என் மலர்
திருப்பத்தூர்
- முன்விரோத தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார்
- போலீசார் விசாரணை
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஜமான்கொல்லை பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 22). இவர் சென்னையில் உள்ள பேக்கரி கடையில் வேலை செய்து வந்தார்.
இவர் தும்பேரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இது தொடர்பான முன்விரோத தகராறில் முரளி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.
அம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் கொலையாளி களை பிடிக்க வாணி யம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் முரளி கொலை செய்த வழக்கில், பெண்ணின் அண்ணன் சந்தோஷ் (25) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதே பகுதியை சேர்ந்த சூர்யா (24), அஜித் (24) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். வாலிபர் கொலை செய்த வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் முரளி கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்த காடீஸ் என்கிற காட்வின் மோசஸ்(32), முரளி காதலித்த பெண்ணின் தம்பி ஏழுமலை (24) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிறப்பு அபிஷேகம் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பழனி ஆண்டவர் முருகர் கோவிலில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று முருகர்- வள்ளி திருக்கல்யாணம் நடந்தது. இதனையொட்டி அதிகாலை மூலவருக்கு பால், தயிர், சந்தனம், ஜவ்வாது, இளநீர் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து முருகருக்கு பட்டு வேட்டி அம்பாளுக்கு பட்டுப்புடவை மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திருமண கோலத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதனைத் தொடர்ந்து தேன், தினைமாவு மற்றும் சீர்வரிசை பொருட்களுடன் வள்ளி திருமண மேடைக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். அங்கு கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க வள்ளி- முருகன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்கள் மொய் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பணம் மற்றும் நகைகளை மொய் எழுதினர். மேலும் திருகல்யாணத்தில் பக்தர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
- காப்பகத்தில் ஒப்படைத்தனர்
- தேசிய ெநடுஞ்சாலையில் போலீசார் ரோந்து
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா போலீசார், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜமீன் பகுதியில் கடந்த 16-ந் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணைகள் அவர் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த விஷால் வயது (18) என்பதும், இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து காட்பாடியில் இருந்து 2 பைக்களை திருடி வந்ததும் தெரியும் வந்தது. இதனைத் தொடர்ந்து விஷாலை கைது செய்த போலீசார் பைக்கை பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய வாணியம்பாடி அடுத்த கோணாமேடு பகுதியைச் சேர்ந்த 2 சிறுவர்களை போலீசார் நேற்று கைது செய்து, வேலூர் சிறுவர்கள் சீர்திருத்தம் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
- வனத்துறையினர் விடிய, விடிய ரோந்து
- கிராம மக்கள் வீட்டிற்க்குள்ளேயே முடங்கினர்
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தில் கடந்த சில நாட்களாக மர்ம விலங்கு ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறுவது தொடர்கதையாக உள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் வாணியம்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தொடர்ந்து அந்த கிராமத்தில் கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் முருகன்குட்டை கிராமத்தை சேர்ந்த திருவேல், கருணாகரன், சங்கத்து வட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் தவமணி ஆகியோர் வளர்த்து வந்த 15 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியது.இதில் 7 ஆடுகள் பரிதாபமாக இறந்தது. 8 ஆடுகள் பலத்த காயம் அடைந்தது. கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வந்த நிலையில் மேலும் 3 ஆடுகள் பலியானது.
கிராம மக்கள் அச்சம்
தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் வாணியம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வராமல் வீட்டிற்க்குள்ளேயே முடங்கினர்.
வனத்துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். மதனாஞ்சேரி, சங்கத்து வட்டம் மற்றும் முருகன்கு ட்டை உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறை யினர் நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மேலும் கிராமத்தில் சுற்றி திரியும் மர்ம விலங்கை விரைந்து பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
- கிராம மக்கள் பீதி
- நிவாரணம் வழங்க வலியுறுத்தினர்
ஆலங்காயம்:
வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம் மதனாஞ்சேரி கிராமத்தில் கடந்த சில நாட்களாக முன்பு வீட்டின் அருகே கொட்டகையில் கட்டி வைத்திருந்த ஆடுகளை மர்ம விலங்கு கடித்ததில் 10 ஆடுகள் இறந்தது.
