என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • தாமே காலால் உந்தி ஆட்டிவிட்டுக் கொண்டும் பிறர் ஆட்டிவிட்டும்ஆடுவர்.
    • ஊஞ்சலாட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது

    உடுமலை:

    ஊஞ்சல் என்பது சங்க காலம் தொட்டே ஆடப்படும் விளையாட்டுகளில் ஒன்று. கொங்கு நாட்டார் இதனை கூலி என்றும் சூரிய என்றும் அழைக்கின்றனர். சிறுவர்கள் விழுதுகளை பிடித்துக் கொண்டு ஊஞ்சல் ஆடுவர் .மரக்கலையில் கட்டப்பட்ட ஊஞ்சலில் அமர்ந்து சிறுமியரும் ஊஞ்சலாடு வார்கள். தாமே காலால் உந்தி ஆட்டிவிட்டுக் கொண்டும் பிறர் ஆட்டிவிட்டும்ஆடுவர்.இந்தநிலையில் ஆடிப்பெருக்கையொட்டி ஜல்லிப்பட்டி, தளி உள்ளிட்ட இடங்களில் சிறுவர் சிறுமிகள் ஊஞ்சலாடி மகிழ்ந்தனர்.

    ஊஞ்சல் கொண்டாட்டம் குறித்து இப்பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கூறியதாவது:- ஆடி 18ஐ நோன்பு என்று தான் அழைப்போம். ஒரு நாள் முன்பே ஜல்லிப்பட்டி கிராமத்திற்குசென்று விடுவோம். எப்பொழுது விடியும் என காத்திருப்போம். எங்கள் பாட்டி வீட்டில் பெரிய நீளமான வீட்டின் முன்பு குழந்தைகள் உடன் கதைகள் பேசி தூங்குவதற்கு நள்ளிரவு 2 மணி ஆகிவிடும். காலையில் பொம்மையன் கோவில் முன்பு பெரிய மரங்கள் நட்டு பெரிய அகலமான மரப்பலகையை உட்காருவதற்கான வசதியாக அமைப்பார்கள். அதற்கு சந்தனம் குங்குமம் மாவிலை கட்டி மஞ்சள் துணியில் நவதானியங்கள் உள்ளே வைத்து அந்த ஊஞ்சலுக்கு கோவில் பூஜை செய்வர்.

    குழந்தைகளுடன் முதல்முறையாக ஊஞ்சல் ஆடும் போது ரோல் கோஸ்டர் ஜெயின்ட் வீல் எல்லாம் தோற்றுவிடும். பெரியவர்கள் தோட்டத்து வேலைக்கு சென்று வந்த பின்பு இரவில் ஊஞ்சலாடி பாட்டுப்பாடி தங்களின் களைப்பை போக்கிக் கொள்வார்கள். முப்பது வருடங்களுக்கு முன்பாக கூட ஆடி 18 தினத்திற்காக மரத்தில் ஊஞ்சல் கட்டி தூரிஆடிய துண்டு. ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம் .வீட்டில் இருக்கும் உபகரணங்களிலேயே அதிக மகிழ்ச்சி தரக்கூடியது ஊஞ்சல்தான். முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாக அது குறைந்து காணாமல் போய்விட்டது .இந்த ஊஞ்சலாட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல. மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்.

    இப்பொழுதும் பசுமையாக எண்ணங்களின் வாழ்க்கைச் சக்கரத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம். நம் தலைமுறைக்கு குழந்தைக ளுக்கு இதை மறக்காமல் கொண்டு போக வேண்டியது நமது கடமை.

    னஇதை நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார்.

    • மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.
    • மாணவர்களுக்கு பொது நிதியில் இருந்து, போக்குவரத்து செலவு மற்றும் தினப்படியாக ரூ.125 வரை வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகள் உள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும், மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப்பயிற்சி அளிக்க உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளி கல்வித்துறை வாயிலாக குடியரசு தினவிழா மற்றும் பாரதியார் பிறந்த தினவிழா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதேபோல, குறுமைய போட்டியைத் தொடர்ந்து மாவட்ட மற்றும் கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள், மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் நடப்பு கல்வியாண்டு, குறுமைய போட்டி துவங்கியுள்ளது. மாணவர்களும், ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்க தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் போட்டியை நடத்தும் பள்ளி நிர்வாகமே, மாணவர்களுக்கான சிற்றுண்டி, தண்ணீர், டீ மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கான உணவு செலவினங்களை ஏற்க வேண்டும். ஆனால் அரசால் அப்பள்ளிக்கான நிதியை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுவதால், அந்தந்த பள்ளித்தலைமையாசிரியர்களே பொது நிதியில் இருந்து செலவுக்கு அளித்து வருகின்றனர். இதனால் விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து செலவு மற்றும் தினப்படியை உயர்த்தி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:- மாணவர்களுக்கு பொது நிதியில் இருந்து, போக்குவரத்து செலவு மற்றும் தினப்படியாக ரூ.125 வரை வழங்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் அதிகப்படியான மாணவர்கள் கலந்து கொண்டால், தலைமையாசிரியர்கள் சொந்த செலவில் மாணவர்களை அனுப்பி வைக்க வேண்டிய நிலை உள்ளது.

    நடப்பாண்டு போட்டிகள் துவங்க உள்ள நிலையில் அதற்கான தொகையை அரசால் உயர்த்தி வழங்க வேண்டும். இதேபோல போட்டி நடத்தும் பள்ளி நிர்வாகம், இதற்கான அனைத்து தொகையையும் செலவிட வேண்டும். நிதி விடுவிக்க தாமதம் ஏற்படுவதால் மாணவர்களுக்கு சிற்றுண்டி மற்றும் பயணப்படி வழங்குவதில் குழப்பம் நிலவுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மாலை நேரங்களில் உடுமலை - மூணாறு சாலையைக் கடந்து அமராவதி அணைக்கு தண்ணீர் குடிக்க யானைகள் செல்கின்றன.
    • சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதையும் மீறி விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

    உடுமலை:

    உடுமலையில் இருந்து 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது ஆனைமலை புலிகள் காப்பகம். இங்குள்ள வனச் சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன. இங்கு கடந்த ஆண்டு வனத்துறை சாா்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 300-க்கும் மேற்பட்ட யானைகள் இருப்பது தெரியவந்தது. தற்போது வனப் பகுதியில் நிலவும் வறட்சியால் குடிநீருக்காக காலை, மாலை நேரங்களில் உடுமலை - மூணாறு சாலையைக் கடந்து அமராவதி அணைக்கு தண்ணீர் குடிக்க யானைகள் செல்கின்றன. இந்நிலையில், அமராவதி வனச்சரகம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சாலையை கடந்து செல்லும் யானைகள் மீது கற்களை வீசுவது, செல்பி எடுக்க முயல்வது உள்ளிட்ட விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா். அதேபோல, புகைப்படம் எடுப்பதற்காக அருகில் சென்று யானைகளை தொந்தரவு செய்கின்றனா். இதனால் கோபம் அடையும் யானைகள் சுற்றுலாப் பயணிகளை துரத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    இந்நிலையில் யானைகளை தொந்தரவு செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் எச்சரித்துள்ளனா். இது குறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது: -

    உடுமலை - மூணாறு சாலையில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை விட்டு இறங்கி யானைகளை தொந்தரவு செய்யும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இதுதொடா்பாக தொடா்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    இதையும் மீறி விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், எல்லை மீறுபவா்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கன்னியாகுமரி களியக்காவிளை சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளா் வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
    • 11 இஸ்லாமிய அமைப்புகளில் 5 அமைப்புகள் மீதான தடையை இலங்கை அரசு விலக்கியுள்ளது.

