என் மலர்
திருவண்ணாமலை
ஆரணி:
ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் தற்போது கொரோனா வார்டாக தயார் நிலையில் உள்ளதை மாவட்ட திட்ட இயக்குநர் ஆர்த்தி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
80 அறைகளில் தலா அறைக்கு 3 படுக்கை உள்ளிட்ட 240 படுக்கைகள், கொரோனா பாதித்தவர்களுக்கு அடிப்படை வசதிகள் மருத்துவ வசதிகள் சரிவர உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். இந்த பொறியியல் கல்லூரியில் ஆரணி சுற்றியுள்ள கொரோனாவால் பாதிக்கபட்டவர்கள் இந்த இடத்தில் தங்கி தரமான சிகிச்சை பெறலாம் என்றும் தெரிவித்தார்.
இதில் ஆரணி உதவி செயற்பொறியாளர் ரவிசந்திரன் உதவி பொறியாளர்கள் ஜெயலட்சுமிராஜேந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரி ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கொரோனா தொற்றின் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் நோய் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தரப்பில் நேற்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் நேற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது நேற்று ஒரே நாளில் 662 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி நேற்று 238 பேர் குணமடைந்த டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இதுவரை 328 பேர் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.
கண்ணமங்கலம்:
திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில்,சந்தவாசல் வனச்சரகர் பி.செந்தில்குமார் ஆலோசனைப்படி, சந்தவாசல் பிரிவு வனவர் பி.ஏழுமலை மற்றும் வனத்துறையினர் நேற்று அதிகாலை படவேடு பீட், கோட்டை மலை வழி சரகத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் லாரி டியூபில் 10 லிட்டர் சாராயம் கடத்தி வந்த படவேடு வேட்டகிரிபாளையம் சுப்பிரமணியன் மகன் ரவி (வயது22) என்பவரை கைது செய்து போளூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:-
| செங்கம் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| மு.பெ.கிரி | திமுக | 108081 | |||
| எம்.எஸ்.நைனாகண்ணு | அதிமுக | 96511 | |||
| எஸ்.அன்பு | தேமுதிக | 2769 | |||
| எஸ்.சுகன்ராஜ் | இஜக | 828 | |||
| சீ.வெண்ணிலா | நாம் தமிழர் | 12080 | |||
| திருவண்ணாமலை | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| எ.வ.வேலு | திமுக | 137876 | |||
| சீ.தணிகைவேல் | பா.ஜ.க | 43203 | |||
| ஏ.ஜி. பஞ்சாட்சரம் | அ.ம.மு.க. | 2108 | |||
| இரா.அருள் | ம.நீ.ம. | 6246 | |||
| ஜெ.கமலக்கண்ணன் | நாம் தமிழர் | 13995 | |||
| கீழ்பெண்ணாத்தூர் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| கு.பிச்சாண்டி | திமுக | 104675 | |||
| கா.செல்வகுமார் | பாமக | 77888 | |||
| கார்த்திகேயன் | அமமுக | 2191 | |||
| சுகானந்தன் | ம.நீ.ம. | 1437 | |||
| டாக்டர் ரமேஷ் பாபு | நாம் தமிழர் | 11541 | |||
| கலசப்பாக்கம் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| சரவணன் | திமுக | 94134 | |||
| பன்னீர்செல்வம் | அதிமுக | 84912 | |||
| எம்.நேரு | தேமுதிக | 2756 | |||
| எம்.எஸ்.ராஜேந்திரன் | இஜக | 244 | |||
| ஏ.பாலாஜி | நாம் தமிழர் | 8822 | |||
| போளூர் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| அக்ரி கிருஷ்ணமூர்த்தி | அதிமுக | 97732 | |||
| கே.வி.சேகரன் | திமுக | 88007 | |||
| விஜயகுமார் | அமமுக | 656 | |||
| கலாவதி | சமக | 1580 | |||
| லாவண்யா | நாம் தமிழர் | 10197 | |||
| ஆரணி | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| சேவூர் ராமச்சந்திரன் | அதிமுக | 102961 | |||
| எஸ்.எஸ். அன்பழகன் | திமுக | 99833 | |||
| கு.பாஸ்கரன் | தேமுதிக | 1861 | |||
| வி.மணிகண்டன் | ம.நீ.ம. | 2213 | |||
| டி.பிரகலாதன் | நாம் தமிழர் | 10491 | |||
| செய்யாறு | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| ஜோதி | திமுக | 102460 | |||
| தூசி கே.மோகன் | அதிமுக | 90189 | |||
| வரதராஜன் | அமமுக | 1760 | |||
| த.மயில்வாகனன் | ம.நீ.ம. | 2429 | |||
| கோ.பீமன் | நாம் தமிழர் | 12192 | |||
| வந்தவாசி | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| எஸ்.அம்பேத்குமார் | திமுக | 102064 | |||
| முரளி சங்கர் | பாமக | 66111 | |||
| பெ.வெங்கடேசன் | அமமுக | 1728 | |||
| ச.சுரேஷ் | ம.நீ.ம. | 1692 | |||
| பிரபாவதி | நாம் தமிழர் | 9284 | |||
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மேலும் 182 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 210 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 22 ஆயிரத்து 289 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 1.615 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 306 பேர் உயிரிழந்து உள்ளனர்.






