட்டிலிருந்த பணத்தை மர்ம கும்பல் கொள்ளை யடித்தது தெரிந்தது. அதே பகுதியில் வசிக்கும் பரிமளா என்பவர் வீட்டிலும் மர்ம கும்பல் புகுந்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து கண்ணமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
திருவண்ணாமலை கைரேகை நிபுணர்கள் வரவழை க்கப்பட்டு கொள்ளை போன வீடுகளில் ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
- மது குடிப்பதற்காக பணம் கேட்டு தகராறு செய்தார்
- போலீசார் உடலை மீட்டனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த வெங்களத்தூரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 37). விவசாயி. இவரது மனைவி சரளா (36). செய்யாறு சிப்காட்டில் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மகள் உள்ளனர்.
மகேந்திரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 15 -ந் தேதி மனைவியிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டு தகராறு செய்தார். பணத்தை வாங்கி கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
வெகு நேரமாகியும் கணவன் வீட்டுக்கு வராததால் சரளா பல்வேறு இடங்களில் தேடினார். அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள கிணற்றில் மகேந்திரன் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் பிரம்மதேசம் போலீசாருக்கும், செய்யாறு தீயணைப்பு த்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மகேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மது போதையில் கிணற்றில் தவறி விழுந்து மகேந்திரன் இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






