என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் டி.டி.வி.தினகரன் சாமி தரிசனம்
திருவண்ணாமலை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள மூக்குப்பொடி சித்தர் மீது பக்தி கொண்டவர்.
மேலும் அவர் முக்கிய அரசியல் முடிவுகளை எடுக்கும் முன்பும், தேர்தல் பிரசாரம் தொடங்கும் முன்பும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அதன்படி டி.டி.வி தினகரன் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் தனது மனைவியுடன் நேற்று திருவண்ணாமலை வந்து அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் காரில் கிரிவலம் சென்று அஷ்ட லிங்கங்களை வழிபட்டார்.
மேலும் கிரிவலப் பாதையில் உள்ள மூக்குப்பொடி சித்தர் சன்னதிக்கு சென்று வழிபட்டார்.
முன்னதாக அவர் அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் திருக்கல்யாணம் நடைபெறும் கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதி மற்றும் மண்டபத்தை பார்வையிட்டார்.
வருகிற ஜூன் மாதம் அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் தனது மகள் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளதாகவும், அதனால் அவர் திருக்கல்யாண மண்டபத்தை மனைவியுடன் வந்து பார்வையிட்டதாகவும் கூறப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்