என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்களுக்கு இடையூறு"

    • போலீசார் கைது செய்து விசாரணை
    • மயான கொள்ளை விழாவையொட்டி போலீசார் தீவிர ரோந்து பணி

    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் மயான கொள்ளை விழாவை முன்னிட்டு அரக்கோணம் உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் தலைமையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனையொட்டி நகரில் பல இடங்களில் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனை மேற்கொண்டும் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பழைய குற்றவாளி களை பிடிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று முன்தினம் இரவு அரக்கோணம் வின்டர்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே அவ்வழியாக சென்ற பொது மக்களை உருட்டு கட்டையை வைத்துக்கொண்டு குருபிரசாத் (வயது 26) என்பவர் இடையூறு ஏற்படுத்தி வந்தார்.

    இதுகுறித்து பொதுமக்கள் அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் குரு பிரசாத்தை கைது செய்து உருட்டு கட்டையை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

    • பொது சொத்துக்கு பங்கம் விளைவித்துள்ளனர்
    • கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு கோட்டை மேட்டு தெருவை சேர்ந்தவர் சையத் (வயது 23). பாத்திர வியாபாரி. இவரது நண்பர் செய்யாறு பகுதியை சேர்ந்தவர் சபீர் கான் (21). இவர்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

    நேற்று முன்தினம் இரவு சையதும், சபீர் காணும் போக்குவரத்தை வழிமறித்து பொது சொத்துக்கு பங்கம் விளைவித்துள்ளனர். மேலும் அவ்வழியாக சென்ற பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தினர்.

    இது குறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சையத் மற்றும் சபீர்கானை கைது செய்தனர்.

    மேலும் போளூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி 2 வாலிபர்களை ஜெயிலில் அடைத்தனர்.

    ×