என் மலர்
நீங்கள் தேடியது "Police registered the case"
- சொத்து தகராரில் விபரீதம்
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு தாலுகா நெடுங்குணம் கிராமத்தில் வசிக்கும் ராஜேஸ்வரி, அவருடைய தம்பி ராஜேந்திரன் (வயது 42) ஆகிய இருவருக்கும் வீட்டுமனை தகராறு இருந்து வந்தது. இந்தநிலையில் ராஜேந்திரன் அக்காள் ராஜேஸ்வரி வீட்டுக்கு சென்று கதவை தட்டி உள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்தராஜேந்திரன் பேனாக்கத்தியால் ராஜேஸ்வ ரியின் கை, கழுத்து பகுதியில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவரை சேத்துப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் இது குறித்து ராஜேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் சேத்துப்பட்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக் குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தார்.






