விஷம் குடித்து பெண் தற்கொலை

திடிரென பூச்சி மருந்தை குடித்தார் உதவி கலெக்டர் விசாரணை
விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

வெம்பாக்கம்:

செய்யாறு தாலுகா வெள்ளாமலையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 30). இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு உத்திரமேரூர் அருகே உள்ள காரனையை சேர்ந்த சந்தியா(26) என்பவருடன் திருமணம் நடந்தது.

இத்தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலை யில் சந்தியா திடிரென பூச்சி மருந்தை குடித்தார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும் சந்தியா சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து சந்தியாவின் தாயார் அளித்த புகாரின் பேரில் தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் உதவி கலெக்டர் அனாமிகா தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com