என் மலர்
திருவண்ணாமலை

முன்னதாக நேற்று முன்தினம் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சி நடந்தது.
விழாவை முன்னிட்டு கோவிலில் நேற்று முதல் வருகிற 25-ந் தேதி வரை இரவில் மண்டகப்படி நிகழ்ச்சியும், 26-ந்தேதி காலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரியும், இரவில் கோபால விநாயகர் கோவிலில் மண்டகப்படி நிகழ்ச்சியும், இரவில் கோவில் கொடிமரம் அருகில் மன்மத தகனம் நிகழ்ச்சியும் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் பக்தர்களின்றி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் திடீரென அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை வசந்த உற்சவம் விமரிசையாக நடைபெறும். தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் அரசு வழிகாட்டு நடைமுறையின்படி பக்தர்கள் அனுமதியின்றியும், விழா நாட்களில் யதாஸ்தானத்திலேயே சாமி அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும் என்றும் அதில் தெரிவித்து உள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா சின்னசெங்காடு கிராமத்தை சேர்ந்த முனுசாமி மகன்கள் பாஸ்கரன் (வயது 9), ஹரிஹரன் (6). 2 பேரும் நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றுள்ளனர். மதியம் 1.30 மணியாகியும் இருவரும் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் தாய், மகன்கள் மதிய உணவுக்காக வீட்டுக்கு வராததால் வயல்காட்டு பகுதிக்கு தேடிச்சென்றுள்ளார். ஆனால் இருவரையும் காணவில்லை.
இதனால் சந்தேகமடைந்து அருகே உள்ள ஏரிக்கு சென்றபோது அங்கு சிறுவர்களின் செருப்பு மற்றும், ஆடு மேய்க்க கொண்டு சென்ற தழைகளை பறிக்கும் தொரட்டி இருந்தது. சிறுவர்களை காணவில்லை.
அதைத்தொடர்ந்து பொதுமக்கள் ஏரியில் இறங்கி தண்ணீரில் சிறுவர்களை தேடினர். அப்போது சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சிறுவர்கள் 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
போளூர்:
போளூர் அருகே உள்ள பிலாசூர் கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த முரளி (20) என்பவருக்கும், சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியது.
இதனிடையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவியை முரளி யாருக்கும் தெரியாமல் காட்பாடி அழைத்து வந்தார்.
மகள் காணாமல் போனதால் பதட்டமடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து போளூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் முரளி நேற்று மாணவியை வள்ளிமலை கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து இருவரும் திருமணம் செய்துள்ளனர்.
பின்னர் காட்பாடி கிளித்தான் பட்டறை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கினர்.
நேற்று இரவு மாணவி குளிர்பானம் குடித்தார்.சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த முரளி மற்றும் அவரது உறவினர்கள் மாணவியை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் போளூரில் உள்ள அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. மாயமான மகள் இறந்ததை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
காட்பாடி போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி எப்படி இறந்தார் என்பது குறித்தும் முரளியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் பாதிப்பு இருந்ததாகவும் குளிர்பானம் குடித்ததும் அவர் மயக்கம் ஏற்பட்டு இறந்ததாக முரளி தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள மூக்குப்பொடி சித்தர் மீது பக்தி கொண்டவர்.
மேலும் அவர் முக்கிய அரசியல் முடிவுகளை எடுக்கும் முன்பும், தேர்தல் பிரசாரம் தொடங்கும் முன்பும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அதன்படி டி.டி.வி தினகரன் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் தனது மனைவியுடன் நேற்று திருவண்ணாமலை வந்து அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் காரில் கிரிவலம் சென்று அஷ்ட லிங்கங்களை வழிபட்டார்.
மேலும் கிரிவலப் பாதையில் உள்ள மூக்குப்பொடி சித்தர் சன்னதிக்கு சென்று வழிபட்டார்.
முன்னதாக அவர் அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் திருக்கல்யாணம் நடைபெறும் கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதி மற்றும் மண்டபத்தை பார்வையிட்டார்.
வருகிற ஜூன் மாதம் அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் தனது மகள் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளதாகவும், அதனால் அவர் திருக்கல்யாண மண்டபத்தை மனைவியுடன் வந்து பார்வையிட்டதாகவும் கூறப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 78 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 440 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 19 ஆயிரத்து 577 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 575 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 288 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுகூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நோய்தடுப்பு குறித்து கலெக்டர் கேட்டறிந்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது நோய் பரவலை கட்டுப்படுத்த 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதை அதிகரிக்க அறிவுறுத்தினார்.
மருத்துவமனைகள் மற்றும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மருந்துகளின் கையிருப்பு, தேவையின் அளவு குறித்தும், அங்குள்ள கழிப்பிடங்களை தூய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தினார்.
அரசு அலுவலகங்கள், வழிபாட்டு தலங்கள், வணிகவளாகங்கள், ஓட்டல்கள், பூங்காக்கள் மற்றும் சந்தை போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் திருமால், சுகாதார பணிகள் இணை இயக்குனர் கண்ணகி, துணை இயக்குநர் அஜித்தா மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையில் செங்கம் சாலையில் உள்ள பழைய மருத்துவமனையில் 70 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தினையும், அதே வளாகத்தில் 100 படுக்கைகள் கொண்ட ஆயுஸ் மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தினையும் ஆய்வு செய்தார்.
பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் குறித்தும், சிகிச்சைகள் குறித்தும் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான பேகோபுரம் முதல் தெருவில் நடைபெற்று வரும் காய்ச்சல் முகாமினையும் ஆய்வு செய்தார்.