    திருப்பூர்:

    தமிழகத்தின் பாதுகாப்புக்கு காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    இலங்கை செயின்ட் ஆண்டனி தேவாலயத்தில் கடந்த 2019-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதைத்தொடா்ந்து 3 தேவாலயங்கள், 4 நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 500-க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா்.

    இந்த தாக்குதல் கிறிஸ்தவா்களை குறிவைத்து ஜிகாதி அமைப்பால் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்கள் தமிழகத்திலும் கைது செய்யப்பட்டனா். இதையடுத்து, 2020-ம் ஆண்டு கன்னியாகுமரி களியக்காவிளை சோதனைச் சாவடியில் உதவி ஆய்வாளா் வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

    இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தடை செய்யப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புகளில் 5 அமைப்புகள் மீதான தடையை இலங்கை அரசு விலக்கியுள்ளது.கேரளாவில் ஜிகாதி பயங்கரவாதிகள் ஆயுதப் பயிற்சி செய்து வந்த 24 ஏக்கா் இடத்தை என்ஐஏ .,கையகப்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஆயுதப் பயிற்சி செய்த இடத்தை என்ஐஏ., அடையாளம் கண்டுள்ளது. தமிழக கடல் எல்லைப்பகுதியில் போதை மருந்து கடத்தல், ஆயுதக் கடத்தல் நடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    எனவே தமிழகத்தின் பாதுகாப்பில் காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
    • தேசியக் கொடிக்கு ரூ.25 விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூா் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் தேசியக் கொடி விற்பனை செய்யப்படவுள்ளது.

    இதுகுறித்து திருப்பூா் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ஏ.விஜயதனசேகா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

    சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதையடுத்து, அனைவருக்கும் தேசியக் கொடி கிடைக்கும் வகையில் திருப்பூா் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை மற்றும் கிளை அஞ்சலகங்களில் ஒரிரு நாள்களில் தேசியக் கொடி விற்பனைக்கு வரவுள்ளது.

    தேசியக் கொடிக்கு ரூ.25 விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் முன்பதிவு செய்தால் அஞ்சல் ஊழியா்கள் மூலமாக வீடுகளுக்கே தேசியக் கொடி விநியோகம் செய்யப்படும். மேலும், அருகில் உள்ள அஞ்சலகங்களிலும் ரூ.25 செலுத்தி தேசியக் கொடியைப் பெற்றுக்கொள்ளலாம்.

    அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியாா் நிறுவனங்கள் மொத்தமாக தேசியக் கொடியை வாங்க விரும்பினால் திருப்பூா் கோட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், தாராபுரம் தலைமை அஞ்சலகங்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருப்பூா் கம்பன் கழகம் சாா்பில் 15-ம் ஆண்டு கம்பன் விழா ஹாா்வி குமாரசாமி திருமண மண்டத்தில் நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் கம்பன் கழகம் சாா்பில் 15-ம் ஆண்டு கம்பன் விழா ஹாா்வி குமாரசாமி திருமண மண்டத்தில் வருகிற 6-ந்தேதி ( ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.

    நிகழ்ச்சிக்கு திருப்பூா் கம்பன் கழகத்தலைவா்- ராம்ராஜ் காட்டன் நிறுவனா் கே.ஆா்.நாகராஜன் வரவேற்புரையாற்றுகிறாா். இதைத்தொடா்ந்து, கம்பவாரிதி இலங்கை இ.ஜெயராஜ் தலைமையில் கம்பன் காவியத்தில் கற்போா் நெஞ்சைப் பெரிதும் நெகிழச் செய்பவர் அயோத்தி பரதனே, கிஷ்கிந்தை வாலியே, இலங்கை கும்பகா்ணனே என்ற தலைப்பில் பட்டிமண்டபம் நடைபெறுகிறது.

