search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுவர் இடிந்து விழுந்து வாலிபர் பலி
    X

    சுவர் இடிந்து விழுந்து வாலிபர் பலி

    • வட மாநிலத்தை சேர்ந்தவர்
    • 10 பேர் இரும்பு பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்

    வெம்பாக்கம்:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகமது லத்திப் (வயது 25). இவர் திருவண்ணாமலை மாவட்டம், தூசி அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    அப்போது அங்குள்ள பழைய கட்டிடத்தில் முகமது லத்திப் உட்பட வட மாநில தொழிலாளர்கள் 10 பேர் இரும்பு பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    திடீரென பழைய கட்டிடத்தின் சுவர் முகமது லத்திப்பின் தலையில் விழுந்தது.

    இதில் அவர் பலத்த காயமடைந்தார். சக பணியாளர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தூசி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முகமது லத்திப் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×