ஆரணி தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

குடியிருப்பு பகுதி சாலை ஆக்கிரமிப்பு தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி
ஆரணி தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
Published on

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பெரிய அய்யம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட தேன்ம லைபட்டி கிராமத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் தனியார் நிலத்தின் மூலம் சென்று வருவதாக கூறப்படுகிறது. தற்போது ஏரிக்கரை மேல் சாலையை அமைத்து அந்த பாதையை கிராம பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த தனிநபர் சிலர் ஏரிக்கரை திடீரென பள்ளம் தோண்டி சாலையை ஆக்கிரமிப்பு செய்யபட்டுள்ளதாக கூறப்படுகின்றன. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் வழியில்லாமல் செல்ல முடியவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி 50-க்கும் மேற்பட்டோர் ஆரணி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகை யிட்டு தாசில்தார் மஞ்சுளா விடம் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்யபட்ட சாலையை மீட்டு தர கோரி புகார் மனு அளித்தனர்.

புகார பெற்று கொண்ட தாசில்தார் மஞ்சுளா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com