    இதில், 'அயோத்தி பரதனே' என்ற தலைப்பில் சென்னை கோ.சரவணன், ஈரோடு வளா்மதி ஆகியோரும், 'கிஷ்கிந்தை வாலியே' என்ற தலைப்பில் திருச்சி விஜயசுந்தரி, ராஜபாளையம் உமாசங்கா் ஆகியோரும், 'இலங்கை கும்பகா்ணனே' என்ற தலைப்பில் பெருந்துறை ரவிகுமாா், திருப்பூா் பட்டயக்கணக்காளா் ஜெய்வநாயகி ஆகியோரும் பேசுகின்றனா்.

    மேலும், பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான போட்டிகள், கருத்தரங்கமும் நடைபெறுகின்றன.

    முடிவில் கம்பன் கழக துணைச் செயலாளா் கெளசல்யா வேலுசாமி நன்றி கூறுகிறார். 

    அவிநாசி:

    அவிநாசியில் அவிநாசியப்பா் உழவா் உற்பத்தி நிறுவனம் திறப்பு விழா, உறுப்பினா் சோ்க்கை முகாம், விவசாய கருத்தரங்கு என முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற கலெக்டர் கிறிஸ்துராஜ் உழவா் உற்பத்தி நிறுவனத்தை திறந்துவைத்தாா்.

    பின்னா், அவா் பேசியதாவது:- விவசாயிகள் தங்களது விளைபொருட்களை தாங்களே சந்தைப்படுத்தும் வகையில் உழவா் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கியுள்ளனா். இம்மையத்தில் தக்காளி, வெங்காயம், வெண்டைகாய், கத்திரிக்காய் உள்ளிட்ட அனைத்து விளைபொருட்களையும் நேரடியாக விற்பனை செய்யவுள்ளனா். இதனை பொதுமக்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும்.

    இந்த உழவா் உற்பத்தி நிறுவனத்தில் சேரும் உறுப்பினா்களுக்கு காப்பீடு வழங்குவதுடன், கோவையில் உள்ள பிரபல மருத்துவமனையில் 10 சதவீத சலுகைக் கட்டணத்தில் சிகிச்சை பெறும் வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளனா். இதேபோல விவசாயத்துக்கான தேவையான அரசு மானியங்கள், வங்கி உதவிகள் ஆகியவற்றையும் செய்துத் தருகின்றனா் என்றாா்.

    நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநா் மாரியப்பன், மாவட்ட வளா்ச்சி மேலாளா் (நபாா்டு) அசோக்குமாா், வேளாண்மை உதவி இயக்குநா் அன்பழகி, மாவட்ட முன்னோடி வங்கி முதன்மை மேலாளா் ரவி, பேரூராட்சித் தலைவா் தனலட்சுமி பொன்னுசாமி, அத்திக்கடவு ஒருங்கிணைப்பாளா் பொன்னுக்குட்டி, சின்னேரிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் சரவணன், உழவா் உற்பத்தி நிறுவன உறுப்பினா்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா் .

    • திமுக.வின் தோ்தல் அறிக்கையின்படி மகளிா் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதை வரவேற்கிறோம்.
    • ஒப்பந்த முறையில் குறைந்த ஊதியத்தில் புலம்பெயா்ந்த பெண் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

    திருப்பூர்:

    புலம் பெயா்ந்த பெண் தொழிலாளா்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் எம்.ரவி முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

    திமுக.வின் தோ்தல் அறிக்கையின்படி மகளிா் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதை வரவேற்கிறோம். அதேவேளையில், புலம் பெயா்ந்த பெண் தொழிலாளா்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, திருப்பூா் போன்ற தொழில் நகரங்களில் பல்வேறு தொழில்கள், தூய்மைப்பணியில் ஒப்பந்த முறையில் குறைந்த ஊதியத்தில் புலம்பெயா்ந்த பெண் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

    எனவே, புலம் பெயா்ந்த பெண் தொழிலாளா்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நீண்ட இழுபறிக்கு பின் தளி எத்தலப்ப நாயக்கருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது
    • பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று பொக்கிஷமாக உள்ள தளி எத்தலப்ப நாயக்கர் சிலைகள் காண்டூர் கால்வாய் அருகே திறந்த வெளியில் வைக்கப்பட்டு உள்ளது.