இதுகுறித்து கிராம மக்கள் வாணியம்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் தொடர்ந்து அந்த கிராமத்தில் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு அதே கிராமத்தை சேர்ந்த திருவேல், கருணாகரன், சங்கத்து வட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் தவமணி ஆகியோர் வளர்த்து வந்த 15 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து குதறியது.
இதில் 7 ஆடுகள் பரிதாபமாக இறந்தது. 8 ஆடுகள் பலத்த காயம் அடைந்துள்ளது.
தகவல் அறிந்து இன்று காலை வனத்துறையினர் மற்றும் வாணியம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கிராம மக்கள் அதிகாரிகளிடம் ஆடுகளை கடித்த மர்ம விலங்கு எது என்பதை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் எனவும், இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
- அதிகாரிகளிடம் வாக்குவாதம்-பரபரப்பு
- நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ் நிலையத்திலிருந்து அருகில் உள்ள நகராட்சி அலுவலகம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் நகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் சென்னை மற்றும் பெங்களூர் செல்ல தேசிய நெடுஞ்சாலை பஸ் நிலையம் என அனைத்துக்கும் சென்று வர நியூடவுன் ெரயில்வே கேட் கடந்து செல்வதை பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.
ெரயில்வே கேட் அருகே இந்த சாலையின் ஓரம் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான பெரிய மரங்கள் உள்ளது. ெரயில்வே கேட்டை கடந்து செல்ல மேம்பாலமும் சுரங்க பாதையோ இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாததால் பள்ளி கல்லூரி செல்பவர்களும், ெரயில்வே கேட்டில் ெரயில் கடக்கும் நேரத்தில் இந்த பழமையான மரத்தின் கீழ் நிழலுக்காக பெரிதும் பயன்படுத்தி வந்தனர்.
பழமையான இந்த மரத்தின் கிளைகள் ரயில்வே தண்டவாளத்தின் மேல் உள்ள மின்சார கம்பியில் உரசாமல் இருக்க ரயில்வே அதிகாரிகளின் ஏற்பாட்டால் மரக்கிளை களை வெட்டுவதற்கு ஒப்பந்ததாரருக்கு விடப்பட்டுள்ளது.
ஆனால் மரக்கிளையை வெட்டும் ஒப்பந்ததாரர் அளவுக்கு அதிகமாக மரக்கிளைகளை வெட்டி வருதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் மரம் வெட்டும் ஒப்பந்ததாரர் மற்றும் ெரயில்வே அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சம்ப ந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு மரங்களை அதிக அளவில் வெட்டுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 3 பேர் வந்த பைக்கில் கேட்டதால் ஆத்திரம்
- 2 பேர் கைது- ஒருவர் தலைமறைவு
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த கிருஷ்ணாவரம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 29). கட்டிட தொழிலாளி.
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி வேலை முடிந்து உதயகுமார் உமையப்ப நாய்க்கணூர் அருகே நடந்து சென்றார். ஒரே பைக்கில் 3 வாலிபர்கள் அந்த வழியாக வந்தனர். அப்போது உதயகுமார் வாலிபர்களின் பைக்கை நிறுத்தி லிப்ட் கேட்டார்.
அதற்கு வாலிபர்கள் நாங்கள் 3 பேர் பைக்கில் இருக்கிறோம் அதனால் ஏற்ற முடியாது என்று கூறினர். அப்போது 3 வாலிபர்களை உதயகுமார் அவதூறாக பேசியதாகவும், அதற்கு அந்த 3 வாலிபர்கள் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கிய தாகவும் கூறப்படுகிறது.
இதில் உதயகுமார் அங்கேயே மயங்கி கீழே விழுந்தார்.பின்னர் அவரை அங்கேயே விட்டுவிட்டு 3 பேரும் அங்கிருந்து சென்றனர்.
அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் மயங்கி கிடந்த உதயகுமாரை மீட்டு வீட்டில் விட்டனர். இதைத் தொடர்ந்து 13-ந் தேதி உதயகுமார் ரத்த வாந்தி எடுத்து மயங்கினார்.