    உடுமலை: 

    உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலை காண்டூர் கால்வாய் அருகே சுதந்திர போராட்ட வீரர் தளி பாளையக்காரர் எத்தலப்ப நாயக்கருக்கு மணிமண்டபம் கட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.நீண்ட இழுபறிக்கு பின் தளி எத்தலப்ப நாயக்கருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    அதைத் தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மணிமண்டபம் மற்றும் உருவச்சிலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் மணிமண்டபம் கட்டுவதற்கு திருமூர்த்தி நகரில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு ஏக்கர் புறம்போக்கு நிலமும் தேர்வு செய்யப்பட்டது.அறிவிப்பு வந்து நீண்ட நாட்கள் ஆகியும் மணிமண்டபம் கட்டும் பணி துவங்கப்படாதது அனைத்து தரப்பினரையும் வேதனை அடைய செய்து உள்ளது.

    அதுமட்டுமின்றி பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று பொக்கிஷமாக உள்ள தளி எத்தலப்ப நாயக்கர் சிலைகள் காண்டூர் கால்வாய் அருகே திறந்த வெளியில் வைக்கப்பட்டு உள்ளது.எனவே மணிமண்டபம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் மற்றும் திறந்த வெளியில் உள்ள பழங்கால சிலைகள் பாதிப்பு அடையாமல் இருக்க மேற்கூரை அமைத்து பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஆடிப்பெருக்கு விழாவை நடத்துவதற்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறை இணைந்து நடவடிக்கை எடுத்தது.
    • ஆடிப்பெருக்கு விழாவில் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை பார்வையிடுவதற்கு பொதுமக்களும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு பயனாளிகளும் வருகை தருவார்கள்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் அளித்து வருகிறார்கள். கோவிலின் அடிவாரத்தில் இருந்து சற்று உயரத்தில் அடர்ந்த வனப் பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. கோவிலுக்கு செல்லும் வழியில் திருமூர்த்தி அணை, சிறுவர் பூங்கா, நீச்சல் குளம்,படகு இல்லம், வண்ண மீன்காட்சியகம் ஆகிய பொழுதுபோக்கு அம்சங்களும் அமைந்துள்ளது. இதனால் திருமூர்த்தி மலையில் உள்ள இயற்கை சூழலை ரசிக்கவும் பஞ்சலிங்க அருவியில் குளித்து புத்துணர்வு பெறவும் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்வதற்கும் நாள்தோறும் ஏராளமான வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் பக்தர்கள் திருமூர்த்தி மலைக்கு வந்து செல்கிறார்கள். இதனால் திருமூர்த்தி மலை சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது.

    இதன் காரணமாக திருமூர்த்தி மலைப்பகுதியில் சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஆடிப்பெருக்கு விழாவை நடத்துவதற்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலா துறை இணைந்து நடவடிக்கை எடுத்தது. அதைத் தொடர்ந்து கடந்த 2013 -ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் வருகின்ற ஆடிப்பெருக்கு தினத்தன்று திருமூர்த்திஅணைக்கு அருகே உள்ள பகுதியில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வந்தது. அப்போது வனம்,வருவாய், தோட்டக்கலை, சமூகநலம், பொதுப்பணி, சுற்றுலா, சுகாதாரம், போக்குவரத்து, பட்டு வளர்ச்சி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கால்நடை பராமரிப்பு, குழந்தைகள் வளர்ச்சி, வேளாண்மை துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக அதற்கான தனித்தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கும்.அதன் மூலம் அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களை எளிதில் சென்றடைந்தது.

    அதுமட்டுமின்றி தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம்,வால் சண்டை,மான் கொம்பு உள்ளிட்ட தற்காப்பு கலைகளும், பரதம், யோகாசனம்,கிராமிய பாடல்கள்,கரகாட்டம் போன்றவற்றையும் வீரர்,வீராங்கனைகள் விழாவில் தத்துவமாக செய்து காட்டுவார்கள். ஆடிப்பெருக்கு விழாவில் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை பார்வையிடுவதற்கு பொதுமக்களும் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு பயனாளிகளும் வருகை தருவார்கள்.

    ஆனால் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த ஆடிப்பெருக்கு விழா பல்வேறு நிர்வாக காரணங்களால் கடந்த 2019 -ம் ஆண்டில் நடத்தப்படவில்லை. அதை தொடர்ந்து கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக நடத்தவில்லை. இந்த சூழலில் இந்த ஆண்டில் ஆடிப்பெருக்கு விழா நடத்தப்படுமா என்று எதிர்பார்ப்பு நிலவியது.ஆனால் அதற்குண்டான நடவடிக்கைகள் அதிகாரிகள் தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை.இந்த நிலையில் நேற்று ஆடிப்பெருக்கு விழாவை யொட்டி திருமூர்த்தி மலையில் ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.கோவில், அருவி, அணைப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் காணப்பட்டது. அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் ஆடிப்பெருக்கு விழாவை எதிர்நோக்கி வருகை தந்திருந்த வெளிமாவட்ட பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    அத்துடன் ஆடி மாதம் முடிவதற்குள் திருமூர்த்தி மலையில் அரசு சார்பில் ஆடிப்பெருக்கு விழா நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    • மோசடிப் பேர் வழிகள், அப்பாவி பொதுமக்களை தொடர்பு கொண்டு, மும்பை குற்றப்பிரிவு போலீசில் இருந்து நாங்கள் உங்களை அழைக்கிறோம்.
    • கொரியர் நிறுவனம் மூலம் போதைப் பொருள் கடத்தியதாக கூறி, விசாரணைக்காக அவரை 'ஸ்கைப்' வாயிலாக தொடர்பு கொண்டு மிரட்டுவர்கள்.

    திருப்பூர்:

    போலீசார் பேசுவதாக கூறி நூதன மோசடியில் ஈடுபடும் கும்பல் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

    'மோசடிப் பேர் வழிகள், அப்பாவிகளை தொடர்பு கொண்டு, மும்பை குற்றப்பிரிவு போலீசில் இருந்து பேசுவதாகவும், கொரியர் நிறுவனம் மூலம் போதைப் பொருள் கடத்தியதாக கூறி, விசாரணைக்காக 'ஸ்கைப்' வாயிலாக தொடர்பு கொண்டு மிரட்டுவார்கள்.

    அதன் பிறகு விசாரணையை வீடியோ பதிவு செய்து வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் மட்டுமே கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியும் என தெரிவிப்பார்கள். இதை உண்மை என நம்பும் பொதுமக்கள், அவர்கள் கூறும் கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைக்கின்றனர்.அதன் பின்னரே இது மோசடி என தெரிய வருகிறது. இதில் பலர் பல லட்சம் ரூபாய் பணத்தை இழந்துள்ளனர்.

    ஆகவே திருப்பூர் மக்கள் போதை தடுப்பு பிரிவு போலீசார் பேசுவதாக அழைப்புகள் வரும் போது, எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பல்லடம் அருகேயுள்ள காளிவேலம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை (5ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது

    பல்லடம்:

    பல்லடம் அருகேயுள்ள காளிவேலம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (5ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு; பல்லடம் அண்ணாநகர், மின்நகர், காளிவேலம்பட்டி, லட்சுமிமில்,பெரும்பாளி, செம்மிபாளையம், சுக்கம்பாளையம், ஊஞ்சப்பாளையம், ராசக்கவுண்டம்பாளையம், சின்னியகவுண்டம்பாளையம், ரங்கசமுத்திரம், பணிக்கம்பட்டி, ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும்.

    இவ்வாறு பல்லடம் வட்ட மின் பகிரமான செயற்பொறியாளர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

    ×