உடனடியாக அவரை வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உதயகுமாரின் சகோதரி உஷா(30) என்பவர் காவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து உதயகுமாரை தாக்கிய உமையப்பா நாய்க்கணூரை சேர்ந்த சிற்றரசு (19), கிருஷ்ணா வரத்தை சேர்ந்த ஞானவேல் (19) ஆகியோரை கைது செய்து ெஜயிலில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள லோகேஷ் (20) என்பவரை தேடி வருகின்றனர்.
- வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
- காப்பு காட்டில் விட்டனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த செங்கான் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் அதே பகுதியில் ஆயில் அரைக்கும் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல் இன்று காலை ஆயில் கடையை திறந்தார். அப்போது கடையின் உள்ளே பாம்பு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 5 அடி நீளமுள்ள சாரை பாம்பு பிடித்தனர்.
ஜோலார்பேட்டை அடுத்த திரியாலத்தை சேர்ந்தவர் வேலன். நேற்று இரவு இவரது வீட்டின் பின்புறம் மின் விளக்கு போடுவதற்கு சென்றார்.
வீட்டின் பின்புறம் பாம்பு இருந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவம் இடத்திற்கு சென்று 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்தனர்.
இதேபோல் நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் பகுதியில் வீட்டில் புகுந்த 5 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்தனர்.
நேற்று இரவு மற்றும் இன்று காலை தொடர்ந்து 3 பாம்புகள் பிடிக்கப்பட்டது. பாம்புகளை திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டில் விட்டனர்.
- ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்
- மழையின் காரணமாக நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் அருகே ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு லிங்க வடிவிலான பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சாமி சமேத வள்ளி, தெய்வானை கோவில் அமைந்துள்ளது.
ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் இயற்கை எழில் மிகுந்த இக்கோவிலில் தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஜலகா ம்பாறை நீர்வீழ்ச்சிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு இருந்தது.
தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த கன மழையின் காரணமாக நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் நேற்று நீர்வீழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் நீர்வீழ்ச்சியில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
- தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
- காப்பு காட்டில் விடப்பட்டது
ஜோலார்பேட்டை:
நாட்டறபள்ளி அடுத்த புகையிலைக்காரன் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் நேற்று இரவு தனது வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது 5 அடி நீளம் உள்ள நாகப்பாம்பு படுத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான படை வீரர்கள் விரைந்து சென்று நாக பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனைப் பெற்றுக் கொண்ட வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டிற்கு கொண்டு சென்று பத்திரமாக விட்டனர்.
- அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது
- 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டன
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் பேரூராட்சியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகளை அவர்களே அகற்றிக் கொள்ள, கால அவகாசம் வழங்கப்பட்டது.
இருப்பினும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனை தொ டர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்கூட்டியே அவர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நெடுஞ்சாலை துறை திருப்பத்தூர் உதவி கோட்ட பொறியாளர் அன்பு எழில், உதவி பொறியாளர் ஞானசேகர் மற்றும் வருவாய் துறையினர் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்.
ஆலங்காயம் பஸ் நிலையம் முதல் ராஜபா ளையம் கூட்ரோடு வரை, ஜமுனாமரத்தூர் செல்லும் சாலை, வாணியம்பாடி சாலை திருப்பத்தூர் சாலை ஆகிய இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து இன்றும் 3-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.
சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களுக்கும், போக்கு வரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது
- கோட்ட செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கோட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி வாணியம்பாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வாணியம்பாடி நியூடவுன், வளையாம்பட்டு, செக்குமேடு, வள்ளிபட்டு, ஏலகிரிமலை, அம்பலுர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், ஆலங்காயம் துணை மின் நிலையயத்தில் உள்ள ஆலங்காயம், வெள்ளகுட்டை, பூங்குளம், நரசிங்கபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள், திம்மாம்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சிக்கனாங்குப்பம், தும்பேரி, ராமநாயக்கன்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று வாணியம்பாடி கோட்ட செயற்பொறியாளர் பாஷா முகமது தெரிவித்துள்ளார்.






